Connect with us

Published

on

டிஜிட்டல் துறையில் மிகப்பெரிய நிறுவனமான கூகுள் தனது ‘லாங்வெஜ் மாடலை’ விரைவில் அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது. தற்போதுஅது, இந்தியா உட்பட 180 நாடுகளில் பயன்பாட்டுக்கு வந்து விட்டததுள்ளது. ChatGPT க்கு போட்டியாக இப்போது 180+ நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் இந்த வசதி கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆங்கிலத்துடன் கூடுதலாக, இப்போது கொரிய மற்றும் ஜப்பானிய மொழிகளிலும் கிடைக்கிறது. விரைவில் 40+ மொழிகளுடன் இது பெரும் புரட்சியை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு ( artificial intelligence) (AI )

நவீன உலகின் முக்கிய செய்தியாகப் பார்க்கப்படுவது செயற்கை நுண்ணறிவு (AI) என்ற புதிய டெக்னாலாஜியே தான் . அதிகரித்து வரும் நிறுவனங்கள் பல தங்கள் அன்றாட நடவடிக்கைகளில் வேலைகளை எளிதாக செய்ய புதிய கண்டுபிடிப்புகள் உருவாகின்றனர் இந்த புதிய கண்டுபிடிப்பாக வெளிவந்து பலரையும் ஆச்சிரியத்தையும் பயத்தையும் உண்டாக்கி உள்ளது இந்த AI செயல்பாடுகள் .

இந்த தொழிநுட்பத்தை எளிதாக புரிந்துகொள்ள வேண்டும் என்றால், ஒரு மனிதனை போல சிந்தித்து அவர்கள் செய்யும் வேலையை எளிதாக செய்யும், அதாவது வழக்கமான மனிதனுக்கு பதிலாக தானியங்கிப்படுத்துதி வேலையே முடிப்புதல் .

சாட் ஜிபிடி-க்கு போட்டியாயாக களமிறங்கியகூகுள் பார்ட் :

2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், AIஉருவாக்கத்தில் ChatGPT வெளிவந்தது . அனைவரும் எதிர்பார்த்ததைப் போல இது டிஜிட்டல் உலகத்தில் பெறும் புரட்சியை ஏற்படுத்தியது. இது பல ஆண்டுகளாக இணையத்தளத்தில் ராஜாவாக வலம்வந்த கூகுளை ஓவர் டேக் செய்து அனைவரையும் வியப்பில் ஆற்றியது.
இந்தப் போட்டிக்கு தயாரான கூகிள் நிறுவனம் தற்போது Google BARD AI என்ற தொழிநுட்பத்தை வெளியீட்டு தான் ராஜாதி ராஜா என நிரூபித்து உள்ளது. இந்தியா உட்பட 180 நாடுகளில் பயன்பாட்டுக்கு தற்போது வந்துதுள்ளது .

கூகுள் பார்ட் என்பது சாட் GPT போன்று கூகுள் உருவாக்கிய உரையாடல் AI ஆகும். இந்த தொழிநுட்பத்தின் மூலம் உமன்மையான மற்றும் துல்லியமான பதில்களை கூகுளால் இணையத்தில் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

கூகுளால் உருவாக்கப்பட்டு வரும் சாட்பாட் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 5 முக்கிய விஷயங்கள்:

AI பயணத்தில் அடுத்தகட்ட நகர்வாக Bard இருக்கும் என தெரிவித்துள்ளார் சுந்தர் பிச்சை, “நம்மிடம் உள்ள பலதரப்பட் மொழி மாதிரிகளின் சக்தி, புத்திசாலித்தனம் மற்றும் படைப்பாற்றலுடன் உலக அறிவின் அகலத்தை இணைக்க முயல்கிறது இந்தBard ” என்று குறிப்பிட்டுள்ளார்.

LaMDA எனப்படும் உரையாடல் பயன்பாடுகளுக்கான மொழி மாதிரி (Language Model for Dialogue Applications) என்பவற்றின் மூலம் Bard இயங்கவுள்ளது.

இணையத்திலிருந்து உயர் தர, புதுமையான பதில்கள், தகவல்களை உடனடியாக பதில் அளிக்கும் இந்த Bard அமையும் என சொல்லப்படுகிறது. அதேபோல் சிக்கல் நிறைந்த தலைப்புகளை எளிமைப்படுத்தியும் தரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் பார்ட் இன்னும் பீட்டா நிலையில் உள்ளதுஎன்பதால் , இதனால் பிற AI – CHATBOT போலவே, தவறுகள் செய்யும் வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tech

