Connect with us

Tech

நினைவில் நின்றவை மறக்கமுடியுமா ?

Sed ut perspiciatis unde omnis iste natus error sit voluptatem accusantium doloremque laudantium, totam rem aperiam.

Published

on

Photo: Shutterstock

இன்று தொழில்நுட்பங்கள் வளர்ச்சி பல பரிமாணங்களை அடைந்துள்ளதை நம் கண் முன்னே பார்த்துக் கொண்டிருக்கிறோம் சுமார் 5 முதல் 10 வருடத்திற்கு முன் பாடலைக் கேட்க பென்ட்ரைவ், சிடி என்ற பொருளை பயன்படுத்தி பாடலை கேட்டு மகிழ்ந்தோம். இதன் அடுத்தகட்ட நகர்வாக இன்று மென்பொருள் (ஆப்) பயன்படுத்தி எளிதாக பாடலை கேட்கும் வசதிகள் நமக்கு கிடைத்துள்ளது. பல பரிமாற்றங்களை நாம் பெற்றாலும் அன்று டேப் ரிகார்டரை பயன்படுத்தி கேசட் மூலம் கேட்கும் மகிழ்ச்சி எண்ணில் அடங்காதது. அதில் ஒரு வகையான சுகம் இருப்பதை அதில் பாடல்களைக் கேட்டவர்களை ம(ற)றுக்க முடியாது.

அந்த எண்ணில் அடங்கா மகிழ்ச்சியை திரும்பி பார்க்கவே (பிளாஷ்பக்) இந்த கட்டுரை! இன்று படத்துக்கு பாடல்கள் கட்டாய அவசியம் இல்லை என்ற நிலை சினிமாவில் தொடர்ந்து வருகிறது. இன்னும் சொல்லப் போனால் பாடல்களே இல்லாத பல திரைப்படங்கள் வெளியாகி யுள்ளதை நாம் பார்த்து இருக்கிறோம். ஆனால் அன்று அப்படி இல்லை படத்துக்கு இணையாக பாடல்கள் முக்கியத்துவம்  வாய்ந்து இருக்கும் பாடல்கள் ஒன்றிருக்கும். ஒரு திரைப்படம் வெளியாக ஒரு மாதத்துக்கு முன்பு ஆடியோ கேசட் வெளிவிடும். நான் சிறுவனாக இருந்த பொழுது எங்கள் வீட்டில் இருந்தது சிறிய டேப் ரிகாடர் (படத்தில்
குறிப்பிட்டுள்ளது போல).

ஒரிஜினல் – டூப்ளிகேட் :

ஒரு படத்தின் பாடல்கள் வெளியானவுடன் அந்த கேசட்டை வாங்க ஆர்வமாக இருப்போம் அந்த கேசிட்டின் விலை 10ரூபாய் முதல் 15 ரூபாய் வரை இருக்கும். 10ரூபாய் நமக்கு கிடைப்பது எளிதான காரியமல்ல. கஷ்டப்பட்டு அந்த 10 ரூபாயை சிறிது சிறிதாக சேமித்து மியூசிக்கல் கடைக்கு சென்று அதனை வாங்கி கேட்டு மகிழ்வோம். இன்று பென்ட்ரைவில் பலமுறை அதில் இருக்கும் பாடல்களை அழித்து நமக்கு தேவையான பாடல்களை பதிவேற்றம் செய்துகொள்ள முடியும். இதை அன்றே ஆடியோ கேசட் மூலம் செய்துள்ளோம். ஆம் பாடல் ஒரிஜினல் கேசட் என்றும் டூப்ளிகேட் கேசட் எனவும் பிரித்து வைத்திருப்பார்கள். அதாவது ஒரிஜினல் கேசட்டில் இருந்து காலியான கேசட்டில் பதிவு செய்து கம்மி விலைக்கு விற்பார்கள். மியூசிக்கல் ரெகார்டிங் கடையில் இதற்காக அலைந்தது பல நாளாகும். ஒரு காலியான கேசட் வாங்கி அதில் நமக்கு பிடித்தமான பாடல்களை காகிதத்தில் எழுதி கொடுத்தால் 2 முதல் 3 நாட்களுக்கு பிறகு வரச் சொல்வார்கள்.

