Connect with us

கோயம்பத்தூர்

கோலாகலமாக நடந்த தின இதிகை பத்திரிகை வெளியீட்டு விழா!

Published

on

கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி, கோவையில் ஆவரம்பாளையத்தில் அமைந்துள்ள கோஇந்தியா அரங்கத்தில், இ-பிஹைண்ட் குழுமத்தின் பிரத்யேக வார இதழ் “தின இதிகை” வெளியானது.

பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அடிசியா நிறுவனத்தின் மேலாளர் திரு. மணிகண்டன் சாந்தாமணி, மேலாண்மை இயக்குனர் கர்னல் டாக்டர் பாஸ்கரன், ஸ்போர்ட்ஸ்லேண்ட் திரு. சஞ்சய் ஜான்சன், Quira Visual Creators பேன்சி ராவல், அக்ஷயம் அறக்கட்டளை நிறுவனர் திரு. கர்ணன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

இவ்விழாவை திருமதி உஷா சந்திரசேகரன், திருமதி சியாமளா சரவணன், திருமதி அபிராமி சதீஷ்குமார், திருமதி சொர்ணா சக்திவேல், திருமதி ராஜலட்சுமி ஜெகநாதன், திருமதி ஸ்ரீ நந்தினி பார்த்திபன், திருமதி சூர்யா பாலாமுருகன், திருமதி விஜயலட்சுமி பிரசன்னா, திருமதி உமா மஹேஸ்வரி, திருமதி வைஷ்ணவி அருண்காந்த் ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவினைத் தொடங்கிவைத்தனர்.

விழா வரவேற்புரையை “தின இதிகை” பத்திரிகையின் நிர்வாக இயக்குனர் திரு. சதீஷ்குமார் வழங்கினார். தொடர்ந்து குழுவின் அறிமுக உரையை திரு. ஸ்ரீதர், திரு. சக்திவேல், திரு. பார்த்திபன், திரு. பிரசன்னா, திரு. பாலமுருகன், திரு. செந்தில்குமார், திரு. நவீன், திரு. பிரகாஷ், திருமதி சௌமியா பிரகாஷ், திருமதி உமா மஹேஸ்வரி ஆகியோர் வழங்கினர்.

தமிழ்தாய் வாழ்த்தை சங்கீத இசை மணி சங்கீத ரத்னா திருமதி துர்கா லட்சுமி குழுவினர்கள் வழங்கினர். ஸ்ரீ நிருத்ய அர்ப்பண, பேபி ஓவியா, பேபி அக்க்ஷர சக்திவேல், தாரிக ஸ்ரீ, ஈரோடு சஞ்சய், ITC டான்ஸ் ஸ்டூடியோ ஆகியோர் சிறப்பான நிகழ்ச்சிகளை வழங்கி பார்வையாளர்களை மகிழ்வித்தனர்.

இந்த விழாவில் பேசிய பட்டிமன்றப் பேச்சாளர் திருமதி சாந்தாமணி, தனது இயல்பான நகைச்சுவைக்கலந்த உரையை வழங்கி கூட்டத்தை மகிழ்வித்தார். அவர் கூறியதாவது:

“உலக அளவில் ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு சிறப்புகள் உண்டு.

  • இத்தாலிய மொழி – இசை மொழி,பிரெஞ்சு மொழி – காதல் மொழி,இங்கிலாந்து மொழி – வணிக மொழி,கிரேக்க மொழி – தத்துவ மொழி,உருது மொழி – கவிதை மொழி.சமஸ்கிருதம் – தெய்வ மொழி, தமிழ் மொழி மட்டும் தான் தாய் மொழி.

தாய்மொழியாம் தமிழையும், தாய் தந்தையரையும் வணங்கி மகிழ்ந்து, “தின இதிகை” வாரப்பத்திரிக்கையின் வெளியீட்டு விழாவிற்கு நல்ல வரவேற்புரை வழங்கிய நிறுவனர் திரு. சதீஷ்குமாருக்கும், அழகாக அறிமுக உரை ஆற்றிய ஸ்ரீதர், சக்திவேல், பார்த்திபன், பிரசன்னா, பாலமுருகன், செந்தில்குமார், நவீன் ஆகியோருக்கும், குழும உறுப்பினர்களாக இருந்த ஜெகதீசன், ஷங்கர்பாபு, கெளதம், உமா மகேஸ்வரி, பிரபு, அருண், சௌமியா, பிரகாஷ், ஜெயக்குமார், சக்திவேல், அபிராமி, ஜெயலட்சுமி, வினோதினி மற்றும் வெங்கட்ராமன், முத்து, சுப்ரமணியம், தியாகராஜன் ஆகியோர்களுக்கும் நன்றி தெரிவித்தார். மேலும், “இன்னும் யாரேனும் பெயர் விட்டுப் போயிருந்தால் அடுத்த ஆண்டு என்னையே அழையுங்க; அதில் எல்லார்பெயரையும் சேர்த்துச் சொல்வேன்” என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.

