Connect with us

கோயம்பத்தூர்

கோலாகலமாக நடந்த தின இதிகை பத்திரிகை வெளியீட்டு விழா!

Published

on

கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி, கோவையில் ஆவரம்பாளையத்தில் அமைந்துள்ள கோஇந்தியா அரங்கத்தில், இ-பிஹைண்ட் குழுமத்தின் பிரத்யேக வார இதழ் “தின இதிகை” வெளியானது.

பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அடிசியா நிறுவனத்தின் மேலாளர் திரு. மணிகண்டன் சாந்தாமணி, மேலாண்மை இயக்குனர் கர்னல் டாக்டர் பாஸ்கரன், ஸ்போர்ட்ஸ்லேண்ட் திரு. சஞ்சய் ஜான்சன், Quira Visual Creators பேன்சி ராவல், அக்ஷயம் அறக்கட்டளை நிறுவனர் திரு. கர்ணன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

இவ்விழாவை திருமதி உஷா சந்திரசேகரன், திருமதி சியாமளா சரவணன், திருமதி அபிராமி சதீஷ்குமார், திருமதி சொர்ணா சக்திவேல், திருமதி ராஜலட்சுமி ஜெகநாதன், திருமதி ஸ்ரீ நந்தினி பார்த்திபன், திருமதி சூர்யா பாலாமுருகன், திருமதி விஜயலட்சுமி பிரசன்னா, திருமதி உமா மஹேஸ்வரி, திருமதி வைஷ்ணவி அருண்காந்த் ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவினைத் தொடங்கிவைத்தனர்.

விழா வரவேற்புரையை “தின இதிகை” பத்திரிகையின் நிர்வாக இயக்குனர் திரு. சதீஷ்குமார் வழங்கினார். தொடர்ந்து குழுவின் அறிமுக உரையை திரு. ஸ்ரீதர், திரு. சக்திவேல், திரு. பார்த்திபன், திரு. பிரசன்னா, திரு. பாலமுருகன், திரு. செந்தில்குமார், திரு. நவீன், திரு. பிரகாஷ், திருமதி சௌமியா பிரகாஷ், திருமதி உமா மஹேஸ்வரி ஆகியோர் வழங்கினர்.

தமிழ்தாய் வாழ்த்தை சங்கீத இசை மணி சங்கீத ரத்னா திருமதி துர்கா லட்சுமி குழுவினர்கள் வழங்கினர். ஸ்ரீ நிருத்ய அர்ப்பண, பேபி ஓவியா, பேபி அக்க்ஷர சக்திவேல், தாரிக ஸ்ரீ, ஈரோடு சஞ்சய், ITC டான்ஸ் ஸ்டூடியோ ஆகியோர் சிறப்பான நிகழ்ச்சிகளை வழங்கி பார்வையாளர்களை மகிழ்வித்தனர்.

இந்த விழாவில் பேசிய பட்டிமன்றப் பேச்சாளர் திருமதி சாந்தாமணி, தனது இயல்பான நகைச்சுவைக்கலந்த உரையை வழங்கி கூட்டத்தை மகிழ்வித்தார். அவர் கூறியதாவது:

“உலக அளவில் ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு சிறப்புகள் உண்டு.

  • இத்தாலிய மொழி – இசை மொழி,பிரெஞ்சு மொழி – காதல் மொழி,இங்கிலாந்து மொழி – வணிக மொழி,கிரேக்க மொழி – தத்துவ மொழி,உருது மொழி – கவிதை மொழி.சமஸ்கிருதம் – தெய்வ மொழி, தமிழ் மொழி மட்டும் தான் தாய் மொழி.

