Connect with us

உலகம்

IMAGE SEARCH என்ற அம்சத்தை வாட்ஸ்அப்பில் அறிமுகம்!

Published

on

செய்திகளை அதிகம் பரவப்படும் செயலியாக இருப்பது wahtsapp . தினமும் பல கோடி செய்திகள் wahtsapp அனுப்பப்படுகிறது. இதனால் பல புது அம்சத்தை அன்றாடம் வெளியிட்டு வருகிறது wahtsapp நிறுவனர் . தற்போது புது அப்டேட் ஆக வர இருக்கிறது . போலிச் செய்திகள், வதந்திகளை அடையாளம் காணும் புதிய அம்சத்தை வாட்ஸ்அப் (WhatsApp) கொண்டுவர உள்ளது. இந்த அம்சம் வாட்ஸ்அப்பில் பகிரப்படும் படங்களின் நம்பகத்தன்மையை சரிபார்க்க அனுமதிக்கிறது.

தவறான தகவல்கள் பரவுவதை தடுக்கும் வகையில் இமேஜ் சர்ச் (IMAGE SEARCH] அம்சத்தை வாட்ஸ்அப்பில் அறிமுகம் செய்ய உள்ளது மெட்டா!. இந்த அம்சம் வாட்ஸ்அப்பை விட்டு வெளியேறாமல் போட்டோக்களை சரிபார்க்கும் வழிமுறையை வழங்குகிறது.

இதன்மூலம் வாட்ஸ்அப்பில் வரும் புகைப்படங்கள் எடிட் செய்யப்பட்டதா, தவறாக சித்தரிக்கப்பட்டதா எனக் கண்டறியலாம். மேலே இருக்கும் 3 புள்ளியை கிளிக் செய்து அம்சத்தை பயன்படுத்துக்கொள்ளலாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உலகம்

வேகமாக வளர்கிறது ஏஐ… கவனிக்கப்படுகிறதா அதன் விளைவு?

Published

on

மனித அறிவை ஒத்த செயல்பாடுகளை இயந்திரங்கள் மேற்கொள்ளும் திறனே செயற்கை நுண்ணறிவு ஏஐ ). கணினி, மென்பொருள் மற்றும் தரவுகளின் அடிப்படையில் மனிதர்களைப் போல யோசிக்க, கற்றுக்கொள்ள, முடிவெடுக்கக் கூடிய தொழில்நுட்பமாக ஏஐ இன்று வளர்ந்து வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன் ஆராய்ச்சி நிலையங்களுக்குள் மட்டுமே இருந்த இந்த தொழில்நுட்பம், தற்போது பொதுமக்களின் அன்றாட வாழ்க்கைக்குள் நேரடியாக நுழைந்துள்ளது.

மருத்துவம், கல்வி, தொழில், வங்கி, போக்குவரத்து, ஊடகம் என பல துறைகளில் ஏஐ பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. நோய்களை முன்கூட்டியே கண்டறிதல், மாணவர்களுக்கு தனிப்பட்ட கற்றல் முறைகள், தொழில்களில் தானியங்கி செயல்முறைகள், வாடிக்கையாளர் சேவையில் உடனடி பதில்கள் ஆகியவை ஏஐ வழங்கும் முக்கிய வசதிகளாக உள்ளன. இதனால் செயல்திறன் உயர்ந்து, நேரமும் செலவும் குறைகிறது.

ஆனால், இந்த வளர்ச்சியின் மறுபக்கமும் கவனிக்கப்பட வேண்டியதாக உள்ளது. மனித உழைப்பை இயந்திரங்கள் மாற்றும் நிலை உருவாகி வருவது வேலைவாய்ப்புகள் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அலுவலகச் சேவைகள், தரவு செயலாக்கம், உள்ளடக்கம் உருவாக்குதல் போன்ற துறைகளில் ஏஐ அதிகமாக பயன்படுத்தப்படுவதால், மனிதர்களின் பங்கு குறையக்கூடும் என்ற கவலை எழுகிறது.மேலும், தரவு பாதுகாப்பு, தனியுரிமை மீறல், தவறான தகவல் பரவல் போன்ற பிரச்சினைகளும் ஏஐ வளர்ச்சியுடன் சேர்ந்து அதிகரித்து வருகின்றன. ஏஐ முடிவெடுப்புகள் மனித உணர்வுகளையும் சமூக பொறுப்பையும் முழுமையாக பிரதிபலிக்குமா என்ற கேள்வியும் எழுகிறது. தொழில்நுட்பம் மனிதனை வழிநடத்த வேண்டுமா, மனிதன் தொழில்நுட்பத்தை கட்டுப்படுத்த வேண்டுமா என்ற அடிப்படை விவாதமும் இப்போது தீவிரமடைந்துள்ளது.

Continue Reading

Tech

குவாண்டம் கம்ப்யூட்டிங்கில் செயற்கை நுண்ணறிவு

Published

on

 

புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும் !

இன்றைய உலகில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) மற்றும் குவாண்டம் கம்ப்யூட்டிங் (Quantum Computing) ஆகிய இரண்டும் வேகமாக வளர்ந்து வரும் துறைகளாக திகழ்கின்றன. இவை தனித்தனியாகவே மனிதகுல முன்னேற்றத்திற்கு பெரும் பங்காற்றி வருகின்றன. ஆனால், இவை இரண்டும் ஒன்றிணையும் போது உருவாகப்போகும் தாக்கம் மனித வரலாற்றில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது.

குவாண்டம் கம்ப்யூட்டிங் என்றால் என்ன?