பெருந்திரளாக வருகை தந்திருந்த அறிஞர் பெருமக்களுக்கு தனது வணக்கத்தைத் தெரிவித்த சாந்தாமணி அவர்கள், கைதட்டுவதின் பலன்களைப் பற்றி நகைச்சுவையோடு எடுத்துரைத்தார். மேலும், பத்திரிகையாளர்களின் சமூகப் பங்களிப்பை வலியுறுத்தும் குட்டிக்கதையையும் கூறினார்.

அடிசியா நிறுவனர் திரு. மணிகண்டன் அவர்கள்:
“பத்திரிகை என்பது ஒரு சாதாரண தொழில் அல்ல. அது உண்மை மற்றும் நேர்மையை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். மக்களின் நம்பிக்கையை சம்பாதிப்பது மிகக் கடினம். அதனால்தான் பத்திரிகையை ‘நாட்டின் முதுகெலும்பு’ என்று சொல்கிறோம். இந்தக் கடமையை ‘தின இதிகை’ சிறப்பாகச் செய்யும் என நம்புகிறேன்.” என்று தெரிவித்தார்.

அக்ஷயம் அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் கர்ணன் அவர்கள்:
“நாளைய இந்தியா இளைஞர்கள் கையில் உள்ளது. இன்றைய இளைஞர்கள் அதை நிறைவேற்றும் வகையில் செயல்படுகின்றனர். இந்த பத்திரிகை மக்களுக்கு ஒரு செய்தித்தாளாக வரவேண்டும். பத்திரிக்கை முன்னேற வாழ்த்துக்கள்.” என்றார்.

கர்னல் டாக்டர் பாஸ்கரன் அவர்கள்:
“சமூக ஊடகங்களில் நிரம்பி வழியும் செய்திகள் தாண்டி, மக்களுக்கு பயனுள்ள செய்திகள் சேவை அடிப்படையில் வெளிவர வேண்டும். உண்மையான செய்திகளை ஆராய்ந்து, மக்களின் கருத்தை பிரதிபலிக்கும் இடமாக இருக்கும் என நம்புகிறேன்.” என்றார்.

Quira Visual Creators நிறுவன தலைவர் பேன்சி ராவல் அவர்கள்:
“தின இதிகை குழுமத்தினரை வெகுவாக பாராட்டுகிறேன்” என்று உரையாற்றினார்.

திரு. சதீஷ்குமார், ஸ்ரீதர், சக்திவேல், பார்த்திபன், பிரசன்னா, பாலமுருகன், செந்தில்குமார், நவீன், ஜெகதீசன், ஷங்கர்பாபு, கெளதம், உமா மகேஸ்வரி, பிரபு, அருண், சௌமியா, பிரகாஷ், ஜெயக்குமார், வெங்கட்ராமன், முத்து, சுப்ரமணியம், தியாகராஜன் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

உள்ளூர் செய்திகள்

அன்னூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் என்எஸ்எஸ் முகாம் நிறைவு !

Published

on

அன்னூர், அக்.3: அன்னூர் அமரர். முத்துக்கவுண்டர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்புமுகாம் அன்னூர் அடுத்துள்ள நாகம்மாபுதூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் கடந்த 26ம் தேதி முகாம் துவங்கி நேற்று 2ம் தேதி வரை நடைபெற்றது. இதில் மேல்நிலை முதலாம் ஆண்டு மாணவர்கள் 25 பேர் முகாம்மிட்டு வந்தனர். டிஜிட்டல் கல்வி அறிவில் இளைஞர்களின் பங்கு என்னும் தலைப்பில் நடைபெற்று வந்த நாட்டு நலப்பணித் திட்ட முகாமாமை பள்ளியின் தலைமை ஆசிரியர் சிவசக்தி துவக்கி வைத்தார். ஒரு வாரம் நடைபெற்ற இந்த சிறப்பு முகாம் தினசரி பல்வேறு களப்பணிகள் நடைபெற்றது பள்ளி வளாகம் தூய்மை செய்தல், மரக்கன்றுகள் நடவு செய்தல், பஞ்சாலை நிறுவனத்தை பார்வையிடுதல், அன்னூர் மன்னீஸ்வரர் கோவில் வளாக தூய்மை பணி, புதிய பாரத எழுத்தறிவு திட்டம், நெகிழிப்பை ஒழிப்பதன் அவசியம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம், கண் சிகிச்சை முகாம், புகையிலை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி, அன்னூர் காவல் நிலையம், பார்வையிடுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

