Connect with us

விளையாட்டு

சிறப்பாக நடைபெற்ற எம்எஸ்டி ரெட் டிராகன் சீசன் 5 கிரிக்கெட் போட்டி!

Published

on

எம்எஸ்டி ரெட் டிராகன்ஸ் சார்பில் நடத்தப்பட்ட ரெட் டென்னிஸ் பால் கிரிக்கெட் போட்டி சீசன் 5.

கோவை பேரூர் அருகே கடந்த சனிக்கிழமை தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த கிரிக்கெட் தொடரை நல்லறம் அறக்கட்டளை தலைவர் எஸ்.பி. அன்பரசன் கிரிக்கெட் விளையாடி தொடங்கி வைத்தார்.

சுமார் 32 அணிகள் மோதிய இந்த தொடரின் இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெற்றது. இதில் ரேஞ்சர்ஸ் 11 மற்றும் போத்திஸ் கோவை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ரேஞ்சர்ஸ் 11 அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த போத்திஸ் கோவை சூப்பர் கிங்ஸ் அணி 8 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 99 ரன்கள் எடுத்தது. பின்னர் 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ரேஞ்சர்ஸ் 11 அணி 8 ஓவர் முடிவில் 48 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இதனால் போத்திஸ் கோவை சூப்பர் கிங்ஸ் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

போத்திஸ் கோவை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சிறப்பாக ஆடிய பப்பு பிரசாத் “ஆட்டநாயகன்” விருதைப் பெற்றார்.

“தொடர்நாயகன்” விருதை ஆர்டிஎக்ஸ் அணி வீரர் விஜய்க்கு வழங்கப்பட்டது.

சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய அணிக்கு முதல் பரிசாக 20,000 ரூபாயும் 6 அடி கோப்பையும், இரண்டாவது இடத்தைப் பிடித்த அணிக்கு 15,000 ரூபாயும் 5 அடி கோப்பையும் வழங்கப்பட்டது. மூன்றாவது இடத்தை எம்ஆர்சிசி அணிக்கு 8,000 ரூபாய் பரிசுத் தொகையும் 4 அடி கோப்பையும், நான்காவது இடத்தை ஆர்ஜே பிரோதெரஸ் அணிக்கு 5,000 ரூபாய் பரிசுத் தொகையும் 3 அடி கோப்பையும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் அதிமுக கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் செ. தாமோதரன் அவர்கள் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கி கவுரவித்தார். கவுண்டனூர் வி. பிரசாத், ஜி.பி. பாபு, ரோட்டரி எஸ். மணிகண்டன், ஏ.சி. சிவகுமார், நந்தகுமார், சசிகுமார், பிரவின், பேரூர் வியாபாரிகள் சங்கத்தினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்த கிரிக்கெட் தொடரை எம்எஸ்டி ரெட் டிராகன் அணி சார்பாகா வி. பிரசாத், எம்எஸ்டி முத்துக்குமார் மற்றும் குழுவினரால் சிறப்பாக நடத்தப்பட்டது. மேலும் இந்த நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்ய உதவிய ஸ்பான்சர்கள் வைஷன் சாரிடபிள் டிரஸ்ட், பிர்லா ஓபன் மைண்ட்ஸ் இன்டர்நேஷனல் ஸ்கூல் ,ஓகே ஸ்வீட்ஸ் & ஸ்னாக்ஸ், நைனா கடை ஆகியோருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

சென்னை

டென் டென் செஸ் அகாடமி – 12வது தமிழ்நாடு மாநில அளவிலான குழந்தைகள் சதுரங்கப் போட்டி 2026

Published

on

டென் டென் செஸ் அகாடமி ஏற்பாட்டில் நடைபெற்ற 12வது தமிழ்நாடு மாநில அளவிலான குழந்தைகள் சதுரங்கப் போட்டி, 2026 பிப்ரவரி 15ஆம் தேதி சென்னை, சோளிங்கநல்லூரில் உள்ள ஸ்ரீ ஐயப்பா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் வெற்றிகரமாக நடைபெற்றது. ஒருநாள் நடைபெற்ற இந்தப் போட்டியில், மாநிலத்தின் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த மொத்தம் 245 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

பல்வேறு பிரிவுகளில் 120 கோப்பைகளும், 40 பதக்கங்களும் வழங்கப்பட்டன. மேலும், மிக இளம் வயது பங்கேற்பாளருக்கும், சிறப்பாக செயல்பட்ட சதுரங்க அகாடமிகளுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டு, தனிநபர் திறமைகளும் இளையோர் சதுரங்க வளர்ச்சிக்கு அளித்த நிறுவன பங்களிப்புகளும் பாராட்டப்பட்டன.

இந்தப் போட்டி, 7 வயதுக்குட்பட்டோர் (U7), 9 வயதுக்குட்பட்டோர் (U9), 11 வயதுக்குட்பட்டோர் (U11) மற்றும் 13 வயதுக்குட்பட்டோர் (U13) ஆகிய பிரிவுகளில் நடைபெற்றது.

U7 பிரிவு:

சென்னையைச் சேர்ந்த தக்ஷிணேஸ்வர் S. P. 5.5/6.0 புள்ளிகளுடன் U7 ஆண்கள் பிரிவில் முதல் இடம் பெற்றார். செங்கல்பட்டையைச் சேர்ந்த சம்யுக்தா P. 5.0/6.0 புள்ளிகளுடன் U7 பெண்கள் பிரிவில் வெற்றி பெற்றார்.

