Connect with us

Sports

ரோஹித்! ரோஹித்! விண்ணை பிளந்த சத்தம்!

Published

on

ஐபில் துவங்கியதில் இருந்து இந்தியாவில் உள்ள அனைத்து ஸ்டேடியத்திலும் எதிரொலிக்கும் சப்தம். இந்தியாவில் கிரிக்கெட் திருவிழாவாக கிரிக்கெட் ரசிகர்களால் கொண்டாடப்படும் ஐபில் தொடர் 2008 ஆம் ஆண்டு முதன் முதலாக துவங்கியது. இந்த தொடருக்கு உலகம் முழுவதிலும் ரசிகர்கள் ஏராளம். இந்திய நகரமான டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், ஹைட்ராபாத் ஆகிய நகரங்களை அணிகளாக பிரித்து வெளிநாட்டு வீரர்கள் மற்றும் இந்திய வீரர்களை ஏலம் எடுத்து ஒரு அணியாக விளையாடுவர். சுமார் 16 வருடங்களாக நடைபெற்று வரும் இந்த தொடர் கடந்த மார்ச் மாதம் துவங்கியது நடைபெற்று வருகிறது.

மீண்டும் ஹார்டிக் :

மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்ற அணி. ஏற்கனவே கோப்பையை வென்ற பொது அணியில் ஆடிய ஹார்டிக் பாண்டியா கடந்த 2022 ஆம் ஆண்டு புதிதாக சேர்க்கப்பட்ட குஜராத் அணியில் இணைந்து கேப்டனாக அணியை வழிநடத்தி 2022 ஆம் ஆண்டு நடத்த ஐபில் தொடர் குஜராத் வெற்றிப் பெற வழிவகுத்தார். 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடிய இவரது தலைமையிலான குஜராத் அணி இறுதிப் போட்டியில் சென்னை அணியுடன் தோல்வியை தழுவியது.

2024 ஆம் ஆண்டு தொடரின் அறிவிக்க விருந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நிர்வாகம் ஹார்டிக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணியில் மீண்டும் கொண்டுவர முயற்சிகள் மேற்கொண்டது. இதனை ஒப்புக்கொண்ட குஜராத் டைட்டன்ஸ் அணி நிருவாகம் சுமார் 15 கோடி கொடுத்து வாங்கியது. அதுமட்டும் இன்றி ரோஹித் ஷர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கி ஹார்டிக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமித்தது.

இதனை சற்றும் எதிர்பாராத ரோஹித் ஷர்மாவின் ரசிகர்கள் இணையத்தளத்தில் வெகு கொண்டு எழுந்தனர். மீண்டும் ரோஹித் ஷர்மாவை மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் கேப்டன் ஆக வேண்டும் என கூக்குரலிட்டனர் .

கூச்சலிட்ட ரசிகர்கள்

ஐபில் துவங்கினால் சரியாகிவிடும் என பலரும் நினைத்திருந்த வேளையில்,
மும்பை இந்தியன்ஸ் ஹார்டிக் பாண்டியா தலைமையில் மார்ச் 24ஆம் தேதி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக அகமதாபாத் ஸ்டேடியத்தில் தனது முதல் ஆடியது. இதில் ஹர்டிக் பாண்டியாவுக்கு எதிராகவும், ரோஹித் ஷர்மாவுக்கு ஆதரவாகவும் அரங்கில் உள்ள மொத்த ரசிகர்களும் கோஷங்களை எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தினர்.இந்தப் போட்டியில் ரோஹித் ஷர்மாவை பௌண்டரி அருகே நிற்குமாறு கேப்டன் ஹார்டிக் பாண்டியா செய்கைக்காட்டும் வீடியோ இணையத் தளத்தில் வைரலாக ரசிகர்களின் கோவம்

அதிகரிக்க துவங்கியது. இரண்டாவதுப் போட்டியிலும் ரசிகர்கள் ஹார்டிக் பாண்டியாவிக்கு எதிராக குரல் கொடுத்தனர். சொந்த ஊரில் நடைபெறும் 3ஆவதுப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் ஹார்டிக் பாண்டியாவிற்கும் ரசிகர்கள் எந்த மாதிரியான ஆதரவை வழங்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. முதல் இரண்டு போட்டிகளில் ரசிகர்கள் எழுப்பி குரலோடு ஹார்டிக் பாண்டியாவிற்கு அதிக எதிர்ப்பு குரல் மும்பை மைதானத்தில் இருந்து வெளி வந்தது. போட்டி துவங்குவதுக்கு முன்பு டாஸ் போடும் போது மைதானத்தில் உள்ள கிட்ட்டத்தட்ட 80% பேர் ஹார்டிக் பாண்டியாவிற்கு எதிராக கூச்சலிட்டனர்.

இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு இந்திய அணி வீரருக்கு எதிராக இந்தியா முழுவதிலும் எதிர்ப்பு வெளிவந்தது இதுவே முதல் முறை. ஏன் ரசிகர்ககள் இந்த அளவுக்கு கோவத்தை வெளிப்படுத்தினர் ஹார்டிக் பாண்டிய அப்படி என்ன செய்தார் ரோஹித் ஷர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது ஹார்டிக் பாண்டியவா? இல்லை மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் தான் இதனை செய்தது. குஜராத் டைட்டன்ஸ் அணியில் கேப்டன் பதவியில் அங்கம் வகித்த ஹார்டிக் பாண்டியவை மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் அழைத்து வந்தது தவறில்லை.

ஆனால் சிறப்பாக செயல்பட்டு 5 முறை கோப்பையை வென்று கொடுத்தது இந்திய கிரிக்கெட் அணி கேப்டனாக செயல்பட்டு வரும் ரோஹித் ஷர்மாவை காரணமின்றி நீங்கியது தான் சர்ச்சையானது. இதெல்லாம் அணியின் உரிமையாளர் மற்றும் நிர்வாகக் குழு முடிவு செய்வது என்றலும் மறைமுகமாக இல்லாமல் ஒற்றுமையுடன் பேசி அறிவித்திருந்தால் எந்த பிரச்சனையும் வந்திருக்காது.

எதிர்பார்ப்பு

இதற்கு முன்பு கூட சச்சின் டெண்டுல்கர் ரோஹித் சர்மா தலைமையில் விளையாடியுள்ளார். ஏன் கங்குலி,சேவாக், யுவராஜ் போன்ற முன்னணி வீரர்கள் இளம் வீரர்கள் தலைமையில் விளையாடி உள்ளனர். தற்போது கூட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் தோனி ருத்திராஜ் தலைமையில் விளையாடிக் கொண்டிருக்கிறார் என பல முன்னணி வீரர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் தங்களின் கருத்துக்களை அன்றாடம் வெளிப்படுத்தி வருகின்றனர். இவர்களை அணுகி சம்மதிக்க வைத்த முறை தான் முக்கியம். மும்பை இந்தியன்ஸ் அணியும் இதனை செய்திருந்தால் இந்த எதிர் குரல் வெளிவந்திருக்காது. 5முறை
சாம்பியன் அசைக்க முடியாத அணி என்ற பெருமை பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி இன்று இந்த சிறு பிரச்சனையில் தோல்வியைத் தழுவிவருவதாக ஆதங்கப் படுகின்றனர் ரசிகர்கள். அடுத்த ஆண்டு வீரர்கள் கலைக்கப்பட்டு புதிய வீரர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர், அதில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் விளையாடும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

– சதிஷ் குமார்

 

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Sports

2வது ஒருநாள் போட்டி – இந்திய அணியை வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா!

Published

on

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது. இதையடுத்து நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது. இரு அணிகளுக்கும் இடையேயான 2வது ஒருநாள் போட்டி சத்தீஷ்கார் மாநிலம் ராய்ப்பூரில் நேற்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால், ரோகித் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் 22 ரன்னிலும், ரோகித் 14 ரன்னிலும் அவுட் ஆகினர். தொடர்ந்து களமிறங்கிய விராட் கோலி, ருதுராஜ் கெய்க்வாட் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

அதிரடியாக ஆடிய இருவரும் சதம் விளாசினர். கெய்க்வாட் 105 ரன்களிலும், கோலி 102 ரன்களிலும் அவுட் ஆகினர். பின்னர் களமிறங்கிய கேப்டன் கேஎல் ராகுல் 66 ரன்கள் குவித்தார். இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 358 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்க தரப்பில் யான்சன் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதையடுத்து 359 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்க அணி களமிறங்கியது.

தென்னாப்பிரிக்க அணியின் குயிண்டன் டிகாக் 8 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து,  ஏய்டன் மார்க்கரம் உடன் கேப்டன் பவுமா ஜோடி சேர்ந்தார். இதில், பவுமா 46 ரன்களில் அவுட் ஆனார். எய்டம் மார்க்கரம் 110 ரன்களிலும், மேத்தீவ் பிரிட்ஸ்க்கி 68 ரன்களிலும் வெளியேறினர். மார்க்கோ ஜான்சன் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில், 49.2 ஓவர்களில் 362 ரன்கள் எடுத்து தென்னாப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றது. தென்னாப்பிரிக்காவின் கார்பின் போஷ் 29 ரன்களிலும், கேசவ் மகாராஜ் 10 ரன்களிலும் களத்தில் இருந்தனர்.

