Connect with us

செய்திகள்

டிஜே அகாடமி ஆஃப் டிசைன் கல்லூரியின் புதிய லோகோ அறிமுகம்!

Published

on

டிஜே  அகாடமி ஆஃப்  டிசைன் கல்லூரி, சி.ஐ.ஐ.- யங் இந்தியன்ஸ் சார்பில் “லெட்ஸ் டாக் இன் கோவை” எனும் தனித்துவமான கலந்துரையாடல் நிகழ்ச்சி துவக்கம்.

 

டிஜே  அகாடமி ஆஃப்  டிசைன் கல்லூரி சார்பில் படைப்பு துறை, கலை, மேடை நாடகம், திரைப்படம், சமூக அறிவியல், ஆராய்ச்சி மற்றும் தொழில்துறை என பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள், சிந்தனையாளர்கள், முன்னோடிகளை ஒரே மேடையில் அணிதிரட்டி, அவர்களை கொண்டு கோவை பற்றிய தொடர் கலந்துரையாடல் நிகழ்ச்சி “லெட்ஸ் டாக் இன் கோவை”  (பேசலாம் கோவையில்…) ஒன்றை நடத்திட முடிவு செய்யப்பட்டு, அதன் முதல் நிகழ்ச்சி இன்று (22.1.26) மணி மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியானது  முழுமையான, சமூகப் பொறுப்புணர்வுமிக்க மற்றும் தொழில்முறை சார்ந்த கல்வியை வழங்குவதில் டிஜே அகாடமி ஆஃப்  டிசைன் கல்லூரி கொண்டுள்ள உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. அத்துடன் கோவை மாநகரின் நலனுக்காக பல்வேறு துறைகளை ஒருங்கிணைக்கும் ஒரு கல்விச் சூழலை வழங்க இது முயல்கிறது. இந்த நிகழ்வில் எல்.எம்.டபிள்யு. லிமிடெட்டின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சஞ்ஜய் ஜெயவர்த்தனவேலு; ஜி.கே.டி. சேரிட்டி டிரஸ்டின் அறங்காவலர் லலிதா தேவி சஞ்ஜய் ஜெயவர்த்தனவேலு; டிஜே  அகாடமி ஆஃப்  டிசைன் கல்லூரி டீன் வைத்தியநாதன் ராமசுவாமி; கல்லூரியின் நிர்வாக குழு உறுப்பினர் மைக்கல், யங் இந்தியன்ஸ் கோவை கிளையின் தலைவர் நீல் கிக்கானி; சிறப்பு அழைப்பாளர்கள், பல்வேறு துறை நிபுணர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

‘உள்ளூர் கதைகளும், உலக அளவிலான விவாதங்களும்’ என தலைப்பிடப்பட்ட முதல் சொற்பொழிவு இன்று நடைபெற்றது. இதில் இந்திய அனிமேஷன் துறையில் ஒரு முன்னோடியாக திகழும் சுரேஷ் ஏரியாட் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.  இதன் பின்னர் டிஜே  அகாடமி ஆஃப்  டிசைன் கல்லூரியின் புதிய லோகோ வெளியிடப்பட்டது. இத்துடன் சுரேஷ் அவர்களின் சிறந்த திரைப்படைப்புகள் சில காட்சிப்படுத்தப்பட்டது. டிஜே  அகாடமி ஆஃப்  டிசைன் கல்லூரி வழங்கிய இந்த நிகழ்ச்சி இந்திய தொழில் கூட்டமைப்பு  சி.ஐ.ஐ.-யின் அங்கமான யங் இந்தியன்ஸ் – கோவை கிளை அமைப்புடன் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு எல்.எம்.டபிள்யு. லிமிடெட் ஆதரவளித்தது. நிகழ்வின் போது, எல்.எம்.டபிள்யு. லிமிடெட்டின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சஞ்ஜய் ஜெயவர்த்தனவேலு மற்றும் சுரேஷ் ஏரியாட் இணைந்து  சி.ஐ.ஐ.  புதிய லோகோ-வை அறிமுகம் செய்து வைத்தனர்.

