Connect with us

அரசியல்

சட்ட புத்தகத்தின் ஒவ்வொரு எழுத்திலும் அம்பேத்கர் புகழ் நிலைத்திருக்கும் -சீமான்!

Published

on

சட்ட புத்தகத்தின் ஒவ்வொரு எழுத்திலும், நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்பின் ஒவ்வொரு வார்த்தையிலும் புரட்சியாளர் அம்பேத்கர் புகழ் நிலைத்திருக்கும்..! – சீமான்

அறிவாசான் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் புகைப்படத்தை நீதிமன்றங்களில் வைக்கக்கூடாது என்ற சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறையின் அறிவிப்பு அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. . இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்தளித்த சட்ட மாமேதை புரட்சியாளர் அம்பேத்கரின் புகைப்படத்தையே நீதிமன்றங்களில் வைப்பதை தவிர்ப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

இந்நாட்டின் நீதிமன்றங்களில் இடம்பெற அண்ணல் அம்பேத்கரைவிடவும் வேறு யாருக்கு தகுதி உள்ளது? சட்டமேதை அம்பேத்கரின் புகைப்படத்தை நீதிமன்றத்திலிருந்து அகற்ற வேண்டும் என்பதற்கான திட்டமிட்ட சதியாகவே சென்னை உயர் நீதிமன்ற பதிவரின் இவ்வறிவிப்புத் தோன்றுகிறது.

சட்ட புத்தகத்தின் ஒவ்வொரு எழுத்திலும், இந்திய நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்பின் ஒவ்வொரு வார்த்தையிலும் புரட்சியாளர் அம்பேத்கர் புகழ் நிலைத்திருக்கும். அவர் வகுத்தளித்த அரசியலைப்பு சட்டத்தின் ஆட்சி இந்த நாட்டில் நடைபெறும்வரை, அண்ணல் அம்பேத்கர் இந்த மண்ணில் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார். எத்தனை முயற்சிகள் மேற்கொண்டாலும், எத்தனை சூழ்ச்சிகள் செய்தாலும், அண்ணல் அம்பேத்கரின் பெயரையோ, புகழையோ எவராலும் மறைக்க முடியாது.

ஆகவே, சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் புகைப்படத்தை நீதிமன்றங்களில் வைக்கக்கூடாது என்ற சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறையின் அறிவிப்பினை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.

அரசியல்

விஜய் வாகன விபத்து: பறிமுதல் செய்யாதது ஏன்? — நீதிபதி கேள்வி

Published

on

தவெக தலைவர் விஜயின் பிரச்சார வாகனம் விபத்தில் சிக்கியது தொடர்பாக, ஏன் வழக்கு பதிவு செய்யப்படவில்லை? மேலும் அந்த வாகனம் ஏன் பறிமுதல் செய்யப்படவில்லை? என்று சென்னை உயர்நீதிமன்றம் கடுமையாக கேள்வி எழுப்பியுள்ளது.

விஜயின் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அரசியல் கூட்டங்களுக்கு நெறிமுறைகள் வகுக்க கோரி பி.எச். தினேஷ் தாக்கல் செய்த வழக்கின் விசாரணை இன்று மதியம் நடைபெற்றது.

அப்போது, “விஜயின் பிரச்சார வாகனம் வந்தபோது இரண்டு வாகனங்களை இடித்து கீழே விழுந்ததை நீங்கள் கண்டீர்களா?” என்று நீதிபதி முதல் கேள்வியாக மனுதாரர் தரப்பிடம் வினவினார்.

Continue Reading

அரசியல்

கரூரில் 31 பேர் உயிரிழப்பு!

Published

on

கரூர் விஜயின் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 குழந்தைகள் உட்பட 31 பேர் உயிரிழப்பு.

விஜய் கரூரில் நடத்திய தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் தமிழக அமைச்சர்கள் பலரும் மீட்பு பணிகள் மற்றும் ஆய்வுப் பணிகளுக்காக கரூர் விரைந்து வருகின்றனர்.

31 பேர் உயிரிழப்பு?

கரூரில் விஜய் பரப்புரையின்போது மயங்கி விழுந்ததில் 31 பேர் உயிரிழப்பு எனத் தகவல்.

 

 

Continue Reading

அரசியல்

தங்கம் தென்னரசு அறிவிப்பு

Published

on

புதுக்கோட்டை பொற்பனைக்கோட்டையில் நடந்த அகழாய்வில் 4 நாணயங்கள் கண்டெடுப்பு தங்கம் தென்னரசு அறிவிப்பு.

பொற்பனைக்கோட்டை வணிக நகரமாக இருந்ததற்கு 4 நாணயங்கள் சான்றாக விளங்குகின்றன அமைச்சர் விளக்கம்

வெள்ளி முத்திரைக்காசு, புலி உருவம் பொறிக்கப்பட்ட செப்புக்காசுகள் முக்கியமானவை:அமைச்சர்

அகழாய்வில் கிடைத்த கரிம மாதிரி ஆய்வு முடிவுகள் வரலாற்று காலத்தைச் சேர்ந்தவை தங்கம் தென்னரசு அறிவிப்பு

Continue Reading

Trending