பாரம்பரிய கணினிகள் “0” மற்றும் “1” எனும் இரண்டு நிலைகளில் மட்டுமே செயல்படுகின்றன. ஆனால் குவாண்டம் கம்ப்யூட்டர்கள் “கியூபிட் (Qubit)” என்ற அடிப்படையைப் பயன்படுத்துகின்றன. ஒரு கியூபிட் ஒரே நேரத்தில் பல நிலைகளை பிரதிபலிக்க முடியும். இதனால், கணக்கீடுகள் மிக அதிவேகமாக நடைபெறுகின்றன.

செயற்கை நுண்ணறிவின் (AI) தற்போதைய வரம்புகள்

இன்றைய AI அமைப்புகள் பெரும் தரவுகளை (Big Data) செயலாக்கும் திறன் பெற்றுள்ளன. எனினும், சிக்கலான கணித மாதிரிகள் அல்லது மிகப்பெரிய தரவுகளை குறுகிய நேரத்தில் தீர்க்கும் போது சில வரம்புகளைச் சந்திக்கின்றன.

குவாண்டம் + AI : இணைவு தரும் சக்தி

குவாண்டம் கம்ப்யூட்டிங் மற்றும் AI இணைந்தால்:

மருத்துவ ஆராய்ச்சி : புதிய மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் விரைவில் கண்டறியப்படும்.

நிதி துறை : பங்கு சந்தை முன்னறிவிப்பு மற்றும் அபாய மேலாண்மை மிகவும் துல்லியமாக செய்யப்படும்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு : வானிலை முன்னறிவிப்புகள் நம்பகமாக உருவாக்கப்பட்டு, இயற்கை பேரழிவுகளுக்கான தடுப்பு நடவடிக்கைகள் எளிதாகும்.

சைபர் பாதுகாப்பு : தரவு குறியாக்கம் (Encryption) உடனடி முறையில் வலுப்படுத்தப்படும்.

எதிர்காலம் எப்படியிருக்கும்?

குவாண்டம் AI பரவலாக பயன்பாட்டிற்கு வரும் போது, மனிதர்களின் முடிவெடுக்கும் திறன் புதிய உயரங்களை எட்டும். மருத்துவம், அறிவியல், தொழில், கல்வி, சுற்றுச்சூழல் போன்ற அனைத்துத் துறைகளிலும் வேகமான முன்னேற்றம் நிகழும். இது மனிதனின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், சிக்கலான உலகப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வலுவான கருவியாகவும் அமையும்.

செயற்கை நுண்ணறிவும் குவாண்டம் கம்ப்யூட்டிங்கும் தனித்தனியாகவே அதிசயங்களை நி

கழ்த்துகின்றன. ஆனால், இவை இரண்டும் ஒன்றிணையும் போது உருவாகப்போகும் புதிய புரட்சி மனித வரலாற்றின் திசையை மாற்றும். எதிர்காலம் நம்மை ஆச்சரியப்படுத்தும் அதிசயங்களால் நிரம்பியதாக இருக்கும்.

 

ப. முத்து சுப்பிரமணியன்

இணை பேராசிரியர்

மின்னணு மற்றும் தொடர்பியல் பொறியியல் துறை

கோயம்புத்தூர் தொழில்நுட்பக் கல்லூரி, கோயம்புத்தூர்-14.

 

Continue Reading

உலகம்

நமது ஒரே எதிரி, மற்ற நாடுகளைச் சார்ந்திருப்பது தான்! பிரதமர் நரேந்திர மோடி பேச்சு!

Published

on

குஜராத்:  உலகில் நமக்கு எந்த பெரிய எதிரியும் இல்லை. நமது ஒரே உண்மையான எதிரி, மற்ற நாடுகளைச் சார்ந்திருப்பது தான் என்று குஜராத்தில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

குஜராத்தின் பவநகரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பேசிய பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, “இந்தியா தற்சார்பு அடைய வேண்டும்,அதற்கான தன்னம்பிக்கையை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். உலகில் நமக்கு எந்த பெரிய எதிரியும் இல்லை நமது ஒரே உண்மையான எதிரி என்பது மற்ற நாடுகளைச் சார்ந்திருப்பதுதான். இதுவே நமது மிகப் பெரிய எதிரி. நாம் ஒன்றாக இந்த எதிரியை தோற்கடிக்க வேண்டும்.

வெளிநாடுகளைச் சார்ந்து இருப்பது அதிகமாக இருந்தால், நாட்டின் தோல்வி அதிகமாகும். உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நமது நாட்டில் அமைதி, ஸ்திரத்தன்மை, செழிப்பை பேணுவதற்கு தற்சார்பு அவசியம். சிப்கள் முதல் கப்பல்கள் வரை அனைத்தையும் நாம் தயாரிக்க வேண்டும். இந்தியாவின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வாக ஒரே ஒரு மருந்து மட்டுமே உள்ளது. தன்னம்பிக்கையே அந்த மருந்து.

நம் ஆயுதங்களுக்கு வெளிநாடுகளில் மவுசு நிலவுகிறது.தேசத்தின் முதுகெலும்பாக செயல்படுபவை நமது துறைமுகங்கள். இந்திய துறைமுகங்களுக்கு புதிய சீர்திருத்தங்களை நாங்கள் கொண்டு வர உள்ளோம். ‘ஒரு தேசம், ஒரு ஆவணம்’ மற்றும் ‘ஒரு தேசம், ஒரு துறைமுக செயல்பாடு’ ஆகியவை வர்த்தகத்தை எளிதாக்கும்.

பெரிய கப்பல்களை உருவாக்குவதன் மூலம் கடல்சார் துறையை வலுப்படுத்த வரலாற்று சிறப்பு மிக்க முடிவை எடுத்துள்ளோம். உலகளாவிய கடல்சார் சக்தியாக நாட்டின் துறைமுகங்கள் முதுகெலும்பாக உள்ளன. என தெரிவித்தார்.

 

 

 

Continue Reading

Trending