நேற்று காலை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அன்னூர் பேரூராட்சி அலுவலத்தில் காந்தி சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இதை தொடர்ந்து அன்னூர் தீயணைப்பு நிலையத்தை பார்வையிட்டு தீயணைப்புத்துறையினரின் ஆபத்துகால மீட்பு பணிகள் குறித்து கேட்டறிந்தனர். இது தொடர்ந்து மாலை முகாம் நிறைவு விழா நடைபெற்றது. முகாம் ஏற்பாடுகளை பள்ளியின் திட்ட அலுவலர் முதுகலை ஆசிரியர் சுரேஷ் செய்துவருகிறார். அவருடன் ஆசிரியர்கள் பாலசுப்பிரமணியம், கலைச்செல்வன், சுமதி, தமிழரசி, ஆகியோர் உடன் இருந்து முகாமை செயல்படுத்தினர்.

 

அன்னூர் அமரர் முத்துக்கவுண்டர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வந்த நாட்டு நலப்பணி திட்டம் முகாமில் அன்னூர் காவல் நிலையத்தை மாணவர்கள் பார்வையிட்டனர்

அன்னூர் தீயணைப்பு நிலையத்தை பார்வையிட்டு மீட்பு பணிகள் குறித்து கேட்டறிந்தனர்.

Continue Reading

உள்ளூர் செய்திகள்

அன்னூர் அரசு மேல்நிலைப் பள்ளி என்எஸ்எஸ் மாணவர்கள் சிறப்பு முகாம் !

Published

on

அன்னூர், அக்.2: அன்னூர் அமரர். முத்துக்கவுண்டர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்புமுகாம் நடைபெற்று வருகிறது. அன்னூர் அடுத்துள்ள நாகம்மாபுதூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் கடந்த 26ம் தேதி முகாம் துவங்கி இன்று 2ம் தேதி வரை நடைபெருகிறது. இதில் மேல்நிலை முதலாம் ஆண்டு மாணவர்கள் 25 பேர் முகாம்மிட்டு வருகின்றனர். டிஜிட்டல் கல்வி அறிவில் இளைஞர்களின் பங்கு என்னும் தலைப்பில் நடைபெற்று வரும் இந்த நாட்டு நலப்பணித் திட்ட முகாமாமை பள்ளியின் தலைமை ஆசிரியர் சிவசக்தி துவக்கி வைத்தார். ஒரு வாரம் நடைபெறும் இந்த சிறப்பு முகாம் தினசரி பல்வேறு களப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் தினசரி பல்வேறு களப்பணிகள் நடைபெற்று வருகிறது. பள்ளி வளாகம் தூய்மை செய்தல், மரக்கன்றுகள் நடவு செய்தல், பஞ்சாலை நிறுவனத்தை பார்வையிடுதல், அன்னூர் மண்ணீஸ்வரர் கோவில் வளாக தூய்மை பணி, புதிய பாரத எழுத்தறிவு திட்டம், நெகிழிப்பை ஒழிப்பதன் அவசியம் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம், அன்னூர் காவல் நிலையம் பார்வையிடுதல், பேரூராட்சி அலுவலகம் பார்வையிடுதல் நடைபெற்றது. இதை தொடர்ந்து நேற்று முன்தினம் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது கோவை அரவிந்த் கண் மருத்துவமனையும் அன்னூர் ரோட்டரி சங்கமும் இணைந்து நடத்திய இந்த கன்சிகிச்சை முகாமில் 170 பயனாளிகள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர் இதில் கண்புரை அறுவை சிகிச்சைக்காக 25 பேர் தேர்வு செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த கண் சிகிச்சை முகாமில் நாட்டு நலப்பணித் திட்டம் மாணவர்கள் ஏற்பாடுகளை செய்தனர்.
இதைத் தொடர்ந்து இன்று புகையிலை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி, அன்னூர் தீயணைப்பு நிலையம் பார்வையிடுதல் மற்றும் முகாம் நிறைவு விழா நடத்தப்படுகிறது. முகாம் ஏற்பாடுகளை முகாம் திட்ட அலுவலர் மற்றும் முதுகலை பொருளியல் ஆசிரியர் சுரேஷ் செய்துவருகிறார். அவருடன் ஆசிரியர்கள் பாலசுப்பிரமணியம், கலைச்செல்வன், ஜோஸ்வாசிங்கம், சுமதி, உமா, தமிழரசி, ஆகியோர் உடன் இருந்து முகாம் பணிகளை செய்து வருகின்றனர்.

