Connect with us

உள்ளூர் செய்திகள்

நிர்மலா மகளிர் கல்லூரியில் வேலைவாய்ப்பு சம்பந்தமான கருத்தரங்கம் !

Published

on

நிர்மலா மகளிர் கல்லூரி (தன்னாட்சி), கோயம்புத்தூர், தனது தொழில் வழிகாட்டல் மற்றும் வேலைவாய்ப்பு ஒருங்கிணைப்புக் குழு (Career Guidance and Placement Cell) மூலம் மனிதவள கருத்தரங்கு (HR Conclave – 2025) நிகழ்வை செப்டம்பர் 12-ம் தேதி சிறப்பாக நடத்தியது. கல்வி மற்றும் தொழில் உலகை இணைக்கும் வகையில் இந்த கருத்தரங்கு பல முன்னணி நிறுவனங்களின் மனிதவள (HR) தலைவர்களையும் தொழில் நிபுணர்களையும் ஒருங்கிணைத்தது.

தி௫. ஷாஜி தாமஸ், மேலாண்மை இயக்குநர் – குளோபல் லீட் பிசினஸ் ரிஸ்க் மேனேஜ்மெண்ட், ஸ்டேட் ஸ்ட்ரீட் முக்கிய உரையாற்றி, மனிதவள மேலாண்மையில் உருவாகும் புதிய போக்குகள் மற்றும் மாணவிகள் உலகளாவிய தொழில் வாய்ப்புகளுக்குத் தயாராக வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.

கல்லூரியிலிருந்து நிறுவனம் (“Campus to Corporate”) மற்றும் வெற்றிகரமான சுயவிவரம் உருவாக்குதல் (“Crafting Winning Resume”) என்ற தலைப்புகளில் இரண்டு விவாதக் குழு உரையாடல்கள் நடைபெற்றன. டெலாய்ட், காக்னிசன்ட், விப்ரோ, தி சென்னை மொபைல்ஸ், சிம்டா குழுமம், மற்றும் ஓம்னிகோம் குரூப் போன்ற முன்னணி நிறுவனங்களின் மனித வள நிபுணர்கள் பங்கேற்று தங்களது அனுபவங்களையும் வழிகாட்டுதல்களையும் பகிர்ந்து கொண்டனர்.

மாணவிகள் தொழில் உலகின் எதிர்பார்ப்புகள், வேலைவாய்ப்பு திறன்கள் மற்றும் சுயவிவர மேம்பாட்டிற்கான நடைமுறை அறிவை பெற்றதோடு, எதிர்கால பணியாளர் தேர்வுகளை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் உறுதியையும் பெற்றனர். கேள்வி-பதில் அமர்வுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

கல்லூரி செயலர் அ௫ட்சகோதரி டாக்டர். குழந்தை தெரஸ் அவர்கள், தலைமை விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியைத் தொடக்க உரையால் சிறப்பித்தார். கல்லூரி முதல்வர் அ௫ட்சகோதரி. டாக்டர். மேரி ஃபேபியோலா அவர்கள், வாழ்த்துரையாற்றி, நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்த குழுவினரின் முயற்சியை பாராட்டினார். பிளேஸ்மென்ட் ஆபிசர் டாக்டர் நித்யா, நிகழ்வை வெற்றிகரமாக ஒருங்கிணைத்து, மாணவிகளையும் தொழில் நிபுணர்களையும் இணைக்கும் பாலமாக செயல்பட்டார்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உள்ளூர் செய்திகள்

தயார் நிலையில் அவிநாசி மேம்பாலம்

Published

on

 

கோவை அவினாசி சாலை உப்பிலிபாளையம் சிக்னல் முதல் – கோல்டு வின்ஸ் சாலை வரை கட்டி முடிக்கப்பட்ட முடிக்கப்பட்ட புதிய மேம்பாலத்தை மேம்பாலத்தை இன்னும் சில தினங்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதற்காக மேம்பாலம் திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் உள்ளது.

Continue Reading

உள்ளூர் செய்திகள்

கோவையில் “விக்டோரிஸ்” கார் அறிமுக விழா !

Published

on

கோவை: புதிய “விக்டோரிஸ்” கார் இன்று (04.10.2025) மாலை 4.30 மணிக்கு ஆதி மாருதி ஷோரூம், சரவணம்பட்டி, கோவையில் அறிமுகமாகிறது.

இந்த நிகழ்வில் பழமுதிர் நிலையம் உரிமையாளர் திரு. துறையராஜ் சின்னசாமி, பங்குதாரர் திரு. ஞானசேகர் கந்தசாமி , கோவை பழமுதிர் நிலையம் எம்.டி. திரு. செந்தில் நடராஜன், உரிமையாளர் திரு. விஜய் ரதினம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.

விழாவை ஒட்டி “Strums N Hums” இசைக் கச்சேரியும் நடைபெற உள்ளது.

 

Continue Reading

உள்ளூர் செய்திகள்

கோவையில் விபத்து தடுப்பு நடவடிக்கை – கலெக்டர் உத்தரவு

Published

on

கோவை மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைக்கவும், சாலை பாதுகாப்பை உறுதி செய்யவும் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சாலை பாதுகாப்பு துறையில் செயல்படும் உயிர் அமைப்பு, அரசுடன் இணைந்து “நான் உயிர் காவலன்” என்ற பெயரில் அடுத்த மாதம் முதல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளது. இதன் ஒரு பகுதியாக மனித சங்கிலி பிரச்சாரமும் சமீபத்தில் கோவை மாநகரில் நடைபெற்றது.

இந்நிலையில், அனைத்து அரசு துறைகளும் இந்த விழிப்புணர்வு முயற்சி மக்கள் மத்தியில் சிறப்பாக சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். மேலும், அவர் சில முக்கிய அறிவுறுத்தல்களையும் வெளியிட்டுள்ளார்:

  • பொதுமக்கள் கூடும் இடங்களில் சாலை பாதுகாப்பு குறித்த அறிவிப்புகள் வழங்கப்பட வேண்டும்.

  • விபத்துக்கு வழிவகுக்கும் குழிகள், வேகத்தடைகள் மற்றும் சாலையின் ஓரங்களை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.

  • விபத்து ஏற்படும் பகுதிகளில் எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும்.

  • பஸ்களில் உள்ள ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அறிவிப்புகள் வழங்கப்பட வேண்டும்.

தற்போது கோவை மாநகரின் பல சாலைகளில் குழிகள் மற்றும் குறியீடு இல்லாத வேகத்தடைகள் காரணமாக விபத்துகள் ஏற்படும் சூழல் நிலவுகிறது. குறிப்பாக, மழை நீர் தேங்கும்போது அல்லது நிழல் படும்போது அவை வாகன ஓட்டிகளுக்கு தெரியாமல் ஆபத்தை ஏற்படுத்துகின்றன.

ஆட்சித்தலைவர் நேரடியாக உத்தரவிட்டுள்ள நிலையில், கோவை சாலைகள் இனி பாதுகாப்பானதாக மாறுமா என மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Continue Reading

Trending