Connect with us

Uncategorized

பத்து இலட்சம் மரங்களைக் கடந்து சிறுதுளி அமைப்பு சாதனை படைத்துள்ளது!

Published

on

சிறுதுளி அமைப்பானது 23 வருடங்களாக, நீர்நிலைகளை புனரமைத்தல், மழைநீர் சேகரித்தல், மரம் நடுதல், திட மற்றும் திரவ கழிவுமேலாண்மை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற சுற்றுச்சூழலை மேம்படுத்தும் பணிகளை கோயம்புத்தூர் மற்றும் மற்ற மாவட்டங்களிலும் செயல்படுத்தி வருகிறது.

சமூக மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டை முன்னிறுத்தி, சிறுதுளி சார்பில் கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூர் தாலுகாவில், இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட பெரியம்மன் கோவிலுக்கு சொந்தமான 20 ஏக்கர் நிலத்தில் 17,500 மரக்கன்றுகளை நடவு செய்யப்பட்டுள்ளது.

சிறுதுளி அமைப்பு, ஜே.எஸ். ஆட்டோகேஸ்ட் ஃபவுண்ட்ரி இந்தியா பிரைவேட் லிமிடெட்  நிதி உதவியுடன் 10,000 மரக்கன்றுகளை ‘பெரியம்மன் கோவில் வனம்’ என்ற திட்டத்திலும், புல் மெஷின்ஸ் பிரைவேட் நிதி உதவியுடன் 7500 மரக்கன்றுகளை ‘கே.பி.கே. வனம்’ என்ற திட்டத்திலும் நடவு செய்யப்பட்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் பசுமை வளம் அதிகரிக்கும் நோக்கில் முக்கியமான முன்னெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த முயற்சி அன்னூர் பகுதியில் பசுமை வளத்தை மேம்படுத்துவதோடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த சமூக பொறுப்புணர்வையும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சிறப்பு நிகழ்வில், முதன்மை விருந்தினராக திரு. சங்கேத் பல்வந்த் வாகே, இ.ஆ.ப., கூடுதல் மாவட்ட ஆட்சியர் (வளர்ச்சி) மற்றும் சிறப்பு விருந்தினராக  உஷா நந்தினி, இந்து சமய அறநிலையத் துறை, உதவி ஆணையர் கலந்துகொண்டு திட்டங்களைத் தொடங்கி வைத்தனர். மேலும் ஜே.எஸ் ஆட்டோகேஸ்ட் ஃபவுண்ட்ரி இந்தியா தனியார் நிறுவனத்தின் துணை பொது மேலாளர் (நிதி துறை) ஷ்ரவன் சேனாபதி, புல் மெஷின்ஸ் தனியார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பார்த்திபன், சிறுதுளியின் நிர்வாக அறங்காவலர் திருமதி வனிதா மோகன், உயர்மட்ட குழு உறுப்பினர்கள், சிறுதுளி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் இவ்விழாவின் சிறப்பு பங்கேற்பாளர்களாக உள்ளூர் பங்குதாரர்கள், நவ பாரத் இன்டர்நேஷனல் பள்ளியின் 30 மாணவர்கள், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி (பெண்கள்) மற்றும் எஸ். என். எஸ். தொழில்நுட்பக் கல்லூரியிலிருந்து (மேலாண்மை ஆய்வுகள் துறை) 100 மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு இவ்விழாவினை சிறப்பித்தனர்.

இத்திட்டங்களுடன் சேர்த்து, சிறுதுளி அமைப்பு மொத்தமாக 10,00,000 மரங்களை கோயம்புத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 200 இடங்களில்  நடவு செய்யப்பட்டு பராமரித்து வருகிறது. கோயம்புத்தூர் போன்ற வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் இத்தகைய பசுமைத் திட்டங்கள், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும், காற்று மாசுபாட்டை குறைக்கவும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

