Connect with us

கோயம்பத்தூர்

கோலாகலமாக நடந்த தின இதிகை பத்திரிகை வெளியீட்டு விழா!

Published

on

கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி, கோவையில் ஆவரம்பாளையத்தில் அமைந்துள்ள கோஇந்தியா அரங்கத்தில், இ-பிஹைண்ட் குழுமத்தின் பிரத்யேக வார இதழ் “தின இதிகை” வெளியானது.

பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அடிசியா நிறுவனத்தின் மேலாளர் திரு. மணிகண்டன் சாந்தாமணி, மேலாண்மை இயக்குனர் கர்னல் டாக்டர் பாஸ்கரன், ஸ்போர்ட்ஸ்லேண்ட் திரு. சஞ்சய் ஜான்சன், Quira Visual Creators பேன்சி ராவல், அக்ஷயம் அறக்கட்டளை நிறுவனர் திரு. கர்ணன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

இவ்விழாவை திருமதி உஷா சந்திரசேகரன், திருமதி சியாமளா சரவணன், திருமதி அபிராமி சதீஷ்குமார், திருமதி சொர்ணா சக்திவேல், திருமதி ராஜலட்சுமி ஜெகநாதன், திருமதி ஸ்ரீ நந்தினி பார்த்திபன், திருமதி சூர்யா பாலாமுருகன், திருமதி விஜயலட்சுமி பிரசன்னா, திருமதி உமா மஹேஸ்வரி, திருமதி வைஷ்ணவி அருண்காந்த் ஆகியோர் குத்துவிளக்கேற்றி விழாவினைத் தொடங்கிவைத்தனர்.

விழா வரவேற்புரையை “தின இதிகை” பத்திரிகையின் நிர்வாக இயக்குனர் திரு. சதீஷ்குமார் வழங்கினார். தொடர்ந்து குழுவின் அறிமுக உரையை திரு. ஸ்ரீதர், திரு. சக்திவேல், திரு. பார்த்திபன், திரு. பிரசன்னா, திரு. பாலமுருகன், திரு. செந்தில்குமார், திரு. நவீன், திரு. பிரகாஷ், திருமதி சௌமியா பிரகாஷ், திருமதி உமா மஹேஸ்வரி ஆகியோர் வழங்கினர்.

தமிழ்தாய் வாழ்த்தை சங்கீத இசை மணி சங்கீத ரத்னா திருமதி துர்கா லட்சுமி குழுவினர்கள் வழங்கினர். ஸ்ரீ நிருத்ய அர்ப்பண, பேபி ஓவியா, பேபி அக்க்ஷர சக்திவேல், தாரிக ஸ்ரீ, ஈரோடு சஞ்சய், ITC டான்ஸ் ஸ்டூடியோ ஆகியோர் சிறப்பான நிகழ்ச்சிகளை வழங்கி பார்வையாளர்களை மகிழ்வித்தனர்.

இந்த விழாவில் பேசிய பட்டிமன்றப் பேச்சாளர் திருமதி சாந்தாமணி, தனது இயல்பான நகைச்சுவைக்கலந்த உரையை வழங்கி கூட்டத்தை மகிழ்வித்தார். அவர் கூறியதாவது:

“உலக அளவில் ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு சிறப்புகள் உண்டு.

  • இத்தாலிய மொழி – இசை மொழி,பிரெஞ்சு மொழி – காதல் மொழி,இங்கிலாந்து மொழி – வணிக மொழி,கிரேக்க மொழி – தத்துவ மொழி,உருது மொழி – கவிதை மொழி.சமஸ்கிருதம் – தெய்வ மொழி, தமிழ் மொழி மட்டும் தான் தாய் மொழி.