பாடல்களை பதிவு செய்ய
மியூசிக்கல் ரெகார்டிங்
கடைக்கு அலைந்த
நாட்கள் அதிகம்!

நாம் கேட்ட பாடல்களை பதிந்து அவர்களிடம் வாங்கி வீட்டிற்கு சென்று டேப்ரிகார்டரில் பாடலை கேட்கும் சுகம் அடடா.! அந்த பாடல்களின் வரிசையை ஒரு காகிதத்தில் எழுத்தி கேசட் பெட்டிக்குள் போட்டு வைப்போம். இன்று இந்த பாடல் வேண்டாம் என்றால் ஒரு நொடியில் மாற்றி விட முடியும் ஆனால் அன்று அப்படி இல்லை பார்வேர்ட் என்ற ஒரு பட்டனை அழுத்தி அடுத்த பாடல் வரவரைக்கு காத்திருக்க வேண்டும் அதிலும் அதிகமாக பார்வேர்ட் அடுத்த பாடலில் பாதி சென்று விடும் மீண்டும் ரிவர்ஸ் செய்து கேட்க வேண்டும். அந்த பாடல்களை டேப் ரிகாடில் வீடே அலற விட்டு கேட்டது ஒரு அலாதி இன்பம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Tech

‘மேக் இன் இந்தியா’ இலக்குடன் எல்ஜி புதிய முயற்சி

Published

on

கோவை கொடிசியா வர்த்தகக் கண்காட்சி வளாகத்தில் நடைபெற்று வரும் 21-வது இன்டெக் 2026 சர்வதேச இயந்திரக் கருவிகள் மற்றும் தொழில்துறை வர்த்தகக் கண்காட்சியில், காற்றழுத்த கம்ப்ரசர் உற்பத்தித் துறையின் முன்னணி நிறுவனமான எல்ஜி எக்யுப்மென்ட்ஸ் தனது சமீபத்திய கம்ப்ரெஸ்ட்டு ஏர் தொழில்நுட்பங்கள் மற்றும் தீர்வுகளை காட்சிப்படுத்தியுள்ளது.ஜூன் 4 முதல் 8 வரை நடைபெறும் இந்தக் கண்காட்சியில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழில்துறை நிபுணர்கள், உற்பத்தியாளர்கள் மற்றும் வணிகப் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கண்காட்சியின் பிளாட்டினம் ஆதரவாளராக பங்கேற்றுள்ள எல்ஜி எக்யுப்மென்ட்ஸ், தொழில்துறைகளின் செயல்திறனை மேம்படுத்தும் மற்றும் ஆற்றல் பயன்பாட்டை குறைக்கும் பல்வேறு காற்றழுத்த கம்ப்ரசர் அமைப்புகள் மற்றும் துணை உபகரணங்களை காட்சிப்படுத்தியுள்ளது.நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஜெய்ராம் வரதராஜ் கூறுகையில், தொழில்துறைகள் தற்போது அதிக ஆற்றல் திறன், நம்பகத்தன்மை மற்றும் குறைந்த பராமரிப்பு செலவைக் கொண்ட தீர்வுகளை எதிர்பார்க்கின்றன. இந்த தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், உற்பத்தித் திறனை அதிகரிப்பதோடு மொத்த இயக்கச் செலவுகளையும் குறைக்கும் தொழில்நுட்பங்களை எல்ஜி தொடர்ந்து உருவாக்கி வருவதாக தெரிவித்தார்.

