கோவை மாவட்டத்தில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக சிறந்து பணியாற்றி வருகின்ற வி.ஜி.எம் மருத்துவமனையும், விளையாட்டு துறையில் கால் நூற்றாண்டை கடக்கும் கோவை அத்லெடிக் கிளப்பும் இணைந்து “ரன் ஃபோர் நேசன்” மாராத்தன் ஓட்டத்தை இந்தாண்டும் நடத்துகிறோம். இந்த மாராத்தான் கடந்த தொடர்ந்து 5 ஆண்டுகளாக சிறப்பாக நடைபெற்றது. இந்த சிறப்பு மிக்க மாராத்தான் போட்டியை 9.8.2026 நேரு விளையாட்டு அரங்கில் வி.ஜி.எம் “ரன் ஃபோர் நேசன்” என்ற தலைப்பில் மீண்டும் சிறப்பாக நடைபெற உள்ளது.
இந்த மாராத்தான் முக்கிய நோக்கம் ஒரு தேசம் முன்னேற வேண்டுமென்றால் கல்வி, விளையாட்டு, ஆரோக்கியம் இந்த மூன்றும் சிறப்பாக இருக்க வேண்டும். இதனை வலியுறுத்தி ஒவ்வொரு ஆண்டும் “ரன் ஃபோர் நேசன்” எதற்காக நடத்தப்படுகிறது என்ற தலைப்பு வெளியிடப்படும் இந்த ஆண்டு “ரன் ஃபோர் நேசன்” மற்றும் போதையில்லா கோவை என்பதை வலியுறுத்தி 9.8.2026 அன்று நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில் சுமார் 5000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றை சார்ந்த போட்டியாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.
இந்த மாரத்தான் போட்டியை முன்னிட்டு இன்று 13.6.2026 வி.ஜி.எம் மருத்துவமனை வளாகத்தில் 6-வது “ரன் ஃபோர் நேசன்” மாரத்தான் போட்டியின் சீருடை வெளியீட்டு விழா மற்றும் அரசு. மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சீருடைகள் மற்றும் காலனிகள், அரசு பள்ளிகளுக்கு கணணி வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக திரு.K.S. ஸ்ரீ கிரி பிரசாத் அவர்கள் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர், திரு.N.M. சுகுமார் அவர்கள் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். பல்வேறு ரன்னர்ஸ் கிளப் மற்றும் நன்கொடையாளர்களுக்கு பாராட்டுதல்கள் தெரிவிக்கப்பட்டது.
இப்போட்டியில் கலந்து கொள்பவர்களுக்கு பரிசுத்தொகை மொத்தம் ரூ. 2,00,000 லட்சம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளது. பதக்கங்கள், சீருடை, உணவு, பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த மாரத்தானாக நடைபெற உள்ளது.