Connect with us

கோயம்பத்தூர்

கோலாகலமாக நடந்த தின இதிகை பத்திரிகை வெளியீட்டு விழா!

Published

on

கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி, கோவையில் ஆவரம்பாளையத்தில் அமைந்துள்ள கோஇந்தியா அரங்கத்தில், இ-பிஹைண்ட் குழுமத்தின் பிரத்யேக வார இதழ் “தின இதிகை” வெளியானது.

பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அடிசியா நிறுவனத்தின் மேலாளர் திரு. மணிகண்டன் சாந்தாமணி, மேலாண்மை இயக்குனர் கர்னல் டாக்டர் பாஸ்கரன், ஸ்போர்ட்ஸ்லேண்ட் திரு. சஞ்சய் ஜான்சன், Quira Visual Creators பேன்சி ராவல், அக்ஷயம் அறக்கட்டளை நிறுவனர் திரு. கர்ணன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

இவ்விழாவை திருமதி உஷா சந்திரசேகரன், திருமதி சியாமளா சரவணன், திருமதி அபிராமி சதீஷ்குமார், திருமதி சொர்ணா சக்திவேல், திருமதி ராஜலட்சுமி ஜெகநாதன், திருமதி ஸ்ரீ நந்தினி பார்த்திபன், திருமதி சூர்யா பாலாமுருகன், திருமதி விஜயலட்சுமி பிரசன்னா, திருமதி உமா மஹேஸ்வரி, திருமதி வைஷ்ணவி அருண்காந்த் ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவினைத் தொடங்கிவைத்தனர்.

விழா வரவேற்புரையை “தின இதிகை” பத்திரிகையின் நிர்வாக இயக்குனர் திரு. சதீஷ்குமார் வழங்கினார். தொடர்ந்து குழுவின் அறிமுக உரையை திரு. ஸ்ரீதர், திரு. சக்திவேல், திரு. பார்த்திபன், திரு. பிரசன்னா, திரு. பாலமுருகன், திரு. செந்தில்குமார், திரு. நவீன், திரு. பிரகாஷ், திருமதி சௌமியா பிரகாஷ், திருமதி உமா மஹேஸ்வரி ஆகியோர் வழங்கினர்.

தமிழ்தாய் வாழ்த்தை சங்கீத இசை மணி சங்கீத ரத்னா திருமதி துர்கா லட்சுமி குழுவினர்கள் வழங்கினர். ஸ்ரீ நிருத்ய அர்ப்பண, பேபி ஓவியா, பேபி அக்க்ஷர சக்திவேல், தாரிக ஸ்ரீ, ஈரோடு சஞ்சய், ITC டான்ஸ் ஸ்டூடியோ ஆகியோர் சிறப்பான நிகழ்ச்சிகளை வழங்கி பார்வையாளர்களை மகிழ்வித்தனர்.

இந்த விழாவில் பேசிய பட்டிமன்றப் பேச்சாளர் திருமதி சாந்தாமணி, தனது இயல்பான நகைச்சுவைக்கலந்த உரையை வழங்கி கூட்டத்தை மகிழ்வித்தார். அவர் கூறியதாவது:

“உலக அளவில் ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு சிறப்புகள் உண்டு.

  • இத்தாலிய மொழி – இசை மொழி,பிரெஞ்சு மொழி – காதல் மொழி,இங்கிலாந்து மொழி – வணிக மொழி,கிரேக்க மொழி – தத்துவ மொழி,உருது மொழி – கவிதை மொழி.சமஸ்கிருதம் – தெய்வ மொழி, தமிழ் மொழி மட்டும் தான் தாய் மொழி.

தாய்மொழியாம் தமிழையும், தாய் தந்தையரையும் வணங்கி மகிழ்ந்து, “தின இதிகை” வாரப்பத்திரிக்கையின் வெளியீட்டு விழாவிற்கு நல்ல வரவேற்புரை வழங்கிய நிறுவனர் திரு. சதீஷ்குமாருக்கும், அழகாக அறிமுக உரை ஆற்றிய ஸ்ரீதர், சக்திவேல், பார்த்திபன், பிரசன்னா, பாலமுருகன், செந்தில்குமார், நவீன் ஆகியோருக்கும், குழும உறுப்பினர்களாக இருந்த ஜெகதீசன், ஷங்கர்பாபு, கெளதம், உமா மகேஸ்வரி, பிரபு, அருண், சௌமியா, பிரகாஷ், ஜெயக்குமார், சக்திவேல், அபிராமி, ஜெயலட்சுமி, வினோதினி மற்றும் வெங்கட்ராமன், முத்து, சுப்ரமணியம், தியாகராஜன் ஆகியோர்களுக்கும் நன்றி தெரிவித்தார். மேலும், “இன்னும் யாரேனும் பெயர் விட்டுப் போயிருந்தால் அடுத்த ஆண்டு என்னையே அழையுங்க; அதில் எல்லார்பெயரையும் சேர்த்துச் சொல்வேன்” என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.

