Connect with us

கோயம்பத்தூர்

சமூக சேவையில் சாதனை செய்யும் மேக்ஸ்வெல் அறக்கட்டளை!

Published

on

கோவை மேக்ஸ்வெல்  அறக்கட்டளை  கடந்த மூன்று ஆண்டுகளாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை மிக பிரம்மாண்டமான அளவில் மக்களுக்கு செய்து வருகிறார்கள். குறிப்பாக குழந்தைகளின் கல்வி, பெண்களின் தொழில், மலைவாழ் மக்கள் ஆகியோருக்கு இவர்கள் ஆற்றிய சேவை எண்ணற்றவை.

ஒவ்வொரு ஆண்டும் மே மாத இறுதியில்  பள்ளி துவங்குவதற்கு முன் மேக்ஸ்வெல் முத்துக்கள் என்ற தலைப்பில்  தாய் அல்லது தந்தையை இழந்த அல்லது பொருளாதாரத்தில் பின்தங்கிய 500கும் மேற்ப்பட்ட மாணவ மாணவிகளுக்கு  ஒரு வருடத்திற்கு தேவையான ஸ்கூல் பேக், நோட்புக்ஸ், ஸ்டீல் வாட்டர் பாட்டில் உட்பட மொத்த கல்வி உபகரணங்களையும்  ஒரே அரங்கத்தில் வைத்து வழங்குவதில் இவர்கள் பெயர் பெற்றவர்கள்.. இவர்கள் மூலம் இதுவரை 4000 மாணவர்கள் பயன் பெற்றுள்ளனர்.. தாய் தந்தை இருவரையும் இழந்த  நூற்றுக்கும் மேற்ப்பட்ட மாணவ மாணவிகளுக்கு  கல்வி ஊக்கத்தொகை வழங்கி அவர்களின் கல்வி கனவை நினைவாக்கியுள்ளனர்.

ஆதரவற்ற பெண்கள் முன்னேற்றத்திற்கு என  மேக்ஸ்வெல்  பொன்மகள் என்ற பிரம்மாண்ட விழா மூலம் பெண்கள் தின விழாவை முன்னிட்டு  மார்ச் மாதத்தில் 5 லட்சம்  மதிப்பீட்டில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் பெண்களுக்கு தொழில் தொடங்கி வைப்பதையும் ஆண்டுதோறும் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.. இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் பயனடைந்துள்ளனர். 120கும் மேற்பட்ட பெண்களுக்கு தொழில் தொடங்கி தந்துள்ளனர்..

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் மற்றும் தீபாவளியை மலைவாழ் மக்களுடன் கொண்டாடுவதோடு மட்டுமல்லாமல்  வருடத்தில் குறைந்த பட்சம் 20 கிராமங்களுக்கு தேவையான பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்கள்..  பழங்குடியினர் மாணவர்களுக்கான கல்வியில் அதிக கவனம் செலுத்துகின்றனர்.

அரசு பள்ளி சீரமைப்பு பணிகளில் கவனம் செலுத்துகின்றனர்.. குறிப்பாக சுத்தமான கழிவறை, நல்ல குடிநீர், மலைவாழ் பள்ளி பாதுகாப்பிற்காக சிசிடிவி, சுற்றுச்சூழல் சுத்தம், ஸ்மார்ட் கிளாஸ் திட்டம்  ஆகியவற்றை தரமாக தருவதற்காக பல்வேறு சேவைகளை செய்து வருகின்றனர்..

மேலும் அவ்வப்போது ரத்த தானம், மருத்துவ முகாம், விழிப்புணர்வு பிரச்சாரம், மாற்றுத்திறனாளிகள், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், பார்வையற்ற குழந்தைகள் மற்றும் ஆட்டிசம் குழந்தைகளுக்கான நலத்திட்டங்களை ஆண்டுதோறும் இடைவிடாமல் செய்து கொண்டிருக்கின்றனர்..

மேக்ஸ்வெல் அணி நண்பர்களிடம் டிரஸ்டில் பணி புரிவது குறித்து கேட்டபோது திரு ஜெய்ஜாலன் அவர்கள்  மலைவாழ் மக்களுக்கான சேவையில் அவர்களுக்கு அரிய வகையில் உள்ள தேவைகளை நிறைவேற்றும் போது அவர்களின் ஆச்சர்யம் கலந்த மகிழ்ச்சியை காணும் பொழுது அந்த உணர்வை அளவிட இயலாது என கூறினார்.