U9 பிரிவு:

சென்னையைச் சேர்ந்த த்ரிஷாந்த் P. 5.5/6.0 புள்ளிகளுடன் U9 ஆண்கள் பிரிவில் முதலிடம் பெற்றார். செங்கல்பட்டையைச் சேர்ந்த பிரகதி 5.0/6.0 புள்ளிகளுடன் U9 பெண்கள் பிரிவில் வெற்றி பெற்றார்.

U11 பிரிவு:

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஹர்ஷா வர்தன் S. 6.0/6.0 என்ற முழு மதிப்பெண்களுடன் U11 ஆண்கள் பிரிவில் முதலிடம் பெற்றார். செங்கல்பட்டையைச் சேர்ந்த லக்ஷிதா M. 5.0/5.0 புள்ளிகளுடன் U11 பெண்கள் பிரிவில் வெற்றி பெற்றார்.

U13 பிரிவு:

செங்கல்பட்டையைச் சேர்ந்த நவ்நீத் கலியப்பெருமாள் 6.0/6.0 என்ற முழு மதிப்பெண்களுடன் U13 ஆண்கள் பிரிவில் முதலிடம் பெற்றார். சென்னையைச் சேர்ந்த மேஹநேத்ரா M. 4.0/6.0 புள்ளிகளுடன் U13 பெண்கள் பிரிவில் வெற்றி பெற்றார்.

பரிசுகளை ஸ்ரீ ஐயப்பா பள்ளி ஒருங்கிணைப்பாளர் திரு. கிருஷ்ணகுமார், டென் டென் செஸ் அகாடமி தலைவர் திரு. S. R. ஜனகிராமன், இணைச் செயலாளர் திருமதி கோமதி மற்றும் டென் டென் செஸ் அகாடமியின் திருமதி விஜி ஆகியோர் வழங்கினர். மேலும், மேடையில் போட்டி அமைப்பாளர் திரு. S. J. அமர்நாத் மற்றும் முதன்மை நடுவர் திருமதி I. A. S. கனிமொழி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Continue Reading

விளையாட்டு

மாநில அளவிலான 12-வது குழந்தைகள் சதுரங்கப் போட்டி பிப்.15-ல் சென்னையில் நடைபெறுகிறது

Published

on

டென் டென் செஸ் அகாடமி சார்பில் நடத்தப்படும் 12-வது மாநில அளவிலான குழந்தைகள் சதுரங்கப் போட்டி – 2026, வரும் பிப்ரவரி 15 (ஞாயிற்றுக்கிழமை) அன்று சென்னையில் நடைபெறவுள்ளது.

இந்தப் போட்டி, தமிழ்நாடு சதுரங்க சங்கத்தின் (TNSCA) அனுமதியுடன், சிறீ ஐயப்பா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, சோழிங்கநல்லூர் வளாகத்தில் நடைபெறுகிறது.

மாநிலம் முழுவதும் இருந்து பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ளும் இந்தப் போட்டியில் 7, 9, 11 மற்றும் 13 வயது பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும் தனித்தனியாக பரிசுகள் வழங்கப்படுகின்றன. சிறுவர்கள் பிரிவில் 15 கோப்பைகள் மற்றும் 5 பதக்கங்கள், சிறுமிகள் பிரிவில் 15 கோப்பைகள் மற்றும் 5 பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன.

 

போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் காலை 8.45 மணிக்குள் அறிக்கை செய்ய வேண்டும். போட்டிகள் காலை 9.30 மணிக்கு தொடங்கும். மாலை 5.00 மணிக்கு பரிசளிப்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இளம் வயதிலேயே சதுரங்கத்தில் மாணவர்களின் ஆர்வத்தையும் அறிவுத்திறனையும் வளர்க்கும் நோக்கில் இந்தப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக டென் டென் செஸ் அகாடமி நிர்வாகி அமர்நாத் தெரிவித்தனர்.

போட்டி குறித்த கூடுதல் விவரங்களுக்கு +91 84382 21095 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Continue Reading

விளையாட்டு

கோயம்புத்தூர் மாவட்ட கிரிக்கெட் சங்கதின் 67வது ஆண்டுவிழா

Published

on

கோயம்புத்தூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் (சிடிசி ) தனது 67வது ஆண்டு விழாவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தின் எஸ்என்ஆர் அரங்கில் சிறப்பாக கொண்டாடியது

இந்த விழாவில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் தலைவர் டி.ஜே.ஸ்ரீநிவாசராஜ் தலைமை விருந்தினராக கலந்துகொண்டார் . இந்த நிகழ்ச்சியில் கோயம்புத்தூர் மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் டி.லஷ்மி நாராயணசாமி, கௌரவ செயலாளர் ஆர்.சந்திர மௌளி, துணைத் தலைவர்கள் ஆர்.சுந்தர், என்.நாராயணன் மற்றும் கே.ஆர். தினேஷ், இணைச் செயலாளர்கள் கே. மகாலிங்கம் மற்றும் சுரேஷ் குமார், பொருளாளர் சுந்தர் ஆகியோர் உட்பட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.விழாவில் தலைமை மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு மரியாதை செய்து நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.

வர்கள் தங்கள் உரையில், அடித்தள மட்டத்தில் கிரிக்கெட்டை வளர்ப்பதில் கோயம்புத்தூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் மேற்கொண்டு வரும் தொடர் முயற்சிகளை பாராட்டியதுடன், மாநில மற்றும் தேசிய கிரிக்கெட்டில் கோவையின் சிறப்பான பங்களிப்பையும் குறிப்பிட்டனர். திறமையான வீரர்களை கண்டறிதல், உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் நிர்வாக சிறப்பிற்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினார்.

Continue Reading

Trending