Connect with us

அரசியல்

இணைந்த கைகள் ! ஓபிஎஸ்- தினகரன் சந்திப்பு ! அரசியல் களத்தில் திடீர் பரபரப்பு!

Published

on

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை முன்னாள் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவரது அடையாறு இல்லத்தில் இன்று சந்தித்தார்.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவித்தனர் . நடந்த வழக்குகளில் வெளிவந்த தீர்ப்பை அடுத்து பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார் எடப்பாடி பழனிசாமி. அரசியலில் தனக்கு செல்வாக்கு இருப்பதை நிரூபிக்கும் வண்ணம் திருச்சியில் கடந்த மாதம் மாநாடு நடத்தினர் ஓ.பன்னீர்செல்வம் . அதில் ஏராளமான ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டுக்கு தினகரன், சசிகலா கலந்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அவர்கள் இருவரும் கலந்துகொள்ளவில்லை, இருப்பினும் அவர்களின் ஆதரவு ஓ.பன்னீர்செல்வதிக்கு இருப்பதாக செய்திகள் உலவந்தனர். நேரம் வரும் பொழுது தினகரன் மற்றும் சசிகலா அவர்களை சந்திப்பேன் என கூறிவந்த ஓ.பன்னீர்செல்வம் இன்று அவருடைய ஆதரவாளர் பண்ருட்டி ராமச்சந்திரன் உடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை அவரது அடையாறு இல்லத்தில் சந்தித்து பேசினார்.

செய்தியாளர்கள் சந்திப்பு:

இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பண்ரூட்டி ராமச்சந்திரன், ‘லட்சியத்தை அடைய இரு இயக்கங்களும் சேர்ந்து செயல்பட முடிவு செய்துள்ளோம். ஒரே லட்சியம்தான் அ.தி.மு.கவை மீட்டெடுப்பதுதான். எம்.ஜி.ஆர் உருவாக்கி, ஜெயலலிதா கட்டிக்காத்த அ.தி.மு.க காக்க ஓ.பன்னீர் செல்வமும், டி.டி.வி.தினகரனும் சேர்ந்து செயல்பட முடிவு செய்துள்ளோம்’ என்று தெரிவித்தார்.

இதனை அடுத்து பேசிய டி.டி.வி.தினகரன், ‘சி.பி.ஐ, சி.பி.எம் போல இணைந்து செயல்படுவோம். அம்மாவின் உண்மையான தொண்டர்களிடம் கட்சி இருக்க வேண்டும். கட்சியை ஹைஜேக் செய்தவர்களிடமிருந்து கட்சியை மீட்க வேண்டும். அ.தி.மு.க மீட்டெடுக்க வேண்டும் என்று நானும், சகோதாரர் ஓ.பன்னீர் செல்வமும் இணைந்து செயல்படவுள்ளோம். என்றார் மேலும் “அனைவரும் இணைந்து செயல்படவேண்டும் என்பதே தொண்டர்களின் எதிர்பார்ப்பு” எனக் கூறினார். நாங்கள் இருவரும் ஒருவொருக்கொருவர் அறிந்தவர்கள். எங்களிடம் மனதளவில் எந்த வெறுப்பும் இல்லை.. நாங்கள் சுயநலத்துடன் இணையவில்லை.. உண்மையான தொண்டர்கள் கையில் அதிமுக ஒப்படைப்போம்’ எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ஓ.பன்னீர் செல்வம், ‘சசிகலாவை சந்திக்க விருப்பம் தெரிவித்தேன். அவர் தற்போது வெளியூரில் இருப்பதாக தெரிவித்துள்ளார். விரைவில் சசிகலாவைச் சந்திப்பேன். அனைத்து தொண்டர்களும் ஒன்றிணைய வேண்டும். பொதுச்செயலாளர் வழக்கு இன்னமும் நிறைவு பெறவில்லை’ என்று தெரிவித்தார்.

இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அரசியல்

தளபதி முருகேசன் தலைமையில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரை கூட்டம்

Published

on

சட்டசபை தேர்தலை அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நிலையில் ஆளும் கட்சியான திமுக என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற பிரச்சாரத்தை முன்னிறுத்தி மாவட்டம் முழுவதும் நடத்திவருகிறது . கடந்த 10ஆம் தேதி முதல் நடைபெற்றுவரும் இந்த நிகழ்வு 20ஆம் தேதி கோவை தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட சூலூர் சட்டமன்ற தொகுதி சூலூர் மேற்கு ஒன்றியம் குளத்தூர் ஊராட்சி 98,99 ஆகிய பாகங்களில் நடைபெற்ற பரப்புரை கூட்டம் நடைபெற்றது இதில் திமுக கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர் தளபதி முருகேசன் அவர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் சூலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பரசு, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ஜெயலலிதா, மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் வைஸ் கந்தசாமி, ஒன்றிய இளைஞரணி நவீன், தனபால், பிரவீன், கிளைச் செயலாளர் சண்முகம், கருப்புசாமி, முருகேஷ்,BLA2 துரை (எ) சதாசிவம், மனோஜ், பாக நிலை முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள், பூத் டிஜிட்டல் ஏஜென்ட்கள், சார்பு அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதேபோல 18ஆம் தேதி கோவை தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி செட்டிபாளையம் பேரூராட்சி பாகம் எண் 177, சூலூர் சட்டமன்றத் தொகுதி சுல்தான்பேட்டை மேற்கு ஒன்றியம் இடையர்பாளையம் ஊராட்சி பாகம் எண் 269 ஆகிய பாகங்களில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்திலும் கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர் தளபதி முருகேசன் அவர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