சிறுதுளியின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் கூறுகையில், மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி ஆணையர், நீர்வளத்துறை, வனத்துறை, கோவை மக்கள், அரசு அதிகாரிகள், தொழில் நிறுவனங்கள், தன்னார்வலர்கள் மற்றும் நிதி ஆதரவாளர்கள் வழங்கிய முழு ஒத்துழைப்பின் காரணமாகவே இச்சாதனையை சிறுதுளி அமைப்பு செய்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Uncategorized

கோவையில் நீட் பயிற்சிக்கான புதிய மையம்

Published

on

கல்வி தொழில்நுட்ப நிறுவனமான ஃபிசிக்ஸ் வாலா கோவை ஆர்.எஸ்.புரத்தில் புதிய தொழில்நுட்பம் சார்ந்த முழுமையான ஆஃப்லைன் மையத்தைத் தொடங்குவதன் மூலம் தமிழ்நாட்டில் தனது இருப்பை விரிவுபடுத்தியுள்ளது. லஃபிசிக்ஸ் வாலா மூத்த துணைத் தலைவர் அமித் சிங் ரத்தோர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட இந்த மையத்தில், கற்றலுக்கு உகந்த சூழலை வழங்கும் பல தொழில்நுட்ப வசதிகள் கொண்ட ஸ்மார்ட் வகுப்பறைகள், டிஜிட்டல் போர்டுகள் மற்றும் நேரடி கற்றலை மேம்படுத்தும் உள்கட்டமைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு மாணவர்கள் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களிடம் நேரடியாகக் கல்வி பயிலலாம்.

ஃபிசிக்ஸ் வாலா வித்யாபீத்-ஆஃப்லைன் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி அங்கித் குப்தா கூறுகையில், ஃபிசிக்ஸ் வாலா-வில், மாணவர்களின் கற்றல் அனுபவத்தை மேம்படுத்துவதற்கான வழிகளைத் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறோம். தரமான கல்விக்காக மாணவர்கள் மற்ற நகரங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை என்று நாங்கள் நம்புகிறோம்; ஏனெனில் இது மன ரீதியாகவும் நிதி ரீதியாகவும் அழுத்தத்தை ஏற்படுத்தும். கோயம்புத்தூரில் ஃபிசிக்ஸ் வாலா வித்யாபீத் மையத்தைத் திறப்பதன் மூலம், தொழில்நுட்பம் சார்ந்த தரமான கல்வியை அவர்களின் வீட்டிற்கு அருகிலேயே கொண்டு வருவதையும், நாடு முழுவதும் அதிக கல்வி மையங்களை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம்,” என்றார்.

ஃபிசிக்ஸ் வாலா வித்யாபீத் என்பது அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களால் கற்பிக்கப்படும் தொழில்நுட்பம் சார்ந்த ஆஃப்லைன் மையங்களாகும். இந்த மையங்கள் JEE / NEET / Foundation ஆகியவற்றுக்கான விரிவான பாடத்திட்டங்களை வழங்குவதோடு, ஒலிம்பியாட் போன்ற கல்வித் தேர்வுகளிலும் கவனம் செலுத்துகின்றன. மேலும், பதிவு செய்யப்பட்ட விரிவுரைகள் (Recorded Lectures), NCERT பொருட்களுக்கான உதவி, ஆஃப்லைன் சந்தேகத் தீர்வுகள், தினசரி பயிற்சித் தாள்கள் (DPP), சிறப்பு தொகுதிகள் (Specialized Modules), செயல்முறை சார்ந்த கற்றல், முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் மற்றும் PW-AITS போன்ற வசதிகளையும் வழங்குகின்றன. இந்த மையங்களில் மாணவர் வெற்றி குழுவிற்கான (SST) பிரத்யேக மேசை மற்றும் மாணவர்களின் முன்னேற்றத்தைப் பற்றி அறிய பெற்றோர்-ஆசிரியர் டேஷ்போர்டு அமைப்பும் உள்ளன.

இந்த மையத்தில் மாணவர்களுக்கு தனிப்பட்ட வழிகாட்டுதல் (Personal Mentorship) மற்றும் சிறிய பேட்ச் அளவு (Limited Batch Size) மூலம் அதிக கவனம் வழங்கப்படும். வாராந்திர மற்றும் மாதாந்திர மதிப்பீட்டு தேர்வுகள் மூலம் மாணவர்களின் முன்னேற்றம் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.

