Connect with us

அரசியல்

அன்றே கணித்தார் மோடி வைரலாகும் வீடியோ !

Published

on

மணிப்பூரில் நடந்த சம்பவத்தை கண்டித்து பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் குரலியெழுப்பி வருகின்றனர் .இதன் தொடர்ச்சியாக மத்திய பாரதிய ஜனதா அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில் 2019நம்பிக்கையில்லா தீர்மானதின் பொது மோடி பேசிய வீடியோ தற்போது “அன்றே கணித்தார் மோடி ” என்ற தலைப்பில் வைரலாகி வருகிறது .

மத்திய அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான இரண்டு நோட்டீஸ்கள் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நாளில், 2019 இல் பாராளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியது தற்போது வைரலாகி வருகிறது, அன்றே கணித்தார் மோடி என பலரும் அந்த விடியோவை பகிர்ந்து வருகின்றனர்.

“எனது வாழ்த்துகளை தெரிவிக்க விரும்புகிறேன்… 2023ல் மீண்டும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் வகையில் தயாராகுங்கள்” என்று மக்களவையில் பிரதமர் மோடி கூறியதும் , ஆளும் கட்சி எம்.பி.க்களின் மேசையை தட்டி வரவேற்கின்றனர்.

இரண்டு (எம்.பி.க்கள்) இருந்து நாம் இங்கே (ஆட்சியில்) அமர்ந்துள்ளோம். ஆனால் நீங்கள் 400ல் இருந்து 40க்கு வந்துவிட்டீர்கள். இன்று எங்கே இருக்கிறீர்கள் பாருங்கள்…’’ எனவும் பேசியுள்ளார்.2018 ஆம் ஆண்டில், என் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசாங்கம் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது .

அரசியல்

விஜய் வாகன விபத்து: பறிமுதல் செய்யாதது ஏன்? — நீதிபதி கேள்வி

Published

on

தவெக தலைவர் விஜயின் பிரச்சார வாகனம் விபத்தில் சிக்கியது தொடர்பாக, ஏன் வழக்கு பதிவு செய்யப்படவில்லை? மேலும் அந்த வாகனம் ஏன் பறிமுதல் செய்யப்படவில்லை? என்று சென்னை உயர்நீதிமன்றம் கடுமையாக கேள்வி எழுப்பியுள்ளது.

விஜயின் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அரசியல் கூட்டங்களுக்கு நெறிமுறைகள் வகுக்க கோரி பி.எச். தினேஷ் தாக்கல் செய்த வழக்கின் விசாரணை இன்று மதியம் நடைபெற்றது.

அப்போது, “விஜயின் பிரச்சார வாகனம் வந்தபோது இரண்டு வாகனங்களை இடித்து கீழே விழுந்ததை நீங்கள் கண்டீர்களா?” என்று நீதிபதி முதல் கேள்வியாக மனுதாரர் தரப்பிடம் வினவினார்.

Continue Reading

அரசியல்

கரூரில் 31 பேர் உயிரிழப்பு!

Published

on

கரூர் விஜயின் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 குழந்தைகள் உட்பட 31 பேர் உயிரிழப்பு.

விஜய் கரூரில் நடத்திய தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அமைச்சர்கள் பலரும் மீட்பு பணிகள் மற்றும் ஆய்வுப் பணிகளுக்காக கரூர் விரைந்து வருகின்றனர்.

31 பேர் உயிரிழப்பு?

கரூரில் விஜய் பரப்புரையின்போது மயங்கி விழுந்ததில் 31 பேர் உயிரிழப்பு எனத் தகவல்.

 

 

Continue Reading

அரசியல்

தங்கம் தென்னரசு அறிவிப்பு

Published

on

புதுக்கோட்டை பொற்பனைக்கோட்டையில் நடந்த அகழாய்வில் 4 நாணயங்கள் கண்டெடுப்பு தங்கம் தென்னரசு அறிவிப்பு.

பொற்பனைக்கோட்டை வணிக நகரமாக இருந்ததற்கு 4 நாணயங்கள் சான்றாக விளங்குகின்றன அமைச்சர் விளக்கம்

வெள்ளி முத்திரைக்காசு, புலி உருவம் பொறிக்கப்பட்ட செப்புக்காசுகள் முக்கியமானவை:அமைச்சர்

அகழாய்வில் கிடைத்த கரிம மாதிரி ஆய்வு முடிவுகள் வரலாற்று காலத்தைச் சேர்ந்தவை தங்கம் தென்னரசு அறிவிப்பு

Continue Reading

Trending