Connect with us

Entertainment

சூர்யா தான் என்னுடைய பேவரிட்! – ஆதிரா ராஜ்

Published

on

ஆதிரா ராஜ் பற்றி ?

என்னுடைய முழுப் பெயர் ஆதிராராஜ் நான் கேரளா பொண்ணு, பள்ளி, கல்லூரி அனைத்தும் கேரளாவில் தான் முடித்தேன், நான் பி.காம் முடித்துள்ளேன், நான் ஒரு கிளாசிக்கல் டான்ஸர்.

சினிமா ஆர்வம் எப்போது வந்தது?

சின்ன வயசுல  நிறைய ட்ராமா பண்ணீருக்கேன், அப்புறம் ஸ்டேஜ் ஷோ பண்ணிருக்கேன் அப்பொழுது எல்லாம் சினிமாவில் நடிப்பேன் என நினைக்கவில்லை, அந்த எண்ணமும் அப்பொழுது வரவில்லை. கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும் பொழுது ஒரு குறும்படம் நடக்க வாய்ப்பு கிடைத்தது அதில் நடித்த பிறகு தான் சினிமா மேல் ஆசை வந்தது. அதன் பின்னர் தான் சினிமாவில் நடிக்க முடிவுசெய்தேன்.

பட வாய்ப்புகள் எப்படி கிடைத்தது ?

மலையாள குறும்படம் நடித்த பிறகு கஸ்டீம் இயக்குனர் ஒருவர் என்னுடைய புகைப் படத்தை ஒரு தயாரிப்பு நிறுவனத்துக்கு அனுப்பி வைத்தார் அதன் பின்னர் சென்னையில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது பின்னர் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

ஹிப் ஹாப் தமிழா உடன் நடித்த அனுபவம் ?

ஹிப் ஹாப் தமிழா ஆதி ஒரு சிறந்த கலைஞர், நடிப்பில் அதிக ஆர்வம் உடையவர். அவருடன் நடிக்கும் பொழுது எனக்கு நிறைய கற்றுக் கொடுத்துள்ளார். நடிப்பை பற்றி எனக்குள் இருந்த சந்தேகங்களை போக்கியவர். நல்ல மனிதர்.

உங்களுக்கு பிடித்த தமிழ் நடிகர் யார்? ஏன் ?

நடிகர் சூர்யா சார் எனக்கு ரொம்ப பிடிக்கும், அவரது நடிப்புக்கு நான் மிகப்பெரிய ரசிகை, அவருடைய படம் அனைத்தையும் தவறாமல் பார்த்துவிடுவேன்.

யார்கூட எல்லாம் நடிக்கணும் என்று லிஸ்ட் இருக்கா?

லிஸ்ட் எல்லாம் ஒன்னும் இல்லை, எனக்கு எல்லோருடையும் நடிக்கணும் என்று ஆசை. சிறந்த நடிகை என பெயர் எடுக்கணும் இது நிறைவேற பாடுபடுவேன்.

சினிமாவிற்குள் வர, உங்களுக்கு யார் இன்ஸ்பிரேஷன் ?

என்னுடைய தாத்தா தான் எனக்கு மிகப்பெரிய   இன்ஸ்பிரேஷன். அவர் ஒரு நடிகர். பல மலையாள திரைப்படம் மற்றும்    நாடகத்தில் நடித்துள்ளார். அவரால்    தான் எனக்கு சினிமா மீது அதீத ஆர்வம் வந்தது. அவருடன் நிறைய ட்ராமா நடிச்சிருக்கேன்.  பெரிய திரையில் என்னைப்  பார்க்க வேண்டும் ஆசை என பட்டார். இன்று அவரது      ஆசை நிறைவேறியது ஆனால் அதைப் பார்க்க அவர் இன்று உயிருடன் இல்லை.

உங்கள் வாழ்க்கையில் மறக்கமுடியாத மகிழ்ச்சியான தருணம் எது ?

சினிமா ஆசை உள்ள எல்லோருக்கும் ஒரு கனவு இருக்கும் ஒருமுறையாவது பெரியத்திரையில் நாம் வந்துவிட வேண்டும் என்று எனக்கும் அந்த ஆசை இருந்தது அது இந்தப் படத்தின் மூலம் சாத்தியமாயிற்று. என்னை  ஒரு கதாநாயகியாக பெரியத் திரையில் பார்த்தது தான் மறக்க முடியாத மகிழ்ச்சியான தருணம்.

உங்கள் குடும்பத்தை பற்றி?

