Connect with us

செய்திகள்

டிஜே அகாடமி ஆஃப் டிசைன் கல்லூரியின் புதிய லோகோ அறிமுகம்!

Published

on

டிஜே  அகாடமி ஆஃப்  டிசைன் கல்லூரி, சி.ஐ.ஐ.- யங் இந்தியன்ஸ் சார்பில் “லெட்ஸ் டாக் இன் கோவை” எனும் தனித்துவமான கலந்துரையாடல் நிகழ்ச்சி துவக்கம்.

 

டிஜே  அகாடமி ஆஃப்  டிசைன் கல்லூரி சார்பில் படைப்பு துறை, கலை, மேடை நாடகம், திரைப்படம், சமூக அறிவியல், ஆராய்ச்சி மற்றும் தொழில்துறை என பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள், சிந்தனையாளர்கள், முன்னோடிகளை ஒரே மேடையில் அணிதிரட்டி, அவர்களை கொண்டு கோவை பற்றிய தொடர் கலந்துரையாடல் நிகழ்ச்சி “லெட்ஸ் டாக் இன் கோவை”  (பேசலாம் கோவையில்…) ஒன்றை நடத்திட முடிவு செய்யப்பட்டு, அதன் முதல் நிகழ்ச்சி இன்று (22.1.26) மணி மேல்நிலை பள்ளியில் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியானது  முழுமையான, சமூகப் பொறுப்புணர்வுமிக்க மற்றும் தொழில்முறை சார்ந்த கல்வியை வழங்குவதில் டிஜே அகாடமி ஆஃப்  டிசைன் கல்லூரி கொண்டுள்ள உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. அத்துடன் கோவை மாநகரின் நலனுக்காக பல்வேறு துறைகளை ஒருங்கிணைக்கும் ஒரு கல்விச் சூழலை வழங்க இது முயல்கிறது. இந்த நிகழ்வில் எல்.எம்.டபிள்யு. லிமிடெட்டின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சஞ்ஜய் ஜெயவர்த்தனவேலு; ஜி.கே.டி. சேரிட்டி டிரஸ்டின் அறங்காவலர் லலிதா தேவி சஞ்ஜய் ஜெயவர்த்தனவேலு; டிஜே  அகாடமி ஆஃப்  டிசைன் கல்லூரி டீன் வைத்தியநாதன் ராமசுவாமி; கல்லூரியின் நிர்வாக குழு உறுப்பினர் மைக்கல், யங் இந்தியன்ஸ் கோவை கிளையின் தலைவர் நீல் கிக்கானி; சிறப்பு அழைப்பாளர்கள், பல்வேறு துறை நிபுணர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

‘உள்ளூர் கதைகளும், உலக அளவிலான விவாதங்களும்’ என தலைப்பிடப்பட்ட முதல் சொற்பொழிவு இன்று நடைபெற்றது. இதில் இந்திய அனிமேஷன் துறையில் ஒரு முன்னோடியாக திகழும் சுரேஷ் ஏரியாட் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.  இதன் பின்னர் டிஜே  அகாடமி ஆஃப்  டிசைன் கல்லூரியின் புதிய லோகோ வெளியிடப்பட்டது. இத்துடன் சுரேஷ் அவர்களின் சிறந்த திரைப்படைப்புகள் சில காட்சிப்படுத்தப்பட்டது. டிஜே  அகாடமி ஆஃப்  டிசைன் கல்லூரி வழங்கிய இந்த நிகழ்ச்சி இந்திய தொழில் கூட்டமைப்பு  சி.ஐ.ஐ.-யின் அங்கமான யங் இந்தியன்ஸ் – கோவை கிளை அமைப்புடன் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு எல்.எம்.டபிள்யு. லிமிடெட் ஆதரவளித்தது. நிகழ்வின் போது, எல்.எம்.டபிள்யு. லிமிடெட்டின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் சஞ்ஜய் ஜெயவர்த்தனவேலு மற்றும் சுரேஷ் ஏரியாட் இணைந்து  சி.ஐ.ஐ.  புதிய லோகோ-வை அறிமுகம் செய்து வைத்தனர்.