அன்னூர் அமரர் முத்துக்கவுண்டர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் நாட்டு நலப்பணி திட்டம் முகாமில் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது இதில் மேல் சிகிச்சைக்கு தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள்.

அன்னூரில் உள்ள பஞ்சாலை நிறுவனத்தை மாணவர்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.

Continue Reading

உள்ளூர் செய்திகள்

சரவணம்பட்டி ஆதி மாருதியில் அசத்தலான ஸ்டைலிஷ் விக்டோரிஸ் கார் அறிமுகம்!

Published

on

கோவை : சரவணப்பட்டியில் அமைந்துள்ள ஆதி மாருதி ஷோரூமில் மாருதியின் புதிய வரவாக வெளிவந்துள்ளது விக்டோரிஸ் கார். இதன் அறிமுக நிகழ்ச்சி அக்டோபர் 4 ஆம் தேதி (நேற்று) வெகுசிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக பழமுதிர்நிலையம் உரிமையாளர் துரைராஜ் சின்னசாமி, பழமுதிர்நிலையம் பங்குதாரரும், ஆனந்த ஹோண்டா(பெங்களூர்) நிர்வாக இயக்குனருமான ஞானசேகர் கந்தசாமி, கோவை பழமுதிர்நிலையம் நிர்வாக இயக்குனர் செந்தில் நடராஜன், பழமுதிர் நிலையம் உரிமையாளர் விஜய் ரத்தினம், ஆதி மாருதி நிர்வாக இயக்குனர் ஸ்ரீனிவாசன், இணை நிர்வாக இயக்குநர் கலைவாணி ஸ்ரீனிவாசன், மாருதிசுசூகி, பகுதி மேலாளர் சுபாஷ், மாருதி சுசூகி டெரிடாரி விற்பனை மேலாளர் சாம் சுந்தராஜ், ஆதி குரூப்ஸ் துணைத் தலைவர் பத்மநாபன், ஆதி மாருதி விற்பனை துணைத் தலைவர் பெர்னார்ட் நோயல், மற்றும் பலர் கலந்துகொண்டு சிறப்புச் செய்தனர்.

விக்டோரிஸ் எல்எஸ்ஐ, விக்டோரிஸ் எல்எக்ஸ்ஐ சிஎன்ஜி , விக்டோரிஸ் விஎக்ஸ்ஐ, விக்டோரிஸ் விஎக்ஸ்ஐ சிஎன்ஜி , விக்டோரிஸ் விஎக்ஸ்ஐ ஏடி ஆகிய வெறியன்ட்யுடன் களமிறங்கியுள்ளது மாருதி விக்டோரிஸ் போட்டியாளர்களுக்கு கடும் சவாலினை ஏற்படுத்தவும், பாதுகாப்பில் மேம்படுத்தப்பட்ட அம்சமாக கருதப்படுகின்ற.

பாதுகாப்பு சாதனைக்கான GNCAP மற்றும் BNCAP கிராஷ் டெஸ்டில் 5 ஸ்டார் ரேட்டிங் பெற்றுள்ளது. அனைத்து வேரியண்டிலும் 6 ஏர்பேக்குகள், டிஸ்க் பிரேக், ரியர் பார்க்கிங் சென்சார், இஎஸ்பி என பல அம்சங்களுடன் களமிறங்கியுள்ளது .

 

விக்டோரிஸ் காரின் நீளம் 4360 மிமீ, அகலம், 1795 மிமீ மற்றும் உயரம் 1655மிமீ பெற்று 2600 மிமீ வீல்பேஸ் கொண்டு 215/60 யூ17 அங்குல ஏரோ ஸ்டைல் வீல் பெற்று எல்இடி புராஜெக்டர் விளக்கு, ரன்னிங் விளக்கு என அனைத்தும் ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப் உள்ளிட்டவற்றுடன் ஏரோ வென்ட்ஸ் என பலவற்றை டாப் Zxi / Zxi (O) , Zxi+ / Zxi+ (O) வேரியண்டில் பெற்றுள்ளது.

Continue Reading

Trending