நான், அப்பா ராஜன், அம்மா பிரீத்தி ராஜன , தம்பி அமல் ராஜ் எனக்கு என்றும் உறுதுணையாக இருப்பது இந்த மூன்று பேர்கள் தான்.

முதல் கேமரா அனுபவம் எப்படி இருந்தது விளக்கமாக சொல்லுங்க?

முதல் கேமரா அனுபவம் ரொம்ப பயமாக இருந்தது. ரொம்ப கஷ்டப்பட்டேன் பயத்தை போக்க, குறும் படம் நடிக்கும் பொழுது இரண்டு அல்லது நான்கு பேர் தான் இருப்பார்கள் அதனால் பயம் தெரியவில்லை. ஆனால் சினிமா அப்படி கிடையாது, கோ ஆர்ட்டிஸ்ட், டைரக்டர், அசிஸ்ட்டேன்ட டைரக்டர், லைட் மேன், ஹெல்பர் என பல பேர் இருப்பாங்க ரொம்ப பயமா இருக்கும். படம் நடித்து முடித்த பிறகு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Entertainment

தேசிய விருது பெற்றவுடனே கேப்டன் நினைவிடத்துக்கே சென்ற எம்.எஸ். பாஸ்கர்

Published

on

சென்னை: 71வது தேசிய திரைப்பட விருதுகள் விழா செப்டம்பர் 24ஆம் தேதி சிறப்பாக நடைபெற்றது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசிய விருதுகளை வழங்கி கலைஞர்களை கௌரவித்தார்.

‘பார்க்கிங்’ படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகர் விருதை பெற்றவர் எம்.எஸ். பாஸ்கர். தேசிய விருதை பெற்ற மறுநாளே (செப்டம்பர் 25), அவர் மறைந்த கேப்டன் விஜயகாந்தின் நினைவிடத்துக்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அதிலும், தான் பெற்ற தேசிய விருதை கேப்டனின் நினைவிடத்தில் வைத்து அவருக்கே அர்ப்பணித்தார்.

எம்.எஸ். பாஸ்கரின் கலைப்பயணம் எளிதானது அல்ல. டப்பிங் கலைஞர், ஜூனியர் ஆர்டிஸ்ட் என பல சவால்களை கடந்து வந்தார். ஆரம்பத்தில் பெரிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும், சின்னத்திரையில் அவர் ஏற்ற கதாபாத்திரங்கள் – சின்ன பாப்பா பெரிய பாப்பா, செல்வி போன்ற தொடர்கள் – மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன.

இன்று தேசிய விருதை பெற்ற பெரிய நடிகராக உயர்ந்திருந்தும், தன்னுடைய விருதை முன்னாள் தலைவருக்கே சமர்ப்பிக்க வந்த அவரின் எளிமையும் மனிதநேயமும் பலரின் மனதை தொட்டுள்ளது.

Continue Reading

Entertainment

இந்தியாவின் பெருமையாக அஜித்‌குமார்: ஸ்பெயினில் கார் ரேஸில் அசத்தல்!

Published

on

சென்னை: நடிகர் மட்டுமல்ல, பைக்–கார் ரேஸர் என்ற அடையாளத்துடனும் உலகம் அறியும் அஜித்‌குமார், மீண்டும் இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

ஸ்பெயினில் நடைபெற்ற Creventic 24H கார் ரேஸில், அஜித்‌குமார் ரேஸிங் அணி மூன்றாவது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. கடந்த ஆண்டு தொடங்கிய இந்த அணியை, அஜித் தானே கேப்டனாக நடத்தி வருகிறார்.

முன்னதாக துபாயில் நடைபெற்ற 24 மணி நேர ரேஸில் மூன்றாவது இடம், பிரான்சின் 12 மணி நேர போட்டியில் இரண்டாவது இடம், மேலும் ஐரோப்பிய போட்டியில் மூன்றாவது இடம் என பல வெற்றிகளை அணி பெற்றிருந்தது.

இந்த வெற்றியுடன், அஜித்‌குமார் ரேஸிங் அணி மீண்டும் இந்தியாவை சர்வதேச ரேசிங் மேடையில் உயர்த்தியுள்ளது. பரிசுக் கோப்பையை பெற்றுக்கொள்ளும் தருணத்தில், தனது அணியினரும் குடும்பத்தினரையும் மேடைக்கு அழைத்துச் சென்ற அஜித்தின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அண்மையில் பத்ம பூஷன் விருது பெற்ற அஜித்துக்கு ரசிகர்களும் பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

Continue Reading

Entertainment

அக்டோபர் 1ல் திரை திறக்கும் ‘இட்லி கடை’ – தனுஷ் ரசிகர்களுக்கு சிறப்பு விருந்து!

