Connect with us

செய்திகள்

கோவையில் ஒர்க் ஸ்பெஸ் தேவையை பூர்த்தி செய்யும் ஸ்பேஸ்ஒன்!

Published

on

கேரளாவை தலைமையகத்தைக் கொண்ட SpazeOne, தென் இந்தியாவின் முன்னணி கோ-ஒர்கிங் மற்றும் மேனேஜ்ட் ஆபிஸ் நிறுவனமான திகழ்கிறது. வேகமாக வளர்ந்து வரும் முக்கிய வணிக நகரமான கோவையில் தனது புதிய மையத்தைத் தொடங்கி விரிவுபடுத்தியுள்ளது.

நகரின் மிகப் முக்கிய வர்த்தகச் சாலைகளில் தன்னுடைய மையத்தை நிறுவியுள்ள அமைத்துள்ள ஸ்பேஸ்ஒன், நிறுவனங்கள் எளிமையான அணுகுமுறையை பெறுவதற்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

SpazeOne, தகவல் தொழில்நுட்பம் (IT), BPO, மெடிக்கல் கோடிங், மீடியா, ஃபின்டெக் உள்ளிட்ட பல்வேறு வேகமாக வளர்ந்து வரும் துறைகளுக்கான நிறுவனங்களுக்கு முழுமையான 360° பணிமிட வசதிகளை வழங்குகிறது. இது தற்போது கோயம்புத்தூரில் தொடங்கியுள்ள புதிய மையத்தில் முழுமையாக மேலாண்மை செய்யப்பட்ட ஆபிஸ் ஸ்யூட்கள், தனிப்பட்ட கேபின்கள் மற்றும் நிறுவனத் தேவைகளுக்கு ஏற்ப விரிவாக்கக்கூடிய எண்டர்பிரைஸ் தளங்கள் ஆகியவை அவினாசி ரோடு, காமராஜர் ரோடு போன்ற முக்கிய வர்த்தகப் பகுதிகளில் அமைந்துள்ளன.

1 இருக்கை முதல் 1000 இருக்கைகள் வரை தொடங்கும் இப்பணிமிடங்களில் அதி வேக Wi-Fi, 24/7 பாதுகாப்பான அணுகல், எண்டர்பிரைஸ் தரம் கொண்ட மீட்டிங் ரூம்கள், ஹவுஸ்கீப்பிங் மற்றும் கஃபே வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நவீன வடிவமைப்புகள், உடல்நலனைக் கருத்தில் கொண்ட திறம்பட செயல்பட உதவும் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஸ்டார்ட்அப்கள் நிறுவனங்கள் , IT நிறுவனங்கள், உற்பத்தி சார்ந்த நிறுவனங்கள் அதிக செயல்பாட்டைக் காணும் நிலையில், நெகிழ்வான மற்றும் முழுமையாக சேவை செய்யப்பட்ட பணிமிடங்களுக்கான தேவையும் வேகமாக உயர்ந்து வருகிறது. அவினாசி ரோடு போன்ற வளர்ச்சியடைந்த, மக்கள் நடமாட்டம் அதிகமான சாலைகளில் தனது புதிய மையத்தை அமைப்பதன் மூலம், கோயம்புத்தூரின் வேகமான வர்த்தக விரிவாக்கத்துக்கும், உருவாகி வரும் தொழில்முனைவோர் சூழலுக்கும் ஸ்பேஸ்ஒன் தன்னை இணைத்துக்கொள்கிறது. குறிப்பாக SME குழுக்கள் மற்றும் எண்டர்பிரைஸ் செய்முறை அலுவலகக் குழுக்கள் தங்கள் இருப்பைத் திறம்படவும் விரைவாகவும் உருவாக்க உதவும் அளவுகோல் மாறக்கூடிய பணிமிடங்களை வழங்குவதே நிறுவனத்தின் நோக்கமாகும்.

