Connect with us

Entertainment

நினைவுகளை விட்டுச் செல்லும் டிலைட் திரையரங்கம்!

Published

on

ஒரு காலத்தில் தமிழ் நாட்டில் மினி கோடம்பாக்கமாக இருந்தது கோயம்புத்தூர். பல கதாநாயகர்கள் , தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என பலரை உருவாக்கிய பெருமை நம் கோயம்புத்தூருக்கு உண்டு. சினிமாவில் ஆர்வம் அதிகமுள்ள இடமும் கோவை தான். பல திரையாராகுங்கள் அதிகம் உருவான இடமும் இதுதான் . அன்று சினிமா மட்டுமே பொழுதுபோக்கை கொண்டு இருந்த கோயம்புத்தூருக்கு. பல திரையரங்கம் தான் தீனிபோட்டது. இப்படி சினிமா கொடிகட்டி பறந்த அந்தக் காலத்தில் கோவை வெரைட்டி ஹால் சாலையில் தென்னிந்தியாவின் முதல் திரையரங்கு என்ற பெருமையுடன் இடம் பிடித்தது டிலைட் தியேட்டர் .

முதல் திரையரங்கம் : 

1914 இல் சாமிகண்ணு வின்சென்ட் மற்றும் அவரது சகோதரர்களால் நிறுவப்பட்டது இந்த திரையரங்கம் .திருச்சியைச் சேர்ந்த ரெயில்வே ஊழியராக இருந்த சாமிக்கண்ணு வின்சென்ட், பிரெஞ்சுக்காரரான டூ பாண்ட்டுவிடம் ஊமை படங்களை விலைக்கு வாங்கி கோவை தியேட்டரில் காட்சிப்படுத்தி வந்துள்ளார் . வெள்ள நிற துணிகளை பயன்படுத்தி டென்ட் கொட்டகையும் அமைத்தார். இதை ஒரு கூடாரமாக அமைத்து சினிமா காட்சிகளை பொதுமக்களுக்கு திரையிட்டு காண்பித்தார். அந்த காலத்தில் சாமிக்கண்ணு வின்சென்ட்டின் டென்ட் சினிமா உலகம் முழுவதும் பிரபலமாக இருந்தது. “வெரைட்டி ஹால் ரோடுக்கு வெரைட்டி ஹால் டாக்கீஸ் என்ற பெயர் இதன் மூலம் வந்தது, தற்போது டிலைட் ட் தியேட்டர் என்று பெயர் மாற்றி அழைக்கப்பட்டு வருகிறது. 1930 களில் பிரிண்டிங் இயந்திரத்தைப் பயன்படுத்தி அச்சிடப்பட்ட திரைப்பட டிக்கெட்டுகளை வழங்கிய முதல் தியேட்டர் என்ற பெருமையை வெரைட்டி ஹால் திரையரங்கம் சாமிக்கண்ணு வின்சென்ட்டின் முயற்சியால் கிடைத்தது.

இந்த திரையரங்கில் முதன்முதலில் வள்ளி திருமணம் என்ற திரைப்படம் திரையிடப்படதாகக் கூறப்படுகிறது.பின்னர் எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல், ரஜினி, விஜயகாந்த், சிவகுமார்,ஜெமினி கணேசன் உள்பட பல்வேறு நடிகர்களின் படங்கள் திரையிடபட்டு மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற திரையரகமாக இருந்து வந்துள்ளது. சுமார் 100 ஆண்டுகளை கடந்த இந்த டிலைட் தியேட்டரில் கடந்த சில வருடங்களாக ஒரு சில பழைய படங்கள் மட்டுமே திரையிடப்பட்டு வந்தது. கடந்த 2019-ம் ஆண்டு டிலைட் தியேட்டர் புதுப்பிக்கப்பட்டு எம்.ஜி.ஆர். நடித்த நினைத்ததை முடிப்பவன் படம் திரையிடப்பட்டது . அதைத்தொடர்ந்து சில பழைய படங்கள் திரையிடப்பட்ட நிலையில், 2023-ம் ஆண்டு ஜூலை மாதத்துக்கு பின் டிலைட் தியேட்டரில் படங்கள் திரையிடுவதை நிறுத்திவிட்டனர்.கடைசியாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’மனிதன்’ திரைப்படம் திரையிடப்பட்டது.

அழிக்க முடியாத நினைவுகள் : 

பல்வேறு காரணங்களுக்காக நூற்றாண்டு கால பழமை வாய்ந்த தென்னிந்தியாவின் முதல் தியேட்டரான டிலைட் தியேட்டரை இடிக்க பணிகள் துவங்கியுள்ளது. இந்த தியேட்டர் இடிக்கப்பட்டு இப்பகுதியில் வணிக வளாகம் வர உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வணிக வளாகம் அமைத்தாலும் கூட, ஒரு திரையரங்கம் அமைந்தால் இதன் பெயர் இன்னும் பல நூற்றாண்டு வாழும் என்பதே பலரின்கருத்து .

