Connect with us

கோயம்பத்தூர்

சமூக சேவையில் சாதனை செய்யும் மேக்ஸ்வெல் அறக்கட்டளை!

Published

on

கோவை மேக்ஸ்வெல்  அறக்கட்டளை  கடந்த மூன்று ஆண்டுகளாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை மிக பிரம்மாண்டமான அளவில் மக்களுக்கு செய்து வருகிறார்கள். குறிப்பாக குழந்தைகளின் கல்வி, பெண்களின் தொழில், மலைவாழ் மக்கள் ஆகியோருக்கு இவர்கள் ஆற்றிய சேவை எண்ணற்றவை.

ஒவ்வொரு ஆண்டும் மே மாத இறுதியில்  பள்ளி துவங்குவதற்கு முன் மேக்ஸ்வெல் முத்துக்கள் என்ற தலைப்பில்  தாய் அல்லது தந்தையை இழந்த அல்லது பொருளாதாரத்தில் பின்தங்கிய 500கும் மேற்ப்பட்ட மாணவ மாணவிகளுக்கு  ஒரு வருடத்திற்கு தேவையான ஸ்கூல் பேக், நோட்புக்ஸ், ஸ்டீல் வாட்டர் பாட்டில் உட்பட மொத்த கல்வி உபகரணங்களையும்  ஒரே அரங்கத்தில் வைத்து வழங்குவதில் இவர்கள் பெயர் பெற்றவர்கள்.. இவர்கள் மூலம் இதுவரை 4000 மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர்.. தாய் தந்தை இருவரையும் இழந்த  நூற்றுக்கும் மேற்ப்பட்ட மாணவ மாணவிகளுக்கு  கல்வி ஊக்கத்தொகை வழங்கி அவர்களின் கல்வி கனவை நினைவாக்கியுள்ளனர்.

ஆதரவற்ற பெண்கள் முன்னேற்றத்திற்கு என  மேக்ஸ்வெல்  பொன்மகள் என்ற பிரம்மாண்ட விழா மூலம் பெண்கள் தின விழாவை முன்னிட்டு  மார்ச் மாதத்தில் 5 லட்சம்  மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் பெண்களுக்கு தொழில் தொடங்கி வைப்பதையும் ஆண்டுதோறும் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.. இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பயனடைந்துள்ளனர். 120கும் மேற்பட்ட பெண்களுக்கு தொழில் தொடங்கி தந்துள்ளனர்..

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் மற்றும் தீபாவளியை மலைவாழ் மக்களுடன் கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல்  வருடத்தில் குறைந்த பட்சம் 20 கிராமங்களுக்கு தேவையான பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள்..  பழங்குடியினர் மாணவர்களுக்கான கல்வியில் அதிக கவனம் செலுத்துகின்றனர்.

அரசு பள்ளி சீரமைப்பு பணிகளில் கவனம் செலுத்துகின்றனர்.. குறிப்பாக சுத்தமான கழிவறை, நல்ல குடிநீர், மலைவாழ் பள்ளி பாதுகாப்பிற்காக சிசிடிவி, சுற்றுச்சூழல் சுத்தம், ஸ்மார்ட் கிளாஸ் திட்டம்  ஆகியவற்றை தரமாக தருவதற்காக பல்வேறு சேவைகளை செய்து வருகின்றனர்..

மேலும் அவ்வப்போது ரத்த தானம், மருத்துவ முகாம், விழிப்புணர்வு பிரச்சாரம், மாற்றுத்திறனாளிகள், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பார்வையற்ற குழந்தைகள் மற்றும் ஆட்டிசம் குழந்தைகளுக்கான நலத்திட்டங்களை ஆண்டுதோறும் இடைவிடாமல் செய்து கொண்டிருக்கின்றனர்..

மேக்ஸ்வெல் அணி நண்பர்களிடம் டிரஸ்டில் பணி புரிவது குறித்து கேட்டபோது திரு ஜெய்ஜாலன் அவர்கள்  மலைவாழ் மக்களுக்கான சேவையில் அவர்களுக்கு அரிய வகையில் உள்ள தேவைகளை நிறைவேற்றும் போது அவர்களின் ஆச்சர்யம் கலந்த மகிழ்ச்சியை காணும் பொழுது அந்த உணர்வை அளவிட இயலாது என கூறினார்.

