Connect with us

செய்திகள்

மத்திய பட்ஜெட் – 2024 மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்!

Published

on

2024 – 2025 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

பத்து ஆண்டுகளில் 30கோடி பெண்களுக்கு தொழிற்கடன் வழங்கப்பட்டுள்ளது;

கடந்த 10 ஆண்டுகளில் கல்வி கற்கும் பெண்களின் எண்ணிக்கை 28% அதிகரித்துள்ளது

11.8 கோடி விவசாயிகளுக்கு வங்கிக் கணக்குகளில் நேரடியாக மானியம் செலுத்தப்பட்டுள்ளது

78 லட்சம் சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.2.3லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது

திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 1.4 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது

மக்களின் சராசரி வருவாய் 50% உயர்ந்துள்ளது

2027 ல் இந்தியா வளர்ந்த நாடு என்கிற கனவினை எட்டும்

4 கோடி பேருக்கு இலவச வீடுகள் வழங்கப்பட்டுள்ளன

அடுத்த 5 ஆண்டுகளில் 2 கோடி பேருக்கு இலவச வீடுகள் வழங்கப்படும்

ஒரே நாடு, ஒரே சந்தை , ஒரே வரி போன்றவை சரக்கு மற்றும் சேவை வரிக்கு உதவியாக உள்ளது;

முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் 43 கோடி இளைஞர்களுக்கு புதிய தொழில் தொடங்க கடன் உதவி வழங்கப்பட்டுள்ளது;

கடந்த 10 ஆண்டுகளில் 7 ஐஐடி , 7 ஐஐஎம் மற்றும் 15 எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளது

நரேந்திர மோடி பிரதமரான பிறகு விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது;

வளர்ச்சிப் பாதையில் நாடு வெற்றி நடை போடுவதால் மீண்டும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சிக்கே மக்கள் வாக்களிப்பார்கள்;

நாட்டில் விவசாயிகள், ஏழைகள், பெண்கள் மற்றும் இளைஞர்கள் ஆகிய 4 பிரிவினருக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது;

ரேஷன் கடைகள் மூலம் 80கோடி மக்களுக்கு உணவு தானியம் இலவசமாக வழங்கப்படுள்ளது;

நாடு முழுவதும் மின்சார வாகனங்களுக்கான பேட்டரி சார்ஜிங் மையங்கள் அதிகரிக்கப்படும்!

கடந்த 10 ஆண்டுகளில் 25கோடி பேர் வறுமைக் கோட்டிற்கு கீழிருந்து மீட்கப்பட்டுள்ளனர்

– நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

செய்திகள்

சொல்லுவதை செய்வோம் செய்வதைத்தான் சொல்லுவோம் – கனிமொழி பரப்புரை!

Published

on

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சரவணம்பட்டி பகுதியில் கவுண்டம்பாளையம் தொகுதி திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் சூரிய பிரகாஷை ஆதரித்து திமுக துணை பொது செயலாளர் கனிமொழி பரப்புரை மேற்கொண்டார்.

இதில் பேசிய கனிமொழி, இந்த வேட்பாளர் அன்னை சோனியா காந்தி தேர்ந்தெடுத்து கை உங்கள் கைகளில் ஒப்படைத்து இருக்கக்கூடிய வேட்பாளர், ராகுல் காந்தி உங்களுக்காக அனுப்பி வைத்திருக்க கூடிய வேட்பாளர், இவருக்கு கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

அவருடன் பேசிக் கொண்டிருந்த பொழுது கல்லூரி படிக்கும் பொழுதிலிருந்து அரசியல் ஆர்வம் கொண்டு அரசியலில் இணைத்துக் கொண்டு இருப்பதை என்னிடம் தெரிவித்தார், இந்த நாட்டை மதத்தின் பெயரால் பிரிக்கக்கூடிய பாஜக ஆர் எஸ் எஸ் கொள்கையை எதிர்த்து போராட வேண்டும் என்ற எண்ணத்தோடு இருக்கிறேன் என கூறியிருக்கிறார், இதைக் கேட்கும் போதே மனமகிழ்ச்சியாக இருந்தது என்றார்.

இந்த நாட்டைப் பிரிக்க நினைப்பவர்களை எதிர்க்கக் கூடிய ஒரு கூட்டணியாக நம் கூட்டணி உள்ளது, இந்த நாட்டு மக்களை ஒருமைப்படுத்த கூடிய கூட்டணியாக சிறுபான்மை மக்களுக்கும் பெரும்பான்மை மக்களுக்கும் அத்தனை பேரும் உரிமைகளுக்காகவும் பாடுபடக்கூடிய இந்தக் கூட்டணி தொடர்ந்து பங்காற்றிக் கொண்டிருக்கிறது என்றார்.