தாய்மொழியாம் தமிழையும், தாய் தந்தையரையும் வணங்கி மகிழ்ந்து, “தின இதிகை” வாரப்பத்திரிக்கையின் வெளியீட்டு விழாவிற்கு நல்ல வரவேற்புரை வழங்கிய நிறுவனர் திரு. சதீஷ்குமாருக்கும், அழகாக அறிமுக உரை ஆற்றிய ஸ்ரீதர், சக்திவேல், பார்த்திபன், பிரசன்னா, பாலமுருகன், செந்தில்குமார், நவீன் ஆகியோருக்கும், குழும உறுப்பினர்களாக இருந்த ஜெகதீசன், ஷங்கர்பாபு, கெளதம், உமா மகேஸ்வரி, பிரபு, அருண், சௌமியா, பிரகாஷ், ஜெயக்குமார், சக்திவேல், அபிராமி, ஜெயலட்சுமி, வினோதினி மற்றும் வெங்கட்ராமன், முத்து, சுப்ரமணியம், தியாகராஜன் ஆகியோர்களுக்கும் நன்றி தெரிவித்தார். மேலும், “இன்னும் யாரேனும் பெயர் விட்டுப் போயிருந்தால் அடுத்த ஆண்டு என்னையே அழையுங்க; அதில் எல்லார்பெயரையும் சேர்த்துச் சொல்வேன்” என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.

பெருந்திரளாக வருகை தந்திருந்த அறிஞர் பெருமக்களுக்கு தனது வணக்கத்தைத் தெரிவித்த சாந்தாமணி அவர்கள், கைதட்டுவதின் பலன்களைப் பற்றி நகைச்சுவையோடு எடுத்துரைத்தார். மேலும், பத்திரிகையாளர்களின் சமூகப் பங்களிப்பை வலியுறுத்தும் குட்டிக்கதையையும் கூறினார்.

அடிசியா நிறுவனர் திரு. மணிகண்டன் அவர்கள்:
“பத்திரிகை என்பது ஒரு சாதாரண தொழில் அல்ல. அது உண்மை மற்றும் நேர்மையை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். மக்களின் நம்பிக்கையை சம்பாதிப்பது மிகக் கடினம். அதனால்தான் பத்திரிகையை ‘நாட்டின் முதுகெலும்பு’ என்று சொல்கிறோம். இந்தக் கடமையை ‘தின இதிகை’ சிறப்பாகச் செய்யும் என நம்புகிறேன்.” என்று தெரிவித்தார்.

அக்ஷயம் அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் கர்ணன் அவர்கள்:
“நாளைய இந்தியா இளைஞர்கள் கையில் உள்ளது. இன்றைய இளைஞர்கள் அதை நிறைவேற்றும் வகையில் செயல்படுகின்றனர். இந்த பத்திரிகை மக்களுக்கு ஒரு செய்தித்தாளாக வரவேண்டும். பத்திரிக்கை முன்னேற வாழ்த்துக்கள்.” என்றார்.

கர்னல் டாக்டர் பாஸ்கரன் அவர்கள்:
“சமூக ஊடகங்களில் நிரம்பி வழியும் செய்திகள் தாண்டி, மக்களுக்கு பயனுள்ள செய்திகள் சேவை அடிப்படையில் வெளிவர வேண்டும். உண்மையான செய்திகளை ஆராய்ந்து, மக்களின் கருத்தை பிரதிபலிக்கும் இடமாக இருக்கும் என நம்புகிறேன்.” என்றார்.

Quira Visual Creators நிறுவன தலைவர் பேன்சி ராவல் அவர்கள்:
“தின இதிகை குழுமத்தினரை வெகுவாக பாராட்டுகிறேன்” என்று உரையாற்றினார்.

திரு. சதீஷ்குமார், ஸ்ரீதர், சக்திவேல், பார்த்திபன், பிரசன்னா, பாலமுருகன், செந்தில்குமார், நவீன், ஜெகதீசன், ஷங்கர்பாபு, கெளதம், உமா மகேஸ்வரி, பிரபு, அருண், சௌமியா, பிரகாஷ், ஜெயக்குமார், வெங்கட்ராமன், முத்து, சுப்ரமணியம், தியாகராஜன் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