தொடர்ந்து பேசிய மகேஸ்வரி தாய் அல்லது தந்தை இழந்த மாணவ மாணவியர்களின் கல்வி தேவைகளை நிறைவேற்றும் போது அவர்களின் எதிர்காலம் சிறப்பா அமையும்ன்னு நினைக்கும்போது அவ்வளவு சந்தோஷமா இருக்கும் என கூறினார்..

என்னைப் பொறுத்தவரை, ஒரு உதவி என்பது சரியான நேரத்தில் சரியான நபர்களுக்குச் செய்வது எங்கள் அறக்கட்டளையும் அதுபோலவே  செய்கிறது என செல்வி சரண்யா கூறினார்

ராத்திரி பகல் என்று பார்க்காமல்  வெயில் மழைன்னு யோசிக்காமல் இந்தியாவோட இன்னொரு பக்கம் இருக்கிற  ஹரியானா வரைக்கும் போகணுமான்னு யோசிக்காம எவ்வளவு கஷ்டப்பட்டு சேவை பண்ணாலும்   அந்த உதவியை வாங்குற மக்களோட முகத்தில் இருக்கிற சந்தோஷமும் புன்னகையும்  அவ்வளவு மனதிருப்தி ஒவ்வொரு முறையும் கொடுக்குது  என்றார் மேக்ஸ்வெல் அட்மின் ஜமீர் அகமது..

மேக்ஸ்வெல் பயனாளி மாற்றுத்திறனாளி  ஒருவரிடம் கேட்டபோது மேக்ஸ்வெல் நிறுவனர் முருகன் அண்ணே கிட்ட எப்ப உதவினு கேட்டாலும் தைரியமா இருங்க நான் பண்றேன்னு சொல்லி உதவி பண்ணுவார்.. என்ன மாதிரி  என் கூடவே இருக்கிற ஐம்பதுக்கு மேற்பட்ட மாற்றத்தினால் இதுவரைக்கும் உதவி செய்திருக்கிறார் அந்த உதவியை என்னைக்கும் மறக்க மாட்டோம் என்றார்.

அவ்வபோது நடைபெறும் பெரிய நலத்திட்ட உதவிகளில் கலந்துகொள்ளும் சின்னத்திரை மற்றும் திரைப்பட நடிகர்களும் தங்கள் கருத்தை பதிவிட்டுள்ளனர்..

இதுவரை மேக்ஸ்வெல் அறக்கட்டளையின்  நான்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ள  விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர் சீரியலில் அறியப்படும் மீனா எனும் ஹேமா ராஜ்குமார் கூறுகையில்  சுனாமியில் பெற்றோரை இழந்த இரண்டு குழந்தைகள் இன்று வரை படிக்க வைத்து வருவதுடன் அதுபோல செயல்பாடுகளில் ஈடுபடும் மேக்ஸ்வெல் அறக்கட்டளையுடன் எப்போதும் துணை நிற்பதாகவும் அவ்வப்போது குழந்தைகளுக்கு தேவையான நலத்திட்ட உதவிகளுக்கு உதவிகளும் செய்து கொண்டிருக்கிறார்..  மேலும் Kpy பாலா மற்றும் புகழ் தொடர்ந்து அறக்கட்டளையோடு தங்களின் பங்களிப்பை வழங்கிக் கொண்டிருக்கின்றனர்..

திரைப்பட நடிகர் Mime கோபி அவர்கள்  வெள்ளை உள்ளம் படைத்த மேக்ஸ்வெல் அணி  நண்பர்களோடு  மக்களுக்கு சேவை செய்வதில் மகிழ்ச்சி என்றார்..

இதுபோல பல்வேறு திரைப்பட நடிகர்களும் சின்னத்திரை நட்சத்திரங்களும் மேக்ஸ்வெல் அறக்கட்டளையோடு பயணிப்பது பெரும் மகிழ்ச்சி..

இப்படி அணி நண்பர்கள் முதல் பயனாளிகள் வரை,   சின்னத்திரை நட்சத்திரங்கள் முதல் திரைப்பட நடிகர்கள் வரை அனைவரும் கொண்டாடும் மேக்ஸ்வெல் அறக்கட்டளை தனது மூன்று ஆண்டு நிறைவு செய்து நாலாவது ஆண்டில் அடியெடுத்து வைத்து கோவையின் கூடுதல் பெருமையாக இணைந்துள்ளது..