தொடர்ந்து பேசிய மகேஸ்வரி தாய் அல்லது தந்தை இழந்த மாணவ மாணவியர்களின் கல்வி தேவைகளை நிறைவேற்றும் போது அவர்களின் எதிர்காலம் சிறப்பா அமையும்ன்னு நினைக்கும்போது அவ்வளவு சந்தோஷமா இருக்கும் என கூறினார்..

என்னைப் பொறுத்தவரை, ஒரு உதவி என்பது சரியான நேரத்தில் சரியான நபர்களுக்குச் செய்வது எங்கள் அறக்கட்டளையும் அதுபோலவே  செய்கிறது என செல்வி சரண்யா கூறினார்

ராத்திரி பகல் என்று பார்க்காமல்  வெயில் மழைன்னு யோசிக்காமல் இந்தியாவோட இன்னொரு பக்கம் இருக்கிற  ஹரியானா வரைக்கும் போகணுமான்னு யோசிக்காம எவ்வளவு கஷ்டப்பட்டு சேவை பண்ணாலும்   அந்த உதவியை வாங்குற மக்களோட முகத்தில் இருக்கிற சந்தோஷமும் புன்னகையும்  அவ்வளவு மனதிருப்தி ஒவ்வொரு முறையும் கொடுக்குது  என்றார் மேக்ஸ்வெல் அட்மின் ஜமீர் அகமது..

மேக்ஸ்வெல் பயனாளி மாற்றுத்திறனாளி  ஒருவரிடம் கேட்டபோது மேக்ஸ்வெல் நிறுவனர் முருகன் அண்ணே கிட்ட எப்ப உதவினு கேட்டாலும் தைரியமா இருங்க நான் பண்றேன்னு சொல்லி உதவி பண்ணுவார்.. என்ன மாதிரி  என் கூடவே இருக்கிற ஐம்பதுக்கு மேற்பட்ட மாற்றத்தினால் இதுவரைக்கும் உதவி செய்திருக்கிறார் அந்த உதவியை என்னைக்கும் மறக்க மாட்டோம் என்றார்.

அவ்வபோது நடைபெறும் பெரிய நலத்திட்ட உதவிகளில் கலந்துகொள்ளும் சின்னத்திரை மற்றும் திரைப்பட நடிகர்களும் தங்கள் கருத்தை பதிவிட்டுள்ளனர்..

இதுவரை மேக்ஸ்வெல் அறக்கட்டளையின்  நான்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ள  விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர் சீரியலில் அறியப்படும் மீனா எனும் ஹேமா ராஜ்குமார் கூறுகையில்  சுனாமியில் பெற்றோரை இழந்த இரண்டு குழந்தைகள் இன்று வரை படிக்க வைத்து வருவதுடன் அதுபோல செயல்பாடுகளில் ஈடுபடும் மேக்ஸ்வெல் அறக்கட்டளையுடன் எப்போதும் துணை நிற்பதாகவும் அவ்வப்போது குழந்தைகளுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளுக்கு உதவிகளும் செய்து கொண்டிருக்கிறார்..  மேலும் Kpy பாலா மற்றும் புகழ் தொடர்ந்து அறக்கட்டளையோடு தங்களின் பங்களிப்பை வழங்கிக் கொண்டிருக்கின்றனர்..

திரைப்பட நடிகர் Mime கோபி அவர்கள்  வெள்ளை உள்ளம் படைத்த மேக்ஸ்வெல் அணி  நண்பர்களோடு  மக்களுக்கு சேவை செய்வதில் மகிழ்ச்சி என்றார்..

இதுபோல பல்வேறு திரைப்பட நடிகர்களும் சின்னத்திரை நட்சத்திரங்களும் மேக்ஸ்வெல் அறக்கட்டளையோடு பயணிப்பது பெரும் மகிழ்ச்சி..