Continue Reading

செய்திகள்

தேர்தலுக்கு பின் விஜய் இதை கண்டிப்பாக செய்வார் – பியூஷ் கோயல்

Published

on

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,

“தவெக தலைவர் விஜய் மற்றும் திமுக இடையில் ரகசிய உடன்பாடு இருக்கிறது. திமுகவுக்கு எதிரான வாக்குகளை பிளவுபடுத்தவே விஜய் கொண்டு வரப்பட்டிருக்கிறார். இந்த சட்டசபைத் தேர்தலுக்கு பின் விஜய் மீண்டும் கண்டிப்பாக நடிக்க சென்றுவிடுவார். இதன் காரணமாகவே திமுக – விஜய் இடையில் மறைமுக கூட்டணி உள்ளது என்று சொல்கிறோம். திமுக எதிர்ப்பு வாக்குகள் சிதறாமல் பாதுகாத்து என்டிஏ பக்கம் கொண்டு வருவோம். ஒவ்வொரு வீடாக சென்று ஊழல் நிறைந்த திமுக ஆட்சியை அகற்றுவோம். முதல்வர் ஸ்டாலின் ஒரு குடும்ப ஆட்சியை நடத்தி வருகிறார். மக்களின் உணர்வுகளை அலட்சியப்படுத்துகிறார். ஒரேயொரு குடும்பம் தமிழ்நாட்டை நாசமாக்கி வருகிறது. உதயநிதி ஸ்டாலின் இந்த மாநிலத்தை வழிநடத்தினால், அவருக்கு மக்களின் உணர்வுகளோ, கலாச்சார பண்புகளோ புரியாது. திமுக ஆட்சியின் அவலங்கள் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அதேபோல் பிரதமர் மோடியின் ஆட்சியை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

என்டிஏ கூட்டணி ஆட்சி நிச்சயமாக வளர்ச்சியை கொடுக்கும். அதிமுக, பாஜக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் ஒரே கோட்டில் இயங்குகின்றன. என்டிஏ கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சென்னையில் மாற்றத்தை ஏற்படுத்தும் பெரிய அளவிலான நகர்ப்புற திட்டங்களை உருவாக்குவோம். அதேபோல் விஜய்க்கு கூடும் கூட்டம் வாக்குகளாக மாறாது. ஒரு தலைவனாக உருவாக வேண்டும் என்றால் நீண்ட ஆண்டுகளில் மக்கள் சேவையில் இருந்திருக்க வேண்டும். வெறும் பிரபலமாக இருப்பது மட்டும் முதல்வராக தகுதியாக இருக்க முடியாது. இந்த சட்டசபைத் தேர்தலில் என்டிஏ கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளார்.”

Continue Reading

செய்திகள்

 பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Published

on

 பாஜக வேட்பாளர் பட்டியல்

விளவங்கோடு: எஸ். விஜயதரணி

அறந்தாங்கி: கவிதா ஸ்ரீகாந்த்

உதகமண்டலம்: போஜராஜன்

அவினாசி (SC): டாக்டர் எல். முருகன்

திருப்பூர் (தெற்கு): எஸ். தங்கராஜ்

கோயம்புத்தூர் (வடக்கு): வானதி சீனிவாசன்

திருவண்ணாமலை: சி. ஏழுமலை

ராசிபுரம் (SC): டாக்டர் எஸ்.டி. பிரேம்குமார்

மொடக்குறிச்சி: கீர்த்திகா சிவகுமார்

திருவாரூர்: கோவி சந்துரு

தஞ்சாவூர்: எம். முருகானந்தம்

கந்தர்வகோட்டை (SC): சி. உதயகுமார்

புதுக்கோட்டை: என். ராமச்சந்திரன்

திருப்பத்தூர்: கே.சி. திருமாறன்

மானாமதுரை (SC): பொன். வி. பாலகணபதி

மதுரை தெற்கு: பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன்

சாத்தூர்: நயினார் நாகேந்திரன்

ராமநாதபுரம்: ஜி.பி.எஸ். கே. நாகேந்திரன்

திருச்செந்தூர்: கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன்

வாசுதேவநல்லூர் (SC): அனந்தன் அய்யாசாமி

ராதாபுரம்: எஸ்.பி. பாலகிருஷ்ணன்

நாகர்கோவில்: எம்.ஆர். காந்தி

குளச்சல்: டி. சிவகுமார் ப

த்மநாபபுரம்: பி. ரமேஷ்

 

Continue Reading

Trending