Connect with us

கோயம்பத்தூர்

சமூக சேவையில் சாதனை செய்யும் மேக்ஸ்வெல் அறக்கட்டளை!

Published

on

கோவை மேக்ஸ்வெல்  அறக்கட்டளை  கடந்த மூன்று ஆண்டுகளாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை மிக பிரம்மாண்டமான அளவில் மக்களுக்கு செய்து வருகிறார்கள். குறிப்பாக குழந்தைகளின் கல்வி, பெண்களின் தொழில், மலைவாழ் மக்கள் ஆகியோருக்கு இவர்கள் ஆற்றிய சேவை எண்ணற்றவை.

ஒவ்வொரு ஆண்டும் மே மாத இறுதியில்  பள்ளி துவங்குவதற்கு முன் மேக்ஸ்வெல் முத்துக்கள் என்ற தலைப்பில்  தாய் அல்லது தந்தையை இழந்த அல்லது பொருளாதாரத்தில் பின்தங்கிய 500கும் மேற்ப்பட்ட மாணவ மாணவிகளுக்கு  ஒரு வருடத்திற்கு தேவையான ஸ்கூல் பேக், நோட்புக்ஸ், ஸ்டீல் வாட்டர் பாட்டில் உட்பட மொத்த கல்வி உபகரணங்களையும்  ஒரே அரங்கத்தில் வைத்து வழங்குவதில் இவர்கள் பெயர் பெற்றவர்கள்.. இவர்கள் மூலம் இதுவரை 4000 மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர்.. தாய் தந்தை இருவரையும் இழந்த  நூற்றுக்கும் மேற்ப்பட்ட மாணவ மாணவிகளுக்கு  கல்வி ஊக்கத்தொகை வழங்கி அவர்களின் கல்வி கனவை நினைவாக்கியுள்ளனர்.

ஆதரவற்ற பெண்கள் முன்னேற்றத்திற்கு என  மேக்ஸ்வெல்  பொன்மகள் என்ற பிரம்மாண்ட விழா மூலம் பெண்கள் தின விழாவை முன்னிட்டு  மார்ச் மாதத்தில் 5 லட்சம்  மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் பெண்களுக்கு தொழில் தொடங்கி வைப்பதையும் ஆண்டுதோறும் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.. இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பயனடைந்துள்ளனர். 120கும் மேற்பட்ட பெண்களுக்கு தொழில் தொடங்கி தந்துள்ளனர்..

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் மற்றும் தீபாவளியை மலைவாழ் மக்களுடன் கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல்  வருடத்தில் குறைந்த பட்சம் 20 கிராமங்களுக்கு தேவையான பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள்..  பழங்குடியினர் மாணவர்களுக்கான கல்வியில் அதிக கவனம் செலுத்துகின்றனர்.

அரசு பள்ளி சீரமைப்பு பணிகளில் கவனம் செலுத்துகின்றனர்.. குறிப்பாக சுத்தமான கழிவறை, நல்ல குடிநீர், மலைவாழ் பள்ளி பாதுகாப்பிற்காக சிசிடிவி, சுற்றுச்சூழல் சுத்தம், ஸ்மார்ட் கிளாஸ் திட்டம்  ஆகியவற்றை தரமாக தருவதற்காக பல்வேறு சேவைகளை செய்து வருகின்றனர்..

மேலும் அவ்வப்போது ரத்த தானம், மருத்துவ முகாம், விழிப்புணர்வு பிரச்சாரம், மாற்றுத்திறனாளிகள், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பார்வையற்ற குழந்தைகள் மற்றும் ஆட்டிசம் குழந்தைகளுக்கான நலத்திட்டங்களை ஆண்டுதோறும் இடைவிடாமல் செய்து கொண்டிருக்கின்றனர்..

மேக்ஸ்வெல் அணி நண்பர்களிடம் டிரஸ்டில் பணி புரிவது குறித்து கேட்டபோது திரு ஜெய்ஜாலன் அவர்கள்  மலைவாழ் மக்களுக்கான சேவையில் அவர்களுக்கு அரிய வகையில் உள்ள தேவைகளை நிறைவேற்றும் போது அவர்களின் ஆச்சர்யம் கலந்த மகிழ்ச்சியை காணும் பொழுது அந்த உணர்வை அளவிட இயலாது என கூறினார்.

தொடர்ந்து பேசிய மகேஸ்வரி தாய் அல்லது தந்தை இழந்த மாணவ மாணவியர்களின் கல்வி தேவைகளை நிறைவேற்றும் போது அவர்களின் எதிர்காலம் சிறப்பா அமையும்ன்னு நினைக்கும்போது அவ்வளவு சந்தோஷமா இருக்கும் என கூறினார்..

