Connect with us

நிகழ்ச்சிகள்

தேவாவுக்கு ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் கிடைத்த கெளரவம்!

Published

on

1990 களில் இளம் தலைமுறையினரை தன் இசையால் கட்டிப் போட்ட இசையமைப்பாளர்களில் மிகவும் முக்கியமானவர் தேனிசை தென்றல் தேவா. இவரது இசை தேனிசையாக நம் செவிக்கு இன்றும் உணவாகவும் மனதுக்கு இன்பமாகவும் இருந்துவருவதை யாராலும் மறுக்க முடியாத ஒன்று கானா, மெலடி, குத்துப் பாட்டு எனப் பலவிதமான பாடல்களை இசை ரசிகர்களுக்கு வழங்கிய இசை மேதை தேவா அவர்கள். பல ஆயிரம் பாடல்களை கொடுத்த தேவா அவர்களுக்கு சமீபத்தில் ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில், அவருக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு, உலகத் இசை பெரியார்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

 

சமீபத்தில் தேவா ஆஸ்திரேலியா சென்றிருந்தபோது, ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் அவருக்கு, அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மிகவும் உயர்ந்த மரியாதையுடன் வரவேற்றுள்ளனர். நாடாளுமன்ற சபாநாயகரின் இருக்கையில் அவரை அமரவைத்து, தமிழ் கலாச்சாரத்தின் பாரம்பரிய சின்னமான செங்கோல் கொடுத்துக் கெளரவித்துள்ளனர்.தேவா அவர்கள் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.தமிழ்த் திரைத்துறையைச் சேர்ந்த இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், நடிகர்கள் எனப் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 1989-ல் சந்தனக்காற்று என்ற படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உள்ளூர் செய்திகள்

கோவையில் ‘ஊ லா லா கார்னிவல்’விழா கோலாகல தொடக்கம்

Published

on

 

கோவை ஜனவரி 21:-

கோயம்புத்தூர் நகரில் நடைபெற்ற பிரம்மாண்டமான ‘ஊ லா லா கார்னிவல்’ விழாவின் தொடக்க நிகழ்ச்சி நேற்று மாலை பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், குழந்தைகளுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ‘ஹேப்பி ஃபீட்’ என்ற புதிய கருத்து அறிமுகப்படுத்தப்பட்டது.

120 செ.மீ.க்கு குறைவான உயரம் கொண்ட குழந்தைகள் பாதுகாப்பாக மகிழ்ச்சியாக விளையாடும் வகையில் இந்த அம்சம் உருவாக்கப்பட்டுள்ளதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் உற்சாகமாக கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தனர். குழந்தைகளுக்கான விளையாட்டுகள், DIY பணிமனைகள், இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பிப்ரவரி 6, 7, 8 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பெருமளவில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

குடும்பங்களுக்கு மகிழ்ச்சியும், குழந்தைகளுக்கு மறக்க முடியாத அனுபவத்தையும் வழங்கும் இந்த கார்னிவல் கோவை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

டிக்கெட் பெற ஸ்கேன் செய்யவும்

(Ticketprix above QR குறியீடு)

தொடர்புக்கு:

📞 99622 04901

📞 97875 54555

நிகழ்ச்சி அட்டவணை:-

6 பிப்ரவரி (வெள்ளிக்கிழமை):

மாலை 2.00 – நுழைவாயில் திறப்பு
மாலை 4.00 – 5.30 – போட்டிகள்
மாலை 5.00 – 6.30 – DIY பணிமனை
மாலை 7.00 – 8.30 – இசைக்குழு நிகழ்ச்சி
மாலை 8.30 – 9.00 – கார்னிவல் பேரணி
மாலை 9.00 – 9.30 – பலூன் காட்சி
மாலை 9.30 – 10.00 – DJ

7 பிப்ரவரி (சனிக்கிழமை):

மாலை 2.00 – நுழைவாயில் திறப்பு
மாலை 4.00 – 5.30 – போட்டிகள்
மாலை 5.00 – 6.30 – DIY பணிமனை
மாலை 7.00 – 8.30 – பறை இசை நிகழ்ச்சி
மாலை 8.30 – 9.00 – கார்னிவல் பேரணி
மாலை 9.00 – 9.30 – மாயாஜால காட்சி
மாலை 9.30 – 10.00 – DJ

8 பிப்ரவரி (ஞாயிற்றுக்கிழமை):

