Connect with us

செய்திகள்

அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி!

Published

on

செங்கோட்டையன் முழு பேட்டி!

‘1972 ல் எம்.ஜி.ஆர். அதிமுகவை தொட்ங்கினார். 1973ல் அதிமுக சார்பில் திண்டுக்கல் இடைத்தேர்தலில் மாயத்தேவர் போட்டியிட்ட போது மாபெரும் வெற்றி பெற்றார்.

கோவையில் அப்போது நடைபெற்ற பொதுக்குழுவில், அரங்கநாயகம் தலைவர், டிருப்பூர் மணி மாறன் செயலாளர், என்னை பொருளாளராக நியமித்து இருந்தார். நாங்கள் முழுமையாக நின்று செயல்படுத்தி எம்.ஜி.ஆரை அழைத்து சென்றபோது, மகிழ்ச்சி தெரிவித்தார்.

1977ல் நான் கோபியில் போட்டியிடுற போது, சத்தியமங்கலத்தில் என்னை எம்.ஜி.ஆர் நிற்க சொன்னார். அங்கு எனக்கு புதிய இடம் என்று கூறினேன், தனது பெயரை உச்சரிக்க சொன்னார்.

கோவை செழியன் போன்றவர்கள் இயக்கத்தில் இருந்து வெளியே சென்றபோது இல்லத்துக்கே சென்று வாருங்கள் என்று அழைத்தார்.

எம்.ஜி.ஆரி பொறுத்தவரை மாமேதையாக, மக்கள் போற்றும் தலைவராக இருந்தார். 10 ஆண்டுகாலம் சிறந்த ஆட்சியை தந்தார். பசிப்பிணி போக்கும் சத்துணவு வழங்கினார். தமிழகத்துக்கு பெருமை சேர்க்கும் முதல்வராக இருந்தார்.

அவரது மறைவுக்கு பிறகு ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்றார். தலைவருக்கு பின்னால் அவரது பின்னால் திரண்டோம். மக்களிடத்தில் செல்வாக்கு மிக்க, ஆளுமை மிக்க தலைமை நீங்கள் தான் வரவேண்டும் என்று அழைத்தோம். அவர் தமிழகத்தில் சிறந்த ஆட்சியை தந்தார்.

உலக நாடுகள் திரும்பிப்பார்க்கும் அளவுக்கு சிறப்பாக முதல்வராக செயல்பட்டார். 5 முறை முதல்வராக இருந்து ஏழை மக்களால் போற்றப்படும் தலைவராக இருந்தார். ஆன்மிகவாதிகளும், திராவிடவாதிகளும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தலைமையாக ஜெயலலிதா இருந்தார். தி.க. தலைவர் கூட ஜெயலலிதாவுக்கு சமூக நீதி காத்த வீராங்கனை என்ற பட்டம் வழங்கினார்.

இந்த இயக்கம் ஏழைகளுக்கான இயக்கமாக இருந்தது.

ஜெயலலிதா மறைந்து ஓராண்டுக்கு பிறகு இந்த இயக்கத்தில் பல்வேறு சோதனைகள் வருகிறபோது, திருமதி சசிகலா அவர்களை பொதுச்செய்லாளராக நியமித்தோம். மீண்டும் முதல்வரை நியமிக்க வேண்டி வந்தபோது முன்னாள் முதல்வரை நியமித்தோம்.

இந்த இயக்கத்தில் பல்வேறு தடுமாற்றங்கள் வருகிற போது, என்னுடைய பணிகளை ஜெயலலிதா பாராட்டினார்.