 

அவரை தொடர்ந்து ‘உள்ளூர் கதைகளும், உலக அளவிலான விவாதங்களும்’ எனும் தலைப்பில் சுரேஷ் ஏரியாட் பேசினார்.  சுரேஷ் ஏரியாட், 1973-ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தவர். இந்திய அனிமேஷன் துறையின் போக்கையே மாற்றியமைத்த ஒரு முன்னோடியாக அறியப்படுகிறார். அகமதாபாத் தேசிய வடிவமைப்பு நிறுவனத்தின் முன்னாள் மாணவரான இவர், அனிமேஷன் என்பது வெறும் சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு மட்டுமல்ல, அது ஒரு வலிமையான கதைசொல்லும் ஊடகம் என்பதை உலகிற்கு நிரூபித்தவர். 400க்கும் மேற்பட்ட படங்களில் இவரின் அனிமேஷன் ஆளுமை வெளிப்பட்டுள்ளது. இவரின் தனித்துவம் கொண்ட திறமையால் 100க்கும் அதிகமான தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை வென்றுள்ளார். 2015-இல் இவரது ‘ஃபேட்லைன்’  திரைப்படம், அனிமேஷன் உலகின் உயரிய விருதான ‘அன்னெசி கிறிஸ்டல்’ விருதை இந்தியாவிற்கு முதன்முதலில் பெற்றுத் தந்தது. மேலும் 2016ல் வெளிவந்த இவரது ‘ஃபிஷர் வுமன் அண்ட் டுக் டுக்’ , 2018ல் வெளிவந்த ‘டோக்ரி’ மற்றும் 2022ல் வெளிவந்த ‘கண்டிட்டுண்டு’  ஆகிய படைப்புகளுக்காக இந்தியக் குடியரசுத் தலைவரிடம் இருந்து மூன்று தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். இவரது சமீபத்திய படைப்பான ‘தேசி ஊன்’, 2025ம் ஆண்டின் அன்னெசி விருதை வென்றுள்ளது.

“லெட்ஸ் டாக் இன் கோவை” யின் கீழ் ‘உள்ளூர் கதைகளும், உலக அளவிலான விவாதங்களும்’ என தலைப்பிடப்பட்ட முதல் சொற்பொழிவில் பேசிய சுரேஷ்,  கேரளாவின் திருப்பூணித்துறையில் தொடங்கிய தனது ஆரம்பகால வாழ்க்கை, கல்விப்பயணம் மற்றும் விளம்பரத்துறையில் அவர் நிகழ்த்திய சாதனைகள் முதல் ‘ஸ்டுடியோ ஈக்சாரஸ்’ எனும் நிறுவனத்தை உருவாக்கியது வரையிலான தனது படைப்புப் பயணத்தைப் பகிர்ந்து கொண்டார்.அத்துடன், விருது பெற்ற தனது திரைப்படங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட காட்சிகள் வாயிலாக, சமூக-கலாசார யதார்த்தங்களில் வேரூன்றிய உள்ளூர் கதைகள் எவ்வாறு உலக அரங்கில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதையும் அவர் விளக்கினார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கோயம்பத்தூர்

9.3 டன் மறுசுழற்சி கழிவுகளை சேகரித்து சாம்பியன்ஷிப் பட்டம் பெற்ற அமிர்தா வித்யாலயா பள்ளி