Career Guidance Sessions மற்றும் Motivational Workshops மூலம் மாணவர்களின் இலக்கை தெளிவுபடுத்த உதவப்படும். மாணவர்களுக்கு Scholarship Programs மற்றும் திறமையின் அடிப்படையில் கட்டண சலுகைகள் வழங்கப்படுகின்றன. Parent Engagement Programs மூலம் பெற்றோர்களும் மாணவர்களின் கல்வி பயணத்தில் இணைந்து செயல்பட உதவப்படும். எதிர்காலத்தில் தமிழ்நாட்டின் பிற நகரங்களிலும் இதுபோன்ற மையங்களைத் தொடங்க திட்டமிட்டுள்ளது. இவ்வாறு, PhysicsWallah தனது ஆஃப்லைன் விரிவாக்கத்தின் மூலம் மாணவர்களுக்கு தரமான மற்றும் அணுகக்கூடிய கல்வியை வழங்கும் முயற்சியை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

Continue Reading

Uncategorized

செந்தில் பாலாஜி தலைமையில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் அலோசனை கூட்டம் நடைபெற்றது.

Published

on

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள திமுக தெற்கு தொகுதி தேர்தல் அலுவலகத்தில் மேற்கு மண்டல திமுக பொறுப்பாளரும் கோவை தெற்கு தொகுதி வேட்பாளருமான செந்தில் பாலாஜி தலைமையில் அனைத்து கூட்டணி கட்சி நிர்வாகிகளுடனான கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது.

 

இந்த நிகழ்வில் பல்வேறு கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்று தேர்தல் பணிகளை எவ்வாறு ஆற்றினால் பெற்றி கிடைக்கும் என்றும் அவர்களுக்கான தேவைகள் குறித்தும் எடுத்துரைத்தனர். மேலும் வாக்காளர்களை சந்திப்பது வாக்கு பெறுவது தொடர்பான பல்வேறு ஆலோசனைகளையும் கருத்துக்களையும் தெரிவித்தனர். இந்த கூட்டத்தில் பங்கேற்ற அனைத்து சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களும் இந்த முறை திமுக வெற்றி பெற பாடுபடுவோம் அதற்கு கூட்டணி கட்சிகளும் அதற்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.இந்த கூட்டத்தில் பேசிய செந்தில் பாலாஜி, கூட்டணி கட்சியினர் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் வெற்றி நம் அனைவருக்குமானது என தெரிவித்தார்.
நான் ஒவ்வொரு வீதியிலும் நடந்து சென்று வாக்குகளை சேகரிக்கிறேன் என்று கூறிய அவர் இங்குள்ள மற்ற வேட்பாளர்கள் யாரெல்லாம் நடந்து சென்று வாக்கு சேகரிக்கிறார்கள் என்று பார்க்கலாம். குறைந்த நாட்களே இருப்பதால் நம்மால் முடிந்த வரை அதிகப்படியான வாக்காளர்களை சந்தித்து வாக்குகளை பெற வேண்டும் அதற்கு தகுந்தார் போல் திட்டங்களை வகுத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.
வாக்குகளை பெறுவதில் ஒவ்வொரு வேட்பாளருக்கும் இடையே போட்டிகள் இருப்பது ஆரோக்கியமான விஷயம் தான் என்று தெரிவித்தார். மேலும் ஒவ்வொரு தொகுதியிலும் இதுபோன்ற அனைத்து கட்சி கூட்டங்களையும் கூட்டி தேவைகளையும் ஆலோசனைகளையும் பெறலாம் இங்குள்ள தோழமைக் கட்சிகளும் எங்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சட்டமன்றத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து தோழமைக் கட்சிகள் பல்வேறு ஆலோசனைகளையும் கருத்துகளையும் வழங்கி உள்ளதாகவும் கோவை மாவட்டத்தின் தேர்தல் பணிகளை எடுத்து செல்வதற்கு இந்த ஆலோசனை கூட்டம் மிகவும் உதவியாக இருக்கும் என்று தெரிவித்தார்.
வாக்கு சேகரிக்க செல்லும் இடத்தில் நல்ல எழுச்சியான வரவேற்பு அளிக்கிறார்கள் என்றும் அதற்குக் காரணம் முதலமைச்சர் ஸ்டாலின் தான் என தெரிவித்தார். முதலமைச்சர் மீது வைத்துள்ள நம்பிக்கை தான் நான் வாக்கு சேகரிக்க செல்லும் பொழுது உற்சாகமான வரவேற்பு தருவதற்கு காரணமாக உள்ளது என தெரிவித்தார். கோவை தெற்கு தொகுதியின் திட்டங்களை பொருத்தவரை கடந்த ஐந்து ஆண்டுகளில் முதலமைச்சர் வழங்கி உள்ளார் என்றும் நாம் பொறுப்பு அமைச்சராக நான் கோவைக்கு இருந்த பொழுது கூட பல்வேறு திட்ட பணிகளை முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் துவக்கி வைத்துள்ளதாக தெரிவித்தார். மேலும் கோவையின் வளர்ச்சிக்கு இன்னும் சிறப்பு கவனம் செலுத்துவதற்கான வாய்ப்பை முதலமைச்சர் எனக்கு வழங்கி உள்ளதாக தெரிவித்தார்.
வாக்காளர்களை சந்திக்கும் பொழுது புளியகுளம் பகுதியில் பட்டாக்கள், சமுதாயக்கூடம் வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்துள்ளார்கள் என்றும் அவற்றையெல்லாம் நாங்கள் குறித்து வைத்துக் கொண்டிருக்கிறோம் அரசு அமைந்த உடன் அந்த கோரிக்கைகள் குறைந்த காலத்திற்குள் நிறைவேற்றுவதற்கான பணிகளை மேற்கொள்வோம் என தெரிவித்தார்.
முதலமைச்சர் மேட்டுப்பாளையத்தில் பிரச்சாரம் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்றும் துணை முதல்வரும் கோவைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது என தெரிவித்தார். கமலஹாசன் கோவையில் ஆதரவு பிரச்சாரம் மேற்கொள்வாரா என்ற கேள்விக்கு அறிவிப்பு வந்தவுடன் அதனை அறிவிக்கிறோம் என்று பதில் அளித்தார்.

