Connect with us

செய்திகள்

மத்திய பட்ஜெட் – 2024 முக்கிய அறிவிப்புகள் !

Published

on

மத்திய பட்ஜெட் – 2024 முக்கிய அறிவிப்புகள்! 

 

  • நாடு முழுவதும் மின்சார வாகனங்களுக்கான பேட்டரி சார்ஜிங் மையங்கள் அதிகரிக்கப்படும்!
  • முதன்மை சுற்றுலாத் தளமாக லட்சத்தீவுகள் மேம்படுத்தப்படும்;
  • ஆன்மீக சுற்றுலா மேம்படுத்தப்படும்;
  • மின்சார வாகன உற்பத்தி மற்றும் சார்ஜிங் மையங்கள் ஊக்குவிக்கப்படும்;
  • 517 நகரங்களில் சிறு விமான நிலையங்கள் அமைக்கப்படும்;
  • 1000 விமானங்கள் புதிதாக வாங்கப்படும்.
  • சீர்திருத்தம் , செயலாக்கம், மாற்றம் ஆகியவையே பிரதமர் மோடி அரசின் தாரக மந்திரம்;
  • ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு காப்பீடு வழங்கப்படும்;
  • ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க திட்டங்களை உருவாக்க 1 லட்சம் கோடி நிதி வழங்கப்படும்;
  • 5 ஒருங்கிணைந்த கடல்சார் பூங்கா அமைக்கப்படும்;
  • 40,000 ரயில் பெட்டிகள் வந்தே பாரத் ரயிலின் தரத்திற்கு உயர்த்தப்படும்;
  • மேலும் சில நகரங்களுக்கு மெட்ரோ சேவை விரிவுபடுத்தப்படும்.
  • வட கிழக்கு மாநிலங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்படும்;
  • சூரிய மின் திட்டத்தின் மூலம் 1 கோடி வீடுகளுக்கு மாதந்தோறும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும்;
  • எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் தன்னிறைவு என்பதே நமது அடுத்த இலக்கு;
  • கடல் உணவு ஏற்றுமதி 10 ஆண்டுகளில் இருமடங்காக உயர்ந்துள்ளது;
  • மீன் வளத்துறையில் புதிதாக 55 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
  • 9-14 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு கர்ப்பப்பை புற்றுநோயை தடுப்பதற்கான தடுப்பூசி போடப்படும்”
  • வருமான வரி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை, வருமான வரி செலுத்துவோருக்கு ஏற்கனவே இருந்த நடைமுறையே தொடரும்”
  • மக்களின் சராசரி வருவாய் 50% உயர்ந்துள்ளது.
  • பத்து ஆண்டுகளில் 30கோடி பெண்களுக்கு தொழிற்கடன் வழங்கப்பட்டுள்ளது
  • கடந்த 10 ஆண்டுகளில் கல்வி கற்கும் பெண்களின் எண்ணிக்கை 28% அதிகரித்துள்ளது
  • 11.8 கோடி விவசாயிகளுக்கு வங்கிக் கணக்குகளில் நேரடியாக மானியம் செலுத்தப்பட்டுள்ளது
  • 78 லட்சம் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.2.3லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது
  • திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 1.4 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது
  • 2027 ல் இந்தியா வளர்ந்த நாடு என்கிற கனவினை எட்டும்.
  • 4 கோடி பேருக்கு இலவச வீடுகள் வழங்கப்பட்டுள்ளன.
  • அடுத்த 5 ஆண்டுகளில் 2 கோடி பேருக்கு இலவச வீடுகள் வழங்கப்படும்”

– மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கோயம்பத்தூர்

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் 50 ஆவது ஆண்டு விழா – இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்

Published

on

மாநில அரசு மற்றும் மத்திய அரசு உருவாக்கியுள்ள சுகாதாரத் திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு செயல்படுத்தப்படுகின்றன. இந்தத் திட்டங்கள் வெற்றிகரமாக அமைய, அதனுடன் தொடர்புடைய அனைத்து பங்குதாரர்களிடையேயும் சிறந்த ஒருங்கிணைப்பு அவசியம். ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை போன்ற சுகாதார நிறுவனங்கள், இந்தத் திட்டங்கள் பொதுமக்களிடம் சென்று சேருவதில் அபூர்வமான பங்காற்றியுள்ளன என்று இந்திய துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