எல்ஜி எக்யுப்மென்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி அன்வர் ஜெய் வரதராஜ் கூறுகையில், கம்ப்ரெஸ்ட்டு ஏர் அமைப்புகள் மேலும் அறிவார்ந்ததாகவும், இணைக்கப்பட்டதாகவும், ஆற்றல் திறன் மிக்கதாகவும் மாறிவரும் நிலையில், வாடிக்கையாளர்களின் செயல்திறனை மேம்படுத்தவும், இயக்கச் செலவுகளைக் குறைக்கவும் உதவும் தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் நிறுவனம் தொடர்ந்து முதலீடு செய்து வருவதாக தெரிவித்தார்.இந்தியா, தெற்காசியா மற்றும் மத்திய கிழக்கு பிராந்திய செயல் தலைவர் பவேஷ் காரியா கூறுகையில், காப்புரிமை பெற்ற ‘டிமாண்ட்-மேட்ச்’ தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு புதுமையான தீர்வுகள் தொழில்துறைகளுக்கு ஆற்றல் சேமிப்பு, செயல்பாட்டு நம்பகத்தன்மை மற்றும் உற்பத்தித் திறன் மேம்பாடு போன்ற பலன்களை வழங்குகின்றன என்றார்.கண்காட்சியில் அடுத்த தலைமுறைக்கான அதிநவீன தொழில்நுட்ப பல்வேறு தயாரிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 120-க்கும் மேற்பட்ட நாடுகளில் செயல்பட்டு வரும் எல்ஜி எக்யுப்மென்ட்ஸ், உலகளவில் 20 லட்சத்திற்கும் அதிகமான கம்ப்ரசர்களை நிறுவியுள்ளது. 400-க்கும் மேற்பட்ட விநியோகஸ்தர்களைக் கொண்ட உலகளாவிய வலையமைப்புடன் செயல்படும் இந்நிறுவனம், உலகின் முன்னணி காற்றழுத்த கம்ப்ரசர் உற்பத்தியாளர்களில் ஒன்றாக திகழ்கிறது. “இந்தியாவில் தயாரித்து உலகிற்கு வழங்குதல்” என்ற நோக்கத்துடன் செயல்பட்டு வரும் எல்ஜி, எதிர்கால தொழில்துறை தேவைகளுக்கான புதுமையான மற்றும் நிலையான கம்ப்ரெஸ்ட்டு ஏர் தீர்வுகளை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது.

Continue Reading

Tech

குவாண்டம் கம்ப்யூட்டிங்கில் செயற்கை நுண்ணறிவு

Published

on

 

புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தும் !

இன்றைய உலகில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) மற்றும் குவாண்டம் கம்ப்யூட்டிங் (Quantum Computing) ஆகிய இரண்டும் வேகமாக வளர்ந்து வரும் துறைகளாக திகழ்கின்றன. இவை தனித்தனியாகவே மனிதகுல முன்னேற்றத்திற்கு பெரும் பங்காற்றி வருகின்றன. ஆனால், இவை இரண்டும் ஒன்றிணையும் போது உருவாகப்போகும் தாக்கம் மனித வரலாற்றில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது.

குவாண்டம் கம்ப்யூட்டிங் என்றால் என்ன?

பாரம்பரிய கணினிகள் “0” மற்றும் “1” எனும் இரண்டு நிலைகளில் மட்டுமே செயல்படுகின்றன. ஆனால் குவாண்டம் கம்ப்யூட்டர்கள் “கியூபிட் (Qubit)” என்ற அடிப்படையைப் பயன்படுத்துகின்றன. ஒரு கியூபிட் ஒரே நேரத்தில் பல நிலைகளை பிரதிபலிக்க முடியும். இதனால், கணக்கீடுகள் மிக அதிவேகமாக நடைபெறுகின்றன.

