Connect with us

Entertainment

வித்தியாசமான பிளாக் ஹோல் ஃபேன்டஸி படம்!

Published

on

விரைவில் வெள்ளித்திரையில் வரவிருக்கும் ரெட் அண்ட் பாலோ திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர் திரு.வணக்கம் தமிழா சாதிக் அவர்கள் நமது E-BEHIND  இதழுக்காக கொடுத்த பிரத்தியேகப் பேட்டி!

 

  • ரெட் அண்ட் பாலோ படத்தை பற்றி?

இது ஒரு டார்க் ,பேண்டசி காமெடி திரில்லர் மூவி. பிக் பாஸ் பிரபலங்கள் 5 பேர் இதில் நடித்துள்ளனர். ஜாலியான படமாக எடுத்துள்ளேன். நான் ஒரு வெங்கட் பிரபு ரசிகன் அவருடைய படம் எப்படி இருக்குமோ அதே போல் எடுத்துள்ளேன். கண்டிப்பாக அனைவரும் ரசிக்கும் படி இருக்கும் இந்த ரெட் அண்ட் பாலோ.

  • பிக் பாஸ் பிரபலங்கள் அதிகம் பேர் படத்தில் இருக்கிறார்கள் அதற்கானகாரணம் ?

இது திட்டம் போட்டு இதை நாங்கள் செய்யவில்லை.ஒரு நாயகி படத்துக்கு தேவைப்பட்டது, அதனால் யாஷிகா ஆனந்தை தேர்தெடுத்தோம். கதை முக்கியத்துவத்துக்கு அனிதா சம்பத்தை தேர்ந்தெடுத்தோம். காமெடிக்கு ஜி.பி முத்து தேவைப்பட்டார், அதேபோல பயில்வான் ரங்கநாதன் காமெடிக்கு தேவைபட்டது. பெண் காமெடி செய்ய ஜாங்கிரி மதுமிதாவை பயன்படுத்தி உள்ளோம், இது எல்லாம் எதார்த்தமாக நடந்த ஒன்று. ஆனால் இதுவே எங்கள் படத்துக்கு ஒரு ப்ளஸ்ஸாக அமைந்துவிட்டது. பலரும் இது என்ன படமா இல்ல பிக் பாஸ் வீடா என கேட்கும் அளவுக்கு பிரபலம் அடைந்துள்ளது மகிழ்ச்சியே.

  • கருணாகரன், பாலா சரவணனின் பங்களிப்பு இந்த படத்துக்கு எப்படி பட்டது?

கருணாகரன், பாலா சரவணனின் பங்களிப்பு மிக பெரியது கருணாகரன் முக பாவனையை பார்த்தாலே சிரிப்பு வந்துவிடும். சிறந்த நடிகர் அவருடன் பணியாற்றுவது மிக எளிது. அதேபோல பாலா சரவணன் காமெடி டைமிங் வேற லெவல் இருக்கும் காட்சி படமாக்கும் பொழுது ஓவ்வொரு சீன்லயும் சிரிச்சிட்டே இருப்போம் , இனிமையான மனிதர்.

  • இன்று ட்ரெண்டிங்கில் இருக்கும் பலரை படத்தில் பயன்படுத்தி இருக்கிறீர்கள், படத் தேவைக்கா? பட ப்ரமோஷனுக்கா?

இரண்டுக்குமே தான்! இன்னைக்கு இருக்கும் காலகட்டம் டிரேடிங்கை நோக்கி பயணிக்கிறது. டிரேடிங்கை பயன்படுத்தினால் நாமும் ட்ரெண்டிங்கில் இருக்கலாம். எனது படத்தில் நடுவர்கள் அனைவரும் மக்களிடம் ஈசியாக அறியக் கூடியவர்கள் ஆகையால் பயன் படுத்தியுள்ளோம். இருந்தாலும் படத்துக்கு தேவையான ட்ரெண்டிங்கில் இருக்கும் நபர்கள் தான் நடித்துள்ளார்களே தவிர, தேவையில்லமல் யாரையும் நடிக்க வைக்கவில்லை.

