Connect with us

இந்தியா

விண்ணில் பாய்ந்தது சந்திராயன்-3- பிரதமர் மோடி வாழ்த்து

Published

on

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘இஸ்ரோ’, நிலவை ஆய்வு செய்வதற்காக அனுப்பிய சந்திரயான் – 1 விண்கலம், நிலவின் மேற்பரப்பில் தண்ணீர் இருந்ததற்கான ஆதாரங்களை, உலகிற்கு வெளிப்படுத்தியது.

அதை தொடர்ந்து, நிலவின் தென் துருவத்தை ஆராய அனுப்பப்பட்ட, சந்திரயான் – 2 விண்கலத்தில், ‘லேண்டர்’ கலன் தரையிறங்கும்போது, நிலவில் மோதியதில் ‘சிக்னல்’ துண்டிக்கப்பட்டு, தோல்வியில் முடிந்தது.

அந்த விண்கலத்தின் மற்றொரு பகுதியான, ‘ஆர்பிட்டர்’ நிலவின் சுற்று பாதையில் வெற்றிகரமாக நிறுத்தப்பட்டது.

தற்போது, சந்திரயான் – 3 விண்கலத்தை, 615 கோடி ரூபாய் செலவில், இஸ்ரோ வடிவமைத்துள்ளது.

ஏற்கனவே, ஆர்பிட்டர் நிலவை சுற்றி வருவதால், சந்திரயான் – 3ல் ‘லேண்டர், ரோவர்’ கலன்கள் மட்டும் அனுப்பப்படுகின்றன.

ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, சந்திரயான் – 3 விண்கலத்தை சுமந்தபடி, எல்.வி.எம் 3 – எம்4 ராக்கெட், இன்று பிற்பகல், 2:35 மணிக்கு விண்ணில் பாய்ந்தது .

ஏவுகணையில் இருந்து செயற்கைக்கோள் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். சந்திரனை நோக்கிய பயணத்தைத் தொடங்க, செயற்கைக்கோள் இப்போது விரும்பிய சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்டுள்ளது.

3 அடுக்குகள் திட்டமிட்டபடி பிரிந்தன.

சந்திராயன் 3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. பூமியிலிருந்து புறப்பட்ட 18 நிமிடங்களில் பூமியின் நீள் வட்ட பாதையில் சந்திராயன் செயற்கைக்கோளை நிலை நிறுத்தியது. அனைத்து முதற்கட்ட படிநிலைகளையும் வெற்றிகரமாக கடந்து விண்ணில் ஏவப்பட்டுள்ள சந்திரயான்-3 விண்கலம் 40 நாட்கள் கடந்து ஆகஸ்ட் 23 அன்று நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கப்படும் என தகவல்.சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்.

பிரதமர் மோடி வாழ்த்து :

“இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறையில் ஜூலை 14ம் தேதி பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும்; சந்திரயான்-3 என்பது நமது 3வது சந்திரப் பயணம்;

சந்திரயான்-3 நமது தேசத்தின் நம்பிக்கைகளையும் கனவுகளையும் சுமந்து செல்லும்” – பிரதமர் நரேந்திரமோடி ட்வீட்

இந்தியா

கோவையிலிருந்து அகமதாபாத்துக்கு நேரடி விமான சேவை வழங்கவுள்ளது இண்டிகோ நிறுவனம்!

Published

on

அடுத்த மாதம் முதல் கோவையிலிருந்து குஜராத் மாநிலத்திலுள்ள அகமதாபாத் நகரத்துக்கு நேரடி விமானசேவையை இண்டிகோ விமான நிலையம் வழங்க உள்ளதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது.

அக்டோபர் 26ம் தேதி (26.10.25), இந்த சேவை துவங்கப்படும். இது இந்த 2 நகரங்களுக்கு இடையே வழங்கப்படும் முதல் இடைநில்லா சேவையாக பார்க்கப்படுகிறது. வாரம் 4 நாட்கள் ( செவ்வாய், வியாழன், சனி மற்றும் ஞாயிறு) இந்த சேவைகள் வழங்கப்படும்.