தாய்மொழியாம் தமிழையும், தாய் தந்தையரையும் வணங்கி மகிழ்ந்து, “தின இதிகை” வாரப்பத்திரிக்கையின் வெளியீட்டு விழாவிற்கு நல்ல வரவேற்புரை வழங்கிய நிறுவனர் திரு. சதீஷ்குமாருக்கும், அழகாக அறிமுக உரை ஆற்றிய ஸ்ரீதர், சக்திவேல், பார்த்திபன், பிரசன்னா, பாலமுருகன், செந்தில்குமார், நவீன் ஆகியோருக்கும், குழும உறுப்பினர்களாக இருந்த ஜெகதீசன், ஷங்கர்பாபு, கெளதம், உமா மகேஸ்வரி, பிரபு, அருண், சௌமியா, பிரகாஷ், ஜெயக்குமார், சக்திவேல், அபிராமி, ஜெயலட்சுமி, வினோதினி மற்றும் வெங்கட்ராமன், முத்து, சுப்ரமணியம், தியாகராஜன் ஆகியோர்களுக்கும் நன்றி தெரிவித்தார். மேலும், “இன்னும் யாரேனும் பெயர் விட்டுப் போயிருந்தால் அடுத்த ஆண்டு என்னையே அழையுங்க; அதில் எல்லார்பெயரையும் சேர்த்துச் சொல்வேன்” என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.

பெருந்திரளாக வருகை தந்திருந்த அறிஞர் பெருமக்களுக்கு தனது வணக்கத்தைத் தெரிவித்த சாந்தாமணி அவர்கள், கைதட்டுவதின் பலன்களைப் பற்றி நகைச்சுவையோடு எடுத்துரைத்தார். மேலும், பத்திரிகையாளர்களின் சமூகப் பங்களிப்பை வலியுறுத்தும் குட்டிக்கதையையும் கூறினார்.

அடிசியா நிறுவனர் திரு. மணிகண்டன் அவர்கள்:
“பத்திரிகை என்பது ஒரு சாதாரண தொழில் அல்ல. அது உண்மை மற்றும் நேர்மையை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். மக்களின் நம்பிக்கையை சம்பாதிப்பது மிகக் கடினம். அதனால்தான் பத்திரிகையை ‘நாட்டின் முதுகெலும்பு’ என்று சொல்கிறோம். இந்தக் கடமையை ‘தின இதிகை’ சிறப்பாகச் செய்யும் என நம்புகிறேன்.” என்று தெரிவித்தார்.

அக்ஷயம் அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் கர்ணன் அவர்கள்:
“நாளைய இந்தியா இளைஞர்கள் கையில் உள்ளது. இன்றைய இளைஞர்கள் அதை நிறைவேற்றும் வகையில் செயல்படுகின்றனர். இந்த பத்திரிகை மக்களுக்கு ஒரு செய்தித்தாளாக வரவேண்டும். பத்திரிக்கை முன்னேற வாழ்த்துக்கள்.” என்றார்.

கர்னல் டாக்டர் பாஸ்கரன் அவர்கள்:
“சமூக ஊடகங்களில் நிரம்பி வழியும் செய்திகள் தாண்டி, மக்களுக்கு பயனுள்ள செய்திகள் சேவை அடிப்படையில் வெளிவர வேண்டும். உண்மையான செய்திகளை ஆராய்ந்து, மக்களின் கருத்தை பிரதிபலிக்கும் இடமாக இருக்கும் என நம்புகிறேன்.” என்றார்.

Quira Visual Creators நிறுவன தலைவர் பேன்சி ராவல் அவர்கள்:
“தின இதிகை குழுமத்தினரை வெகுவாக பாராட்டுகிறேன்” என்று உரையாற்றினார்.

திரு. சதீஷ்குமார், ஸ்ரீதர், சக்திவேல், பார்த்திபன், பிரசன்னா, பாலமுருகன், செந்தில்குமார், நவீன், ஜெகதீசன், ஷங்கர்பாபு, கெளதம், உமா மகேஸ்வரி, பிரபு, அருண், சௌமியா, பிரகாஷ், ஜெயக்குமார், வெங்கட்ராமன், முத்து, சுப்ரமணியம், தியாகராஜன் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

உள்ளூர் செய்திகள்

தயார் நிலையில் அவிநாசி மேம்பாலம்

Published

on

 

கோவை அவினாசி சாலை உப்பிலிபாளையம் சிக்னல் முதல் – கோல்டு வின்ஸ் சாலை வரை கட்டி முடிக்கப்பட்ட முடிக்கப்பட்ட புதிய மேம்பாலத்தை மேம்பாலத்தை இன்னும் சில தினங்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதற்காக மேம்பாலம் திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் உள்ளது.

