முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கோவை அண்ணா சிலை அருகில் அமைந்துள்ள இதய தெய்வம் மாளிகையில் முன்னாள் அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி அவர்களின் வழிகாட்டுதல்படி அதிமுக கோவை தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி வேடபட்டி பேரூராட்சி பொறுப்பாளர், ரோட்டரி. எஸ். மணிகண்டன் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.
9ம் நினைவஞ்சலி நிகழ்வில் வரும் 2026 சட்டசபை தேர்தலில் தமிழக மக்கள் விரும்பும் கழக ஆட்சியை அரியணையில் அமர்த்தும் வரை ஓய மாட்டோம் என்று கழக முன்னோடிகளுடன் சபதம் மேற்கொண்டனர்