ஜேம்ஸ் தோமஸ் மற்றும் சிஜோ ஜோஸ் ஆகியோரால் இணைந்து நிறுவப்பட்ட ஸ்பேஸ்ஒன், முக்கிய சந்தைகளில் உயர்தர, தொழில்நுட்பம் சார்ந்த பணிமிடங்களை அனைவருக்கும் அணுகக்கூடியதாக மாற்றும் கனவைக் கொண்டுள்ளது. வளர்ச்சியை நோக்கி செயல்படும் நிறுவனங்களுக்கு மாற்றத்திற்கேற்ப தழுவக்கூடிய ஆபிஸ் மாடல்கள், வலுவான சமூக வலையமைப்புகள் மற்றும் நவீன, முக்கிய இடங்களில் அமைந்த சூழல்களை வழங்குவதே இவர்களின் நோக்கமாகும்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

செய்திகள்

நிர்மலா மகளிர் கல்லூரியில் திருக்குறள்களை பரதநாட்டியமாக அரங்கேற்றி சாதனை!

Published

on

நிர்மலா மகளிர் கல்லூரியில் 1,330 திருக்குறள்கள் – பரதநாட்டிய நிகழ்ச்சியில் புதிய சாதனை கோயம்புத்தூர் நிர்மலா மகளிர் கல்லூரி இன்று 4 மணி 30 நிமிடங்களில் 1,330 திருக்குறள்களை பரதநாட்டியமாக அரங்கேற்றி வரலாற்றுச் சாதனை படைத்தது.

இந்த பிரமாண்ட நிகழ்ச்சியில் 133 மாணவிகள் பங்கேற்று, ஒவ்வொரு மாணவியும் 10 திருக்குறள்களை பாரம்பரிய நடனத்தின் மூலம் வெளிப்படுத்தினர்.

இந்த தனித்துவமான பண்பாட்டு சாதனை, இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அமைப்பால் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டு, தமிழ் பண்பாடு மற்றும் நுண்கலைகளில் கல்லூரியின் அர்ப்பணிப்பிற்கு தேசிய அளவிலான அங்கீகாரம் கிடைத்தது.

இந்த நிகழ்ச்சி, மாணவிகளின் திறமை, ஒழுக்கம் மற்றும் கலாச்சார மேன்மையை வெளிப்படுத்தும் பெருமைமிக்க தருணமாக அமைந்தது.

Continue Reading

செய்திகள்

கோவையில் ரியம் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு வளாகம் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா திறந்து வைத்தார்.

Published

on

கோவை மாநகரின் சாய்பாபா காலனியில் முன்னணி விளையாட்டு அகாடமியாக இயங்கி வரும் ரியம் ஸ்போர்ட்ஸ், தனது புதிய உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வளாகத்தைத் துடியலூரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை ) தொடங்கியது.முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.இராசா இந்த மையத்தைத் திறந்து வைத்தார்.

இந்த விழாவில் ரியம் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுவாதி அகர்வால், இணை நிறுவனர் த்ரேதம் அகர்வால் மற்றும் எஸ்.எஸ்.வி.எம் கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் மோகன்தாஸ் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.துடியலூரில் சுமார் 2.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த வளாகத்தில், ‘பிக்கிள்பால்’ விளையாட்டுக்கான தமிழகத்தின் மிகப்பெரிய விளையாட்டுத் தளங்களில் ஒன்று அமெரிக்க ஓபன் போட்டி தரத்திலான தளமாக அமைக்கப்பட்டுள்ளது.கிரிக்கெட் பயிற்சிக்காக ஆஸ்ட்ரோ டர்ஃப் மற்றும் கான்கிரீட் பிட்ச்கள், துல்லியமான பந்துவீச்சு இயந்திரத்துடன் (Stitch ball machine) வடிவமைக்கப்பட்டுள்ளன.

