Connect with us

செய்திகள்

கோவையில் ஒர்க் ஸ்பெஸ் தேவையை பூர்த்தி செய்யும் ஸ்பேஸ்ஒன்!

Published

on

கேரளாவை தலைமையகத்தைக் கொண்ட SpazeOne, தென் இந்தியாவின் முன்னணி கோ-ஒர்கிங் மற்றும் மேனேஜ்ட் ஆபிஸ் நிறுவனமான திகழ்கிறது. வேகமாக வளர்ந்து வரும் முக்கிய வணிக நகரமான கோவையில் தனது புதிய மையத்தைத் தொடங்கி விரிவுபடுத்தியுள்ளது.

நகரின் மிகப் முக்கிய வர்த்தகச் சாலைகளில் தன்னுடைய மையத்தை நிறுவியுள்ள அமைத்துள்ள ஸ்பேஸ்ஒன், நிறுவனங்கள் எளிமையான அணுகுமுறையை பெறுவதற்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

SpazeOne, தகவல் தொழில்நுட்பம் (IT), BPO, மெடிக்கல் கோடிங், மீடியா, ஃபின்டெக் உள்ளிட்ட பல்வேறு வேகமாக வளர்ந்து வரும் துறைகளுக்கான நிறுவனங்களுக்கு முழுமையான 360° பணிமிட வசதிகளை வழங்குகிறது. இது தற்போது கோயம்புத்தூரில் தொடங்கியுள்ள புதிய மையத்தில் முழுமையாக மேலாண்மை செய்யப்பட்ட ஆபிஸ் ஸ்யூட்கள், தனிப்பட்ட கேபின்கள் மற்றும் நிறுவனத் தேவைகளுக்கு ஏற்ப விரிவாக்கக்கூடிய எண்டர்பிரைஸ் தளங்கள் ஆகியவை அவினாசி ரோடு, காமராஜர் ரோடு போன்ற முக்கிய வர்த்தகப் பகுதிகளில் அமைந்துள்ளன.

1 இருக்கை முதல் 1000 இருக்கைகள் வரை தொடங்கும் இப்பணிமிடங்களில் அதி வேக Wi-Fi, 24/7 பாதுகாப்பான அணுகல், எண்டர்பிரைஸ் தரம் கொண்ட மீட்டிங் ரூம்கள், ஹவுஸ்கீப்பிங் மற்றும் கஃபே வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நவீன வடிவமைப்புகள், உடல்நலனைக் கருத்தில் கொண்ட திறம்பட செயல்பட உதவும் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஸ்டார்ட்அப்கள் நிறுவனங்கள் , IT நிறுவனங்கள், உற்பத்தி சார்ந்த நிறுவனங்கள் அதிக செயல்பாட்டைக் காணும் நிலையில், நெகிழ்வான மற்றும் முழுமையாக சேவை செய்யப்பட்ட பணிமிடங்களுக்கான தேவையும் வேகமாக உயர்ந்து வருகிறது. அவினாசி ரோடு போன்ற வளர்ச்சியடைந்த, மக்கள் நடமாட்டம் அதிகமான சாலைகளில் தனது புதிய மையத்தை அமைப்பதன் மூலம், கோயம்புத்தூரின் வேகமான வர்த்தக விரிவாக்கத்துக்கும், உருவாகி வரும் தொழில்முனைவோர் சூழலுக்கும் ஸ்பேஸ்ஒன் தன்னை இணைத்துக்கொள்கிறது. குறிப்பாக SME குழுக்கள் மற்றும் எண்டர்பிரைஸ் செய்முறை அலுவலகக் குழுக்கள் தங்கள் இருப்பைத் திறம்படவும் விரைவாகவும் உருவாக்க உதவும் அளவுகோல் மாறக்கூடிய பணிமிடங்களை வழங்குவதே நிறுவனத்தின் நோக்கமாகும்.

ஜேம்ஸ் தோமஸ் மற்றும் சிஜோ ஜோஸ் ஆகியோரால் இணைந்து நிறுவப்பட்ட ஸ்பேஸ்ஒன், முக்கிய சந்தைகளில் உயர்தர, தொழில்நுட்பம் சார்ந்த பணிமிடங்களை அனைவருக்கும் அணுகக்கூடியதாக மாற்றும் கனவைக் கொண்டுள்ளது. வளர்ச்சியை நோக்கி செயல்படும் நிறுவனங்களுக்கு மாற்றத்திற்கேற்ப தழுவக்கூடிய ஆபிஸ் மாடல்கள், வலுவான சமூக வலையமைப்புகள் மற்றும் நவீன, முக்கிய இடங்களில் அமைந்த சூழல்களை வழங்குவதே இவர்களின் நோக்கமாகும்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

செய்திகள்

சொல்லுவதை செய்வோம் செய்வதைத்தான் சொல்லுவோம் – கனிமொழி பரப்புரை!

Published

on

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சரவணம்பட்டி பகுதியில் கவுண்டம்பாளையம் தொகுதி திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் சூரிய பிரகாஷை ஆதரித்து திமுக துணை பொது செயலாளர் கனிமொழி பரப்புரை மேற்கொண்டார்.