Published

on

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் தனுஷ், கடந்த முறையில் நடித்த குபேரா படம் எதிர்மறையான விமர்சனங்களையும் வசூலில் ஏமாற்றத்தையும் சந்தித்தது. அதன் பின்னர், தற்போது அவர் நடித்துள்ள புதிய படம் ‘இட்லி கடை’ திரையரங்குகளில் அக்டோபர் 1 முதல் வெளியாக உள்ளது. தொடர் விடுமுறை நாட்களை முன்னிட்டு படக்குழு இந்த தேதியைத் தேர்ந்தெடுத்துள்ளது.

டிரெய்லர் & ஆடியோ லான்ச் – ரசிகர்களை உற்சாகப்படுத்தியது

சமீபத்தில் வெளியான இட்லி கடை படத்தின் டிரெய்லர், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பல மடங்கு உயர்த்தியுள்ளது. ஒவ்வொரு காட்சியும் இயல்பான வாழ்க்கையை பிரதிபலிப்பதுடன், ஒரு சிறிய இட்லி கடையை நடத்தி வாழும் மனிதனாக தனுஷின் கதாபாத்திரம், அவரது குடும்பம், நட்பு, வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சவால்கள் என பல அம்சங்களை நெகிழ்ச்சியுடன் சொல்லுகிறது.

முக்கியமாக, ராஜ்கிரண் நடித்திருக்கும் பாசம் நிறைந்த காட்சிகள் “அவர் ஒரு அப்பாவா? அண்ணனா? குருவா?” என்ற கேள்வியுடன் பார்வையாளர்களிடையே தனி எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன.

“இட்லி கடை” பற்றி சுவையாக பேசும் சத்யராஜ் – கோவையில் நிகழ்ந்த விழாவின் சிறப்புகள்!

தமிழ் சினிமாவில் தனுஷ் இயக்கும் நான்காவது படமான “இட்லி கடை”, ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது. தனுஷ் தான் இயக்கியும் நடித்தும் வருகிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பில், டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தப் படத்தில் ராஜ்கிரண், நித்யா மேனன், சத்யராஜ், அருண் விஜய் மற்றும் பார்த்திபன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இதில் அருண் விஜய் வில்லன் வேடத்தில் ஆடம்பரமாக திகழ்கிறார்.

கோவையில் நடைபெற்ற டிரெய்லர் வெளியீட்டு விழா, ரசிகர்களின் மகிழ்ச்சியையும் ஆரவாரத்தையும் ஈர்த்தது. விழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இதில் கலந்து கொண்ட நடிகர் சத்யராஜ், தனது சிறப்பான கோவை பாஷை பேச்சால் நிகழ்ச்சிக்கு புதிய உயிர் ஊட்டினார்.

“ராஜமவுலி படம் லாம் நடிச்சுருக்கேன். ஆனா இந்த தனுஷ் – ரொம்ப பக்கத்துலயும் நகர முடியாமே நடிக்க வைப்பாரு. ரொம்ப strict-a இருக்காரு. ஆனா ‘இட்லி கடை’ சத்தியமா வேற லெவல். இந்த படம் பாத்த உடனே, சிரிக்க வேண்டிய இடத்துல சிரிப்பு வரும், அழுக வேண்டிய இடத்துல கண்ணீர் வரும். இது தான் சினிமா… இது தான் ‘இட்லி கடை’!” என்றார் சத்யராஜ், பெருமிதத்துடன்.

டிரெய்லர் வெளியாகியதும், சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. ரசிகர்களிடையே நல்ல எதிர்வினை பெற்று, படத்தின் எதிர்பார்ப்பை கூடியளவில் உயர்த்தியுள்ளது.

“இது வியாபாரம் இல்ல… மனசுக்குள்ள படம்” – தனுஷ்

ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய தனுஷ்,

இட்லி கடை ஒரு சாதாரண படம் இல்ல. இது ஒரு வியாபாரம் இல்ல, என் மனசுக்கு ரொம்ப நெருக்கமான ஒரு படம். நான் இந்தக் கதையிலே வாழ்ந்தேன். எங்க குழுவில உள்ள எல்லாரும் தங்கள் 100% உழைப்பையும் கொடுத்திருக்காங்க. இட்லி கடை சின்னதா இருக்கலாம், ஆனா அதுக்குள்ள இருக்கும் பாசம் ரொம்ப பெருசு. இந்த படம் உங்க எல்லாருக்கும் ஒரு விருந்தாக இருக்கும்,*” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Continue Reading

Trending