என்னைப் பொறுத்தவரை, ஒரு உதவி என்பது சரியான நேரத்தில் சரியான நபர்களுக்குச் செய்வது எங்கள் அறக்கட்டளையும் அதுபோலவே  செய்கிறது என செல்வி சரண்யா கூறினார்

ராத்திரி பகல் என்று பார்க்காமல்  வெயில் மழைன்னு யோசிக்காமல் இந்தியாவோட இன்னொரு பக்கம் இருக்கிற  ஹரியானா வரைக்கும் போகணுமான்னு யோசிக்காம எவ்வளவு கஷ்டப்பட்டு சேவை பண்ணாலும்   அந்த உதவியை வாங்குற மக்களோட முகத்தில் இருக்கிற சந்தோஷமும் புன்னகையும்  அவ்வளவு மனதிருப்தி ஒவ்வொரு முறையும் கொடுக்குது  என்றார் மேக்ஸ்வெல் அட்மின் ஜமீர் அகமது..

மேக்ஸ்வெல் பயனாளி மாற்றுத்திறனாளி  ஒருவரிடம் கேட்டபோது மேக்ஸ்வெல் நிறுவனர் முருகன் அண்ணே கிட்ட எப்ப உதவினு கேட்டாலும் தைரியமா இருங்க நான் பண்றேன்னு சொல்லி உதவி பண்ணுவார்.. என்ன மாதிரி  என் கூடவே இருக்கிற ஐம்பதுக்கு மேற்பட்ட மாற்றத்தினால் இதுவரைக்கும் உதவி செய்திருக்கிறார் அந்த உதவியை என்னைக்கும் மறக்க மாட்டோம் என்றார்.

அவ்வபோது நடைபெறும் பெரிய நலத்திட்ட உதவிகளில் கலந்துகொள்ளும் சின்னத்திரை மற்றும் திரைப்பட நடிகர்களும் தங்கள் கருத்தை பதிவிட்டுள்ளனர்..

இதுவரை மேக்ஸ்வெல் அறக்கட்டளையின்  நான்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ள  விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர் சீரியலில் அறியப்படும் மீனா எனும் ஹேமா ராஜ்குமார் கூறுகையில்  சுனாமியில் பெற்றோரை இழந்த இரண்டு குழந்தைகள் இன்று வரை படிக்க வைத்து வருவதுடன் அதுபோல செயல்பாடுகளில் ஈடுபடும் மேக்ஸ்வெல் அறக்கட்டளையுடன் எப்போதும் துணை நிற்பதாகவும் அவ்வப்போது குழந்தைகளுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளுக்கு உதவிகளும் செய்து கொண்டிருக்கிறார்..  மேலும் Kpy பாலா மற்றும் புகழ் தொடர்ந்து அறக்கட்டளையோடு தங்களின் பங்களிப்பை வழங்கிக் கொண்டிருக்கின்றனர்..

திரைப்பட நடிகர் Mime கோபி அவர்கள்  வெள்ளை உள்ளம் படைத்த மேக்ஸ்வெல் அணி  நண்பர்களோடு  மக்களுக்கு சேவை செய்வதில் மகிழ்ச்சி என்றார்..

இதுபோல பல்வேறு திரைப்பட நடிகர்களும் சின்னத்திரை நட்சத்திரங்களும் மேக்ஸ்வெல் அறக்கட்டளையோடு பயணிப்பது பெரும் மகிழ்ச்சி..

இப்படி அணி நண்பர்கள் முதல் பயனாளிகள் வரை,   சின்னத்திரை நட்சத்திரங்கள் முதல் திரைப்பட நடிகர்கள் வரை அனைவரும் கொண்டாடும் மேக்ஸ்வெல் அறக்கட்டளை தனது மூன்று ஆண்டு நிறைவு செய்து நாலாவது ஆண்டில் அடியெடுத்து வைத்து கோவையின் கூடுதல் பெருமையாக இணைந்துள்ளது..

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கோயம்பத்தூர்

கனவை நினைவாக்க சிறப்புத் தள்ளுபடி

Published

on

CASTLE REALTY வழங்கும் “CASTLE GRANDE” பிரீமியம் வில்லாஸ் & ப்ளாட்ஸ் திட்டத்தின் திறப்பு விழா சலுகையாக ரூ.1லட்சம் வரை தள்ளுபடி.

கோவையின் வேகமாக வளர்ந்து வரும் குடியிருப்பு பகுதிகளில் ஒன்றான வடமதுரை – மேட்டுப்பாளையம் சாலையில், CASTLE REALTY நிறுவனத்தின் புதிய பிரீமியம் குடியிருப்பு திட்டமான “CASTLE GRANDE”-ன் பிரம்மாண்ட திறப்பு விழா நடைபெற்றது.

