Connect with us

கோயம்பத்தூர்

சமூக சேவையில் சாதனை செய்யும் மேக்ஸ்வெல் அறக்கட்டளை!

Published

on

கோவை மேக்ஸ்வெல்  அறக்கட்டளை  கடந்த மூன்று ஆண்டுகளாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை மிக பிரம்மாண்டமான அளவில் மக்களுக்கு செய்து வருகிறார்கள். குறிப்பாக குழந்தைகளின் கல்வி, பெண்களின் தொழில், மலைவாழ் மக்கள் ஆகியோருக்கு இவர்கள் ஆற்றிய சேவை எண்ணற்றவை.

ஒவ்வொரு ஆண்டும் மே மாத இறுதியில்  பள்ளி துவங்குவதற்கு முன் மேக்ஸ்வெல் முத்துக்கள் என்ற தலைப்பில்  தாய் அல்லது தந்தையை இழந்த அல்லது பொருளாதாரத்தில் பின்தங்கிய 500கும் மேற்ப்பட்ட மாணவ மாணவிகளுக்கு  ஒரு வருடத்திற்கு தேவையான ஸ்கூல் பேக், நோட்புக்ஸ், ஸ்டீல் வாட்டர் பாட்டில் உட்பட மொத்த கல்வி உபகரணங்களையும்  ஒரே அரங்கத்தில் வைத்து வழங்குவதில் இவர்கள் பெயர் பெற்றவர்கள்.. இவர்கள் மூலம் இதுவரை 4000 மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர்.. தாய் தந்தை இருவரையும் இழந்த  நூற்றுக்கும் மேற்ப்பட்ட மாணவ மாணவிகளுக்கு  கல்வி ஊக்கத்தொகை வழங்கி அவர்களின் கல்வி கனவை நினைவாக்கியுள்ளனர்.

ஆதரவற்ற பெண்கள் முன்னேற்றத்திற்கு என  மேக்ஸ்வெல்  பொன்மகள் என்ற பிரம்மாண்ட விழா மூலம் பெண்கள் தின விழாவை முன்னிட்டு  மார்ச் மாதத்தில் 5 லட்சம்  மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் பெண்களுக்கு தொழில் தொடங்கி வைப்பதையும் ஆண்டுதோறும் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.. இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பயனடைந்துள்ளனர். 120கும் மேற்பட்ட பெண்களுக்கு தொழில் தொடங்கி தந்துள்ளனர்..

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் மற்றும் தீபாவளியை மலைவாழ் மக்களுடன் கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல்  வருடத்தில் குறைந்த பட்சம் 20 கிராமங்களுக்கு தேவையான பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள்..  பழங்குடியினர் மாணவர்களுக்கான கல்வியில் அதிக கவனம் செலுத்துகின்றனர்.

அரசு பள்ளி சீரமைப்பு பணிகளில் கவனம் செலுத்துகின்றனர்.. குறிப்பாக சுத்தமான கழிவறை, நல்ல குடிநீர், மலைவாழ் பள்ளி பாதுகாப்பிற்காக சிசிடிவி, சுற்றுச்சூழல் சுத்தம், ஸ்மார்ட் கிளாஸ் திட்டம்  ஆகியவற்றை தரமாக தருவதற்காக பல்வேறு சேவைகளை செய்து வருகின்றனர்..

மேலும் அவ்வப்போது ரத்த தானம், மருத்துவ முகாம், விழிப்புணர்வு பிரச்சாரம், மாற்றுத்திறனாளிகள், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பார்வையற்ற குழந்தைகள் மற்றும் ஆட்டிசம் குழந்தைகளுக்கான நலத்திட்டங்களை ஆண்டுதோறும் இடைவிடாமல் செய்து கொண்டிருக்கின்றனர்..

மேக்ஸ்வெல் அணி நண்பர்களிடம் டிரஸ்டில் பணி புரிவது குறித்து கேட்டபோது திரு ஜெய்ஜாலன் அவர்கள்  மலைவாழ் மக்களுக்கான சேவையில் அவர்களுக்கு அரிய வகையில் உள்ள தேவைகளை நிறைவேற்றும் போது அவர்களின் ஆச்சர்யம் கலந்த மகிழ்ச்சியை காணும் பொழுது அந்த உணர்வை அளவிட இயலாது என கூறினார்.