‘மேக் இன் இந்தியா’ இலக்குடன் எல்ஜி புதிய முயற்சி

Published

on

கோவை கொடிசியா வர்த்தகக் கண்காட்சி வளாகத்தில் நடைபெற்று வரும் 21-வது இன்டெக் 2026 சர்வதேச இயந்திரக் கருவிகள் மற்றும் தொழில்துறை வர்த்தகக் கண்காட்சியில், காற்றழுத்த கம்ப்ரசர் உற்பத்தித் துறையின் முன்னணி நிறுவனமான எல்ஜி எக்யுப்மென்ட்ஸ் தனது சமீபத்திய கம்ப்ரெஸ்ட்டு ஏர் தொழில்நுட்பங்கள் மற்றும் தீர்வுகளை காட்சிப்படுத்தியுள்ளது.ஜூன் 4 முதல் 8 வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழில்துறை நிபுணர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் வணிகப் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கண்காட்சியின் பிளாட்டினம் ஆதரவாளராக பங்கேற்றுள்ள எல்ஜி எக்யுப்மென்ட்ஸ், தொழில்துறைகளின் செயல்திறனை மேம்படுத்தும் மற்றும் ஆற்றல் பயன்பாட்டை குறைக்கும் பல்வேறு காற்றழுத்த கம்ப்ரசர் அமைப்புகள் மற்றும் துணை உபகரணங்களை காட்சிப்படுத்தியுள்ளது.நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஜெய்ராம் வரதராஜ் கூறுகையில், தொழில்துறைகள் தற்போது அதிக ஆற்றல் திறன், நம்பகத்தன்மை மற்றும் குறைந்த பராமரிப்பு செலவைக் கொண்ட தீர்வுகளை எதிர்பார்க்கின்றன. இந்த தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், உற்பத்தித் திறனை அதிகரிப்பதோடு மொத்த இயக்கச் செலவுகளையும் குறைக்கும் தொழில்நுட்பங்களை எல்ஜி தொடர்ந்து உருவாக்கி வருவதாக தெரிவித்தார்.

எல்ஜி எக்யுப்மென்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி அன்வர் ஜெய் வரதராஜ் கூறுகையில், கம்ப்ரெஸ்ட்டு ஏர் அமைப்புகள் மேலும் அறிவார்ந்ததாகவும், இணைக்கப்பட்டதாகவும், ஆற்றல் திறன் மிக்கதாகவும் மாறிவரும் நிலையில், வாடிக்கையாளர்களின் செயல்திறனை மேம்படுத்தவும், இயக்கச் செலவுகளைக் குறைக்கவும் உதவும் தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் நிறுவனம் தொடர்ந்து முதலீடு செய்து வருவதாக தெரிவித்தார்.இந்தியா, தெற்காசியா மற்றும் மத்திய கிழக்கு பிராந்திய செயல் தலைவர் பவேஷ் காரியா கூறுகையில், காப்புரிமை பெற்ற ‘டிமாண்ட்-மேட்ச்’ தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு புதுமையான தீர்வுகள் தொழில்துறைகளுக்கு ஆற்றல் சேமிப்பு, செயல்பாட்டு நம்பகத்தன்மை மற்றும் உற்பத்தித் திறன் மேம்பாடு போன்ற பலன்களை வழங்குகின்றன என்றார்.கண்காட்சியில் அடுத்த தலைமுறைக்கான அதிநவீன தொழில்நுட்ப பல்வேறு தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 120-க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்பட்டு வரும் எல்ஜி எக்யுப்மென்ட்ஸ், உலகளவில் 20 லட்சத்திற்கும் அதிகமான கம்ப்ரசர்களை நிறுவியுள்ளது. 400-க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்களைக் கொண்ட உலகளாவிய வலையமைப்புடன் செயல்படும் இந்நிறுவனம், உலகின் முன்னணி காற்றழுத்த கம்ப்ரசர் உற்பத்தியாளர்களில் ஒன்றாக திகழ்கிறது. “இந்தியாவில் தயாரித்து உலகிற்கு வழங்குதல்” என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வரும் எல்ஜி, எதிர்கால தொழில்துறை தேவைகளுக்கான புதுமையான மற்றும் நிலையான கம்ப்ரெஸ்ட்டு ஏர் தீர்வுகளை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது.

Continue Reading

Tech

குவாண்டம் கம்ப்யூட்டிங்கில் செயற்கை நுண்ணறிவு

Published

on

 

புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும் !

இன்றைய உலகில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) மற்றும் குவாண்டம் கம்ப்யூட்டிங் (Quantum Computing) ஆகிய இரண்டும் வேகமாக வளர்ந்து வரும் துறைகளாக திகழ்கின்றன. இவை தனித்தனியாகவே மனிதகுல முன்னேற்றத்திற்கு பெரும் பங்காற்றி வருகின்றன. ஆனால், இவை இரண்டும் ஒன்றிணையும் போது உருவாகப்போகும் தாக்கம் மனித வரலாற்றில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது.