வளர்ந்து வரும் புதிய தொழினுட்பம், புதிய மாற்றம் போன்றவற்றால் தியேட்டர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தென்னிந்தியாவின் முதல் தியேட்டர் இடிக்கப்படுவது கவலை அளித்தாலும், காலத்தால் அழிக்க முடியாத பல நினைவுகளை இந்த திரையரங்கம் கொடுத்திருக்கிறது. இன்று குளு குளு அறையில் திரைப்படத்தை பார்த்து தராத மகிழ்ச்சியை அன்று சாதாரண தரையிலும், கட்டை நாற்காலிகளும் மின் விசிறியுடன் அளவற்ற மகிழ்ச்சியும் நினைவுகளையும் அளித்துள்ளதாக கூறுகிறார் அன்று இந்த திரையில் படம் பார்த்த ரசிகர் ஒருவர். பல சாதனைகளையும், நினைவுகளையும் சுமந்து வெற்றியாக நம்மிடம் இருந்து விடைபெறுகிறது டிலைட் தியேட்டர் என்ற பொக்கிஷம்!.

—- எழுத்து, சதிஷ் குமார் 

Entertainment

தேசிய விருது பெற்றவுடனே கேப்டன் நினைவிடத்துக்கே சென்ற எம்.எஸ். பாஸ்கர்

Published

on

சென்னை: 71வது தேசிய திரைப்பட விருதுகள் விழா செப்டம்பர் 24ஆம் தேதி சிறப்பாக நடைபெற்றது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசிய விருதுகளை வழங்கி கலைஞர்களை கௌரவித்தார்.

‘பார்க்கிங்’ படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகர் விருதை பெற்றவர் எம்.எஸ். பாஸ்கர். தேசிய விருதை பெற்ற மறுநாளே (செப்டம்பர் 25), அவர் மறைந்த கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அதிலும், தான் பெற்ற தேசிய விருதை கேப்டனின் நினைவிடத்தில் வைத்து அவருக்கே அர்ப்பணித்தார்.

எம்.எஸ். பாஸ்கரின் கலைப்பயணம் எளிதானது அல்ல. டப்பிங் கலைஞர், ஜூனியர் ஆர்டிஸ்ட் என பல சவால்களை கடந்து வந்தார். ஆரம்பத்தில் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும், சின்னத்திரையில் அவர் ஏற்ற கதாபாத்திரங்கள் – சின்ன பாப்பா பெரிய பாப்பா, செல்வி போன்ற தொடர்கள் – மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன.

இன்று தேசிய விருதை பெற்ற பெரிய நடிகராக உயர்ந்திருந்தும், தன்னுடைய விருதை முன்னாள் தலைவருக்கே சமர்ப்பிக்க வந்த அவரின் எளிமையும் மனிதநேயமும் பலரின் மனதை தொட்டுள்ளது.

Continue Reading

Entertainment

இந்தியாவின் பெருமையாக அஜித்‌குமார்: ஸ்பெயினில் கார் ரேஸில் அசத்தல்!

Published

on

சென்னை: நடிகர் மட்டுமல்ல, பைக்–கார் ரேஸர் என்ற அடையாளத்துடனும் உலகம் அறியும் அஜித்‌குமார், மீண்டும் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

ஸ்பெயினில் நடைபெற்ற Creventic 24H கார் ரேஸில், அஜித்‌குமார் ரேஸிங் அணி மூன்றாவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டு தொடங்கிய இந்த அணியை, அஜித் தானே கேப்டனாக நடத்தி வருகிறார்.

முன்னதாக துபாயில் நடைபெற்ற 24 மணி நேர ரேஸில் மூன்றாவது இடம், பிரான்சின் 12 மணி நேர போட்டியில் இரண்டாவது இடம், மேலும் ஐரோப்பிய போட்டியில் மூன்றாவது இடம் என பல வெற்றிகளை அணி பெற்றிருந்தது.

இந்த வெற்றியுடன், அஜித்‌குமார் ரேஸிங் அணி மீண்டும் இந்தியாவை சர்வதேச ரேசிங் மேடையில் உயர்த்தியுள்ளது. பரிசுக் கோப்பையை பெற்றுக்கொள்ளும் தருணத்தில், தனது அணியினரும் குடும்பத்தினரையும் மேடைக்கு அழைத்துச் சென்ற அஜித்தின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அண்மையில் பத்ம பூஷன் விருது பெற்ற அஜித்துக்கு ரசிகர்களும் பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

Continue Reading

Entertainment

அக்டோபர் 1ல் திரை திறக்கும் ‘இட்லி கடை’ – தனுஷ் ரசிகர்களுக்கு சிறப்பு விருந்து!