இதில் பேசிய கனிமொழி, இந்த வேட்பாளர் அன்னை சோனியா காந்தி தேர்ந்தெடுத்து கை உங்கள் கைகளில் ஒப்படைத்து இருக்கக்கூடிய வேட்பாளர், ராகுல் காந்தி உங்களுக்காக அனுப்பி வைத்திருக்க கூடிய வேட்பாளர், இவருக்கு கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

அவருடன் பேசிக் கொண்டிருந்த பொழுது கல்லூரி படிக்கும் பொழுதிலிருந்து அரசியல் ஆர்வம் கொண்டு அரசியலில் இணைத்துக் கொண்டு இருப்பதை என்னிடம் தெரிவித்தார், இந்த நாட்டை மதத்தின் பெயரால் பிரிக்கக்கூடிய பாஜக ஆர் எஸ் எஸ் கொள்கையை எதிர்த்து போராட வேண்டும் என்ற எண்ணத்தோடு இருக்கிறேன் என கூறியிருக்கிறார், இதைக் கேட்கும் போதே மனமகிழ்ச்சியாக இருந்தது என்றார்.

இந்த நாட்டைப் பிரிக்க நினைப்பவர்களை எதிர்க்கக் கூடிய ஒரு கூட்டணியாக நம் கூட்டணி உள்ளது, இந்த நாட்டு மக்களை ஒருமைப்படுத்த கூடிய கூட்டணியாக சிறுபான்மை மக்களுக்கும் பெரும்பான்மை மக்களுக்கும் அத்தனை பேரும் உரிமைகளுக்காகவும் பாடுபடக்கூடிய இந்தக் கூட்டணி தொடர்ந்து பங்காற்றிக் கொண்டிருக்கிறது என்றார்.

Continue Reading

செய்திகள்

தேர்தலுக்கு பின் விஜய் இதை கண்டிப்பாக செய்வார் – பியூஷ் கோயல்

Published

on

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,

“தவெக தலைவர் விஜய் மற்றும் திமுக இடையில் ரகசிய உடன்பாடு இருக்கிறது. திமுகவுக்கு எதிரான வாக்குகளை பிளவுபடுத்தவே விஜய் கொண்டு வரப்பட்டிருக்கிறார். இந்த சட்டசபைத் தேர்தலுக்கு பின் விஜய் மீண்டும் கண்டிப்பாக நடிக்க சென்றுவிடுவார். இதன் காரணமாகவே திமுக – விஜய் இடையில் மறைமுக கூட்டணி உள்ளது என்று சொல்கிறோம். திமுக எதிர்ப்பு வாக்குகள் சிதறாமல் பாதுகாத்து என்டிஏ பக்கம் கொண்டு வருவோம். ஒவ்வொரு வீடாக சென்று ஊழல் நிறைந்த திமுக ஆட்சியை அகற்றுவோம். முதல்வர் ஸ்டாலின் ஒரு குடும்ப ஆட்சியை நடத்தி வருகிறார். மக்களின் உணர்வுகளை அலட்சியப்படுத்துகிறார். ஒரேயொரு குடும்பம் தமிழ்நாட்டை நாசமாக்கி வருகிறது. உதயநிதி ஸ்டாலின் இந்த மாநிலத்தை வழிநடத்தினால், அவருக்கு மக்களின் உணர்வுகளோ, கலாச்சார பண்புகளோ புரியாது. திமுக ஆட்சியின் அவலங்கள் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அதேபோல் பிரதமர் மோடியின் ஆட்சியை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

என்டிஏ கூட்டணி ஆட்சி நிச்சயமாக வளர்ச்சியை கொடுக்கும். அதிமுக, பாஜக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் ஒரே கோட்டில் இயங்குகின்றன. என்டிஏ கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சென்னையில் மாற்றத்தை ஏற்படுத்தும் பெரிய அளவிலான நகர்ப்புற திட்டங்களை உருவாக்குவோம். அதேபோல் விஜய்க்கு கூடும் கூட்டம் வாக்குகளாக மாறாது. ஒரு தலைவனாக உருவாக வேண்டும் என்றால் நீண்ட ஆண்டுகளில் மக்கள் சேவையில் இருந்திருக்க வேண்டும். வெறும் பிரபலமாக இருப்பது மட்டும் முதல்வராக தகுதியாக இருக்க முடியாது. இந்த சட்டசபைத் தேர்தலில் என்டிஏ கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளார்.”

Continue Reading

செய்திகள்

 பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Published

on

 பாஜக வேட்பாளர் பட்டியல்

விளவங்கோடு: எஸ். விஜயதரணி

அறந்தாங்கி: கவிதா ஸ்ரீகாந்த்

உதகமண்டலம்: போஜராஜன்

அவினாசி (SC): டாக்டர் எல். முருகன்

திருப்பூர் (தெற்கு): எஸ். தங்கராஜ்

கோயம்புத்தூர் (வடக்கு): வானதி சீனிவாசன்

திருவண்ணாமலை: சி. ஏழுமலை

ராசிபுரம் (SC): டாக்டர் எஸ்.டி. பிரேம்குமார்

மொடக்குறிச்சி: கீர்த்திகா சிவகுமார்

திருவாரூர்: கோவி சந்துரு

தஞ்சாவூர்: எம். முருகானந்தம்

கந்தர்வகோட்டை (SC): சி. உதயகுமார்

புதுக்கோட்டை: என். ராமச்சந்திரன்

திருப்பத்தூர்: கே.சி. திருமாறன்

மானாமதுரை (SC): பொன். வி. பாலகணபதி

மதுரை தெற்கு: பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன்

சாத்தூர்: நயினார் நாகேந்திரன்

ராமநாதபுரம்: ஜி.பி.எஸ். கே. நாகேந்திரன்

திருச்செந்தூர்: கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன்

வாசுதேவநல்லூர் (SC): அனந்தன் அய்யாசாமி

ராதாபுரம்: எஸ்.பி. பாலகிருஷ்ணன்

நாகர்கோவில்: எம்.ஆர். காந்தி

குளச்சல்: டி. சிவகுமார் ப

த்மநாபபுரம்: பி. ரமேஷ்

 

Continue Reading

Trending