குவாண்டம் கம்ப்யூட்டிங் என்றால் என்ன?

பாரம்பரிய கணினிகள் “0” மற்றும் “1” எனும் இரண்டு நிலைகளில் மட்டுமே செயல்படுகின்றன. ஆனால் குவாண்டம் கம்ப்யூட்டர்கள் “கியூபிட் (Qubit)” என்ற அடிப்படையைப் பயன்படுத்துகின்றன. ஒரு கியூபிட் ஒரே நேரத்தில் பல நிலைகளை பிரதிபலிக்க முடியும். இதனால், கணக்கீடுகள் மிக அதிவேகமாக நடைபெறுகின்றன.

செயற்கை நுண்ணறிவின் (AI) தற்போதைய வரம்புகள்

இன்றைய AI அமைப்புகள் பெரும் தரவுகளை (Big Data) செயலாக்கும் திறன் பெற்றுள்ளன. எனினும், சிக்கலான கணித மாதிரிகள் அல்லது மிகப்பெரிய தரவுகளை குறுகிய நேரத்தில் தீர்க்கும் போது சில வரம்புகளைச் சந்திக்கின்றன.

குவாண்டம் + AI : இணைவு தரும் சக்தி

குவாண்டம் கம்ப்யூட்டிங் மற்றும் AI இணைந்தால்:

மருத்துவ ஆராய்ச்சி : புதிய மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் விரைவில் கண்டறியப்படும்.

நிதி துறை : பங்கு சந்தை முன்னறிவிப்பு மற்றும் அபாய மேலாண்மை மிகவும் துல்லியமாக செய்யப்படும்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு : வானிலை முன்னறிவிப்புகள் நம்பகமாக உருவாக்கப்பட்டு, இயற்கை பேரழிவுகளுக்கான தடுப்பு நடவடிக்கைகள் எளிதாகும்.

சைபர் பாதுகாப்பு : தரவு குறியாக்கம் (Encryption) உடனடி முறையில் வலுப்படுத்தப்படும்.

எதிர்காலம் எப்படியிருக்கும்?

குவாண்டம் AI பரவலாக பயன்பாட்டிற்கு வரும் போது, மனிதர்களின் முடிவெடுக்கும் திறன் புதிய உயரங்களை எட்டும். மருத்துவம், அறிவியல், தொழில், கல்வி, சுற்றுச்சூழல் போன்ற அனைத்துத் துறைகளிலும் வேகமான முன்னேற்றம் நிகழும். இது மனிதனின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், சிக்கலான உலகப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வலுவான கருவியாகவும் அமையும்.

செயற்கை நுண்ணறிவும் குவாண்டம் கம்ப்யூட்டிங்கும் தனித்தனியாகவே அதிசயங்களை நி

கழ்த்துகின்றன. ஆனால், இவை இரண்டும் ஒன்றிணையும் போது உருவாகப்போகும் புதிய புரட்சி மனித வரலாற்றின் திசையை மாற்றும். எதிர்காலம் நம்மை ஆச்சரியப்படுத்தும் அதிசயங்களால் நிரம்பியதாக இருக்கும்.

 

ப. முத்து சுப்பிரமணியன்

இணை பேராசிரியர்

மின்னணு மற்றும் தொடர்பியல் பொறியியல் துறை

கோயம்புத்தூர் தொழில்நுட்பக் கல்லூரி, கோயம்புத்தூர்-14.

 

Continue Reading

Tech

இந்தியாவில் அதிகரிக்கும் மின்சார வாகன பயன்பாடு தமிழ்நாடு முழுவதும் விரைவில் 200 சார்ஜிங் ஸ்டேஷன்கள்

Published

on

சென்னை:
மின்சார வாகனப் பயன்பாடு தற்போது இந்தியாவில் அதிகரித்து வருவதால், மாநில அரசுகள் சார்ஜிங் நிலையங்களை அமைப்பதற்கான திட்டங்களை விரைவுபடுத்தி வருகின்றன. தமிழ்நாட்டிலும் இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மொத்தம் 200 சார்ஜிங் ஸ்டேஷன்கள் விரைவில் செயல்பாட்டிற்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் மின்சார வாகன சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைப்பதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, மொத்தம் 200 சார்ஜிங் ஸ்டேஷன்கள் விரைவில் செயல்பாட்டிற்கு வர உள்ளன.

மின்சார வாகனங்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருவதால், மாநிலம் முழுவதும் சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைப்பது அவசியமாகியுள்ளது.

எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சார்ஜிங் வசதிகளை அதிகரிப்பது அவசியமாகியுள்ளது. இதற்காக அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து பணியாற்றி வருகின்றன.

Continue Reading

Trending