Continue Reading

Sports

இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Published

on

ராஞ்சி: Nov, 30 – இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் ஒருநாள் போட்டி, ரசிகர்களின் நாடித்துடிப்பை எகிற வைக்கும் வகையில் அமைந்தது. விராட் கோலியின் அபார சதத்தால் இந்தியா இமாலய ஸ்கோரை குவித்தாலும், தென்னாப்பிரிக்க வீரர்கள் கடைசி விக்கெட் வரை போராடி இந்திய ரசிகர்களுக்கு “மரண பயத்தை” காட்டினர். இறுதியில் 17 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஜெய்ஸ்வால் 18 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினாலும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்த ரோஹித் சர்மா 57 ரன்கள் மற்றும் விராட் கோலி 135 ரன்கள் சேர்த்து, ஜோடியாக 2-வது விக்கெட்டுக்கு 136 ரன்கள் குவித்து அசத்தியது.

ரோஹித் ஆட்டமிழந்த பிறகு, விராட் கோலி மைதானத்தின் நாலாபுறமும் சிக்ஸர்களைப் பறக்கவிட்டு 120 பந்துகளில் 135 ரன்கள் குவித்தார்.
கேப்டன் கே.எல்.ராகுல் தனது பங்குக்கு 56 பந்துகளில் 60 ரன்கள் விளாச, இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்கள் என்ற இமாலய இலக்கை நிர்ணயித்தது. தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர்கள் அனைவருமே ரன்களை வாரி வழங்கினர்.

350 ரன்கள் என்ற இலக்கை துரத்திய தென்னாப்பிரிக்காவுக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. ஹர்ஷித் ராணா வீசிய 2-வது ஓவரில் ரிஜான் ரிக்கல்டன் மற்றும் குயின்டன் டி காக் ஆகியோர் டக்-அவுட் ஆகினர். அர்ஷ்தீப் சிங் மார்க்ரமை (7) வெளியேற்ற, 11 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி திணறியது.

மிரட்டிய ஜான்சன் – பிரீட்ஸ்கே கூட்டணி
3 விக்கெட்களுக்கு பின் டோனி டி சோர்ஸி 39 ரன்கள் சேர்த்தும், டெவால்ட் பிரேவிஸ் 37 ரன்கள் சேர்த்தும் ஆகியோர் அணியை மீட்டனர். ஆனால், 5 விக்கெட்டுகள் விழுந்த பிறகு இணைந்த மார்கோ ஜான்சன் மற்றும் மேத்யூ பிரீட்ஸ்கே ஜோடி ஆட்டத்தையே மாற்றியது.

குறிப்பாக மார்கோ ஜான்சன் இந்திய பந்துவீச்சைத் துவம்சம் செய்தார். 39 பந்துகளில் 70 ரன்கள் (8 பவுண்டரி, 3 சிக்ஸர்) விளாசினார். மறுமுனையில் பிரீட்ஸ்கே 72 ரன்கள் குவித்தார். இந்த ஜோடி 97 ரன்கள் சேர்த்தபோது, இந்திய அணிக்குத் தோல்வி பயம் காட்டியது.

பதற்றம் அதிகரித்த நேரத்தில் பந்தை கையில் எடுத்த குல்தீப் யாதவ், ஒரே ஓவரில் ஜான்சன் மற்றும் பிரீட்ஸ்கே என இருவரையும் வீழ்த்தி ஆட்டத்தை இந்தியா பக்கம் திருப்பினார். அவர் மொத்தம் 10 ஓவர்களில் 68 ரன்கள் கொடுத்து 4 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

விடாமல் போராடிய கார்பின் போஷ்
முக்கிய விக்கெட்டுகள் விழுந்தாலும், கடைசி நேரத்தில் எட்டாம் வரிசை வீரர் கார்பின் போஷ் தனி ஆளாகப் போராடினார். 51 பந்துகளில் 67 ரன்கள் விளாசிய அவர், கடைசி ஓவர் வரை ஆட்டத்தைக் கொண்டு சென்றார். கடைசி ஓவரில் 18 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற நிலையில் இருந்தது தென்னாப்பிரிக்கா.