Published

on

ஐடிசி லிமிடெட் நிறுவனம் நடத்தி வரும் WOW – சாம்பியன்ஷிப் 2025 விருது வழங்கும் விழா கோவையில்   சிறப்பாக நடைபெற்றது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் மூலத்திலேயே குப்பை பிரித்தல், மறுசுழற்சி குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்தும் நோக்கில் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது. இந்த முயற்சி மத்திய அரசின் சுவச்ச் பாரத் மிஷன் திட்டத்துடன் இணைந்ததாகும்.கோவை மாவட்டத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் கோவை, ஈரோடு, பொள்ளாச்சி, திருப்பூர் உள்ளிட்ட சுமார் 250 பள்ளிகளில் இருந்து மாணவர்கள் பங்கேற்றனர். இந்தப் போட்டியின் மூலம் காகிதம், பிளாஸ்டிக், உலோகம், கண்ணாடி உள்ளிட்ட 215 மெட்ரிக் டன் உலர் மறுசுழற்சி கழிவுகள் சேகரிக்கப்பட்டு மறுசுழற்சிக்கு அனுப்பப்பட்டது. இதன் மூலம் சுமார் 4,000 மரங்கள் வெட்டப்படுவதிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளன என்று ஐடிசி லிமிடெட் போர்ட்ஸ் & ஸ்பேசில்ட்டி பேப்பர் டிவிசன் WOW பிரிவின் துணை பொது மேலாளர் எஸ்.என். உமகாந்த் தெரிவித்தார்.

இந்த விழாவில் சங்கெட் பல்வந்த் வகே ஐஏஎஸ் , கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர், முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு சிறந்த மாணவர்கள் மற்றும் பள்ளிகளுக்கு விருதுகள் வழங்கினார்.இந்தப் போட்டியில் காளப்பட்டி அமிர்தா வித்யாலயா பள்ளி 9.3 டன் உலர் மறுசுழற்சி கழிவுகளை சேகரித்து சிறந்த செயல்திறன் காட்டி 2026’க்கான சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

Continue Reading

செய்திகள்

ஜிஆர்ஜி அறக்கட்டளை 2026 ஆம் ஆண்டு நிறுவனர்கள் தினத்தை ‘பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள்’ மகளிர் கல்லூரியில் கொண்டாடியது.

Published

on

கோயம்புத்தூர், ஜனவரி 21, 2026

ஜிஆர்ஜி அறக்கட்டளை தனது 2026 ஆம் ஆண்டு நிறுவனர்கள் தினக் கொண்டாட்டங்களை ஜனவரி 21, 2026, புதன்கிழமை அன்று, மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை, கோயம்புத்தூர், பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் பிஎஸ்ஜிஆர்கேசி முன்னாள் மாணவியர் பொன்விழா அரங்கில் கொண்டாடியது.

ஆண்டுதோறும் நடைபெறும் இந்த நிறுவனர்கள் தினம், ஜிஆர்ஜி அறக்கட்டளையின் நிறுவனர்களின் நீடித்த பாரம்பரியத்தைக் கௌரவிக்கும் ஒரு முக்கிய நிகழ்வாகும். மேலும், இது கல்வி, தலைமைத்துவம் மற்றும் சமூக மாற்றத்திற்கான அதன் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

ஜிஆர்ஜி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் திரு. ஜி.ரங்கசாமி அவர்கள் வரவேற்புரையை வழங்கினார். ஜிஆர்ஜி அறக்கட்டளையின் நிறுவன அறங்காவலர் டாக்டர். நந்தினி ரங்கசாமி அன்றைய சிறப்பு விருந்தினர்களை அறிமுகப்படுத்தினார்.

தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திருமதி. சுப்ரியா சாஹு, ஐஏஎஸ், அவர்கள் நிகழ்வின் தலைவராக இருந்து வாழ்த்துரை வழங்கினார்.

இந்நிகழ்வின் தலைமை விருந்தினராக ஈரோடு, யுஆர்சி கன்ஸ்ட்ரக்ஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. தேவராஜன் சின்னுசாமி அவர்கள் கலந்துகொண்டு, ஜிஆர்ஜி நினைவுப் பேருரையை ஆற்றினார்.

கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, சென்னை, ரானே  (மெட்ராஸ்) (Rane Madras) லிமிடெட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி திருமதி. கௌரி கைலாசம் அவர்களுக்கு தொழில் மற்றும் சமூகத்திற்கு அவர் ஆற்றிய முன்மாதிரியான தலைமைத்துவம் மற்றும் மாற்றத்திற்கான பங்களிப்பைப் பாராட்டி, அறக்கட்டளை சார்பில் 2026 ஆம் ஆண்டிற்கான சந்திரகாந்தி கேட்டலிஸ்ட் லீடர் விருது வழங்கப்பட்டது. இந்தியாவின் டிஜிட்டல் மற்றும் தொழில்முனைவோர் துறையில் ஆற்றிய முன்னோடிப் பங்களிப்பிற்காக, மேட்ரிமோனி.காம் (பாரத் மேட்ரிமோனி) நிறுவனத்தின் நிறுவனர், தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் & தலைமைச் செயல் அதிகாரி திரு. முருகவேல் ஜானகிராமன் அவர்களுக்கு 2026 ஆம் ஆண்டிற்கான ஜிஆர்ஜி டிரெயில்பிளேசர் விருது வழங்கப்பட்டது.

இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக, பெண்களின் தலைமைத்துவத்திற்கான சந்திரகாந்தி ஃபெலோஷிப் திட்டம் தொடங்கப்பட்டது. இது முறையான வழிகாட்டுதல் மற்றும் தலைமைத்துவ மேம்பாட்டின் மூலம் எதிர்கால பெண் தலைவர்களை வளர்க்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்ட ஒரு முயற்சியாகும். இந்தத் திட்டம், பெண்களின் அதிகாரமளித்தல் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய தலைமைத்துவத்திற்கான ஜிஆர்ஜி அறக்கட்டளையின் நீண்டகால அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டியது. கூடுதலாக, பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் புகழ்பெற்ற முன்னாள் மாணவிகள், தங்களின் தொழில்முறைச் சிறப்பு மற்றும் அந்தந்தத் துறைகளில் அவர்கள் ஆற்றிய தொடர்ச்சியான பங்களிப்புகளை அங்கீகரிக்கும் விதமாக, கே.சி.டபிள்யூ பிராண்ட் தூதுவர்களாக கௌரவிக்கப்பட்டனர். கௌரவிக்கப்பட்டவர்களில் ஹீரோ ஃபின்கார்ப் லிமிடெட்டின் மூத்த கடன் ஒப்புதல் அதிகாரி சிஏ திருமதி. ரமா மீனாட்சி; இந்திய அரசின் வருமான வரித் துறை துணை ஆணையர் திருமதி. லீனா அன்டோனெட் மரியா, ஐ.ஆர்.எஸ்; மற்றும் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், அமெரிக்காவின் வணிக மதிப்பீடு, காப்பீடு மற்றும் இடர் மேலாண்மைத் துணைத் தலைவர் திருமதி. புவனேஸ்வரி முரளி ஆகியோர்  அடங்கினர். அவர்களின் பயணங்கள், தலைமைத்துவம் மற்றும் சேவைக்கு உத்வேகம் அளிக்கும் முன்மாதிரிகளாகத் திகழ்ந்தன. இது பெண்களை உலக அளவில் சிறந்து விளங்கச் செய்யும் நிறுவனத்தின் நீடித்த பாரம்பரியத்தைப் பிரதிபலித்தது. இந்த நிகழ்வு ஜி.ஆர்.ஜி/கே.சி.டபிள்யூ-வின் ஆலோசகர் பேராசிரியர் எஸ். பாலசுப்பிரமணியன் அவர்களின் நன்றியுரையுடன் நிறைவடைந்தது.

இந்த நிறுவனர்கள் தினக் கொண்டாட்டங்கள், அறங்காவலர்கள், நிர்வாகம், ஆசிரியர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் கல்வித்துறை, தொழில் துறை மற்றும் பொதுச் சேவையைச் சேர்ந்த முக்கிய விருந்தினர்களை ஒன்றிணைத்து, அறக்கட்டளையின் கல்விச் சிறப்பு மற்றும் சமூகப் பொறுப்பு ஆகியவற்றின் பாரம்பரியத்திற்கு ஒரு அர்த்தமுள்ள அஞ்சலியைச் செலுத்தின.