Continue Reading

உள்ளூர் செய்திகள்

கோவையில் “விக்டோரிஸ்” கார் அறிமுக விழா !

Published

on

கோவை: புதிய “விக்டோரிஸ்” கார் இன்று (04.10.2025) மாலை 4.30 மணிக்கு ஆதி மாருதி ஷோரூம், சரவணம்பட்டி, கோவையில் அறிமுகமாகிறது.

இந்த நிகழ்வில் பழமுதிர் நிலையம் உரிமையாளர் திரு. துறையராஜ் சின்னசாமி, பங்குதாரர் திரு. ஞானசேகர் கந்தசாமி , கோவை பழமுதிர் நிலையம் எம்.டி. திரு. செந்தில் நடராஜன், உரிமையாளர் திரு. விஜய் ரதினம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.

விழாவை ஒட்டி “Strums N Hums” இசைக் கச்சேரியும் நடைபெற உள்ளது.

 

Continue Reading

கோயம்பத்தூர்

புற்றுநோய் விழிப்புணர்வு இன்ஸ்டாகிராம் வீடியோ தொகுப்பு வெளியீடு!

Published

on


உலகம் முழுவதும், அக்டோபர் மாதம் மார்பகப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதற்கும், நோயாளிகளுக்கு தன்னம்பிக்கை அளிப்பதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட மாதமாகக் கருதப்படுகிறது.
கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை – ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் இந்த ஆண்டுடன் 23-வது முறையாக உலக மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தைக் கடைப்பிடிக்கிறது.இதன் ஒரு பகுதியாக, மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த  இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ தொகுப்பை ஆங்கிலம் மற்றும் தமிழில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிட்டது.இந்த வெளியீட்டு விழா ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் அரங்கத்தில் நடைபெற்றது. ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் டாக்டர் பி. குகன் அவர்கள் நிகழ்விற்கு வந்த அனைவரையும் வரவேற்றார். இந்த நிகழ்வின் தலைமை விருந்தினராக P&S குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குநரும், நவ ஹிந்துஸ்தான் ஸ்பின்னர்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான (CEO) திருமதி பிரியங்கா கார்த்திகேயனி கலந்து கொண்டு, எஸ். என். ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் திரு. ஆர். சுந்தர் முன்னிலையில் இந்த ரீல்ஸ்களை வெளியிட்டார்.அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரி (CEO) சி.வி. ராம்குமார், தலைமை நிர்வாக அதிகாரி (CAO) டி. மகேஷ் குமார், மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின்