தொடர்ந்து பேசிய மகேஸ்வரி தாய் அல்லது தந்தை இழந்த மாணவ மாணவியர்களின் கல்வி தேவைகளை நிறைவேற்றும் போது அவர்களின் எதிர்காலம் சிறப்பா அமையும்ன்னு நினைக்கும்போது அவ்வளவு சந்தோஷமா இருக்கும் என கூறினார்..

என்னைப் பொறுத்தவரை, ஒரு உதவி என்பது சரியான நேரத்தில் சரியான நபர்களுக்குச் செய்வது எங்கள் அறக்கட்டளையும் அதுபோலவே  செய்கிறது என செல்வி சரண்யா கூறினார்

ராத்திரி பகல் என்று பார்க்காமல்  வெயில் மழைன்னு யோசிக்காமல் இந்தியாவோட இன்னொரு பக்கம் இருக்கிற  ஹரியானா வரைக்கும் போகணுமான்னு யோசிக்காம எவ்வளவு கஷ்டப்பட்டு சேவை பண்ணாலும்   அந்த உதவியை வாங்குற மக்களோட முகத்தில் இருக்கிற சந்தோஷமும் புன்னகையும்  அவ்வளவு மனதிருப்தி ஒவ்வொரு முறையும் கொடுக்குது  என்றார் மேக்ஸ்வெல் அட்மின் ஜமீர் அகமது..

மேக்ஸ்வெல் பயனாளி மாற்றுத்திறனாளி  ஒருவரிடம் கேட்டபோது மேக்ஸ்வெல் நிறுவனர் முருகன் அண்ணே கிட்ட எப்ப உதவினு கேட்டாலும் தைரியமா இருங்க நான் பண்றேன்னு சொல்லி உதவி பண்ணுவார்.. என்ன மாதிரி  என் கூடவே இருக்கிற ஐம்பதுக்கு மேற்பட்ட மாற்றத்தினால் இதுவரைக்கும் உதவி செய்திருக்கிறார் அந்த உதவியை என்னைக்கும் மறக்க மாட்டோம் என்றார்.

அவ்வபோது நடைபெறும் பெரிய நலத்திட்ட உதவிகளில் கலந்துகொள்ளும் சின்னத்திரை மற்றும் திரைப்பட நடிகர்களும் தங்கள் கருத்தை பதிவிட்டுள்ளனர்..

இதுவரை மேக்ஸ்வெல் அறக்கட்டளையின்  நான்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ள  விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர் சீரியலில் அறியப்படும் மீனா எனும் ஹேமா ராஜ்குமார் கூறுகையில்  சுனாமியில் பெற்றோரை இழந்த இரண்டு குழந்தைகள் இன்று வரை படிக்க வைத்து வருவதுடன் அதுபோல செயல்பாடுகளில் ஈடுபடும் மேக்ஸ்வெல் அறக்கட்டளையுடன் எப்போதும் துணை நிற்பதாகவும் அவ்வப்போது குழந்தைகளுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளுக்கு உதவிகளும் செய்து கொண்டிருக்கிறார்..  மேலும் Kpy பாலா மற்றும் புகழ் தொடர்ந்து அறக்கட்டளையோடு தங்களின் பங்களிப்பை வழங்கிக் கொண்டிருக்கின்றனர்..

திரைப்பட நடிகர் Mime கோபி அவர்கள்  வெள்ளை உள்ளம் படைத்த மேக்ஸ்வெல் அணி  நண்பர்களோடு  மக்களுக்கு சேவை செய்வதில் மகிழ்ச்சி என்றார்..

இதுபோல பல்வேறு திரைப்பட நடிகர்களும் சின்னத்திரை நட்சத்திரங்களும் மேக்ஸ்வெல் அறக்கட்டளையோடு பயணிப்பது பெரும் மகிழ்ச்சி..

இப்படி அணி நண்பர்கள் முதல் பயனாளிகள் வரை,   சின்னத்திரை நட்சத்திரங்கள் முதல் திரைப்பட நடிகர்கள் வரை அனைவரும் கொண்டாடும் மேக்ஸ்வெல் அறக்கட்டளை தனது மூன்று ஆண்டு நிறைவு செய்து நாலாவது ஆண்டில் அடியெடுத்து வைத்து கோவையின் கூடுதல் பெருமையாக இணைந்துள்ளது..

