ஜெயலலிதா கைகாட்டிய பணிகளை சிறிதும் சலனம் இல்லாமல் செய்து வந்தேன் நான் களப்பணியாற்றியதால் தான் எண்ணற்ற பொறுப்புகளை ஜெயலலிதா எனக்கு வழங்கினார்
அதிமுக உடைந்துவிடக்கூடாது என்பதற்காக எனக்கு வந்த 2 வாய்ப்புகளையும் விட்டுக் கொடுத்தேன்.அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் எடுத்த முடிவுகளால் அதிமுக வெற்றி வாய்ப்புகளை இழந்தது
இபிஎஸ் முதலமைச்சராவதற்கான பரிந்துரை கடிதத்தில் கையெழுத்து பெற்று படித்து காட்டியவன் நான்.2024 தேர்தலுக்கு பிறகு 6 பேர் சென்று இபிஎஸ்சை சந்தித்து சில கருத்துகளை கூறினோம்
6 பேர் அல்ல யாருமே தன்னை சந்திக்கவில்லை என கூறினார் இபிஎஸ் – செங்கோட்டையன்