Continue Reading

Uncategorized

கலால் வரியை ரூ.10 குறைத்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி – வானதி சீனிவாசன்

Published

on

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் பேசியதாவது:

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் சூழ்நிலை காரணமாக உலகளவில் எரிசக்தி விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் எரிசக்தி தேவையில் சுமார் 70% இறக்குமதியையே சார்ந்துள்ளது. குறிப்பாக ஹார்மோஸ் நீரிணை வழியாக வரும் எண்ணெய் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் பல நாடுகள் சிக்கலை சந்தித்து வருகின்றன என தெரிவித்தார்.

இந்நிலையில், மக்கள் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை ரூ.10 குறைத்துள்ளது. இதன் மூலம் இந்திய மக்கள் பெரிதும் பயன்பெறுவார்கள். இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

மேலும், மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் கடந்த 12 ஆண்டுகளில் 11 கோடி ஏழை பெண்களுக்கு எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், எரிசக்தி துறையில் தன்னிறைவு அடைய மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் கூறினார்.

தேர்தல் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், தேசிய ஜனநாயக கூட்டணி தமிழக சட்டமன்ற தேர்தலில் முன்னிலை வகித்து வருவதாகவும், கூட்டணி கட்சிகளுக்கு சரியான முறையில் தொகுதி பங்கீடு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

அதிமுக வேட்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்த அவர், தொகுதி பங்கீடு தொடர்பாக கூட்டணி கட்சிகளை அரவணைத்து செல்ல வேண்டும் என்றும், கட்சியினர் அனைவரும் கூட்டணியின் வெற்றிக்காக இணைந்து செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

பாஜக வேட்பாளர் பட்டியல் இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்றும், கோவை வடக்கு தொகுதியில் யார் போட்டியிடுவார்கள் என்பது விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Continue Reading

Trending