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் தனுஷ், கடந்த முறையில் நடித்த குபேரா படம் எதிர்மறையான விமர்சனங்களையும் வசூலில் ஏமாற்றத்தையும் சந்தித்தது. அதன் பின்னர், தற்போது அவர் நடித்துள்ள புதிய படம் ‘இட்லி கடை’ திரையரங்குகளில் அக்டோபர் 1 முதல் வெளியாக உள்ளது. தொடர் விடுமுறை நாட்களை முன்னிட்டு படக்குழு இந்த தேதியைத் தேர்ந்தெடுத்துள்ளது.

டிரெய்லர் & ஆடியோ லான்ச் – ரசிகர்களை உற்சாகப்படுத்தியது

சமீபத்தில் வெளியான இட்லி கடை படத்தின் டிரெய்லர், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது. ஒவ்வொரு காட்சியும் இயல்பான வாழ்க்கையை பிரதிபலிப்பதுடன், ஒரு சிறிய இட்லி கடையை நடத்தி வாழும் மனிதனாக தனுஷின் கதாபாத்திரம், அவரது குடும்பம், நட்பு, வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்கள் என பல அம்சங்களை நெகிழ்ச்சியுடன் சொல்லுகிறது.

முக்கியமாக, ராஜ்கிரண் நடித்திருக்கும் பாசம் நிறைந்த காட்சிகள் “அவர் ஒரு அப்பாவா? அண்ணனா? குருவா?” என்ற கேள்வியுடன் பார்வையாளர்களிடையே தனி எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன.

“இட்லி கடை” பற்றி சுவையாக பேசும் சத்யராஜ் – கோவையில் நிகழ்ந்த விழாவின் சிறப்புகள்!

தமிழ் சினிமாவில் தனுஷ் இயக்கும் நான்காவது படமான “இட்லி கடை”, ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது. தனுஷ் தான் இயக்கியும் நடித்தும் வருகிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பில், டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தில் ராஜ்கிரண், நித்யா மேனன், சத்யராஜ், அருண் விஜய் மற்றும் பார்த்திபன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதில் அருண் விஜய் வில்லன் வேடத்தில் ஆடம்பரமாக திகழ்கிறார்.

கோவையில் நடைபெற்ற டிரெய்லர் வெளியீட்டு விழா, ரசிகர்களின் மகிழ்ச்சியையும் ஆரவாரத்தையும் ஈர்த்தது. விழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இதில் கலந்து கொண்ட நடிகர் சத்யராஜ், தனது சிறப்பான கோவை பாஷை பேச்சால் நிகழ்ச்சிக்கு புதிய உயிர் ஊட்டினார்.

“ராஜமவுலி படம் லாம் நடிச்சுருக்கேன். ஆனா இந்த தனுஷ் – ரொம்ப பக்கத்துலயும் நகர முடியாமே நடிக்க வைப்பாரு. ரொம்ப strict-a இருக்காரு. ஆனா ‘இட்லி கடை’ சத்தியமா வேற லெவல். இந்த படம் பாத்த உடனே, சிரிக்க வேண்டிய இடத்துல சிரிப்பு வரும், அழுக வேண்டிய இடத்துல கண்ணீர் வரும். இது தான் சினிமா… இது தான் ‘இட்லி கடை’!” என்றார் சத்யராஜ், பெருமிதத்துடன்.

டிரெய்லர் வெளியாகியதும், சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. ரசிகர்களிடையே நல்ல எதிர்வினை பெற்று, படத்தின் எதிர்பார்ப்பை கூடியளவில் உயர்த்தியுள்ளது.

“இது வியாபாரம் இல்ல… மனசுக்குள்ள படம்” – தனுஷ்

ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய தனுஷ்,

இட்லி கடை ஒரு சாதாரண படம் இல்ல. இது ஒரு வியாபாரம் இல்ல, என் மனசுக்கு ரொம்ப நெருக்கமான ஒரு படம். நான் இந்தக் கதையிலே வாழ்ந்தேன். எங்க குழுவில உள்ள எல்லாரும் தங்கள் 100% உழைப்பையும் கொடுத்திருக்காங்க. இட்லி கடை சின்னதா இருக்கலாம், ஆனா அதுக்குள்ள இருக்கும் பாசம் ரொம்ப பெருசு. இந்த படம் உங்க எல்லாருக்கும் ஒரு விருந்தாக இருக்கும்,*” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Continue Reading

Trending