கோயம்பத்தூர்

ஐ ஃபவுண்டேஷன் இலவச கண் பரிசோதனை

Published

on

கண் மருத்துவ சேவையில் முன்னணி வகிக்கும் தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனை, உலக குளுக்கோமா வாரத்தை முன்னிட்டு மார்ச் 8 முதல் 14, 2026 வரை பல்வேறு விழிப்புணர்வு மற்றும் இலவச கண் பரிசோதனை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

தென்னிந்தியாவில் 27 கிளைகளை கொண்டு கடந்த 46 ஆண்டுகளாக சிறப்பான மருத்துவ சேவையை வழங்கி வரும் தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனை, கோயம்புத்தூரில் 1.20 இலட்சம் சதுர அடி பரப்பளவில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கண் மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறது. கண் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மருத்துவமனை தொடர்ந்து பல்வேறு முகாம்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக உலக குளுக்கோமா வாரம் அனுசரிக்கப்படுகிறது. குளுக்கோமா பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க உலக குளுக்கோமா சங்கம்முன்னெடுக்கும் உலகளாவிய முயற்சியாக இந்த வாரம் அனுசரிக்கப்படுகிறது. நோயாளிகள், கண் மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கண் பார்வையை பாதுகாக்க முன்வர வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கமாகும். குறிப்பாக குளுக்கோமாவை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய வழக்கமான கண் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
முழுமையான பார்வை இழப்பு

இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, 3 முதல் 5 சதவீதம் இந்தியர்கள் குளுக்கோமா (கண் அழுத்த நோய்) ஏற்படும் அபாயத்தில் உள்ளதாக தெரியவந்துள்ளது. அதில் சுமார் 90 சதவீதம் பேர் தங்களுக்கு குளுக்கோமா இருப்பதை அறியாமலேயே வாழ்ந்து வருகின்றனர்.உலகளவில் சுமார் 76 மில்லியன் மக்கள் குளுக்கோமா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2.1 மில்லியன் பேர் முழுமையான பார்வை இழப்பை சந்தித்துள்ளதுடன், 4.2 மில்லியன் பேர் கடுமையான பார்வைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மட்டும் 40 வயதுக்கு மேற்பட்ட சுமார் 12 மில்லியன் மக்கள் குளுக்கோமா நோயால் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

சமீப ஆண்டுகளில் குளுக்கோமா சிகிச்சையில் குறைந்தபட்ச ஊடுருவும் குளுக்கோமா அறுவை சிகிச்சை முக்கிய முன்னேற்றமாக உருவெடுத்துள்ளது.உலக குளுக்கோமா வாரத்தை முன்னிட்டு மார்ச் 8 முதல் 14 வரை தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனையின் அனைத்து கிளைகளிலும் குளுக்கோமா நோயாளிகளுக்கு இலவச கண் பரிசோதனை வழங்கப்படுகிறது. மேலும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகளுக்கு 10 சதவீத கட்டண சலுகையும் வழங்கப்படுகிறது. இதற்குடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு இடங்களில் இலவச கண் பரிசோதனை முகாம்களும் நடத்தப்படுகின்றன.
தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனையின் அனைத்து கிளைகளிலும் iStent, KDB Glide, GATT மற்றும் MINIJECT போன்ற புதிய MIGS சிகிச்சை முறைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் தீவிர குளுக்கோமா நோயாளிகளுக்கு Trabeculectomy மற்றும் Aqueous Drainage Implants மூலம் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தி ஐ ஃபவுண்டேஷனின் அனைத்து கிளைகளிலும் ஆண்டுதோறும் 1500 க்கும் மேற்பட்ட குளுக்கோமா அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனையின் மருத்துவ இயக்குநரும் குளுக்கோமா பிரிவு ஆலோசகருமான டாக்டர் சித்ரா ராமமூர்த்தி, டாக்டர் ஆர். முரளிதர், டாக்டர் ஐமன் அகமது கான் மற்றும் டாக்டர் நிரஞ்சனா பாலசுப்ரமணியம் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து குளுக்கோமா நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Continue Reading

கோயம்பத்தூர்

அதிமுகவின் முப்பெரும் தலைவர்களின் பிறந்தநாள் விழா

Published

on

அதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய முப்பெரும் தலைவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணி சார்பில் கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 300 கிரிக்கெட் அணிகளின் வீரர்களுக்கு கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வடவள்ளியில் நடைபெற்றது. அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச்செயலாளர் Er. R. சந்திரசேகர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிங்காநல்லூர் தொகுதி எம்எல்ஏ கே.ஆர்.ஜெயராம் மற்றும் மாநில மாணவரணி செயலாளர் சிங்கை ஜி.ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.