மருத்துவ இயக்குனர் டாக்டர் ராஜகோபால், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் எஸ். அழகப்பன் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.டாக்டர் பி. குகன் தனது உரையில், இந்தியாவில் 50 வயதுக்குட்பட்ட பெண்களிடையே மார்பகப் புற்றுநோய் அதிகரித்து வருவதாகத் தெரிவித்தார். சுமார் 35 வயதுள்ள பெண்களிடையே இந்த நோய் ஏற்படுவது 2%லிருந்து 4% ஆக இருமடங்காக உயர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்.ஒரு ஆய்வின்படி, 2018-ஆம் ஆண்டில் இந்தியாவில் 1,68,000-க்கும் மேற்பட்ட பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டனர். இந்த எண்ணிக்கை 2023-ல் 2,20,000-க்கு மேல் அதிகரித்து அதிர்ச்சி அளித்தது. இது புதிதாக நோயறிதல் செய்யப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதைக் காட்டுகிறது என அவர் கூறினார்.சிறு வயதிலேயே பூப்பெய்தல், தாமதமான மெனோபாஸ், 30 வயதுக்குப் பிறகு முதல் திருமணம் அல்லது குழந்தைப்பேறு, தொடர்ச்சியான மது அருந்துதல், வாய்வழி கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்துதல், உடலுழைப்பற்ற வாழ்க்கை முறை, அதிக உடல் பருமன் மற்றும் மரபணு காரணங்கள் ஆகியவை இந்த நோய்க்கான ஆபத்துக் காரணிகள் என்று டாக்டர் குகன் தெரிவித்தார்.இந்த முக்கியமான நாளில், ஆரம்ப நிலையிலேயே மார்பக புற்றுநோயை கண்டறிவதன் அவசியத்தை வலியுறுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்று அவர் கூறினார். ஏனெனில், ஆரம்ப நிலைகளில் (நிலை 1 & நிலை 2) இந்த நோய் கண்டறியப்பட்டால், குணப்படுத்தும் சிகிச்சை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

துரதிர்ஷ்டவசமாக, 50% முதல் 60% நோயாளிகள், புற்றுநோய் முற்றிய நிலையில் (நிலை 3  அல்லது நிலை 4) சிகிச்சைக்காக வருகிறார்கள். இந்த நிலைகளில் நோய் குணமடைவதற்கான வாய்ப்பும், நீண்ட கால உயிர்வாழும் விகிதமும் கணிசமாகக் குறைவாக உள்ளன.எனவே, மார்பகப் புற்றுநோய் பற்றிப் பேசுவதும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை அதிகரிப்பதும் மிக முக்கியமான தேவையாகும்.

ஆரம்பத்தில் கண்டறிதல் பெரும்பாலும் எளிமையான சிகிச்சைக்கு வழிவகுக்கிறது. அப்போது, அறுவை சிகிச்சை மற்றும் மருந்து மட்டும் தேவைப்படலாம், மேலும் மார்பகத்தைப் பாதுகாக்கும் சிகிச்சை (Breast Conservation) சாத்தியமாகிறது. ஆனால், இந்த விழிப்புணர்வு பெண்களை, குறிப்பாக 50 வயதுக்குட்பட்டவர்களை சென்றடைய வேண்டும்.
எனவே, நாங்கள் இளைஞர்களிடையே மிகவும் பிரபலமான  சமூக ஊடகத் தளமாக உள்ள இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி உள்ளோம் என்று அவர் கூறினார்.

மார்பகப் புற்றுநோய் குறித்த முக்கியமான தகவல்களை வழங்குவதற்காக, தொடர்ச்சியாக 25 இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதில் மார்பகப் புற்றுநோய்க்கான காரணங்கள், அறிகுறிகள், ஆரம்ப கட்ட நோயறிதல், வெவ்வேறு நோய் கண்டறியும் முறைகள், புற்றுநோயின் நிலைகள், கிடைக்கக்கூடிய சிகிச்சை வழிமுறைகள் மற்றும் நோயாளிகளுக்கான ஆலோசனை ஆகியவை அடங்கும் என்று டாக்டர் குகன் பகிர்ந்து கொண்டார்.

அனைத்து வீடியோக்களும் ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின்  அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் (https://www.instagram.com/sriorcoimbatore) பதிவேற்றப்படும். ஒரு நாளைக்கு ஒரு வீடியோவை பதிவேற்றத் திட்டமிட்டுள்ளோம்.

இந்த ஆண்டு உலக மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இந்த மாதத்தின் எந்தவொரு வேலை நாளிலும் 0422-4389797, 0422 4500203 என்ற தொலைபேசி எண்களில் முன்பதிவு செய்யும் பெண்களுக்கு இலவச மேமோகிராம் பரிசோதனைகள் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் அறுவை சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர்  டாக்டர் கே. கார்த்திகேஷ் நன்றியுரை வழங்கினார்.

Continue Reading

Trending