Connect with us

Tech

ஜாக்கிரதை! +63 +84,+62, +254..வார்னிங்!

Neque porro quisquam est, qui dolorem ipsum quia dolor sit amet, consectetur, adipisci velit, sed quia non numquam eius modi.

Published

on

தொழில்நுட்பங்கள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே செல்கிறது. பல வேலைகள் சுலபமாக செய்ய வசதி ஏற்பட்டாலும் அதை தவறாக பயன்படுத்தி பணம் பறிக்கும் கும்பல்களும் அதனை வசதியாக்கிக் கொள்கின்றனர். இதையடுத்து சைபர் கிரைம் போலீஸார், மக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். ஆன்லைனில் மோசடிகள் அதிகம் அரங்கேறி வருகின்றன, மொபைல் நம்பர்களை ஹேக் செய்து பணத்தை பறிக்கும் வேலைகளை எளிதாக செய்கிறது திருட்டு கும்பல்அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவித்துள்ளது. சமீபகாலமாக ஓடீபி (OTP) கேட்டு அழைத்து ஏமாற்றும் திருட்டு கும்பல், தற்போது வாட்ஸ் ஆப் அழைப்புகள் மூலம் தொடர்புக் கொண்டு பணம் பறிக்கும் வேலையில் இறங்கியுள்ளது. +254,+63 +84,+62,,+212,+917 ஆகிய சர்வதேச எண்களில் இருந்து வாட்சப் கால் வந்தால் எடுக்கக்கூடாது என்றும், அந்த எண்கள் தொடர்பு கொள்ளக்கூடாது என்றும் சைபர் க்ரைம் எச்சரித்துள்ளது.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்ட்டாகிராம், லிங்கிடு இன் ஆகிய சமூக வலைதள பக்கங்களில் இருந்து நமது தகவல்களை பெற்று நம்மை மோசடியில் சிக்க வைக்க
முயற்சிகள் நடப்பதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுளள்து.

தொடர் அழைப்புகள்:

இந்த மோசடி கும்பல் வாட்ஸ் ஆப் மூலம் தொடர்ந்து கால்கள் செய்கின்றனர் அதனை எடுத்து பேசும் நபர்களிடம் ஆசை வார்த்தைக் கூறி பணம் பறிக்கும் மோசடியில் இறங்குகிரார்களாம்.

வெளிநாட்டில் இருந்தோ அல்லது வெளி மாநிலங்களில் இருந்து கொண்டோ, குழுவாக செயல்பட்டு பெண்களை பேச வைத்து ஏமாற்றுவார்களாம். வெளிநாட்டில் இருந்து வாட்ஸ் ஆப் மூலம் தொடர்ந்து மிஸ்ட்டு கால் கொடுக்கின்றனர். தொடரந்து மிஸ்ட்டு கால் வருவதால் யார் என்று அறிய நாம் அந்த நம்பருக்கு அழைத்தால் நம் நும்பரை ஹேக் செய்து விடுகின்றனர். இதனால் +63 +84,+62, +254 போன்ற எண்களில் இருந்து வரும் கால்களுக்கு பதில் அளிக்காமல் இருப்பதே சிறந்தது.

ஆபத்தாகும் வீடியோ கால்:

பல்வேறு வெளிநாடுகளில் இருந்து பெண்களின் போட்டோக்களை டிபியாக வைத்துக்கொண்டு , வீடியோ கால் அழைப்புகள் வருகின்றது. இது போன்ற அழைப்புகளை எடுத்துப் பேசினால் சில நேரங்களில் செல்போன்கள் செயல் இழந்து விடுகின்றன. எதிர்முனையில் பேசுபவர்கள் சில நேரங்களில் மவுனமாக இருக்கிறார்கள்.. சிலர் பெண் குரலில் பேசுவதையும் கேட்க முடிகிறது. இது போன்ற அழைப்புகள் சில நேரங்களில் தேவையில்லாத சிக்கலை ஏற்படுத்திவிடுகிறது அதாவது, எதிரே வீடியோ கால்கள் பேசும் நபர்கள் ஆடையின்றி தோன்றி அதனை ஸ்கிரீன் ஷாட் எடுத்து உங்களை பணம் கேட்டு மிரட்டுவார்கள் . இது போன்ற வெளிநாடுகளில் இருந்து வரும் தேவை இல்லாத அழைப்புகளை யாரும் எடுக்காமல் இருப்பதே இதில் இருந்து தப்பிக்க வழியாகும் .

பிளாக் செய்வது அவசியம் :

நாம் அறியப்படாத நம்பர்களில் இருந்து தொடர்ந்து கால்கள் வருகிறது என்றால் அந்த நம்பரை பிளாக் செய்து விட வேண்டும் . அவர்களிடம் வரும் மெசேஜ்க்கு பதில் கூறாமல் இருக்க வேண்டும். தேவை இல்லாத ஆப் மற்றும் நமக்கும் அனுப்பும் லிங்கை கிளிக் செய்யக் கூடாது. அப்படி உங்களுக்கு வரும் லிங்கை மீறி நீங்கள் கிளிக் செய்தால் உங்கள் மொபைல் மற்றும் அதில் இருக்கும் வங்கி கணக்கு மற்றும் அதிலுள்ள ஆப்கள் அனைத்தும் ஹேக் செய்து பணம் பறிக்க நேரிடும் என்பதை நாம் அறிய வேண்டும் . மேலும் சைபர் க்ரைம் போலீசாரிடமும் புகார் கொடுக்க வேண்டும் தங்களையும், தங்கள் பணத்தையும் பாதுக்காத்து கொள்ள வேண்டும்.