 

அவரை தொடர்ந்து ‘உள்ளூர் கதைகளும், உலக அளவிலான விவாதங்களும்’ எனும் தலைப்பில் சுரேஷ் ஏரியாட் பேசினார்.  சுரேஷ் ஏரியாட், 1973-ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்தவர். இந்திய அனிமேஷன் துறையின் போக்கையே மாற்றியமைத்த ஒரு முன்னோடியாக அறியப்படுகிறார். அகமதாபாத் தேசிய வடிவமைப்பு நிறுவனத்தின் முன்னாள் மாணவரான இவர், அனிமேஷன் என்பது வெறும் சிறுவர்களுக்கான பொழுதுபோக்கு மட்டுமல்ல, அது ஒரு வலிமையான கதைசொல்லும் ஊடகம் என்பதை உலகிற்கு நிரூபித்தவர். 400க்கும் மேற்பட்ட படங்களில் இவரின் அனிமேஷன் ஆளுமை வெளிப்பட்டுள்ளது. இவரின் தனித்துவம் கொண்ட திறமையால் 100க்கும் அதிகமான தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை வென்றுள்ளார். 2015-இல் இவரது ‘ஃபேட்லைன்’  திரைப்படம், அனிமேஷன் உலகின் உயரிய விருதான ‘அன்னெசி கிறிஸ்டல்’ விருதை இந்தியாவிற்கு முதன்முதலில் பெற்றுத் தந்தது. மேலும் 2016ல் வெளிவந்த இவரது ‘ஃபிஷர் வுமன் அண்ட் டுக் டுக்’ , 2018ல் வெளிவந்த ‘டோக்ரி’ மற்றும் 2022ல் வெளிவந்த ‘கண்டிட்டுண்டு’  ஆகிய படைப்புகளுக்காக இந்தியக் குடியரசுத் தலைவரிடம் இருந்து மூன்று தேசிய விருதுகளைப் பெற்றுள்ளார். இவரது சமீபத்திய படைப்பான ‘தேசி ஊன்’, 2025ம் ஆண்டின் அன்னெசி விருதை வென்றுள்ளது.

“லெட்ஸ் டாக் இன் கோவை” யின் கீழ் ‘உள்ளூர் கதைகளும், உலக அளவிலான விவாதங்களும்’ என தலைப்பிடப்பட்ட முதல் சொற்பொழிவில் பேசிய சுரேஷ்,  கேரளாவின் திருப்பூணித்துறையில் தொடங்கிய தனது ஆரம்பகால வாழ்க்கை, கல்விப்பயணம் மற்றும் விளம்பரத்துறையில் அவர் நிகழ்த்திய சாதனைகள் முதல் ‘ஸ்டுடியோ ஈக்சாரஸ்’ எனும் நிறுவனத்தை உருவாக்கியது வரையிலான தனது படைப்புப் பயணத்தைப் பகிர்ந்து கொண்டார்.அத்துடன், விருது பெற்ற தனது திரைப்படங்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட காட்சிகள் வாயிலாக, சமூக-கலாசார யதார்த்தங்களில் வேரூன்றிய உள்ளூர் கதைகள் எவ்வாறு உலக அரங்கில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதையும் அவர் விளக்கினார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

செய்திகள்

 பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Published

on

 பாஜக வேட்பாளர் பட்டியல்

விளவங்கோடு: எஸ். விஜயதரணி

அறந்தாங்கி: கவிதா ஸ்ரீகாந்த்

உதகமண்டலம்: போஜராஜன்

அவினாசி (SC): டாக்டர் எல். முருகன்

திருப்பூர் (தெற்கு): எஸ். தங்கராஜ்

கோயம்புத்தூர் (வடக்கு): வானதி சீனிவாசன்

திருவண்ணாமலை: சி. ஏழுமலை

ராசிபுரம் (SC): டாக்டர் எஸ்.டி. பிரேம்குமார்

மொடக்குறிச்சி: கீர்த்திகா சிவகுமார்

திருவாரூர்: கோவி சந்துரு

தஞ்சாவூர்: எம். முருகானந்தம்

கந்தர்வகோட்டை (SC): சி. உதயகுமார்

புதுக்கோட்டை: என். ராமச்சந்திரன்

திருப்பத்தூர்: கே.சி. திருமாறன்

மானாமதுரை (SC): பொன். வி. பாலகணபதி

மதுரை தெற்கு: பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன்

சாத்தூர்: நயினார் நாகேந்திரன்

ராமநாதபுரம்: ஜி.பி.எஸ். கே. நாகேந்திரன்

திருச்செந்தூர்: கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன்

வாசுதேவநல்லூர் (SC): அனந்தன் அய்யாசாமி

ராதாபுரம்: எஸ்.பி. பாலகிருஷ்ணன்

நாகர்கோவில்: எம்.ஆர். காந்தி

குளச்சல்: டி. சிவகுமார் ப

த்மநாபபுரம்: பி. ரமேஷ்

 

Continue Reading

அரசியல்

வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்!