  • ராபர்ட் மாஸ்டர் இந்த படத்தின் வில்லன் என்று கேள்வி பட்டோம் உண்மையா ?

ஆமா உண்மை தான் சிறந்த வில்லனாக இதில் நடித்திருக்கிறார். இந்த படத்துக்கு மிகப்பெரிய பலம் ராபர்ட் மாஸ்டர் ஏன் என்றால் நடித்தது மட்டும் இன்று இரண்டு பாடலுக்கு நடன இயக்குனராகவும் பணியாற்றினார். மிகப்பெரிய நடன இயக்குனர் என்பது நாம் அறிந்ததே, ஆனால் புதுமுக இயக்குனருடன் எந்த ஒரு ஈகோவும் இல்லாமல் பழகக் கூடிய நடிகர். நல்ல மனிதர். அவருடன் பணியாற்றியது எனக்கு கிடைத்த பரிசாக எண்ணுகிறேன்.

  • பயில்வான் ரங்கநாதன், ஜி.பி முத்து புது காம்பினேஷன் எப்படி உருவானது ?

இவருடைய காம்பினேஷன் சிறப்பாக இருக்கும் என ஐடியாவை தந்தது இந்த படத்தின் மற்றோரு தயாரிப்பாளர் மகேஷ் அவர்கள். ஒரு முனிவர் கதாபாத்திரம் தேவைப்பட்டது அப்போது இதனை விவாதிக்கும் பொழுது மகேஷ் அவர்கள் தான் பயில்வான் ரங்கநாதன் நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என ஐடியா தந்தார். பயில்வான் ரங்கநாதன், ஜி.பி முத்து வரும் காட்சி சிறப்பாக வந்துள்ளது புதுசாக இருக்கும்.

 

  • இசையமைப்பாளராக இருக்கும் பலர் கதாநாயகனாக வலம் வரும் வேலையில் நீங்கள் இயக்குனராக வேறு பாதையில் பயணிக்க என்ன காரணம்?

பலரும் கதாநாயகனாக களமிறங்கிவிட்டனர் ஓவ்வொருவருக்கும் ஓவ்வொன்று பிடிக்கும் அதை வெளிப்படுத்துகின்றனர். எனக்கு இசை மற்றும் படம் இயக்குவது ரொம்பப் பிடிக்கும், அதனால் இரண்டையும் செய்கின்றேன். இசையில் அனிருத் யுவன் இடத்துக்கு வரவேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது. நான் இயக்கும் படமும் நல்ல வரவேற்பை பெற வேண்டும். நடிகராக வர வாய்ப்பு வந்தால் அதையும் சிறப்பாக செய்வேன் என்ற நம்பிக்கை உள்ளது.

  • படத்திற்க்காக உழைத்தவர்களைப் பற்றி?

இந்த படத்தில் அனைவருமே கடினமாக உழைத்தார்கள். நடிகர்கள் முதல் டெக்நிஷியன்ஸ் என பலரின் உழைப்பால் இந்த படம் சிறப்பாக வந்துள்ளது. குறிப்பாக என்னுடைய மனைவி தனது சிறந்த உழைப்பைத் தந்துள்ளார். பட ஷூட்டிங்கில் சிறிது நேரம் கூட உட்காராமல் வேலை பார்த்தவர். யார் யாருக்கு என்ன தேவை என்பதை அறிந்து என்னுடைய வேலையை முக்கால் வாசி செய்து முடித்துவிடுவார். அதே போல இந்தப் படத்தின் ரைட்டர்
பாபு தமிழ் அவர்கள், கதையில் சிறிது மாற்றம் வேண்டும் என கேட்டாலும் அப்போதே எழுதி கொடுத்து விடுவார், அவருடைய பங்களிப்பு இந்தப் படத்திற்க்கு மிக முக்கியமானது. கேமரா மேன் யுவன் செல்வாவின் உழைப்பு சொல்ல முடியாத அளவுக்கு தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். அனைவரும் தங்களது முழு உழைப்பை கொடுத்துள்ளனர், படம் வெளியானவுடன் உங்களுக்குத் தெரியவரும்.