Continue Reading

செய்திகள்

சிறுதுளி அமைப்புக்கு தமிழக அரசு சார்பில் விருது!

Published

on

நீர் பாதுகாப்புத் துறையில் செயல்பட்டு வரும் தன்னார்வ தொண்டு நிறுவனமான சிறுதுளி, 3 முக்கிய அறிவிப்புகளைப் பகிர்ந்துகொள்வதற்காக செய்தியாளர் சந்திப்பை ஏற்பாடு செய்தது.

இந்தச் செய்தியாளர் சந்திப்பிற்கு சிறுதுளியின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் தலைமை தாங்கினார். அவருடன் அறங்காவலர் சதீஷ் ஜே, வழிகாட்டுதல் குழு உறுப்பினர் சந்திரசேகர் வி, வழிகாட்டுதல் குழு உறுப்பினர் சுஜனி பாலு மற்றும் சிறுதுளியின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி சின்னசாமி சி ஆகியோரும் உடனிருந்தனர்.

சிறுதுளி தனது 22 ஆண்டுகாலப் பயணத்தில் கோயம்புத்தூரில் 10 லட்சம் மரங்களை நட்டுள்ளது என்றும், 2026-ஆம் ஆண்டில் மாநகராட்சி அதிகாரிகளின் செயல்படுத்தும் ஆதரவுடன் கோயம்புத்தூரின் பல்வேறு பகுதிகளில் 1 லட்சம் மரங்களை நட இலக்கு நிர்ணயித்துள்ளது என்றும் அவர்கள் தெரிவித்தனர். மேலும், சிறுதுளி இந்து சமய அறநிலையத் துறையுடன் இணைந்து, கோயில் நிலங்களை சுற்றுச்சூழல் மறுசீரமைப்புக்குப் பயன்படுத்தும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

தற்போது, சிறுதுளி கரூர் வைஸ்யா வங்கியின் ஆதரவுடன் கீழ்சித்திரை சாவடி மற்றும் புதுக்காடு தடுப்பணைகளில் மேற்கொள்ளப்படும் பணிகள் உட்பட பல நீர்நிலைகள் புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளது. மேலும், டைட்டன் லிமிடெட் நிறுவனத்தின் ஆதரவுடன் மாசோரம்பு ஓடையின் இரண்டாம் கட்டப் பணிகளையும் மேற்கொண்டுள்ளது.

கீழ்சித்திரை சாவடி மற்றும் புதுக்காடு தடுப்பணைகளின் பணிகள் நிறைவடையும்போது, அது சுமார் 60 மில்லியன் லிட்டர் தண்ணீரைச் சேமிக்க உதவும். மேலும், நிலத்தடி நீரைச் செறிவூட்டுவதன் மூலமும், விவசாய உற்பத்தித்திறனை மேம்படுத்துவதன் மூலமும் அப்பகுதியைச் சுற்றியுள்ள 1000 விவசாயிகளுக்குப் பயனளிக்கும். அதேபோல், மாசோரம்பு ஓடையில் செய்யப்பட்ட புனரமைப்புப் பணி 100 மில்லியன் லிட்டர் தண்ணீரைச் சேமிக்க உதவியுள்ளது. இரண்டாம் கட்டப் பணிகள் மேலும் 50 மில்லியன் லிட்டர் தண்ணீரைச் சேமிக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறுதுளி சென்னையிலும் தனது பணிகளைத் தொடங்கியுள்ளது. இது சோழிங்கநல்லூரில் அமைந்துள்ள ஓடைக்கேணி வண்ணங்குளத்தை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. அதன் நீர் கொள்ளளவை 19 மில்லியன் லிட்டராக உயர்த்துவதே இதன் இலக்காகும். 2 தசாப்தங்களுக்கும் மேலாக கோயம்புத்தூரில் பணியாற்றி வரும் சிறுதுளி, திருப்பூர், கரூர், ஈரோடு, சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும் நீர்நிலை புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களிலும் நுழைந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்திற்கும் தனது பங்களிப்பை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.