இன்று எஸ்.என்.ஆர். சன்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் சார்பில், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் பொன்னிழா விழாவும், ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் வெள்ளி விழாவும் இணைந்து பிரமாண்டமாகக் கொண்டாடப்பட்டது.கோயம்புத்தூர் கொடிசியாவர்த்தகக் கண்காட்சி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில், இந்திய துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தலைமை விருந்தினராக கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார்.

இந்த விழாவிற்கு எஸ்.என்.ஆர். சன்ஸ் சாரிடபிள் டிரஸ்டின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் ஆர். சுந்தர் தலைமை தாங்கி வரவேற்புரையாற்றினார். குடியரசுத் தலைவர் விழா அரங்கிற்கு வந்தபோது, திருமதி பிரியங்கா சுந்தர் அவர்களால் உற்சாகமாக வரவேற்கப்பட்டார்.விழாவின் போது, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி ஆகியவற்றுக்கான லோகோவை துணைத் தலைவர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.

சுகாதாரத் துறையில் சிறப்பான சேவை புரிந்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார். அதனைத் தொடர்ந்து, தலைமை விருந்தினர் உரையையும் நிகழ்த்தினார்.இதில் பேசிய, இந்திய துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் , கடந்த 50 ஆண்டுகளாக ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மேற்கொண்ட பயணம் மகத்தானதும் பெருமைக்குரியதுமாக இருப்பதாக தெரிவித்தார். மேற்கு தமிழ்நாடு பகுதியில் மருத்துவ சுற்றுலாவளர்ச்சிக்கு முன்னோடியாக செயல்பட்டதற்காக ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு பெரும் பாராட்டு உரியதாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மருத்துவ நிறுவனங்களுக்கு இரண்டு முக்கியப் பொறுப்புகள் உள்ளன. ஒன்று, நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சை அளிப்பது; மற்றொன்று, எதிர்காலத்தில் நோயாளிகளை பாதுகாக்கும் திறமையான மருத்துவ நிபுணர்களை உருவாக்குவது. எஸ்.என்.ஆர். சன்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் கீழ் செயல்படும் மருத்துவ நிறுவனங்கள், இந்த இரு பொறுப்புகளையும் சிறப்பாக நிறைவேற்றி குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றுள்ளன என்றும் துணை குடியரசுத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Continue Reading

செய்திகள்

நிர்மலா மகளிர் கல்லூரியில் திருக்குறள்களை பரதநாட்டியமாக அரங்கேற்றி சாதனை!

Published

on

நிர்மலா மகளிர் கல்லூரியில் 1,330 திருக்குறள்கள் – பரதநாட்டிய நிகழ்ச்சியில் புதிய சாதனை கோயம்புத்தூர் நிர்மலா மகளிர் கல்லூரி இன்று 4 மணி 30 நிமிடங்களில் 1,330 திருக்குறள்களை பரதநாட்டியமாக அரங்கேற்றி வரலாற்றுச் சாதனை படைத்தது.

இந்த பிரமாண்ட நிகழ்ச்சியில் 133 மாணவிகள் பங்கேற்று, ஒவ்வொரு மாணவியும் 10 திருக்குறள்களை பாரம்பரிய நடனத்தின் மூலம் வெளிப்படுத்தினர்.

இந்த தனித்துவமான பண்பாட்டு சாதனை, இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அமைப்பால் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டு, தமிழ் பண்பாடு மற்றும் நுண்கலைகளில் கல்லூரியின் அர்ப்பணிப்பிற்கு தேசிய அளவிலான அங்கீகாரம் கிடைத்தது.

இந்த நிகழ்ச்சி, மாணவிகளின் திறமை, ஒழுக்கம் மற்றும் கலாச்சார மேன்மையை வெளிப்படுத்தும் பெருமைமிக்க தருணமாக அமைந்தது.

Continue Reading

செய்திகள்

கோவையில் ரியம் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு வளாகம் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா திறந்து வைத்தார்.