மாலை 2.00 – நுழைவாயில் திறப்பு
மாலை 4.00 – 5.30 – போட்டிகள்
மாலை 5.00 – 6.30 – DIY பணிமனை
மாலை 7.00 – 8.30 – இசைக்குழு நிகழ்ச்சி
மாலை 8.30 – 9.00 – கார்னிவல் பேரணி
மாலை 9.00 – 9.30 – ஜக்கிளிங் காட்சி
மாலை 9.30 – 10.00 – DJ

Continue Reading

நிகழ்ச்சிகள்

லட்சத்தை தாண்டிய தங்கம் விலை! குடும்ப பட்ஜெட்டில் சுமை – வருத்தத்தில் இல்லத்தரசிகள்

Published

on

நாட்டில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உயர்வை எட்டி, இன்று 24 காரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ.1,00,000-ஐ தாண்டியுள்ளது. தொடர்ந்து ஏற்றம் காணும் தங்க விலை, பொதுமக்கள் மத்தியில், குறிப்பாக இல்லத்தரசிகள் மற்றும் நடுத்தர குடும்பங்களில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தங்கத்தின் விலை பல ஆயிரம் ரூபாய்கள் உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளதுடன், அமெரிக்க டாலரின் மதிப்பு ஏற்றம், புவியியல் அரசியல் பதற்றங்கள், உலகளாவிய பொருளாதார நிலைமைகள் ஆகியவை தங்க விலை உயர்வுக்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன. மேலும், மத்திய வங்கிகள் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக வாங்கி சேமித்து வருவதும் விலை ஏற்றத்திற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

Continue Reading

நிகழ்ச்சிகள்

ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி DX-EDGE இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம்!

Published

on

கோவை சுகுணாபுரத்திலுள்ள பிரபல ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் DX-EDGE இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சி நடைபெற்றது. கல்வி குழும நிர்வாக அறங்காவலர் மலர்விழி, அறங்காவலர் ஆதித்யா ஆகியோர் தலைமையில் நடந்த ஒப்பந்த நிகழ்ச்சியில் டிஎக்ஸ் எட்ஜ் சார்பில் சிவாஜி சென் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

ஸ்ரீகிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி   இந்திய தொழில்கள் கூட்டமைப்பு   உடன் இணைந்து DX-EDGE (Digital Excellence for Growth and Enterprise) எனப்படும் திட்டத்தை செவ்வாய்க்கிழமை வளாகத்தில் அறிமுகப்படுத்தியது. இந்திய ஒப்பந்தப் பத்திரம் (MoU) கையெழுத்து நிகழ்ச்சி, ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவரும் நிர்வாக அறங்காவலருமான மலர்விழி அவர்கள் மற்றும் அறங்காவலர் ஆதித்யா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. MoU பரிமாற்றத்தை ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் கே. சுந்தரராமன் அவர்கள் முன்னிலையிலிருந்து மேற்கொண்டார். ஒப்பந்தத்தில் கல்வி குழும தலைமை நிர்வாக அலுவலர் சுந்தரராமன், டிஎக்ஸ் எட்ஜ் சார்பில் சிவாஜி சென் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

சி.ஐ.ஐ. கோயம்புத்தூர் மண்டல முன்னாள் தலைவர் கணேஷ்குமார் பேசுகையில், நமது நாட்டில் சிறு, குறு துறைக்கு டிஜிட்டல் அதிகாரமளிப்பது, வளர்ச்சிக்கு முக்கிய பங்களிக்கும். பொறியியல் பட்டதாரிகள் புதுமை சார்ந்த மனநிலையை ஏற்றுக்கொள்ள வேண்டும், என்றார்.

வீடியோ கான்பரன்ஸ் மூலம், சி.ஐ.ஐ. யின் துணை இயக்குனர் ஜெனரல் சுஜித் ஹரிதாஸ்,DX-EDGE’ன் முதன்மை ஆலோசகர் மதுவசந்தி உள்ளிட்டோர், இவ்வமைப்பின் நோக்கத்தை விளக்கினர்.

நிகழ்ச்சியில், சி.ஐ.ஐ-., துணை இயக்குனர் ஷிம்னா, கோயம்புத்துர் மண்டல நிர்வாக அதிகாரி சாய்சரண், முதல்வர் பொற்குமரன், டீன்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

Continue Reading

Trending