  • படத்தில் நடித்த பிரபலங்கள் பற்றி ?

ஏற்கனவே கூறியதைப் போல கருணாகரன், பாலா சரவணன், அனைவரும் அறிந்த முகம் யாஷிகா ஆனந்த, பிக் பாஸ் பிரபலம் அழகான எளிமையாக பழகக்கூடிய அனிதா சம்பத் மற்றோரு பிக் பாஸ் பிரபலம் ஜி.பி முத்து அவர்கள், சிறந்த நடிகராக வருவார் செய்யும் செயலில் முழு அர்ப்பணிப்புடன் செய்யக் கூடியவர். ராபர்ட் மாஸ்டர் படத்தின் முக்கிய பங்காற்றியவர். அஜய் வாண்டையார், அபூர்வ ராய், ஜாங்கிரி மதுமிதா, பிஜிலி ரமேஷ் என அனைவரும் இதில் நடித்திருப்பது படத்துக்கும் மட்டுமல்ல எனக்கும் சிறப்பான ஒன்று தான்.

Entertainment

கோவை வி .எல்.பி கல்லுரி விழாவில் நடிகை ஆண்ட்ரியா பங்கேற்று பாடல்களை பாடி மாணவர்களை உற்சாகபடுத்தினார்.

Published

on

கோவையில் கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சியில் பிரபல நடிகை ஆண்ட்ரியா பங்கேற்று பாடல்களை பாடி மாணவர்களை உற்சாகபடுத்தினார்.

கோவையை அடுத்த கோவைபுதூர் பகுதியில் உள்ள வி.எல்.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் கல்லூரிகளுக்கு இடையேயான கலாச்சார நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.இதில் கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

மாணவர்களின் இந்த கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றது இதில் கலந்துகொண்ட பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பிரபல நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா கலந்து கொண்டு மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பாடல்களை பாடி அசத்தினார் . தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் சிறப்பாக திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.

Continue Reading

Entertainment

ஜல்லிக்கட்டு காளையுடன் தியேட்டருக்கு வந்த ரசிகர்கள்

Published

on

நடிகர் விமல் நடிப்பில், ஜல்லிக்கட்டு மற்றும் வடமாடு விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘வடம்’ திரைப்படம் இன்று கோவையில் பிரம்மாண்டமாக வெளியானது. இந்தப் படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, கோவை ரசிகர்கள் செய்த செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

வழக்கமாகத் திரையரங்குகளில் ரசிகர்கள் தாரை தப்பட்டை முழங்க, பாலாபிஷேகம் செய்து கொண்டாடுவது வழக்கம்.

ஆனால், ‘வடம்’ திரைப்படத்தின் கதைக்களம் ஜல்லிக்கட்டைப் பற்றியது என்பதால், கோவையைச் சேர்ந்த ரசிகர்கள் ஒஒருவர் உண்மையான ஜல்லிக்கட்டு காளை ஒன்றை அலங்கரித்து தியேட்டருக்கு அழைத்து வந்தனர்.

கோவை நூறடி சாலையில் உள்ள திரையரங்கில் வடம் பட வெளியீட்டை மேள தாளம் முழங்க திருவிழாவாக ரசிகர்கள் கொண்டாடினர்.

இதனிடையே படம் வெளியாகி உள்ள தி்ரையரங்க வளாகத்திற்கு ஜல்லிக்கட்டு காளையை அழைத்து வந்த ரசிகர்கள் அந்தக் காளைக்கு மாலை அணிவித்து, மரியாதை செய்தனர்.நடிகர் விமலுக்கு நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஒரு ஆக்ஷன் கலந்த எதார்த்தமான படம் வெளிவந்துள்ளது. ஜல்லிக்கட்டின் ஒரு வகையான ‘வடமாடு’ விளையாட்டைப் போற்றும் வகையில் இந்தப் படம் அமைந்துள்ளதால், ரசிகர்கள் காளையுடன் வந்து தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.