இந்த இயக்கத்துக்காக அர்ப்பணித்துக்கொண்டு பல பணிகளை நான் ஆற்றி இருக்கிறேன். தமிழகம் எப்படி இருக்க வேண்டும்? மக்கள் எப்படி செழிப்போடு வாழ வேண்டும்? இந்த இயக்கத்தில் தொண்டர்கள் சிறப்பாக வாழ தியாகம் செய்ய தயாராக இருந்தேன். அப்போது இரண்டு வாய்ப்புகள் எனக்கு கிடைத்தது. இயக்கம் உடைந்து விடக்கூடாது என்ற நோக்கத்துடன் செயல்பட்டேன். இதை நம்பி இருக்கிற எதிர்காலத்தை நோக்கி பயணம் செய்ய இந்த இயக்கம் சிறப்பாக செயல்பட வேண்டும்.

2016க்கும் பிறகு தொடர்ந்து தேர்தல்களை சந்திக்கிறோம்.

1991ல் ஜெயலலிதா பேசுகையில், என்னருகே இருப்பவர்கள் எங்கிருந்தார்கள். எப்படி என்னை விமர்சனம் செய்தார்கள்? ஆனால் அனைவரையும் அரவணைத்து செல்வதாக சட்டமன்றத்தில் பேசினார்.

2016ல் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தோம், 2019 தேர்தல், 21 தேர்தல், உள்ளாட்சி தேர்தல் சந்திக்கிற போது பிரச்சினைகள் உருவானது. 2024 தேர்தலை சந்தித்தோம்.

தேர்தல் முடிந்த பிறகு கழக பொதுச்செயலாளரை சந்தித்தோம். கழகம் தொய்வாக இருக்கிறது. அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்று நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட 6 பேரும் சந்தித்து பேசினோம்.

கருத்துக்களை கேட்ட அவர், அதை ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் இல்லை. இதை எதற்காக சொல்கிறோம் என்றால், வெளியில் செனறவர்களை அரவணைத்தால் மட்டும் தான் வெற்றி பெற முடியும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை விட செல்வாக்கு பெற்ற தலைவர்கள் இல்லை. அவர்கள் பிரசாரத்தில் லட்சக்கணக்கில் கலந்து கொண்டார்கள்.

ஆனாலும் வெற்றி அவசியம் என்று வெளியே சென்றவர்களை அழைத்து, தேமுதிகவை அழைத்து வென்றார்.

ஆகவே வெளியே சென்றவர்களை நாம் அரவணைக்க வேண்டும். அவர் வைக்கின்ற வேண்டுகோள் எந்த கண்டிஷனும் இல்லை என்கிறார், பல்வேறு மேடையிலும் கருத்துகளை சொல்கிறார். எல்லோரும் என்ன செய்வதென்று தெரியாமல் தவிக்கிறோம். என் நிலையில் தான் எல்லோரும் இருக்கிறார்கள்.

எல்லோரும் ஒன்றாக இணைந்து செயல்படுவதற்கு இந்த இயக்கம்தான் சகோதர பாசத்தை உருவாக்கி இருக்கிறது. மக்கள் ஆட்சி மாற்றம் எதிர்பார்க்கிறார்கள். அதை உருவாக்க நாம் வெளியில் சென்றவர்களை அழைத்து வந்து செயல்படுத்த வேண்டும்.

நல்ல ஆட்சியை தமிழகத்தில் வரவைக்க, எல்லோரையும் அழையுங்கள் என்று கூறுகிறேன். அவர் எந்த பொறுப்பும் தேவையில்லை என்று சொல்வது, மக்கள் நினைப்பது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சி மலர வேண்டும். இதை விரைந்து செய்ய வேண்டும். விரைந்து செய்து முடித்தால் தான் தேர்தல் களத்தில் நிற்க முடியும்.

அது செய்ய முடியவில்லை என்றால் இந்தமன நிலையில் இருக்கிற அனைவரும் சேர்ந்து அதை செயல்படுத்துவோம். கொடுக்கப்பட்ட கால அவகாசத்தில் அதை செய்யவில்லை என்றால் மக்கள் எதிர்பார்ப்பு நிறைவேறாது.