 

 

Tech

‘மேக் இன் இந்தியா’ இலக்குடன் எல்ஜி புதிய முயற்சி

Published

on

கோவை கொடிசியா வர்த்தகக் கண்காட்சி வளாகத்தில் நடைபெற்று வரும் 21-வது இன்டெக் 2026 சர்வதேச இயந்திரக் கருவிகள் மற்றும் தொழில்துறை வர்த்தகக் கண்காட்சியில், காற்றழுத்த கம்ப்ரசர் உற்பத்தித் துறையின் முன்னணி நிறுவனமான எல்ஜி எக்யுப்மென்ட்ஸ் தனது சமீபத்திய கம்ப்ரெஸ்ட்டு ஏர் தொழில்நுட்பங்கள் மற்றும் தீர்வுகளை காட்சிப்படுத்தியுள்ளது.ஜூன் 4 முதல் 8 வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழில்துறை நிபுணர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் வணிகப் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கண்காட்சியின் பிளாட்டினம் ஆதரவாளராக பங்கேற்றுள்ள எல்ஜி எக்யுப்மென்ட்ஸ், தொழில்துறைகளின் செயல்திறனை மேம்படுத்தும் மற்றும் ஆற்றல் பயன்பாட்டை குறைக்கும் பல்வேறு காற்றழுத்த கம்ப்ரசர் அமைப்புகள் மற்றும் துணை உபகரணங்களை காட்சிப்படுத்தியுள்ளது.நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஜெய்ராம் வரதராஜ் கூறுகையில், தொழில்துறைகள் தற்போது அதிக ஆற்றல் திறன், நம்பகத்தன்மை மற்றும் குறைந்த பராமரிப்பு செலவைக் கொண்ட தீர்வுகளை எதிர்பார்க்கின்றன. இந்த தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், உற்பத்தித் திறனை அதிகரிப்பதோடு மொத்த இயக்கச் செலவுகளையும் குறைக்கும் தொழில்நுட்பங்களை எல்ஜி தொடர்ந்து உருவாக்கி வருவதாக தெரிவித்தார்.

எல்ஜி எக்யுப்மென்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி அன்வர் ஜெய் வரதராஜ் கூறுகையில், கம்ப்ரெஸ்ட்டு ஏர் அமைப்புகள் மேலும் அறிவார்ந்ததாகவும், இணைக்கப்பட்டதாகவும், ஆற்றல் திறன் மிக்கதாகவும் மாறிவரும் நிலையில், வாடிக்கையாளர்களின் செயல்திறனை மேம்படுத்தவும், இயக்கச் செலவுகளைக் குறைக்கவும் உதவும் தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் நிறுவனம் தொடர்ந்து முதலீடு செய்து வருவதாக தெரிவித்தார்.இந்தியா, தெற்காசியா மற்றும் மத்திய கிழக்கு பிராந்திய செயல் தலைவர் பவேஷ் காரியா கூறுகையில், காப்புரிமை பெற்ற ‘டிமாண்ட்-மேட்ச்’ தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு புதுமையான தீர்வுகள் தொழில்துறைகளுக்கு ஆற்றல் சேமிப்பு, செயல்பாட்டு நம்பகத்தன்மை மற்றும் உற்பத்தித் திறன் மேம்பாடு போன்ற பலன்களை வழங்குகின்றன என்றார்.கண்காட்சியில் அடுத்த தலைமுறைக்கான அதிநவீன தொழில்நுட்ப பல்வேறு தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 120-க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்பட்டு வரும் எல்ஜி எக்யுப்மென்ட்ஸ், உலகளவில் 20 லட்சத்திற்கும் அதிகமான கம்ப்ரசர்களை நிறுவியுள்ளது. 400-க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்களைக் கொண்ட உலகளாவிய வலையமைப்புடன் செயல்படும் இந்நிறுவனம், உலகின் முன்னணி காற்றழுத்த கம்ப்ரசர் உற்பத்தியாளர்களில் ஒன்றாக திகழ்கிறது. “இந்தியாவில் தயாரித்து உலகிற்கு வழங்குதல்” என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வரும் எல்ஜி, எதிர்கால தொழில்துறை தேவைகளுக்கான புதுமையான மற்றும் நிலையான கம்ப்ரெஸ்ட்டு ஏர் தீர்வுகளை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது.

Continue Reading

Tech

குவாண்டம் கம்ப்யூட்டிங்கில் செயற்கை நுண்ணறிவு

Published

on

 

புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும் !

