Connect with us

அரசியல்

விடியல, முடியல’ என்ற பெயரில் புகார் பெட்டி

Published

on

பா.ஜ., தலைவர் அண்ணாமலை ராமேஸ்வரத்தில், வரும் ஜூலை 28 அன்று தொடங்கவிருக்கும் ‘என் மண் என் மக்கள்’என்ற நடைப்பயணதின் பொது மக்களிடம் இருந்து புகார் பெற ‘விடியல, முடியல’ என்ற புகார் பெட்டி ஒன்றை வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த புகார் பெட்டியினை பொன் ராதா கிருஷ்ணன்,நயினார் நாகேந்திரன், எச்.ராஜா , வானதி ஸ்ரீனிவாசன் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் ” தமிழகத்தில் பல்வேறு காலகட்டத்தில் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் பாத யாத்திரை மேற்கொள்கிறார். அதை வரும், 28ம் தேதி மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் துவக்கி வைக்கிறார். அன்று, ராமேஸ்வரத்தில் பொதுக்கூட்டம் நடக்கும். அதில், ராமேஸ்வர தீர்மானங்கள் வெளியிடப்படும். அதில், தமிழக பா.ஜ., வரும் ஆண்டுகளில் எந்த திசையை நோக்கி பயணிக்க வேண்டும் என்ற நோக்கம் இடம்பெறும். முதல் கட்டமாக, ராமேஸ்வரத்தில் துவங்கும் பாதயாத்திரை, சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி லோக்சபா தொகுதிகளில் ஆகஸ்ட் மாதம் வரை நடக்கும். ஐந்து கட்டங்களாக நடக்கும் யாத்திரை, ஜனவரியில் சென்னையில் முடிவடையும். தி.மு.க.,வின் ஊழல் நிறைந்த குடும்ப ஆட்சியின் அவலங்கள் மக்களிடம் சேர்க்கப்படும். பாத யாத்திரை, 39 லோக்சபா தொகுதிகளில் உள்ள, 234 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியதாக இருக்கும். அண்ணாமலை நடந்தும், வாகனத்தில் சென்றும் மக்களை சந்திப்பார். பாத யாத்திரை நிறைவு நாளில் பிரதமர் மோடி பங்கேற்கவும் வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அரசியல்

விஜய் வாகன விபத்து: பறிமுதல் செய்யாதது ஏன்? — நீதிபதி கேள்வி

Published

on

தவெக தலைவர் விஜயின் பிரச்சார வாகனம் விபத்தில் சிக்கியது தொடர்பாக, ஏன் வழக்கு பதிவு செய்யப்படவில்லை? மேலும் அந்த வாகனம் ஏன் பறிமுதல் செய்யப்படவில்லை? என்று சென்னை உயர்நீதிமன்றம் கடுமையாக கேள்வி எழுப்பியுள்ளது.

விஜயின் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அரசியல் கூட்டங்களுக்கு நெறிமுறைகள் வகுக்க கோரி பி.எச். தினேஷ் தாக்கல் செய்த வழக்கின் விசாரணை இன்று மதியம் நடைபெற்றது.

அப்போது, “விஜயின் பிரச்சார வாகனம் வந்தபோது இரண்டு வாகனங்களை இடித்து கீழே விழுந்ததை நீங்கள் கண்டீர்களா?” என்று நீதிபதி முதல் கேள்வியாக மனுதாரர் தரப்பிடம் வினவினார்.

Continue Reading

அரசியல்

கரூரில் 31 பேர் உயிரிழப்பு!

Published

on

கரூர் விஜயின் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 குழந்தைகள் உட்பட 31 பேர் உயிரிழப்பு.

விஜய் கரூரில் நடத்திய தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அமைச்சர்கள் பலரும் மீட்பு பணிகள் மற்றும் ஆய்வுப் பணிகளுக்காக கரூர் விரைந்து வருகின்றனர்.

31 பேர் உயிரிழப்பு?

கரூரில் விஜய் பரப்புரையின்போது மயங்கி விழுந்ததில் 31 பேர் உயிரிழப்பு எனத் தகவல்.

 

 

Continue Reading

அரசியல்

தங்கம் தென்னரசு அறிவிப்பு

Published

on

புதுக்கோட்டை பொற்பனைக்கோட்டையில் நடந்த அகழாய்வில் 4 நாணயங்கள் கண்டெடுப்பு தங்கம் தென்னரசு அறிவிப்பு.

பொற்பனைக்கோட்டை வணிக நகரமாக இருந்ததற்கு 4 நாணயங்கள் சான்றாக விளங்குகின்றன அமைச்சர் விளக்கம்

வெள்ளி முத்திரைக்காசு, புலி உருவம் பொறிக்கப்பட்ட செப்புக்காசுகள் முக்கியமானவை:அமைச்சர்

அகழாய்வில் கிடைத்த கரிம மாதிரி ஆய்வு முடிவுகள் வரலாற்று காலத்தைச் சேர்ந்தவை தங்கம் தென்னரசு அறிவிப்பு

Continue Reading

Trending