அதிமுக கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளரும், கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏவுமான அம்மன் கே அர்ஜுனன் கிரிக்கெட் வீரர்களுக்கு உபகரணங்களை வழங்கி நிகழ்ச்சியை சிறப்பித்தார். இதில் மாநில, மாவட்ட மற்றும் வட்ட கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். எம்எல்ஏ வழங்கினார்

Continue Reading

கோயம்பத்தூர்

கோவை கணபதி பகுதியில் ‘கிராண்ட் சிட்டி’ – புதிய பிரீமியம் குடியிருப்பு திட்டம் அறிமுகம்

Published

on

கே.ஜி குழுமத்தின் டவுன் & சிட்டி டெவலப்பர்ஸின் , தனது புதிய பிரீமியம் குடியிருப்பு திட்டமான ‘கிராண்ட் சிட்டி’ யை கோவை சத்திய ரோடு, கணபதி பகுதியில் அறிமுகப்படுத்தியது.இந்த திட்டத்தை இதன் இணை நிறுவனர் சஞ்சனா விஜயகுமார், உதவி துணைத் தலைவர் யுவராஜ், மற்றும் மூத்த மார்க்கெட்டிங் மேலாளர் ஜோஷுவா ஆகியோர் அறிமுகப்படுத்தினர்.

இது குறித்து சஞ்சனா விஜயகுமார் கூறுகையில், “வேகமாக வளர்ந்து வரும் குடியிருப்பு மையமாக உருவெடுத்து வரும் கணபதி – சரவணம்பட்டி ஐடி காரிடார் பகுதியில் அமைந்துள்ள ‘கிராண்ட் சிட்டி’, முன்னணி கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் புரோசோன் மால் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு அருகில் இருப்பதால், சிறந்த இணைப்பும் வசதியான நகர வாழ்க்கையும் ஒருங்கிணைந்த வாழ்வையும் வழங்கும் திட்டமாக உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த திட்டத்தில் 1, 2 மற்றும் 3 பி.எச்.கே அபார்ட்மெண்ட்கள் நவீன வாழ்க்கை முறைக்கு ஏற்ப திறமையான இடவசதி திட்டமிடலுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. இயற்கை ஒளி மற்றும் காற்றோட்டம் அதிகமாக கிடைக்கும் வகையில் வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. வாஸ்து முறைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ள இந்த குடியிருப்புகளில், சில 3 பி.எச்.கே வீடுகள் பொதுச் சுவர் இல்லாமல் தனியுரிமை அம்சத்துடன் வழங்கப்படுகின்றன. மேலும், இவி சார்ஜிங் வசதி மற்றும் ஸ்மார்ட் ஹோம் அம்சங்களும் இணைக்கப்பட்டுள்ளன.குடியிருப்பாளர்களுக்காக குழந்தைகள் விளையாட்டு பகுதி, கசீபோ அமர்வு, அழகிய தோட்டம், ஜிம் மற்றும் பார்ட்டி லான் உள்ளிட்ட பல்வேறு வாழ்க்கை முறை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.மேலும் மார்ச் 8 வரை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இலவச இவி பைக் வழங்கப்படும் சிறப்பு சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூரில் 25க்கும் மேற்பட்ட திட்டங்களை வெற்றிகரமாக டவுன் & சிட்டி டெவலப்பர் நிறுவனம் நிறைவு செய்து, 4,000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வீடுகளை வழங்கியுள்ளது

Continue Reading

Trending