இன்றைய உலகில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) மற்றும் குவாண்டம் கம்ப்யூட்டிங் (Quantum Computing) ஆகிய இரண்டும் வேகமாக வளர்ந்து வரும் துறைகளாக திகழ்கின்றன. இவை தனித்தனியாகவே மனிதகுல முன்னேற்றத்திற்கு பெரும் பங்காற்றி வருகின்றன. ஆனால், இவை இரண்டும் ஒன்றிணையும் போது உருவாகப்போகும் தாக்கம் மனித வரலாற்றில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது.

குவாண்டம் கம்ப்யூட்டிங் என்றால் என்ன?

பாரம்பரிய கணினிகள் “0” மற்றும் “1” எனும் இரண்டு நிலைகளில் மட்டுமே செயல்படுகின்றன. ஆனால் குவாண்டம் கம்ப்யூட்டர்கள் “கியூபிட் (Qubit)” என்ற அடிப்படையைப் பயன்படுத்துகின்றன. ஒரு கியூபிட் ஒரே நேரத்தில் பல நிலைகளை பிரதிபலிக்க முடியும். இதனால், கணக்கீடுகள் மிக அதிவேகமாக நடைபெறுகின்றன.

செயற்கை நுண்ணறிவின் (AI) தற்போதைய வரம்புகள்

இன்றைய AI அமைப்புகள் பெரும் தரவுகளை (Big Data) செயலாக்கும் திறன் பெற்றுள்ளன. எனினும், சிக்கலான கணித மாதிரிகள் அல்லது மிகப்பெரிய தரவுகளை குறுகிய நேரத்தில் தீர்க்கும் போது சில வரம்புகளைச் சந்திக்கின்றன.

குவாண்டம் + AI : இணைவு தரும் சக்தி

குவாண்டம் கம்ப்யூட்டிங் மற்றும் AI இணைந்தால்:

மருத்துவ ஆராய்ச்சி : புதிய மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் விரைவில் கண்டறியப்படும்.

நிதி துறை : பங்கு சந்தை முன்னறிவிப்பு மற்றும் அபாய மேலாண்மை மிகவும் துல்லியமாக செய்யப்படும்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு : வானிலை முன்னறிவிப்புகள் நம்பகமாக உருவாக்கப்பட்டு, இயற்கை பேரழிவுகளுக்கான தடுப்பு நடவடிக்கைகள் எளிதாகும்.

சைபர் பாதுகாப்பு : தரவு குறியாக்கம் (Encryption) உடனடி முறையில் வலுப்படுத்தப்படும்.

எதிர்காலம் எப்படியிருக்கும்?

குவாண்டம் AI பரவலாக பயன்பாட்டிற்கு வரும் போது, மனிதர்களின் முடிவெடுக்கும் திறன் புதிய உயரங்களை எட்டும். மருத்துவம், அறிவியல், தொழில், கல்வி, சுற்றுச்சூழல் போன்ற அனைத்துத் துறைகளிலும் வேகமான முன்னேற்றம் நிகழும். இது மனிதனின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், சிக்கலான உலகப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வலுவான கருவியாகவும் அமையும்.

செயற்கை நுண்ணறிவும் குவாண்டம் கம்ப்யூட்டிங்கும் தனித்தனியாகவே அதிசயங்களை நி

கழ்த்துகின்றன. ஆனால், இவை இரண்டும் ஒன்றிணையும் போது உருவாகப்போகும் புதிய புரட்சி மனித வரலாற்றின் திசையை மாற்றும். எதிர்காலம் நம்மை ஆச்சரியப்படுத்தும் அதிசயங்களால் நிரம்பியதாக இருக்கும்.

 

ப. முத்து சுப்பிரமணியன்

இணை பேராசிரியர்

மின்னணு மற்றும் தொடர்பியல் பொறியியல் துறை

கோயம்புத்தூர் தொழில்நுட்பக் கல்லூரி, கோயம்புத்தூர்-14.

 

Continue Reading

Tech

இந்தியாவில் அதிகரிக்கும் மின்சார வாகன பயன்பாடு தமிழ்நாடு முழுவதும் விரைவில் 200 சார்ஜிங் ஸ்டேஷன்கள்

Published

on

சென்னை:
மின்சார வாகனப் பயன்பாடு தற்போது இந்தியாவில் அதிகரித்து வருவதால், மாநில அரசுகள் சார்ஜிங் நிலையங்களை அமைப்பதற்கான திட்டங்களை விரைவுபடுத்தி வருகின்றன. தமிழ்நாட்டிலும் இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மொத்தம் 200 சார்ஜிங் ஸ்டேஷன்கள் விரைவில் செயல்பாட்டிற்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் மின்சார வாகன சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைப்பதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, மொத்தம் 200 சார்ஜிங் ஸ்டேஷன்கள் விரைவில் செயல்பாட்டிற்கு வர உள்ளன.

மின்சார வாகனங்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருவதால், மாநிலம் முழுவதும் சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைப்பது அவசியமாகியுள்ளது.

எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சார்ஜிங் வசதிகளை அதிகரிப்பது அவசியமாகியுள்ளது. இதற்காக அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து பணியாற்றி வருகின்றன.

Continue Reading

Trending