இயக்குநர் கேந்திரன் இயக்கத்தில் ராஜசேகர்,வெங்கடேஷ்வரன் மற்றும் பிரபு ஆகியோர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தில், ஜல்லிக்கட்டு காளைகளின் முக்கியத்துவம் மற்றும் கிராமிய வீர விளையாட்டுகளைப் பற்றிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

Continue Reading

Entertainment

காதல், ஆக்ஷன், நிறைந்த கிறிஸ்துமஸ் ‘ரெட்ட தல’ – நடிகர் அருண் விஜய்

Published

on

பீ.டி.ஜி. யுனிவர்சல் நிறுவனம், பாபி பாலச்சந்திரன் தயாரிப்பில், மான் கராத்தே, கெத்து போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் கிரிஸ் திருக்குமரன் இயக்கத்தில், நடிகர் அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து, வரும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு திரைக்கு வரும் ‘ரெட்ட தல’ திரைப்படம் பற்றிய செய்தியாளர் சந்திப்பு நேற்று மாலை கோவையில் நடைபெற்றது.

நடிகர் அருண் விஜய், நடிகை சித்தி இட்னானி (வெந்து தணிந்தது காடு கதாநாயகி) மற்றும் நடிகர் ஜான் விஜய் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

முதலில் பேசிய நடிகர் அருண் விஜய், “இது ஒரு நீண்ட விடுமுறை நாளான கிறிஸ்துமஸ் காலத்தில் வெளிவருகிறது. எந்த ஒரு சமரசமும் இன்றி இந்த படம் மிகவும் தரமாக தயாரிக்கப்பட்டுள்ளது,” எனக் கூறினார்.

திரை ரசிகர்களுடன் எளிதில் கனெக்ட் ஆகும் ஒரு கதையாக இதை இயக்குனர் திருக்குமரன் உருவாக்கியுள்ளார் எனவும், தனது வலிமைகள் அனைத்தையும் வெளிப்படுத்தக்கூடிய ஒரு கதையாக இது தனக்கு கிடைத்துள்ளது எனவும் கூறினார்.

இந்தப் படத்தில் இரண்டு வேடங்களில் நடித்துள்ள நடிகர் அருண் விஜய், அதில் இரண்டு கதாபாத்திரங்களுக்கும் எந்தவித ரத்த சம்பந்தமும் இல்லாமல் இருப்பதும், இருவருக்கும் சில வேறுபாடுகள் இருப்பதையும் காட்டுவதற்கு முயற்சி செய்துள்ளதாக கூறினார்.

அடிப்படையில் இந்த படம் காதலை மையமாகக் கொண்ட ஒரு படம் எனக் கூறிய அவர், “இதில் ஆசைக்கும் பேராசைக்கும் இடையே ஒரு சிறு கோடு உள்ளது. அந்த கோட்டை கடந்து சென்றால் ஏற்படும் பின் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிய சூழல், அதனால் ஏற்படும் சவால்கள் – இதை ஒரு மனிதன் எப்படி கடந்து செல்கிறான் என்பதை இந்த கதை காட்டும்,” என்றார்.
கதைக்கு எங்கெங்கே தேவையோ அங்கங்கே ஆக்ஷன் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில் நிறைய ட்விஸ்ட்களும் எதிர்பாராத இடத்தில் திருப்பங்களும் இருக்கும். கண்டிப்பாக பார்வையாளர்களை இந்த படம் தனது கைக்குள் வைத்திருக்கும் என்று நம்புவதாக கூறினார்.

இசையமைப்பாளர் சாம் சி.எஸ்-ஸின் இசை இந்த படத்தை மேலும் ஒரு கட்டத்திற்கு அழைத்து செல்கிறது என்று கூறிய அவர், இப்படத்தில் நடிகர் தனுஷ் ‘கண்ணம்மா’ எனும் பாடலை பாடியிருக்கிறார் என்று கூறினார்.

Continue Reading

Trending