இந்நாட்களில் இந்த விமானம் கோவையிலிருந்து மாலை 5.40 மணிக்கு புறப்பட்டு அகமதாபாத்துக்கு இரவு 8.10 மணிக்கு வந்து சேரும். அதேபோல அகமதாபாத்தில் இருந்து இரவு 8:50 மணிக்கு புறப்பட்டு கோவைக்கு இரவு 11:20 மணிக்கு வந்து சேரும்.

இந்த அறிவிப்பை வரவேற்பதாக மேற்கு தமிழகத்தின் முன்னணி தொழில்துறை அமைப்பான ‘கொங்கு குளோபல் ஃபோரத்தின் (Kongu Global Forum) இயக்குனர் சதிஷ் கூறினார்.

கோவை – அகமதாபாத் இடையேயான நேரடி விமான சேவை என்பது அடிக்கடி இந்த 2 நகரங்களுக்கு பயணம் செய்பவர்களுக்கும், வர்த்தக ரீதியாக பயணம் மேற்கொள்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என அவர் கூறினார்.
அதே சமயம் கோவையிலிருந்து கத்தார் நாட்டின் தலைநகரான தோஹா-வுக்கு நேரடி விமான சேவை அதிகம் தேவைப்படுகிறது என்பதையும் கூற கடமைப்பட்டுள்ளோம் என அவர் கூறினார்

Continue Reading

இந்தியா

கோவை நெடுஞ்சாலை பகுதிகளில் வருகிறது மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் !

Published

on

மின்சார வாகனப் பயன்பாடு என்பது இந்தியாவில் அதிகரித்து வருகிறது. எனவே மின்சார விநியோக சேவையில் ஈடுபடும் அரசு நிறுவனங்களிடம் மத்திய அரசு, நெடுஞ்சாலை பகுதிகளின் ஒவ்வொரு 25 கிலோமீட்டருக்குக் குறைந்தது 1 பொது மின்சார வாகன சார்ஜிங் நிலையத்தையாவது  அமைக்கவேண்டும் என சில ஆண்டுகளாகவே அறிவுறுத்தி வருகிறது.

இந்த நிலையில், தமிழ் நாடு முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் முதல் கட்டமாக 200 சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைக்கும் பணி விரைவில் துவங்கவுள்ளதாகத் தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது என இன்று தகவல் வெளியானது.

முதல் கட்டமாக சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள நெடுஞ்சாலைப் பகுதிகளில் இவை அமையும் எனத் தெரியவருகிறது. இதற்காக தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் 19 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு சார்ஜிங் ஸ்டேஷன்கள் அமைக்கத் திட்டம் உள்ளதாக இன்று தகவல் வெளிவந்தது.

ஏற்கனவே கோவை மாநகரின் 10 இடங்களில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்க கோவை மாநகராட்சி தயாராகி வரும் நிலையில், நெடுஞ்சாலைப் பகுதிகளிலும் இதுபோன்ற நிலையங்கள் அமைந்தால் அது மின்சார வாகன ஓட்டிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். இந்த பணிகள் விரைந்து நடைபெறவேண்டும் என்பதே மின்சார வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Continue Reading

Tech

இந்தியாவில் அதிகரிக்கும் மின்சார வாகன பயன்பாடு தமிழ்நாடு முழுவதும் விரைவில் 200 சார்ஜிங் ஸ்டேஷன்கள்

Published

on

சென்னை:
மின்சார வாகனப் பயன்பாடு தற்போது இந்தியாவில் அதிகரித்து வருவதால், மாநில அரசுகள் சார்ஜிங் நிலையங்களை அமைப்பதற்கான திட்டங்களை விரைவுபடுத்தி வருகின்றன. தமிழ்நாட்டிலும் இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மொத்தம் 200 சார்ஜிங் ஸ்டேஷன்கள் விரைவில் செயல்பாட்டிற்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் மின்சார வாகன சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைப்பதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, மொத்தம் 200 சார்ஜிங் ஸ்டேஷன்கள் விரைவில் செயல்பாட்டிற்கு வர உள்ளன.

மின்சார வாகனங்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருவதால், மாநிலம் முழுவதும் சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைப்பது அவசியமாகியுள்ளது.

எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சார்ஜிங் வசதிகளை அதிகரிப்பது அவசியமாகியுள்ளது. இதற்காக அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து பணியாற்றி வருகின்றன.

Continue Reading

Trending