இப்படி அணி நண்பர்கள் முதல் பயனாளிகள் வரை,   சின்னத்திரை நட்சத்திரங்கள் முதல் திரைப்பட நடிகர்கள் வரை அனைவரும் கொண்டாடும் மேக்ஸ்வெல் அறக்கட்டளை தனது மூன்று ஆண்டு நிறைவு செய்து நாலாவது ஆண்டில் அடியெடுத்து வைத்து கோவையின் கூடுதல் பெருமையாக இணைந்துள்ளது..

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உள்ளூர் செய்திகள்

தயார் நிலையில் அவிநாசி மேம்பாலம்

Published

on

 

கோவை அவினாசி சாலை உப்பிலிபாளையம் சிக்னல் முதல் – கோல்டு வின்ஸ் சாலை வரை கட்டி முடிக்கப்பட்ட முடிக்கப்பட்ட புதிய மேம்பாலத்தை மேம்பாலத்தை இன்னும் சில தினங்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதற்காக மேம்பாலம் திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் உள்ளது.

Continue Reading

உள்ளூர் செய்திகள்

கோவையில் “விக்டோரிஸ்” கார் அறிமுக விழா !

Published

on

கோவை: புதிய “விக்டோரிஸ்” கார் இன்று (04.10.2025) மாலை 4.30 மணிக்கு ஆதி மாருதி ஷோரூம், சரவணம்பட்டி, கோவையில் அறிமுகமாகிறது.

இந்த நிகழ்வில் பழமுதிர் நிலையம் உரிமையாளர் திரு. துறையராஜ் சின்னசாமி, பங்குதாரர் திரு. ஞானசேகர் கந்தசாமி , கோவை பழமுதிர் நிலையம் எம்.டி. திரு. செந்தில் நடராஜன், உரிமையாளர் திரு. விஜய் ரதினம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.

விழாவை ஒட்டி “Strums N Hums” இசைக் கச்சேரியும் நடைபெற உள்ளது.

 

Continue Reading

கோயம்பத்தூர்

புற்றுநோய் விழிப்புணர்வு இன்ஸ்டாகிராம் வீடியோ தொகுப்பு வெளியீடு!

Published

on


உலகம் முழுவதும், அக்டோபர் மாதம் மார்பகப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதற்கும், நோயாளிகளுக்கு தன்னம்பிக்கை அளிப்பதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட மாதமாகக் கருதப்படுகிறது.
கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை – ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் இந்த ஆண்டுடன் 23-வது முறையாக உலக மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தைக் கடைப்பிடிக்கிறது.இதன் ஒரு பகுதியாக, மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த  இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ தொகுப்பை ஆங்கிலம் மற்றும் தமிழில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிட்டது.இந்த வெளியீட்டு விழா ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் அரங்கத்தில் நடைபெற்றது. ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் டாக்டர் பி. குகன் அவர்கள் நிகழ்விற்கு வந்த அனைவரையும் வரவேற்றார். இந்த நிகழ்வின் தலைமை விருந்தினராக P&S குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குநரும், நவ ஹிந்துஸ்தான் ஸ்பின்னர்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான (CEO) திருமதி பிரியங்கா கார்த்திகேயனி கலந்து கொண்டு, எஸ். என். ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் திரு. ஆர். சுந்தர் முன்னிலையில் இந்த ரீல்ஸ்களை வெளியிட்டார்.அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரி (CEO) சி.வி. ராம்குமார், தலைமை நிர்வாக அதிகாரி (CAO) டி. மகேஷ் குமார், மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின்