Continue Reading

அரசியல்

உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் நடைபெற்ற மாபெரும் கருத்தரங்கம்

Published

on

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் திராவிடம் 2.0 ஏன்? எதற்கு? வெல்லட்டும் திராவிடம் வீழட்டும் பாசிசம் என்கிற தலைப்பில் மாபெரும் கருத்தரங்கம் கடந்த 14ஆம் தேதி மீனாட்சி மஹால், மகாலிங்கபுரம் ரவுண்டானா, பொள்ளாச்சியில் திமுக கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர் தளபதி முருகேசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே வி கே எஸ் சபரி கார்த்திகேயன் வரவேற்புரை ஆற்றினார். மூத்த ஊடகவியலாளர் தி.செந்தில் வேல், திராவிடக் கழக துணை பொது செயலாளர் சே.மெ.மதிவதனி சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். பொள்ளாச்சி நகர இளைஞரணி துணை அமைப்பாளர் சு.ஈஸ்வரன் நன்றியுரை ஆற்றினார்.

இந்நிகழ்வில் மாவட்ட அவைத்தலைவர் மயூரா சுப்பிரமணியம், மாவட்ட பொருளாளர் ஜெயபிரகாஷ், பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், பொள்ளாச்சி தெற்கு நகர செயலாளர் அமுத பாரதி, பொள்ளாச்சி வடக்கு நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன், பொள்ளாச்சி நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Continue Reading

அரசியல்

நான் எந்த பதவியில் இருந்தாலும் உங்கள் சகோதரன் – நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் எஸ்.பி வேலுமணி பேச்சு

Published

on

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் பூத் கைமுட்டி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் கோவை பேரூர் செட்டிபாளையம் அருகே நடைபெற்றது . இந்த கூட்டத்தில் பேசிய அதிமுக கழக தலைமை நிலையச் செயலாளரும் கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழகச் செயலாளருமான எஸ்.பி வேலுமணி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

இதில் பேசிய வேலுமணி : நான் எந்த பதவியில் இருந்தாலும் உங்கள் சகோதரன் பொன்விழா கண்ட இயக்கம், 31 ஆண்டுகள் ஆளும்கட்சி அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தில் இருப்பதே பெருமை .தமிழ்நாட்டில் அதிகமான திட்டங்களை தந்தது அதிமுக தான் , காவேரி நீர் பிரச்னை, முல்லைப்பெரியாறு பிரச்னை உள்பட தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டப்பட்டது அதிமுக ஆட்சியில்தான். மத்திய அரசிடம் இருந்து ஏராளமான திட்டங்களைப் பெற்றுத்துள்ளோம்.  கோவை நகரின் போக்குவரத்து நெரிசல், தொழில் வளர்ச்சி, மக்களின் பயண வசதி ஆகியவற்றை கருத்தில் கொண்டு மெட்ரோ ரயில் திட்டம் மிகவும் அவசியமானதாக மாறியுள்ளது 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் அப்போது , கோவைக்கு மெட்ரோ திட்டம் உறுதியாக கொண்டு வரப்படும். மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டு, திட்டத்திற்கான அனைத்து அனுமதிகளும் பெற்று, பணிகள் விரைவாக தொடங்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் பேசிய அவர் , கோவைக்கு அதிமுக அரசு நிறைய வளர்ச்சித் திட்டங்களை செய்துள்ளது மிக முக்கியமான சாலைகளை விரிவுபடுத்தி விபத்துகளை தடுத்துள்ளது. கொரோனா காலத்தில் மக்களுக்கு தேவையான பல உதவிகளை செய்து உயிரை காப்பாற்றியுள்ளோம். விரைவில் சட்டசபை தேர்தல் வர இருக்கின்றது. அதில் 210 தொகுதிகளிலும் வெற்றிபெற்று ஆட்சி அமைப்போம் எனக் கூறினார்.

இக்கூட்டத்தில் சார்பு அணி மாவட்ட செயலாளர்கள், சார்பு அணி மாவட்ட நிர்வாகிகள், பேரூராட்சி செயலாளர்கள், , மற்றும் வட்ட கழக செயலாளர்கள், முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள், முன்னாள் ஊராட்சி தலைவர்கள், வார்டு கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Continue Reading

Trending