செயற்கை நுண்ணறிவின் (AI) தற்போதைய வரம்புகள்

இன்றைய AI அமைப்புகள் பெரும் தரவுகளை (Big Data) செயலாக்கும் திறன் பெற்றுள்ளன. எனினும், சிக்கலான கணித மாதிரிகள் அல்லது மிகப்பெரிய தரவுகளை குறுகிய நேரத்தில் தீர்க்கும் போது சில வரம்புகளைச் சந்திக்கின்றன.

குவாண்டம் + AI : இணைவு தரும் சக்தி

குவாண்டம் கம்ப்யூட்டிங் மற்றும் AI இணைந்தால்:

மருத்துவ ஆராய்ச்சி : புதிய மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் விரைவில் கண்டறியப்படும்.

நிதி துறை : பங்கு சந்தை முன்னறிவிப்பு மற்றும் அபாய மேலாண்மை மிகவும் துல்லியமாக செய்யப்படும்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு : வானிலை முன்னறிவிப்புகள் நம்பகமாக உருவாக்கப்பட்டு, இயற்கை பேரழிவுகளுக்கான தடுப்பு நடவடிக்கைகள் எளிதாகும்.

சைபர் பாதுகாப்பு : தரவு குறியாக்கம் (Encryption) உடனடி முறையில் வலுப்படுத்தப்படும்.

எதிர்காலம் எப்படியிருக்கும்?

குவாண்டம் AI பரவலாக பயன்பாட்டிற்கு வரும் போது, மனிதர்களின் முடிவெடுக்கும் திறன் புதிய உயரங்களை எட்டும். மருத்துவம், அறிவியல், தொழில், கல்வி, சுற்றுச்சூழல் போன்ற அனைத்துத் துறைகளிலும் வேகமான முன்னேற்றம் நிகழும். இது மனிதனின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், சிக்கலான உலகப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வலுவான கருவியாகவும் அமையும்.

செயற்கை நுண்ணறிவும் குவாண்டம் கம்ப்யூட்டிங்கும் தனித்தனியாகவே அதிசயங்களை நி

கழ்த்துகின்றன. ஆனால், இவை இரண்டும் ஒன்றிணையும் போது உருவாகப்போகும் புதிய புரட்சி மனித வரலாற்றின் திசையை மாற்றும். எதிர்காலம் நம்மை ஆச்சரியப்படுத்தும் அதிசயங்களால் நிரம்பியதாக இருக்கும்.

 

ப. முத்து சுப்பிரமணியன்

இணை பேராசிரியர்

மின்னணு மற்றும் தொடர்பியல் பொறியியல் துறை

கோயம்புத்தூர் தொழில்நுட்பக் கல்லூரி, கோயம்புத்தூர்-14.

 

Continue Reading

Tech

இந்தியாவில் அதிகரிக்கும் மின்சார வாகன பயன்பாடு தமிழ்நாடு முழுவதும் விரைவில் 200 சார்ஜிங் ஸ்டேஷன்கள்

Published

on

சென்னை:
மின்சார வாகனப் பயன்பாடு தற்போது இந்தியாவில் அதிகரித்து வருவதால், மாநில அரசுகள் சார்ஜிங் நிலையங்களை அமைப்பதற்கான திட்டங்களை விரைவுபடுத்தி வருகின்றன. தமிழ்நாட்டிலும் இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மொத்தம் 200 சார்ஜிங் ஸ்டேஷன்கள் விரைவில் செயல்பாட்டிற்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் மின்சார வாகன சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைப்பதற்கான பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, மொத்தம் 200 சார்ஜிங் ஸ்டேஷன்கள் விரைவில் செயல்பாட்டிற்கு வர உள்ளன.

மின்சார வாகனங்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருவதால், மாநிலம் முழுவதும் சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைப்பது அவசியமாகியுள்ளது.

எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சார்ஜிங் வசதிகளை அதிகரிப்பது அவசியமாகியுள்ளது. இதற்காக அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து பணியாற்றி வருகின்றன.

Continue Reading

Trending