கடைசி ஓவரில் பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் கார்பின் போஷ் ஆட்டமிழக்க, தென்னாப்பிரிக்கா 49.2 ஓவர்களில் 332 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகள், ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகள், அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகள், பிரசித் கிருஷ்ணா 1 விக்கெட் வீழ்த்தினர். இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெஸ்ட் தொடர் தோல்விக்குப் பிறகு, இந்த வெற்றி இந்திய அணிக்கு மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.

Continue Reading

Sports

தமிழகத்தில் அதிக கிராண்ட் மாஸ்டர்கள் இலக்கை நோக்கி செல்லும் மாநில சதுரங்க சங்கம்!

Published

on

தமிழ்நாடு மாநில சதுரங்க சங்கம் சார்பில், கோவை மாவட்ட சதுரங்க சங்கம் ஏற்பாடு செய்த 36வது முதல் 40வது வரையிலான தமிழ்நாடு சர்வதேச மாஸ்டர்ஸ் நார்ம் குளோஸ்ட் சர்க்யூட் சதுரங்க (செஸ்) போட்டிகள் 2025-26, கோவையில் உள்ள ஹோட்டல் அலங்கார் கிராண்டில் வெள்ளிக்கிழமை (14.11.25) தொடங்கியது. இந்த ஐந்து போட்டிகளும் டிசம்பர் 22, 2025 வரை நடைபெற உள்ளன.இது பற்றிய செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. அப்போது பேட்டியளித்த சக்தி குழுமத்தின் தலைவரும், தமிழ்நாடு மாநில சதுரங்க சங்கத்தின் தலைவருமான எம். மாணிக்கம் கூறுகையில்:

செஸ் ஒலிம்பியாட் நிகழ்வு தமிழகத்தில் நடைபெற்ற போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் 100 கிராண்ட் மாஸ்டர்களை உருவாக்க வேண்டும் என்று விரும்பியதன் அடிப்படையில், 2023 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு மாநில சதுரங்க சங்கம் இந்த சர்வதேச மாஸ்டர்ஸ் நார்ம் போட்டிகளை நடத்தி வருகிறது.

சர்வதேச மாஸ்டர் ஆவதற்கு 2400 புள்ளிகள் மற்றும் 3 நார்ம்கள் (தகுதி) தேவை. இந்த நார்ம்களைப் பெறுவதற்கான வாய்ப்பை தமிழகத்தை சேர்ந்த சிறந்த வீரரகள் உள்நாட்டிலேயே பெற வசதியாக, அவர்கள் மிக குறைந்த செலவில் இந்த போட்டிகளில் பங்கேற்க வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளோம்.

இதற்காக முன்னணி சர்வதேச வீரர்களை தமிழகத்திற்குக் கொண்டு வந்து நமது வீரர்களுடன் போட்டியிட வைத்து வருகிறோம். இதற்கான செலவுகளைச் சங்கம் ஏற்பதன் மூலம், உள்ளூர் வீரர்கள் மிகவும் குறைவான கட்டணத்தில் (உதாரணத்திற்கு ரூ.3 லட்சம் செலவாகும் இடத்தில் ரூ.10,000 மட்டும்) உலகத் தர நிகழ்வுகளில் போட்டியிட முடிகிறது.

இதுவரை 35 போட்டிகள் நடத்தப்பட்டு, அதன் மூலம் 22 ‘சர்வதேச மாஸ்டர் நார்ம்கள்’ பெறப்பட்டுள்ளன. தற்போது தமிழகத்தில் 45 சர்வதேச மாஸ்டர்கள் உள்ளனர். அடுத்த 4-5 ஆண்டுகளில் 100 சர்வதேச மாஸ்டர்கள் என்ற இலக்கை எட்ட முடியும்.

இவ்வாறு அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

சக்தி குழுமம் கோவையில் நடக்கும் இந்த ஐந்து போட்டிகளுக்கான அனைத்து செலவுகளையும் ஏற்றுக் கொண்டுள்ளது. சமீபத்தில் கோவையைச் சேர்ந்த ஆகாஷ், ஸ்ரீ ஹரி, ஹர்ஷத் உள்ளிட்ட வீரர்கள் இந்தப் போட்டிகள் மூலம் சர்வதேச நார்ம்களைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு மாநில சதுரங்க சங்கத்தின் பொருளாளர்ஆர். சீனிவாசன்; துணைத் தலைவர் ஆர். அனந்தராம் சர்வதேச செஸ் கூட்டமைப்பின் முன்னாள் துணைத் தலைவர் சுந்தர் மற்றும் தமிழ்நாடு மாநில சதுரங்க சங்கத்தின் பொதுச் செயலாளர் ஸ்டீபன் பாலசாமி ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்

Continue Reading

Trending