“தமிழ்நாடு அரசுக்கு அவர்களின் மகத்தான ஆதரவிற்காக நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம். நாங்கள் செய்யும் பணிகளை அவர்கள் ஆழமாகப் புரிந்துகொண்டு, நீர்நிலைகளில் பணியாற்றுவதற்கும் அவற்றை மீட்டெடுப்பதற்கும் எங்களுக்கு அதிகாரப்பூர்வ அனுமதியை வழங்குகிறார்கள். திட்டங்களில் பணியாற்றுவதற்கு விரைவான அனுமதிகளை வழங்குவதைத்தான் நாங்கள் அவர்களிடம் இருந்து மேலும் எதிர்பார்க்கிறோம்,” என்று வனிதா மோகன் கூறினார்.

சிறுதுளியின் தொடர்ச்சியான முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையிலும், தமிழ்நாட்டின் நீர் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மீள்தன்மைக்கு பங்களிக்கும் அமைப்புகளை ஊக்குவிக்கும் வகையிலும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், திங்களன்று சென்னையில் நடைபெற்ற ஒரு விழாவில் சிறுதுளிக்கு மாநில அளவிலான விருதை வழங்கினார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஆழப்படுத்துவதற்கும், மாநிலத்தின் இயற்கை பாரம்பரியத்துடன் குடிமக்களை மீண்டும் இணைப்பதற்கும் தனது முயற்சிகளின் ஒரு பகுதியாக, சிறுதுளி அமைப்பு, பரவலாகப் பாராட்டப்பட்ட ‘வைல்ட் தமிழ்நாடு’ என்ற ஆவணப்படத்தின் சிறப்புத் திரையிடலை 2026 ஜனவரி 26 அன்று PSG IMSR அரங்கில் ஏற்பாடு செய்துள்ளது என்று சிறுதுளியின் அறங்காவலர் ஜே. சதீஷ் தெரிவித்தார்.

புகழ்பெற்ற வனவிலங்கு திரைப்படத் தயாரிப்பாளர் கல்யாண் வர்மாவால் 5 ஆண்டுகளுக்கும் மேலாகப் படமாக்கப்பட்ட இந்த ஒரு மணி நேர ஆவணப்படம், தமிழ்நாட்டின் பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளான காடுகள், ஈரநிலங்கள், புல்வெளிகள் மற்றும் கடலோர வாழ்விடங்களை உயிரோட்டமாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. இதன் காட்சிகளில் கிட்டத்தட்ட 50% கோயம்புத்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளதால், இந்தத் திரைப்படம் உள்ளூர் பார்வையாளர்களுக்கு மிகவும் பொருத்தமானதாக அமைகிறது.

இந்தத் திரையிடலின் நோக்கம், மாநிலத்தின் செழுமையான பல்லுயிர்ப் பெருக்கத்தின் மீதான பாராட்டுகளைத் தூண்டுவது, பாதுகாப்பு நடவடிக்கைகளின் அவசரத்தை எடுத்துரைப்பது மற்றும் இயற்கை சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதில் குடிமக்கள் தீவிரமாகப் பங்கேற்க ஊக்குவிப்பது ஆகும். இந்தத் திரையிடல் மூலம் கிடைக்கும் டிக்கெட் பங்களிப்புகள் நேரடியாக சிறுதுளியின் மரம் நடும் முயற்சிகளுக்குப் பயன்படுத்தப்பட்டு, விழிப்புணர்வை உறுதியான சுற்றுச்சூழல் நடவடிக்கையாக மாற்றும்.

ஜனவரி 26 அன்று மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை திரையிடப்படும். டிக்கெட் கட்டணம் ரூ.500. டிக்கெட் மூலம் வசூலாகும் தொகை முழுவதும் மரக்கன்றுகளை நடுவதற்கும் பராமரிப்பதற்கும் பயன்படுத்தப்படும், என தெரிவித்தனர்.

Continue Reading

Trending