இதற்கு முடிவு வந்தால் தான் இவரது வெற்றிப்பயணத்தில் கலந்து கொள்வேன்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பதிலளித்த அவர்,

வருகின்ற கூட்டம் வேறு, பலவேறு தரப்பட்ட தொண்டர்களின் மனநிலை வேறு. யாரை இணைப்பது என்பதை பொதுச்செயலாளர் முடிவு செய்யலாம். வெளியே சென்றவர் அதிமுகவில் முக்கிய பொறுப்பில் இருப்பவர். அவரை இணைக்க வேண்டும் என்று சொல்கிறேன். தென்மாவட்டத்தில் பார்த்தால் உங்களுக்கு தெரியும்.

10 நாட்களில் அதற்கான முயற்சி எடுக்க வேண்டும். ஆறு பேர் பேசியதற்கு பிறகு, தலைமை இதுகுறித்து எங்களை அழைத்து பேச முன்வரவில்லை. எல்லோரையும் ஒருங்கிணைக்கிற போது தான் கட்சி வலுவாகும்.

எனக்கு நெருங்கிய நண்பர்களை கலந்து கொண்டு அடுத்தகட்ட முடிவு செய்வேன்.

நம்முடைய அமைச்சர்கள் பாரதப்பிரதமரையே சந்தித்து இருக்கிறார். என்னைத்தான் விளம்பரப்படுத்தி விட்டீர்கள்.

இயக்கத்துக்காக எந்த தியாகத்தையும் செய்ய நான் தயாராக இருக்கிறேன். நூறாண்டுகாலம் இந்த இயக்கம் ஆளும் என்று ஜெயலலிதா சொல்லி இருக்கிறார். அதற்கான பணிகளை தொடங்கி இருக்கிறேன். என்றார்.

பேட்டியின் முன்னாள் எம்.பி., சத்யபாமா உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

கோயம்பத்தூர்

புற்றுநோய் விழிப்புணர்வு இன்ஸ்டாகிராம் வீடியோ தொகுப்பு வெளியீடு!

Published

on


உலகம் முழுவதும், அக்டோபர் மாதம் மார்பகப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதற்கும், நோயாளிகளுக்கு தன்னம்பிக்கை அளிப்பதற்கும் அர்ப்பணிக்கப்பட்ட மாதமாகக் கருதப்படுகிறது.
கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை – ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் இந்த ஆண்டுடன் 23-வது முறையாக உலக மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தைக் கடைப்பிடிக்கிறது.இதன் ஒரு பகுதியாக, மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு குறித்த  இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ தொகுப்பை ஆங்கிலம் மற்றும் தமிழில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிட்டது.இந்த வெளியீட்டு விழா ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் அரங்கத்தில் நடைபெற்றது. ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் டாக்டர் பி. குகன் அவர்கள் நிகழ்விற்கு வந்த அனைவரையும் வரவேற்றார். இந்த நிகழ்வின் தலைமை விருந்தினராக P&S குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குநரும், நவ ஹிந்துஸ்தான் ஸ்பின்னர்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான (CEO) திருமதி பிரியங்கா கார்த்திகேயனி கலந்து கொண்டு, எஸ். என். ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் திரு. ஆர். சுந்தர் முன்னிலையில் இந்த ரீல்ஸ்களை வெளியிட்டார்.அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரி (CEO) சி.வி. ராம்குமார், தலைமை நிர்வாக அதிகாரி (CAO) டி. மகேஷ் குமார், மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின்