பெருந்திரளாக வருகை தந்திருந்த அறிஞர் பெருமக்களுக்கு தனது வணக்கத்தைத் தெரிவித்த சாந்தாமணி அவர்கள், கைதட்டுவதின் பலன்களைப் பற்றி நகைச்சுவையோடு எடுத்துரைத்தார். மேலும், பத்திரிகையாளர்களின் சமூகப் பங்களிப்பை வலியுறுத்தும் குட்டிக்கதையையும் கூறினார்.

அடிசியா நிறுவனர் திரு. மணிகண்டன் அவர்கள்:
“பத்திரிகை என்பது ஒரு சாதாரண தொழில் அல்ல. அது உண்மை மற்றும் நேர்மையை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். மக்களின் நம்பிக்கையை சம்பாதிப்பது மிகக் கடினம். அதனால்தான் பத்திரிகையை ‘நாட்டின் முதுகெலும்பு’ என்று சொல்கிறோம். இந்தக் கடமையை ‘தின இதிகை’ சிறப்பாகச் செய்யும் என நம்புகிறேன்.” என்று தெரிவித்தார்.

அக்ஷயம் அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் கர்ணன் அவர்கள்:
“நாளைய இந்தியா இளைஞர்கள் கையில் உள்ளது. இன்றைய இளைஞர்கள் அதை நிறைவேற்றும் வகையில் செயல்படுகின்றனர். இந்த பத்திரிகை மக்களுக்கு ஒரு செய்தித்தாளாக வரவேண்டும். பத்திரிக்கை முன்னேற வாழ்த்துக்கள்.” என்றார்.

கர்னல் டாக்டர் பாஸ்கரன் அவர்கள்:
“சமூக ஊடகங்களில் நிரம்பி வழியும் செய்திகள் தாண்டி, மக்களுக்கு பயனுள்ள செய்திகள் சேவை அடிப்படையில் வெளிவர வேண்டும். உண்மையான செய்திகளை ஆராய்ந்து, மக்களின் கருத்தை பிரதிபலிக்கும் இடமாக இருக்கும் என நம்புகிறேன்.” என்றார்.

Quira Visual Creators நிறுவன தலைவர் பேன்சி ராவல் அவர்கள்:
“தின இதிகை குழுமத்தினரை வெகுவாக பாராட்டுகிறேன்” என்று உரையாற்றினார்.

திரு. சதீஷ்குமார், ஸ்ரீதர், சக்திவேல், பார்த்திபன், பிரசன்னா, பாலமுருகன், செந்தில்குமார், நவீன், ஜெகதீசன், ஷங்கர்பாபு, கெளதம், உமா மகேஸ்வரி, பிரபு, அருண், சௌமியா, பிரகாஷ், ஜெயக்குமார், வெங்கட்ராமன், முத்து, சுப்ரமணியம், தியாகராஜன் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

கோயம்பத்தூர்

தேசிய ஹேக்கத்தானில் கல்லூரி மாணவர்கள் சாதனை

Published

on

புள்ளிவிவரம் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் (MoSPI) கீழ் உள்ள தேசிய புள்ளிவிவர அலுவலகம் (NSO) மற்றும் அதே அமைச்சகம் ஆகியவை, கல்வி அமைச்சகத்தின் புத்தாக்கப் பிரிவுடன் (Innovation Cell) இணைந்து, “STATATHON – A Data Journey for Viksit Bharat” (விக்சித் பாரதத்திற்கான தரவுப் பயணம்) எனும் தேசிய அளவிலான ஹேக்கத்தான் (hackathon) போட்டியை ஏற்பாடு செய்தன. இதன் 36 மணிநேர இறுதிச் சுற்று, 2026 ஜூன் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் உள்ள ‘மானவ் ரச்னா சர்வதேச ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகள் நிறுவன’ (MRIIRS) வளாகத்தில் நடைபெற்றது.

செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த தீர்வுகள் மூலம் இந்தியாவின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரக் கட்டமைப்பை வலுப்படுத்துவதே இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும். நாடு முழுவதிலுமிருந்து சமர்ப்பிக்கப்பட்ட 5,000 ஆரம்பக்கட்டத் திட்டங்களில் இருந்து, 36 மணிநேரம் நடைபெறும் கோடிங் மற்றும் புத்தாக்கப் போட்டியான ‘STATATHON 2026’ இன் இறுதிச் சுற்றுக்கு 25 அணிகள் (21 கல்வி நிறுவனங்கள் மற்றும் 4 ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள்) தேர்ந்தெடுக்கப்பட்டன.

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் மாணவர்கள் இறுதிப் போட்டியில் பங்கேற்று, தானியக்கத்தின் மூலம் கணக்கெடுப்புத் தரவுகளின் புள்ளிவிவரச் செயலாக்கத்தில் ஈடுபடும் நேரத்தையும் முயற்சியையும் குறைத்து, நம்பகமான மதிப்பீடுகளையும் பகுப்பாய்வு அறிக்கைகளையும் விரைவாக உருவாக்குவதற்கான ஒரு தீர்வை முன்வைத்தனர்.

 

அவர்கள் கணக்கெடுப்புத் தரவுத் தொகுப்புகளில் (Survey Datasets) SQL வினவல்களை இயக்கி, அதன் முடிவுகளை JSON போன்ற பயனர்-நட்பு வடிவத்தில் பெறுவதற்கான ஒரு API நுழைவாயிலை (API gateway) உருவாக்கினர்; இதற்காக நேற்று (18.06.2026) ரூ. 50,000 ரொக்கப் பரிசுடன் கூடிய இரண்டாம் பரிசை வென்றனர்.

கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன் மற்றும் கல்லூரி முதல்வர் மற்றும் செயலாளர் டாக்டர் பி.எல். சிவகுமார் ஆகியோர் மாணவர்களின் சிறப்பான செயல்பாட்டைப் பாராட்டினர்.

Continue Reading

கோயம்பத்தூர்

தனிஷ்க் ஜூவல்லரி சார்பில் 3 நாள் உயர் ரக வைர நகை கண்காட்சி

Published

on

கோவையில், டாடா குழுமத்தின் இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் நம்பகமான நகை விற்பனை பிராண்டான தனிஷ்க், தனது பிரத்யேக இயற்கை வைர நகைகள் கண்காட்சி நடைபெறுகிறது . உயர்தர இயற்கை வைர நகைகள் மற்றும் சாலிடையர் ஆபரணங்களை மையமாகக் கொண்டு நடத்தப்படும் இந்த பிரம்மாண்ட கண்காட்சியை, தனிஷ்க் ஜூவல்லரியின் வாடிக்கையாளர்களே தொடங்கி வைத்தனர்.

இயற்கை வைர நகைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு கண்காட்சி, ஜூன் 19 முதல் 21, 2026 வரை கோவை ரேஸ்கோர்ஸில் அமைந்துள்ள வெல்கம் ஹோட்டல் பை ஐடிசியில் நடைபெறுகிறது. தினமும் காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நடைபெறும் இக்கண்காட்சி, பார்வையாளர்களை நேர்த்தியான கைவினைத் திறன், காலத்தால் அழியாத வடிவமைப்புகள் மற்றும் உயர்மதிப்புடைய இயற்கை வைரங்களின் உலகிற்குள் அழைத்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், தென்னிந்திய திருமணங்கள் மற்றும் விழாக்களை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள ‘சவுத் இந்தியன் ஸ்டடெட் கலெக்‌ஷன்’ பாரம்பரிய அழகையும், காலத்தால் அழியாத மதிப்பையும் ஒருங்கிணைக்கிறது. பாரம்பரியத்தை விரும்பும் மணமகள்கள் மற்றும் குடும்பங்களுக்கான சிறந்த தேர்வாக இந்த தொகுப்பு அமைகிறது.

கண்காட்சியை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்காக பல்வேறு சிறப்பு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. வைர மதிப்பில் 20 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுவதுடன், உங்கள் பழைய தங்கத்தை எந்த நகைக்கடையில் வாங்கப்பட்டிருந்தாலும் 9 காரட் மற்றும் அதற்கு மேற்பட்ட பழைய தங்க நகைகளுக்கு 0 சதவீத கழிவு சலுகையுடன் மாற்றிக் கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது. (*விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பொருந்தும்.)

இந்த கண்காட்சி, நகை ஆர்வலர்கள், தனிஷ்கின் வாடிக்கையாளர்கள் மற்றும் புதிய வாடிக்கையாளர்களை ஒரே மேடையில் இணைத்து, இயற்கை வைரங்களின் அருமை மற்றும் புதுமையான வடிவமைப்புகளின் சிறப்பை கொண்டாடும் ஒரு முக்கிய நிகழ்வாக அமைந்துள்ளது.