Published

on

கோவை மாநகரின் சாய்பாபா காலனியில் முன்னணி விளையாட்டு அகாடமியாக இயங்கி வரும் ரியம் ஸ்போர்ட்ஸ், தனது புதிய உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வளாகத்தைத் துடியலூரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை ) தொடங்கியது.முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.இராசா இந்த மையத்தைத் திறந்து வைத்தார்.

இந்த விழாவில் ரியம் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுவாதி அகர்வால், இணை நிறுவனர் த்ரேதம் அகர்வால் மற்றும் எஸ்.எஸ்.வி.எம் கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் மோகன்தாஸ் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.துடியலூரில் சுமார் 2.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த வளாகத்தில், ‘பிக்கிள்பால்’ விளையாட்டுக்கான தமிழகத்தின் மிகப்பெரிய விளையாட்டுத் தளங்களில் ஒன்று அமெரிக்க ஓபன் போட்டி தரத்திலான தளமாக அமைக்கப்பட்டுள்ளது.கிரிக்கெட் பயிற்சிக்காக ஆஸ்ட்ரோ டர்ஃப் மற்றும் கான்கிரீட் பிட்ச்கள், துல்லியமான பந்துவீச்சு இயந்திரத்துடன் (Stitch ball machine) வடிவமைக்கப்பட்டுள்ளன.

மேலும், விரைவில் ஃபிபா (FIFA) அங்கீகாரம் பெற்ற கால்பந்து மைதானம், ஃபிபா (FIBA) தரத்திலான கூடைப்பந்து தளம் மற்றும் நவீன கிரிக்கெட் பயிற்சி வசதிகள் இங்கு வரவுள்ளன.இந்த மையம் ஒரு விளையாட்டுப் பயிற்சி அகாடமியாகச் செயல்படுவதோடு மட்டுமல்லாமல், பல்வேறு விளையாட்டுகளின் மேல் ஆர்வமுள்ள மக்கள் இந்த தளங்களை வாடகைக்கு எடுத்து விளையாடும் வசதியையும் வழங்குகிறது.அதே நேரம் தேசிய அளவிலான சாம்பியன்களைக் கொண்ட பயிற்சியாளர் குழு மூலம் இங்கு உயர்தரப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்த வளாகத்தின் திறப்பு விழாவில் பேசிய ஆ.இராசா எம்.பி., கோயம்புத்தூரின் விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்த ரியம் ஸ்போர்ட்ஸ் எடுத்துள்ள இந்த முயற்சியைப் பாராட்டினார். இத்தகைய உலகத்தரம் வாய்ந்த வசதிகள் இப்பகுதி விளையாட்டு வீரர்களுக்குப் பெரிதும் உதவும் என்றும், இந்த நிறுவனம் இந்தியா முழுவதும் விரிவடையத் தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.ரியம் ஸ்போர்ட்ஸ் மேலாண்மை இயக்குநர் சுவாதி அகர்வால் பேசுகையில், “இது வெறும் விளையாட்டு மையம் மட்டுமல்ல, விளையாட்டுத் துறையில் ஒரு புரட்சியாக அமையும்” என்றார்.

தற்போது பிக்கிள்பால் மைதானம் பயன்பாட்டிற்குத் தயாராக உள்ளது. காலை நேரங்களில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.800 மற்றும் இரவு நேரங்களில் ரூ.1000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 4 பேர் கொண்ட குழு விளையாடலாம். 200 கார்கள் நிறுத்தும் வசதி மற்றும் சிசிடிவி கண்காணிப்பு எனப் பாதுகாப்பு வசதிகளும் இங்கு செய்யப்பட்டுள்ளன.

நிறுவனத்தின் இணை நிறுவனர் த்ரேதம் அகர்வால் கூறுகையில், இரண்டாம் கட்டப் பணிகளாகக் கூடைப்பந்து, கால்பந்து மைதானங்கள் மற்றும் செஸ், ஸ்னூக்கர், ஸ்கேட்டிங் போன்ற விளையாட்டு வசதிகள் பிப்ரவரி இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவித்தார்.

Continue Reading

Trending