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கோயம்பத்தூர்

எஸ்.என்.ஆர். சன்ஸ் 42-வது நிறுவனர் நாள் விழா

Published

on

கோவை எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் 42-வது நிறுவனர் நாள் விழா, வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை கடந்த 1970-ம் ஆண்டு, மறைந்த எஸ்.என். ரங்கசாமி நாயுடு அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது. இவ்வறக்கட்டளையின் கீழ் மருத்துவம், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட 18 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் நிறுவனர் நாள் விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன்படி 42-வது ஆண்டு நிறுவனர் நாள் விழா இன்று (27.02.2026), கோவை நவ இந்தியா ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் உள்ள, எஸ்.என்.ஆர். கலையரங்கில் நடைபெற்றது. எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் உயர்திரு. டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்து, வரவேற்புரை வழங்கினார். அதைத் தொடர்ந்து, எஸ்.என்.ஆா். சன்ஸ் அறக்கட்டளையின் கீழ் செயல்படும் கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் ஆண்டறிக்கை வாசித்தனர்.

விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக ஏ.வி.எம். லேப்ஸ், ஏ.வி.எம். ஸ்மைல்ஸ் மற்றும் தைரோகேர் ஆகிய நிறுவனங்களின் நிறுவனர் டாக்டர் ஏ. வேலுமணி அவர்கள் கலந்து கொண்டு, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனங்களில் மருத்துவர்கள், பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் பிற பணியாளர்கள் என்று 25 ஆண்டுகள் நிறைவு செய்த 30 நபர்களைக் கௌரவித்து அவர்களுக்கு விருதுகள் வழங்கினார். அதனைத்தொடர்ந்து, 400 – க்கும் மேற்பட்ட இருதய வால்வு மாற்று அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ள டாக்டர் எஸ்.தியாகராஜமூர்த்தி அவர்களைக் கௌரவிக்கும் வகையில் அவருக்கு சிறப்பு விருதினையும் வழங்கிச் சிறப்பித்தார். பின்னர் அவர் பேசியதாவது,

ஒரு அறக்கட்டளை 18 நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்திக் கொண்டு வருகிறது என்றால் அது ஒரே நாளில் நடந்ததல்ல. இந்த அறக்கட்டளையைத் தொடங்கியவர்களும், அதில் தங்களை இணைத்துக் கொண்டு பணியாற்றுபவர்களும் இந்த சமூகத்தில் உருவாக்கிய நம்பிக்கை, வெளிப்படைத்தன்மை, உண்மை இவை போன்ற காரணிகளால் மட்டுமே சாத்தியம். நம் வாழ்வில் முன்னேற மிக முக்கியமானவை தைரியமாக முடிவெடுப்பது. அதனால் தான் என்னால் பெரிய உயரங்களைத் தொட முடிந்தது. குடும்பத்தை நேசியுங்கள். பிள்ளைகளை நம்புங்கள். அவர்களால் பெரிய மாற்றங்கள் நிகழும். என்னை என் தாய் நம்பினார்கள். நான் உயர்ந்துவிட்டேன். ஒரு ஆண் வெற்றி பெற்றால் ஒரு குடும்பம் வளரும். ஆனால், ஒரு பெண் வெற்றி பெற்றால் ஒரு சமூகமேs வளரும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

விழாவில் எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் நரேந்திரன் சௌந்தரராஜ், அறங்காவலர்கள் ராமகிருஷ்ணா விஜயகுமார், லஷ்மிநாராயணஸ்வாமி துரைசாமி, தலைமை செயல் அதிகாரி திரு. சி.வி.ராம்குமார், தலைமை நிர்வாக அதிகாரி டி.மகேஷ் குமார் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல். சிவக்குமார் நன்றியுரை நல்கினார்.