நவீன வாழ்க்கை முறைக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள CASTLE GRANDE திட்டம், உயர்தர வில்லாக்கள் மற்றும் குடியிருப்பு ப்ளாட்களை உள்ளடக்கிய பிரீமியம் சமூக வாழ்வை வழங்குகிறது. இயற்கை சூழல், பாதுகாப்பு மற்றும் வசதிகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்து குடும்பங்களின் கனவு இல்லத்தை நனவாக்கும் வகையில் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து CASTLE ரியால்ட்டி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சின்னசாமி கூறுகையில்,

“நாங்கள் உருவாக்கும் ஒவ்வொரு திட்டமும் தரம், நம்பிக்கை மற்றும் வாடிக்கையாளர்களின் எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்படுகிறது. CASTLE REALITY , சிறந்த வாழ்க்கைத் தரத்தையும், நீண்டகால முதலீட்டு வளர்ச்சியையும் வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் கோயம்புத்தூரின் வளர்ச்சி பாதையில் முக்கிய இடத்தைப் பெறும் என்று நம்புகிறோம்.” என்றார்.

திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

-பிரீமியம் வில்லாஸ் & ப்ளாட்ஸ்
-24×7 பாதுகாப்பு வசதி
-CCTV கண்காணிப்பு
-விநாயகர் கோவில்
-சோலார் மின்வேலி பாதுகாப்பு
*பசுமை நிறைந்த சுற்றுச்சூழல்
-உயர்தர நுழைவாயில் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள்
இந்த திறப்பு விழாவையொட்டி வருகை தரும் வாடிக்கையாளர்களுக்காக சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும், குடும்பத்தினருடன் கலந்து கொள்ளும் அனைவருக்கும் Fun Zone Kids Games, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் மதிய உணவு (Lunch) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தங்களது எதிர்கால கனவு இல்லத்திற்கான சிறந்த முதலீட்டு வாய்ப்பை அறிந்து கொள்ள விரும்பும் பொதுமக்கள் மற்றும் முதலீட்டாளர்கள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பயனடையுமாறு CASTLE REALTY நிறுவனம அழைப்பதாக தெரிவித்தார். மேலும் திறப்பு விழா சலுகையாக ரூ.1லட்சம் வழங்கப்படும் என தெரிவித்தார்.

Continue Reading

உள்ளூர் செய்திகள்

கோவையில் ஹோம்ஸ் டூ லைஃப் இரண்டாவது கிளை துவக்கம்

Published

on

திருச்சி சாலையில் துவங்கப்பட்டுள்ள புதிய ஷோரூமில் பிரீமியம் ரக ஃபர்னிச்சர்கள் , சிக்னேச்சர் கலெக்ஷன்கள் சிறப்பு தள்ளுபடியில் விற்பனை

 

சர்வதேச அளவில் பிரீமியம் ஃபர்னிச்சர்கள் விற்பனையில் முன்னனி நிறுவனமான HomesToLife) ஹோம்ஸ் டூ லைஃப் தனது இரண்டாவது கிளையை கோவை திருச்சி சாலையில் துவங்கி உள்ளது..

நீண்ட அனுபவம்வாய்ந்த மற்றும் பல முன்னணி பிராண்டுகளை கையாளும் ‘(Homes Zone’) ஹோம் சோன் நிறுவனத்துடன் இணைந்து துவங்கப்பட்ட,இந்த ஷோரூமில் வீட்டிற்கான சோபா செட்கள், டைனிங் டேபிள்கள், படுக்கையறை மரச்சாமான்கள், அலுவலக ஃபர்னிச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான உயர்தர தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

உலகத் தரத்தில் வடிவமைக்கப்பட்ட பொருட்கள் வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப தனிப்பயனாக்கப்பட்ட முறையிலும் வழங்கப்படுகின்றன.

நிகழ்ச்சியில், HomesToLife India’-வின் நாட்டுத் தலைவர் (Country Head) வருண் காந்த் மற்றும் கிளை உரிமையாளர் ராஜ் மாரப்பன் ஆகியோர் கூறுகையில்,“தரமான தயாரிப்புகள், நவீன வடிவமைப்புகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதே எங்களின் நோக்கம். ஒரே இடத்தில் அனைத்து வகையான பிரீமியம் ஃபர்னிச்சர் தீர்வுகளையும் வழங்கும் மையமாக இந்த ஷோரூம் செயல்படும்” என்றனர்.