மருத்துவ இயக்குனர் டாக்டர் ராஜகோபால், மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் எஸ். அழகப்பன் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.டாக்டர் பி. குகன் தனது உரையில், இந்தியாவில் 50 வயதுக்குட்பட்ட பெண்களிடையே மார்பகப் புற்றுநோய் அதிகரித்து வருவதாகத் தெரிவித்தார். சுமார் 35 வயதுள்ள பெண்களிடையே இந்த நோய் ஏற்படுவது 2%லிருந்து 4% ஆக இருமடங்காக உயர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்.ஒரு ஆய்வின்படி, 2018-ஆம் ஆண்டில் இந்தியாவில் 1,68,000-க்கும் மேற்பட்ட பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டனர். இந்த எண்ணிக்கை 2023-ல் 2,20,000-க்கு மேல் அதிகரித்து அதிர்ச்சி அளித்தது. இது புதிதாக நோயறிதல் செய்யப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதைக் காட்டுகிறது என அவர் கூறினார்.சிறு வயதிலேயே பூப்பெய்தல், தாமதமான மெனோபாஸ், 30 வயதுக்குப் பிறகு முதல் திருமணம் அல்லது குழந்தைப்பேறு, தொடர்ச்சியான மது அருந்துதல், வாய்வழி கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்துதல், உடலுழைப்பற்ற வாழ்க்கை முறை, அதிக உடல் பருமன் மற்றும் மரபணு காரணங்கள் ஆகியவை இந்த நோய்க்கான ஆபத்துக் காரணிகள் என்று டாக்டர் குகன் தெரிவித்தார்.இந்த முக்கியமான நாளில், ஆரம்ப நிலையிலேயே மார்பக புற்றுநோயை கண்டறிவதன் அவசியத்தை வலியுறுத்த வேண்டிய அவசியம் உள்ளது என்று அவர் கூறினார். ஏனெனில், ஆரம்ப நிலைகளில் (நிலை 1 & நிலை 2) இந்த நோய் கண்டறியப்பட்டால், குணப்படுத்தும் சிகிச்சை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

துரதிர்ஷ்டவசமாக, 50% முதல் 60% நோயாளிகள், புற்றுநோய் முற்றிய நிலையில் (நிலை 3  அல்லது நிலை 4) சிகிச்சைக்காக வருகிறார்கள். இந்த நிலைகளில் நோய் குணமடைவதற்கான வாய்ப்பும், நீண்ட கால உயிர்வாழும் விகிதமும் கணிசமாகக் குறைவாக உள்ளன.எனவே, மார்பகப் புற்றுநோய் பற்றிப் பேசுவதும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை அதிகரிப்பதும் மிக முக்கியமான தேவையாகும்.

ஆரம்பத்தில் கண்டறிதல் பெரும்பாலும் எளிமையான சிகிச்சைக்கு வழிவகுக்கிறது. அப்போது, அறுவை சிகிச்சை மற்றும் மருந்து மட்டும் தேவைப்படலாம், மேலும் மார்பகத்தைப் பாதுகாக்கும் சிகிச்சை (Breast Conservation) சாத்தியமாகிறது. ஆனால், இந்த விழிப்புணர்வு பெண்களை, குறிப்பாக 50 வயதுக்குட்பட்டவர்களை சென்றடைய வேண்டும்.
எனவே, நாங்கள் இளைஞர்களிடையே மிகவும் பிரபலமான  சமூக ஊடகத் தளமாக உள்ள இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி உள்ளோம் என்று அவர் கூறினார்.

மார்பகப் புற்றுநோய் குறித்த முக்கியமான தகவல்களை வழங்குவதற்காக, தொடர்ச்சியாக 25 இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதில் மார்பகப் புற்றுநோய்க்கான காரணங்கள், அறிகுறிகள், ஆரம்ப கட்ட நோயறிதல், வெவ்வேறு நோய் கண்டறியும் முறைகள், புற்றுநோயின் நிலைகள், கிடைக்கக்கூடிய சிகிச்சை வழிமுறைகள் மற்றும் நோயாளிகளுக்கான ஆலோசனை ஆகியவை அடங்கும் என்று டாக்டர் குகன் பகிர்ந்து கொண்டார்.

அனைத்து வீடியோக்களும் ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின்  அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் (https://www.instagram.com/sriorcoimbatore) பதிவேற்றப்படும். ஒரு நாளைக்கு ஒரு வீடியோவை பதிவேற்றத் திட்டமிட்டுள்ளோம்.