Continue Reading

கோயம்பத்தூர்

அதிமுகவை விட்டுச் சென்றவர்கள் மீண்டும் வரத் தயார்! – சூலூரில் எஸ்.பி. வேலுமணி பேச்சு

Published

on

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள சித்தநாயக்கன்பாளையம் பகுதியில், அதிமுக சார்பில் நலத்திட்டங்கள் வழங்குதல், வாக்குறுதிகள் விளக்கம் மற்றும் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி. கந்தசாமி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி. வேலுமணி கலந்து கொண்டு ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.கூட்டத்தில் பேசிய எஸ்.பி. வேலுமணி,நடிகர் விஜய் எனக்கு மிகச்சிறந்த நண்பர், ஆனால் அரசியல் என்பது வேறு எனத் குறிப்பிட்ட அவர், ஒருமுறை விஜய்யின் திரைப்படம் ரிலீஸ் ஆக முடியாமல் பெரும் சிக்கலில் இருந்தபோது, அவர் எனது இல்லத்தில் தங்கியிருந்தார் என்றும், அப்போது நான்தான் அவரை நேரிடையாக எடப்பாடி பழனிசாமி அவர்களிடம் அழைத்துச் சென்று பேசி, அந்தப் படம் வெளியாவதற்கான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்தேன் என்றும் தெரிவித்தார்.

ஒரு தலைவர் என்பவர் நல்லவராக இருக்க வேண்டும், அதற்குச் சிறந்த உதாரணம் எம்.ஜி.ஆர் எனக் குறிப்பிட்டார். திமுக ஆட்சிக்கு வந்ததற்கே அவர்தான் முக்கிய காரணம் என்றும், ஆனால் திமுகவில் தொண்டர்களுக்கு மதிப்பு இல்லை என்றும் சாடினார்.சொந்தக் கட்சிக்காரர்கள் வீட்டில் மரணம் நிகழ்ந்தால் கூட கண்டு கொள்ளாமல் செல்லும் போக்கு அங்குள்ளதாகவும், ஒரு நல்ல தலைவனாக இருந்தால் தொண்டர்களின் துயரத்தில் பங்கெடுக்க வேண்டும் என்ற அந்தப் பண்பு எம்.ஜி.ஆரிடமும், தற்போது எடப்பாடியாரிடமும்  உள்ளது, மாற்றுக்  கட்சியில் இருப்பவர்களுக்கு அழைப்பு விடுத்த அவர், நமது கட்சியிலிருந்து சென்றவர்கள் தற்போது அங்கே உரிய அங்கீகாரம் இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றும், அவர்களுக்கு பழைய அதே பதவியும், மரியாதையும் வழங்கப்பட்டால் மீண்டும் அதிமுகவிற்கே வர அவர்கள் தயாராக உள்ளனர் என்றும் அவர்கள் பற்றி அவர்கள் பெயரைக் கூட சொல்ல முடியாது தெரிவித்தார். இந்த விழாவில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் எனத் திரளானோர் உற்சாகத்துடன் கலந்து கொண்டனர்.

Continue Reading

கோயம்பத்தூர்

குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மாணவர்களுக்கு பாராட்டு விழா

Published

on

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், புதுடெல்லி மற்றும் சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற தேசிய மாணவர் படை மற்றும் நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களுக்குப் பாராட்டு விழா, கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து புதுடெல்லி குடியரசு தினவிழா அணிவகுப்பில், நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் பங்கேற்ற பி.காம். கணக்கியல் மற்றும் நிதியியல் துறை இரண்டாமாண்டு மாணவர் எஸ்.தர்ஷன், சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் பங்கேற்ற பி.காம். கணக்கியல் மற்றும் நிதியியல் துறை இரண்டாமாண்டு மாணவி பி.ஸ்வாதி, தேசிய மாணவர் படை சார்பில் பங்கேற்ற பி.எஸ்.சி., மின்னணுவியல் மூன்றாமாண்டு மாணவி ஆர்.சந்தியா, பி.காம். சி.ஏ., இரண்டாமாண்டு மாணவர் எஸ்.ஆகாஷ் ஆகியோருக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டப்பட்டனர்.

இதேபோல் புதுடெல்லியில் நடைபெற்ற அகில இந்திய தால்சைனிக் முகாமில் பங்கேற்ற, பி.எஸ்சி., கணினி அறிவியல் மூன்றாமாண்டு மாணவி எம்.திவ்யா ஸ்ரீ லட்சுமி, மஹாராஷ்டிராவில் நடைபெற்ற தேசிய மாணவர் படை இயக்குநரகங்களுக்கு இடையிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் பங்கேற்ற பி.காம். சி.ஏ., இரண்டாமாண்டு மாணவி என்.ஜனனி ஆகியோரும் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

இவ்விழாவில் பெற்றோர், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் திரளாகக் கலந்து கொண்டு சாதனை மாணவ, மாணவிகளைப் பாராட்டினர்.

Continue Reading

Trending