Connect with us

அரசியல்

விடியல, முடியல’ என்ற பெயரில் புகார் பெட்டி

Published

on

பா.ஜ., தலைவர் அண்ணாமலை ராமேஸ்வரத்தில், வரும் ஜூலை 28 அன்று தொடங்கவிருக்கும் ‘என் மண் என் மக்கள்’என்ற நடைப்பயணதின் பொது மக்களிடம் இருந்து புகார் பெற ‘விடியல, முடியல’ என்ற புகார் பெட்டி ஒன்றை வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த புகார் பெட்டியினை பொன் ராதா கிருஷ்ணன்,நயினார் நாகேந்திரன், எச்.ராஜா , வானதி ஸ்ரீனிவாசன் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் ” தமிழகத்தில் பல்வேறு காலகட்டத்தில் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, ‘என் மண் என் மக்கள்’ என்ற பெயரில் பாத யாத்திரை மேற்கொள்கிறார். அதை வரும், 28ம் தேதி மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தில் துவக்கி வைக்கிறார். அன்று, ராமேஸ்வரத்தில் பொதுக்கூட்டம் நடக்கும். அதில், ராமேஸ்வர தீர்மானங்கள் வெளியிடப்படும். அதில், தமிழக பா.ஜ., வரும் ஆண்டுகளில் எந்த திசையை நோக்கி பயணிக்க வேண்டும் என்ற நோக்கம் இடம்பெறும். முதல் கட்டமாக, ராமேஸ்வரத்தில் துவங்கும் பாதயாத்திரை, சிவகங்கை, மதுரை, தேனி, விருதுநகர், துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி லோக்சபா தொகுதிகளில் ஆகஸ்ட் மாதம் வரை நடக்கும். ஐந்து கட்டங்களாக நடக்கும் யாத்திரை, ஜனவரியில் சென்னையில் முடிவடையும். தி.மு.க.,வின் ஊழல் நிறைந்த குடும்ப ஆட்சியின் அவலங்கள் மக்களிடம் சேர்க்கப்படும். பாத யாத்திரை, 39 லோக்சபா தொகுதிகளில் உள்ள, 234 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியதாக இருக்கும். அண்ணாமலை நடந்தும், வாகனத்தில் சென்றும் மக்களை சந்திப்பார். பாத யாத்திரை நிறைவு நாளில் பிரதமர் மோடி பங்கேற்கவும் வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அரசியல்

வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்!

Published

on

தமிழ்நாட்டில் சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு வரும் 23 ஆம் தேதி nநடைபெற இருக்கிறது , அனைத்து கட்சிகளுமே கூட்டணியை இறுதி செய்து, வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தை துவங்கிய நிலையில் காங்கிரஸ் மற்றும் பாஜக அறிவிக்கப்படாமல் இருந்தது . இன்று இரு கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்தது இதில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள்

வேட்பாளர் பட்டியல்

பொன்னேரி (எஸ்சி)- துரை சந்திரசேகர்

வேளச்சேரி- அசன் மௌலானா

ஸ்ரீபெரும்புதூர் (எஸ்சி)- செல்வப்பெருந்தகை

சோளிங்கர்- ஏ.எம். முனிரத்தினம்

ஊத்தங்கரை (எஸ்சி)- ஆர்.குப்புசாமி

கிருஷ்ணகிரி- ஏ. செல்ல குமார்

பென்னாகரம்- ஜிகேஎம் தமிழ் குமரன்

ஆத்தூர் (எஸ்சி)- எஸ்.கே.அர்த்தனாரி

ஈரோடு கிழக்கு- கோபிநாத் பழனியப்பன்

உதகமண்டலம்- பி.ராமச்சந்திரன்

கவுண்டம்பாளையம்- கே.பி. சூர்ய பிரகாஷ்

சிங்காநல்லூர்- V. ஸ்ரீநிதி நாயுடு

துறையூர் (எஸ்சி)- விச்சு லெனின் பிரசாத்

கடலூர்- ஏ.எஸ். சந்திரசேகரன்

மயிலாடுதுறை- ஜமால் யூனுஸ் முகமது

அறந்தாங்கி- டி.ராம சந்திரன் காரைக்குடி- எஸ்.மாங்குடி

உசிலம்பட்டி- டி.சரவண குமார்

சிவகாசி- கணேசன் அசோகன்

திருவாடானை- ராம கருமாணிக்கம்

ஸ்ரீவைகுண்டம்- எஸ்.ஊர்வசி அமிர்தராஜ்

சங்கரன்கோவில் (எஸ்சி)- சங்கை கணேசன்

அம்பாசமுத்திரம்- வி.பி. துரை

நாங்குநேரி- ரூபி மனோகரன்

குளச்சல்- டாக்டர் தாரகை குத்பர்ட்

விளவங்கோடு- டி.டி.பிரவீன்

கிள்ளியூர்- எஸ். ராஜேஷ் குமார்

Continue Reading

அரசியல்

தேர்தலில் பிரச்சாரம் அண்ணாமலை உறுதி

Published

on

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட அறிவிக்கபட்டுள்ள வெற்றி வேட்பாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஊழல், அலட்சியம் மற்றும் திமுகவின் துரோகத்தால் சோர்வடைந்த… தமிழ்நாட்டின் ஒவ்வொரு சகோதர சகோதரிகளின் பெரும் ஆதரவை பாஜக வேட்பாளர் அனைவரும் பெற்றுள்ளனர்.

நமது மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திரமோடி அவர்களின் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் கீழ், இந்தியா வலிமையுடனும், பரந்த அளவிலும், ஒரு நோக்கத்துடனும் முன்னேறியுள்ளது.

தேசம் முன்னேறிச் செல்லும் வேளையில், தோல்வியடைந்த, ஆணவமிக்க, சுயநலமிக்க திமுக அரசால் தமிழகம் பின்தங்கியுள்ளது.

வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 210 இடங்களை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில், ஒரு தொண்டனாகிய நான், வெற்றி பெறும் நமது பாஜக மற்றும் பிற தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்கள் அனைவருடனும் தோளோடு தோள் நின்று பிரச்சாரம் செய்வேன்.

Continue Reading

அரசியல்

தமிழக தேர்தல் – இன்று வேட்புமனு தாக்கல்

Published

on

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2026-ல் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் 234 தொகுதிகளிலும் இன்று தொடங்குகிறது

இன்று தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதி 11AM – 3PM வரை வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம்

வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 6-ம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், மனுக்கள் மறுநாள் (ஏப்-7) பரிசீலிக்கப்பட உள்ளன

வேட்புமனுக்களை திரும்பப் பெற ஏப்ரல் 9ஆம் தேதியே கடைசி நாளாகும்

Continue Reading

Trending