நிகழ்ச்சியில் டைட்டன் கம்பெனி லிமிடெட்டின் நகைப் பிரிவு பிராந்திய கிளஸ்டர் மேலாளர் திரு. சந்தோஷ், தனிஷ்க் கோவை ஏரியா பிஸ்னஸ் மேலாளர்கள் சிவரஞ்சனி மற்றும் நவீன் குமார் ஆகியோர் பேசுகையில் ,

“இந்த பிரத்யேக கண்காட்சியின் மூலம் கோயம்புத்தூர் மக்களுக்கு எங்களின் சிறந்த இயற்கை வைர நகைத் தொகுப்புகளை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம். நேர்த்தியான கைவினைத் திறன், புதுமையான வடிவமைப்பு மற்றும் தரத்தில் சிறந்து விளங்கும் நகைகளை வழங்குவதே எங்களின் நோக்கம். கோயம்புத்தூர் எங்களுக்கு மிகவும் முக்கியமான சந்தையாகும். இங்கு வாடிக்கையாளர்கள் அளித்து வரும் வரவேற்பு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது. இயற்கை வைரங்களின் அழகையும், ஒவ்வொரு நகையின் பின்னணியில் உள்ள தனித்துவமான கதைகளையும் அவர்கள் பெரிதும் பாராட்டி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. தரம், நம்பிக்கை மற்றும் சிறப்பான வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்குவதில் தனிஷ்க் தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது,” என்றனர்.

Continue Reading

கோயம்பத்தூர்

முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா

Published

on

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2026 – 2027 ஆம் கல்வியாண்டில் இளநிலை பட்டப் படிப்பில் சேர்ந்துள்ள முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா 17.06.2026 (புதன்கிழமை) இன்று கல்லூரியின் கலையரங்கில் நடைபெற்றது.

விழாவிற்கு எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந் தர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் கல்லூரியின் சிறப்பம்சங்களைக் குறிப்பிட்டு வரவேற்புரை வழங்கினார். அண்ணா பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தரும் ஈபிஜி ஃபவுண்டேஷனின் தலைவருமான முனைவர் ஈ.பாலகுருசாமி அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி விழாவினைத் தொடங்கி வைத்தார். பின்னர், கல்லூரி கையேட்டினை சிறப்பு விருந்தினர் வெளியிட எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து அவர் பேசியதாவது,

40 ஆண்டுகால கல்வி சேவை என்பது ஒரு எளிமையான காரியம் அல்ல. தரமான கல்விச்சூழல், அர்ப்பணிப்போடு இயங்கக்கூடிய பேராசிரியர்கள் போன்ற காரணிகள் தான் மிக முக்கியக் காரணம். இந்திய அளவில் சிறந்த கல்லூரிகளுக்கான தரவரிசையில் இக்கல்லூரி 100 இடங்களுக்குள் இருப்பது பாராட்டுக்குரியது. ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு இளைஞர்கள் மிக மிக முக்கியமானவர்கள். இளைஞர்களால் தான் இந்தியா வளர்ந்த நாடாக மாற உள்ளது. நம் வாழ்க்கையில் அறிந்துகொள்ளும் ஆர்வம், அர்ப்பணிப்பு, நல்ல குணம், படைப்பாற்றல், பங்களிப்பு ஆகிய 5 பண்புகளை கடைபிடித்தால் நாம் எப்போதும் வெற்றியாளர்களாகத் திகழ முடியும். இந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் தரமான சமுதாயத்தை உருவாக்க உழைக்க வேண்டும். சுயநலமான வாழ்க்கையைக் கடந்து பொது நலத்தோடு நாம் கற்ற கல்வியை இந்த சமூகத்தின் வளர்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டும். இன்றைய நவீன உலகில் ஏஐ போன்ற தொழில்நுட்பங்களை மாணவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் முன்னாள் மாணவரும், திருநெல்வேலி சையத் குழுமங்களின் இயக்குநருமான முனைவர் என். சையத் நவாஸ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு தன் கல்லூரி கால அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு உரையாற்றினார்.

தொடர்ந்து, முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. நிறைவாக கல்லூரியின் கணினி அறிவியல் துறைத் தலைவர் முனைவர் ஜி.மரிய பிரிசில்லா நன்றி கூறினார். விழாவில் 2, 250 மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Continue Reading

Trending