Published

on

தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் 23 ஆம் தேதி nநடைபெற இருக்கிறது , அனைத்து கட்சிகளுமே கூட்டணியை இறுதி செய்து, வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தை துவங்கிய நிலையில் காங்கிரஸ் மற்றும் பாஜக அறிவிக்கப்படாமல் இருந்தது . இன்று இரு கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்தது இதில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள்

வேட்பாளர் பட்டியல்

பொன்னேரி (எஸ்சி)- துரை சந்திரசேகர்

வேளச்சேரி- அசன் மௌலானா

ஸ்ரீபெரும்புதூர் (எஸ்சி)- செல்வப்பெருந்தகை

சோளிங்கர்- ஏ.எம். முனிரத்தினம்

ஊத்தங்கரை (எஸ்சி)- ஆர்.குப்புசாமி

கிருஷ்ணகிரி- ஏ. செல்ல குமார்

பென்னாகரம்- ஜிகேஎம் தமிழ் குமரன்

ஆத்தூர் (எஸ்சி)- எஸ்.கே.அர்த்தனாரி

ஈரோடு கிழக்கு- கோபிநாத் பழனியப்பன்

உதகமண்டலம்- பி.ராமச்சந்திரன்

கவுண்டம்பாளையம்- கே.பி. சூர்ய பிரகாஷ்

சிங்காநல்லூர்- V. ஸ்ரீநிதி நாயுடு

துறையூர் (எஸ்சி)- விச்சு லெனின் பிரசாத்

கடலூர்- ஏ.எஸ். சந்திரசேகரன்

மயிலாடுதுறை- ஜமால் யூனுஸ் முகமது

அறந்தாங்கி- டி.ராம சந்திரன் காரைக்குடி- எஸ்.மாங்குடி

உசிலம்பட்டி- டி.சரவண குமார்

சிவகாசி- கணேசன் அசோகன்

திருவாடானை- ராம கருமாணிக்கம்

ஸ்ரீவைகுண்டம்- எஸ்.ஊர்வசி அமிர்தராஜ்

சங்கரன்கோவில் (எஸ்சி)- சங்கை கணேசன்

அம்பாசமுத்திரம்- வி.பி. துரை

நாங்குநேரி- ரூபி மனோகரன்

குளச்சல்- டாக்டர் தாரகை குத்பர்ட்

விளவங்கோடு- டி.டி.பிரவீன்

கிள்ளியூர்- எஸ். ராஜேஷ் குமார்

Continue Reading

செய்திகள்

விஜய்க்கு மொத்தம் ரூ.520 கோடி சொத்து.

Published

on

விஜய்க்கு மொத்தம் ரூ.520 கோடி சொத்து:

ரூ.520 கோடி தன்னுடைய வேட்புமனுவில் மொத்த சொத்து மதிப்பாக விஜய் குறிப்பிட்டுள்ளார்.

இதில் ரூ.404.58 கோடி அசையும் சொத்துகள் ரூ.115.13 கோடி அசையா சொத்துகள் எனக் கூறியுள்ளார்.

விஜயின் அப்பா, அம்மா, மனைவி, மகன், மகள் என குடும்பத்தில் அனைவருமே விஜய்க்கு கடனாளிகள்.

மனைவி சங்கீதாவுக்கு ரூ.12 கோடி, அப்பா சந்திரசேகருக்கு ரூ.3 கோடி, அம்மா ஷோபாவுக்கு ரூ.87 லட்சம், மகன் ஜேசனுக்கு ரூ.8 லட்சம், மகள் ஷாஷாவுக்கு ரூ.4 லட்சம் கடன் வழங்கியுள்ளார் விஜய்.

விஜய்யிடம் BMW 530, Toyoto Lexus 350, Toyoto vellfire, BMW 17, Maruti Swift, TVS XL SUPER என ரூ.7.52 கோடி மதிப்பிலான வாகனங்கள் உள்ளன. விஜய் தாக்கல் செய்த வேட்பு மனுவில் தகவல்.

சுமார் ரூ.3.44 கோடி வருவாய் தொடர்பாக 4 வருமான வரி வழக்குகள் நிலுவையில் இருப்பதாக வேட்புமனுவில் விஜய் தகவல்.

சுமார் ரூ.1.64 கோடி மதிப்பிலான கடன் பொறுப்புகள் தகராறில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தன்னிடம் ரூ.1.20 கோடி மதிப்பிலான தங்கம், ரூ.15 லட்சம் மதிப்பிலான வெள்ளி, மனைவி சங்கீதாவிடம் ரூ.4 கோடி மதிப்பிலான தங்கம், ரூ. 1 கோடி மதிப்பிலான வைரம் உள்ளதாக தெரிவித்துள்ளார் விஜய்.

நடிப்பை தாண்டி ரியல் எஸ்டேட் அதிபராகவும் உள்ளார் விஜய். ஜெயா நகர் ப்ராபர்டி பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக உள்ளதாக வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார்.

தவெக தலைவர் விஜய்க்கு நீலாங்கரை – 1, ஊரூர் – 1, மயிலாப்பூர் – 1, பள்ளிப்பட்டு – 1, படூர் – 1, கொரட்டூர் – 1, சாலிகிராமம் – 2, சோழிங்கநல்லூர் – 2 என மொத்தம் 10 வீடுகள் உள்ளதாக வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading

Trending