மேலும், விரைவில் ஃபிபா (FIFA) அங்கீகாரம் பெற்ற கால்பந்து மைதானம், ஃபிபா (FIBA) தரத்திலான கூடைப்பந்து தளம் மற்றும் நவீன கிரிக்கெட் பயிற்சி வசதிகள் இங்கு வரவுள்ளன.இந்த மையம் ஒரு விளையாட்டுப் பயிற்சி அகாடமியாகச் செயல்படுவதோடு மட்டுமல்லாமல், பல்வேறு விளையாட்டுகளின் மேல் ஆர்வமுள்ள மக்கள் இந்த தளங்களை வாடகைக்கு எடுத்து விளையாடும் வசதியையும் வழங்குகிறது.அதே நேரம் தேசிய அளவிலான சாம்பியன்களைக் கொண்ட பயிற்சியாளர் குழு மூலம் இங்கு உயர்தரப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்த வளாகத்தின் திறப்பு விழாவில் பேசிய ஆ.இராசா எம்.பி., கோயம்புத்தூரின் விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்த ரியம் ஸ்போர்ட்ஸ் எடுத்துள்ள இந்த முயற்சியைப் பாராட்டினார். இத்தகைய உலகத்தரம் வாய்ந்த வசதிகள் இப்பகுதி விளையாட்டு வீரர்களுக்குப் பெரிதும் உதவும் என்றும், இந்த நிறுவனம் இந்தியா முழுவதும் விரிவடையத் தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.ரியம் ஸ்போர்ட்ஸ் மேலாண்மை இயக்குநர் சுவாதி அகர்வால் பேசுகையில், “இது வெறும் விளையாட்டு மையம் மட்டுமல்ல, விளையாட்டுத் துறையில் ஒரு புரட்சியாக அமையும்” என்றார்.

தற்போது பிக்கிள்பால் மைதானம் பயன்பாட்டிற்குத் தயாராக உள்ளது. காலை நேரங்களில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.800 மற்றும் இரவு நேரங்களில் ரூ.1000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 4 பேர் கொண்ட குழு விளையாடலாம். 200 கார்கள் நிறுத்தும் வசதி மற்றும் சிசிடிவி கண்காணிப்பு எனப் பாதுகாப்பு வசதிகளும் இங்கு செய்யப்பட்டுள்ளன.

நிறுவனத்தின் இணை நிறுவனர் த்ரேதம் அகர்வால் கூறுகையில், இரண்டாம் கட்டப் பணிகளாகக் கூடைப்பந்து, கால்பந்து மைதானங்கள் மற்றும் செஸ், ஸ்னூக்கர், ஸ்கேட்டிங் போன்ற விளையாட்டு வசதிகள் பிப்ரவரி இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவித்தார்.

Continue Reading

கோயம்பத்தூர்

திருப்பூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா!

Published

on

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா திருப்பூரில் , பொதுமக்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. சாமுண்டிபுரம் பகுதி, கோல்டன் நகர், நல்லூர் மற்றும் நெருப்பெரிச்சல் பகுதி உள்ளிட்ட திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் சமத்துவ பொங்கல் விழா நடத்தப்பட்டது.

இந்த விழா தமிழக வெற்றிக் கழக திருப்பூர் மாநகர மாவட்ட செயலாளர் எஸ். பாலமுருகன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற விழாவில் தவெக மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.க்கில் நடத்தப்பட்ட இந்த சமத்துவ பொங்கல் விழாவில் பாரம்பரிய முறையில் பொங்கல் தயாரித்தல், இனிப்புகள் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அனைத்து தரப்பினரும் ஒரே இடத்தில் ஒன்றிணைந்து சமத்துவ பொங்கலை கொண்டாடியதன் மூலம் சமூக ஒற்றுமையின் அவசியம் வலியுறுத்தப்பட்டது.

மேலும், இத்தகைய சமத்துவ விழாக்கள் சமூக நல்லிணக்கத்தையும், மக்களிடையே ஒற்றுமை உணர்வையும் வலுப்படுத்தும் என்பதையும் விழாவில் கலந்துகொண்டவர்கள் எடுத்துரைத்தனர்

Continue Reading

Trending