இந்த ஆண்டு உலக மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, இந்த மாதத்தின் எந்தவொரு வேலை நாளிலும் 0422-4389797, 0422 4500203 என்ற தொலைபேசி எண்களில் முன்பதிவு செய்யும் பெண்களுக்கு இலவச மேமோகிராம் பரிசோதனைகள் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் அறுவை சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர்  டாக்டர் கே. கார்த்திகேஷ் நன்றியுரை வழங்கினார்.

Continue Reading

உள்ளூர் செய்திகள்

நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரிக்கு சிறந்த கல்வி நிறுவனத்துக்கான நிறுவனம் விருது!

Published

on

பொள்ளாச்சியை சேர்ந்த நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரி, சிறந்த உள்கட்டமைப்பு வசதி, அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள். சிறந்த கற்றல் கற்பித்தல் முறை, தேசிய தரச்சான்றிதல் பெற்ற பட்டய பாடப்பிரிவுகள் போன்ற அம்சங்களுக்காக. தேசிய அளவில் சிறந்த கல்வி நிறுவனமாக (2024-2025) தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சண்டிகர் (NITTTR) மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

என்.ஐ.ஏ. கல்வி நிறுவனங்களின் கீழ் செயல்படும் இந்த நிறுவனம், இந்த விருதை தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் 58 வது ஆண்டு விழாவில் பெற்றுக்கொண்டது. நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியின் சார்பில் என்.ஐ.ஏ. கல்வி நிறுவனங்களின் செயலர் எஸ்.வி. சுப்பிரமணியன், கல்லூரி முதல்வர் ம.அசோக் மற்றும் விரிவுரையாளர் G.கதிரேஸ்குமார் பெற்றுக் கொண்டனர்.

கல்லூரியின் ஆட்சிமன்ற குழுத்தலைவர் ம.மாணிக்கம் மற்றும் தலைவர் மா.ஹரிஹரசுதன் ஆகியோர் இச்சாதனைக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Continue Reading

செய்திகள்

அபராத தொகையைக் கட்டினால்தான் இனி இன்சூரன்ஸ்!

Published

on

விதிமீறலில் ஈடுபட்ட வாகனங்கள் பணம் செலுத்தாமல் இருந்தால் வண்டியின் இன்சூரன்ஸ் புதுப்பிக்க முடியாது என்ற புதிய நடைமுறையைக் கொண்டு வந்ததுள்ளது சென்னை மாநகரக் காவல்துறை.

வாகனங்களின் பெருக்கம் அதிகரித்து வரும் நிலையில், விதிமீறல் சம்பவங்களும் அதிகம் நடக்கின்றன. விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர். நேரடி அபராதம் மட்டுமின்றி, ஆங்காங்கே அதிநவீன கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியும், விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை கண்காணித்து அபராதம் முறையும் விதிக்கப்படுகிறது.

அதன் அபராதத்தொகையே இணையத்தளம் மூலம் கட்டும் வசதி இருந்தாலும் அதை செலுத்த பலரும் தவறுவதால் போக்குவரத்து விதிமீறலுக்காக விதிக்கப்பட்ட அபராத நிலுவை சுமார் ரூ.300 கோடி வரை பாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலுவைத் தொகையை வசூல் செய்யும் பொருட்டு, காப்பீட்டு நிறுவனங்களுடன் சேர்ந்து சென்னை மாநகரக் காவல்துறை புதிய நடைமுறை நடவடிக்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சாலை விதிமீறலில் ஈடுபட்டு அபராத தொகையை செலுத்தாத வாகனங்களுக்கு, இனி இன்சூரன்ஸ் கட்டணத்துடன் அபாரதத் தொகையையும் செலுத்தும் வகையில், போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Continue Reading

Trending