Connect with us

உள்ளூர் செய்திகள்

கதிர் கல்லூரியில் யோகா விழிப்புணர்வை நிகழ்ச்சி!

Published

on

கோவையில் உள்ள கதிர் கல்லூரியில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சியில் யோகா மாஸ்டர் திரு சதீஷ்குமார் கலந்து கொண்டு யோகா பற்றிய விழிப்புணர்வை கல்லுரி மாணவர்களிடைய ஏற்படுத்தினார். பஞ்ச பூதங்கள் பற்றியும் நம் உடலில் ஏற்படும் பல்வேறு மாற்றங்கள் பற்றியும் மாணவர்களிடைய விளக்கினார்.

மேலும் இந்த நிகழ்வில் பேசிய அவர் நம் உடலில் 3கோடியே 50 லட்சம் நரம்புகள் உள்ளதாகவும் 72 ஆயிரம் நாடிகளே காற்று சஞ்சரிக்க பொருத்தமானவை என்றும் தெரிவித்தார்.

நமது உடல் சுமார் 120 ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழும் ஆற்றல் கொண்டது எனக் கூறிய அவர், நம் உடலில் உள்ள 25 வாட்ஸ் மின்சாரத்தை உடல் முழுவதும் முத்திரைகள் மூலம் பரவச் செய்வது குறித்தும் உரை நிகழ்த்தினார்.

சாதாரணமாக மனிதர்கள் நிமிடத்திற்கு 16 முறை மூச்சை இழுத்து வெளியேற்றுவார்கள்.

அதை குறைத்தால் நோய் நொடியின்றி வாழ முடியும் என்றும், தினமும் யோகா அல்லது ஏதாவது ஒரு உடற்பயிற்சி செய்து நம்மை நாமே காத்துக் கொள்ளலாம் என்றும் கூறினார், வண்டியில் எப்படி ஆயில் மாற்றி சிறந்த முறையில் வைத்து கொள்வது போல் நாம் இரத்த தானம் செய்து நம் உடலை வலிமைப்படுத்துவதுடன் முகம் தெரியாத பல உயிர்களைக் காப்பாற்றிய நிகழ்வும் நடக்கும் என்பதையும் வலியுறுத்தி பேசினார்.

 

 

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உள்ளூர் செய்திகள்

தயார் நிலையில் அவிநாசி மேம்பாலம்

Published

on

 

கோவை அவினாசி சாலை உப்பிலிபாளையம் சிக்னல் முதல் – கோல்டு வின்ஸ் சாலை வரை கட்டி முடிக்கப்பட்ட முடிக்கப்பட்ட புதிய மேம்பாலத்தை மேம்பாலத்தை இன்னும் சில தினங்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதற்காக மேம்பாலம் திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் உள்ளது.

Continue Reading

உள்ளூர் செய்திகள்

கோவையில் “விக்டோரிஸ்” கார் அறிமுக விழா !

Published

on

கோவை: புதிய “விக்டோரிஸ்” கார் இன்று (04.10.2025) மாலை 4.30 மணிக்கு ஆதி மாருதி ஷோரூம், சரவணம்பட்டி, கோவையில் அறிமுகமாகிறது.

இந்த நிகழ்வில் பழமுதிர் நிலையம் உரிமையாளர் திரு. துறையராஜ் சின்னசாமி, பங்குதாரர் திரு. ஞானசேகர் கந்தசாமி , கோவை பழமுதிர் நிலையம் எம்.டி. திரு. செந்தில் நடராஜன், உரிமையாளர் திரு. விஜய் ரதினம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.

விழாவை ஒட்டி “Strums N Hums” இசைக் கச்சேரியும் நடைபெற உள்ளது.

 

Continue Reading

உள்ளூர் செய்திகள்

கோவையில் விபத்து தடுப்பு நடவடிக்கை – கலெக்டர் உத்தரவு

Published

on

கோவை மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைக்கவும், சாலை பாதுகாப்பை உறுதி செய்யவும் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சாலை பாதுகாப்பு துறையில் செயல்படும் உயிர் அமைப்பு, அரசுடன் இணைந்து “நான் உயிர் காவலன்” என்ற பெயரில் அடுத்த மாதம் முதல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளது. இதன் ஒரு பகுதியாக மனித சங்கிலி பிரச்சாரமும் சமீபத்தில் கோவை மாநகரில் நடைபெற்றது.

இந்நிலையில், அனைத்து அரசு துறைகளும் இந்த விழிப்புணர்வு முயற்சி மக்கள் மத்தியில் சிறப்பாக சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். மேலும், அவர் சில முக்கிய அறிவுறுத்தல்களையும் வெளியிட்டுள்ளார்:

  • பொதுமக்கள் கூடும் இடங்களில் சாலை பாதுகாப்பு குறித்த அறிவிப்புகள் வழங்கப்பட வேண்டும்.

  • விபத்துக்கு வழிவகுக்கும் குழிகள், வேகத்தடைகள் மற்றும் சாலையின் ஓரங்களை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.

  • விபத்து ஏற்படும் பகுதிகளில் எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும்.

  • பஸ்களில் உள்ள ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அறிவிப்புகள் வழங்கப்பட வேண்டும்.

தற்போது கோவை மாநகரின் பல சாலைகளில் குழிகள் மற்றும் குறியீடு இல்லாத வேகத்தடைகள் காரணமாக விபத்துகள் ஏற்படும் சூழல் நிலவுகிறது. குறிப்பாக, மழை நீர் தேங்கும்போது அல்லது நிழல் படும்போது அவை வாகன ஓட்டிகளுக்கு தெரியாமல் ஆபத்தை ஏற்படுத்துகின்றன.

ஆட்சித்தலைவர் நேரடியாக உத்தரவிட்டுள்ள நிலையில், கோவை சாலைகள் இனி பாதுகாப்பானதாக மாறுமா என மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Continue Reading

Trending