Continue Reading

கோயம்பத்தூர்

காந்திமா நகர் ஓடை புனரமைப்பு பணி தொடக்கம்

Published

on

கோயம்புத்தூர் | 21 ஜூன் 2026

2003ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சிறுத்துளி, கோயம்புத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் நீர்நிலைகள் புனரமைப்பு, மழைநீர் சேகரிப்பு, மரக்கன்றுகள் நடுதல், திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மை, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

கோயம்புத்தூரின் முக்கிய நகர்ப்புற நீர்வழித்தடங்களில் ஒன்றான காந்திமா நகர் ஓடை (குறும்பப் பள்ளம்), காந்திமா நகர் காவல் நிலையம் அருகே தோன்றி, பன் மால், பி.எஸ்.ஜி. மருத்துவமனை, உழவர் சந்தை உள்ளிட்ட பகுதிகள் வழியாக சுமார் 13.5 கிலோமீட்டர் தூரம் பாய்ந்து இறுதியில் இருகூர் ஏரியில் கலக்கிறது. நகரின் மழைநீர் வடிகால் அமைப்பு மற்றும் நீர்வள மேலாண்மையில் இந்த ஓடை முக்கிய பங்கு வகிக்கிறது.

கடந்த சில ஆண்டுகளாக கழிவுநீர் கலப்பு, திடக்கழிவுகள் கொட்டப்படுதல், ஆக்கிரமிப்பு தாவரங்கள் வளர்ச்சி மற்றும் ஓடையின் கரைகள் சேதமடைதல் போன்ற காரணங்களால், துர்நாற்றம், நீரின் தரம் குறைதல், சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் கீழ்மட்ட நீர்நிலைகளுக்கு அச்சுறுத்தல் போன்ற பிரச்சினைகள் உருவாகியுள்ளன.

இதனைத் தொடர்ந்து, கோயம்புத்தூர் மாநகராட்சி (CCMC), பி.எஸ்.ஜி. குழுமம் மற்றும் சிறுத்துளி இணைந்து ஓடையை புனரமைக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. முதல் கட்டமாக 3.5 கிலோமீட்டர் நீளப்பகுதியில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இத்திட்டத்தின் கீழ் திடக்கழிவுகள் மற்றும் வண்டல் அகற்றுதல், கரைகளை வலுப்படுத்த இயற்கை மரங்கள் மற்றும் தாவரங்கள் நடுதல், இயற்கை சார்ந்த நீர் சுத்திகரிப்பு முறைகள் அமைத்தல் மற்றும் நீர்தரத்தை தொடர்ந்து கண்காணித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்தத் திட்டம் மூலம் நீரின் தரம் மேம்படுதல், துர்நாற்றம் குறைதல், திடக்கழிவு கொட்டுதல் தடுக்கப்படுதல் மற்றும் நகரின் பசுமை வளம் அதிகரித்தல் உள்ளிட்ட நீண்டகால சுற்றுச்சூழல் நன்மைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் புனரமைப்பு முயற்சியின் ஒரு பகுதியாக “உங்கள் கழிவைக் கவனியுங்கள்” (Watch Your Waste) என்ற பொதுமக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று (21.06.2026) ஜி.வி. ரெசிடென்சி பகுதியில் நடைபெற்றது.

ஓடைகள் மற்றும் நீர்நிலைகளில் திடக்கழிவுகளை கொட்டுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும். நீர்மாசுபாட்டால் ஏற்படும் நீர்தரக் குறைவு, துர்நாற்றம், நீர்வாழ் உயிரினங்களின் பாதிப்பு ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன், கழிவுகளை பொறுப்புடன் அகற்றுதல் மற்றும் நகர்ப்புற நீர்வழித்தடங்களை பாதுகாப்பதில் பொதுமக்களின் பங்களிப்பின் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு. எஸ். கிரி பிரசாத், கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் திரு. கட்டா ரவி தேஜா, இ.ஆ.ப., பி.எஸ்.ஜி. சன்ஸ் & சாரிட்டீஸ் நிர்வாக அறங்காவலர் திரு. எல். கோபாலகிருஷ்ணன், சிறுத்துளி நிர்வாக அறங்காவலர் திருமதி வனிதா மோகன், சிறுத்துளி அறங்காவலர்கள், ஸ்டீயரிங் கமிட்டி மற்றும் அபெக்ஸ் கமிட்டி உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு ஓடை சுத்தம் செய்யும் பணியிலும் பங்கேற்றனர்.

காந்திமா நகர் ஓடையை பாதுகாப்பது என்பது ஒரு ஓடை சீரமைப்புத் திட்டம் மட்டுமல்ல; கோயம்புத்தூரின் நீர்வளத்தை பாதுகாத்து, நிலையான சுற்றுச்சூழலை அடுத்த தலைமுறைக்கு வழங்கும் ஒரு மக்கள் இயக்கமாகும்.

நிகழ்ச்சியில் பேசிய சிறுத்துளி நிர்வாக அறங்காவலர் திருமதி வனிதா மோகன், நகரின் ஓடைகள் மற்றும் நீர்நிலைகளை பாதுகாக்க பொதுமக்கள், கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டுமென அழைப்பு விடுத்தார்.

Continue Reading

Trending