மருத்துவ இயக்குனர் டாக்டர் ராஜகோபால், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் எஸ். அழகப்பன் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.டாக்டர் பி. குகன் தனது உரையில், இந்தியாவில் 50 வயதுக்குட்பட்ட பெண்களிடையே மார்பகப் புற்றுநோய் அதிகரித்து வருவதாகத் தெரிவித்தார். சுமார் 35 வயதுள்ள பெண்களிடையே இந்த நோய் ஏற்படுவது 2%லிருந்து 4% ஆக இருமடங்காக உயர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்.ஒரு ஆய்வின்படி, 2018-ஆம் ஆண்டில் இந்தியாவில் 1,68,000-க்கும் மேற்பட்ட பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டனர். இந்த எண்ணிக்கை 2023-ல் 2,20,000-க்கு மேல் அதிகரித்து அதிர்ச்சி அளித்தது. இது புதிதாக நோயறிதல் செய்யப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதைக் காட்டுகிறது என அவர் கூறினார்.சிறு வயதிலேயே பூப்பெய்தல், தாமதமான மெனோபாஸ், 30 வயதுக்குப் பிறகு முதல் திருமணம் அல்லது குழந்தைப்பேறு, தொடர்ச்சியான மது அருந்துதல், வாய்வழி கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்துதல், உடலுழைப்பற்ற வாழ்க்கை முறை, அதிக உடல் பருமன் மற்றும் மரபணு காரணங்கள் ஆகியவை இந்த நோய்க்கான ஆபத்துக் காரணிகள் என்று டாக்டர் குகன் தெரிவித்தார்.இந்த முக்கியமான நாளில், ஆரம்ப நிலையிலேயே மார்பக புற்றுநோயை கண்டறிவதன் அவசியத்தை வலியுறுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்று அவர் கூறினார். ஏனெனில், ஆரம்ப நிலைகளில் (நிலை 1 & நிலை 2) இந்த நோய் கண்டறியப்பட்டால், குணப்படுத்தும் சிகிச்சை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

துரதிர்ஷ்டவசமாக, 50% முதல் 60% நோயாளிகள், புற்றுநோய் முற்றிய நிலையில் (நிலை 3  அல்லது நிலை 4) சிகிச்சைக்காக வருகிறார்கள். இந்த நிலைகளில் நோய் குணமடைவதற்கான வாய்ப்பும், நீண்ட கால உயிர்வாழும் விகிதமும் கணிசமாகக் குறைவாக உள்ளன.எனவே, மார்பகப் புற்றுநோய் பற்றிப் பேசுவதும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை அதிகரிப்பதும் மிக முக்கியமான தேவையாகும்.

ஆரம்பத்தில் கண்டறிதல் பெரும்பாலும் எளிமையான சிகிச்சைக்கு வழிவகுக்கிறது. அப்போது, அறுவை சிகிச்சை மற்றும் மருந்து மட்டும் தேவைப்படலாம், மேலும் மார்பகத்தைப் பாதுகாக்கும் சிகிச்சை (Breast Conservation) சாத்தியமாகிறது. ஆனால், இந்த விழிப்புணர்வு பெண்களை, குறிப்பாக 50 வயதுக்குட்பட்டவர்களை சென்றடைய வேண்டும்.
எனவே, நாங்கள் இளைஞர்களிடையே மிகவும் பிரபலமான  சமூக ஊடகத் தளமாக உள்ள இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி உள்ளோம் என்று அவர் கூறினார்.

மார்பகப் புற்றுநோய் குறித்த முக்கியமான தகவல்களை வழங்குவதற்காக, தொடர்ச்சியாக 25 இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதில் மார்பகப் புற்றுநோய்க்கான காரணங்கள், அறிகுறிகள், ஆரம்ப கட்ட நோயறிதல், வெவ்வேறு நோய் கண்டறியும் முறைகள், புற்றுநோயின் நிலைகள், கிடைக்கக்கூடிய சிகிச்சை வழிமுறைகள் மற்றும் நோயாளிகளுக்கான ஆலோசனை ஆகியவை அடங்கும் என்று டாக்டர் குகன் பகிர்ந்து கொண்டார்.

அனைத்து வீடியோக்களும் ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின்  அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் (https://www.instagram.com/sriorcoimbatore) பதிவேற்றப்படும். ஒரு நாளைக்கு ஒரு வீடியோவை பதிவேற்றத் திட்டமிட்டுள்ளோம்.

இந்த ஆண்டு உலக மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இந்த மாதத்தின் எந்தவொரு வேலை நாளிலும் 0422-4389797, 0422 4500203 என்ற தொலைபேசி எண்களில் முன்பதிவு செய்யும் பெண்களுக்கு இலவச மேமோகிராம் பரிசோதனைகள் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் அறுவை சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர்  டாக்டர் கே. கார்த்திகேஷ் நன்றியுரை வழங்கினார்.

Continue Reading

Trending