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கோயம்பத்தூர்

ஐ ஃபவுண்டேஷன் இலவச கண் பரிசோதனை

Published

on

கண் மருத்துவ சேவையில் முன்னணி வகிக்கும் தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனை, உலக குளுக்கோமா வாரத்தை முன்னிட்டு மார்ச் 8 முதல் 14, 2026 வரை பல்வேறு விழிப்புணர்வு மற்றும் இலவச கண் பரிசோதனை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

தென்னிந்தியாவில் 27 கிளைகளை கொண்டு கடந்த 46 ஆண்டுகளாக சிறப்பான மருத்துவ சேவையை வழங்கி வரும் தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனை, கோயம்புத்தூரில் 1.20 இலட்சம் சதுர அடி பரப்பளவில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கண் மருத்துவ சேவைகளை வழங்கி வருகிறது. கண் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக மருத்துவமனை தொடர்ந்து பல்வேறு முகாம்கள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக உலக குளுக்கோமா வாரம் அனுசரிக்கப்படுகிறது. குளுக்கோமா பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்க உலக குளுக்கோமா சங்கம்முன்னெடுக்கும் உலகளாவிய முயற்சியாக இந்த வாரம் அனுசரிக்கப்படுகிறது. நோயாளிகள், கண் மருத்துவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கண் பார்வையை பாதுகாக்க முன்வர வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கமாகும். குறிப்பாக குளுக்கோமாவை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய வழக்கமான கண் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
முழுமையான பார்வை இழப்பு

இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி, 3 முதல் 5 சதவீதம் இந்தியர்கள் குளுக்கோமா (கண் அழுத்த நோய்) ஏற்படும் அபாயத்தில் உள்ளதாக தெரியவந்துள்ளது. அதில் சுமார் 90 சதவீதம் பேர் தங்களுக்கு குளுக்கோமா இருப்பதை அறியாமலேயே வாழ்ந்து வருகின்றனர்.உலகளவில் சுமார் 76 மில்லியன் மக்கள் குளுக்கோமா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2.1 மில்லியன் பேர் முழுமையான பார்வை இழப்பை சந்தித்துள்ளதுடன், 4.2 மில்லியன் பேர் கடுமையான பார்வைக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் மட்டும் 40 வயதுக்கு மேற்பட்ட சுமார் 12 மில்லியன் மக்கள் குளுக்கோமா நோயால் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

சமீப ஆண்டுகளில் குளுக்கோமா சிகிச்சையில் குறைந்தபட்ச ஊடுருவும் குளுக்கோமா அறுவை சிகிச்சை முக்கிய முன்னேற்றமாக உருவெடுத்துள்ளது.உலக குளுக்கோமா வாரத்தை முன்னிட்டு மார்ச் 8 முதல் 14 வரை தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனையின் அனைத்து கிளைகளிலும் குளுக்கோமா நோயாளிகளுக்கு இலவச கண் பரிசோதனை வழங்கப்படுகிறது. மேலும் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகளுக்கு 10 சதவீத கட்டண சலுகையும் வழங்கப்படுகிறது. இதற்குடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு இடங்களில் இலவச கண் பரிசோதனை முகாம்களும் நடத்தப்படுகின்றன.
தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனையின் அனைத்து கிளைகளிலும் iStent, KDB Glide, GATT மற்றும் MINIJECT போன்ற புதிய MIGS சிகிச்சை முறைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் தீவிர குளுக்கோமா நோயாளிகளுக்கு Trabeculectomy மற்றும் Aqueous Drainage Implants மூலம் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தி ஐ ஃபவுண்டேஷனின் அனைத்து கிளைகளிலும் ஆண்டுதோறும் 1500 க்கும் மேற்பட்ட குளுக்கோமா அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தி ஐ ஃபவுண்டேஷன் கண் மருத்துவமனையின் மருத்துவ இயக்குநரும் குளுக்கோமா பிரிவு ஆலோசகருமான டாக்டர் சித்ரா ராமமூர்த்தி, டாக்டர் ஆர். முரளிதர், டாக்டர் ஐமன் அகமது கான் மற்றும் டாக்டர் நிரஞ்சனா பாலசுப்ரமணியம் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து குளுக்கோமா நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Continue Reading

கோயம்பத்தூர்

அதிமுகவின் முப்பெரும் தலைவர்களின் பிறந்தநாள் விழா

Published

on

அதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய முப்பெரும் தலைவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணி சார்பில் கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 300 கிரிக்கெட் அணிகளின் வீரர்களுக்கு கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி வடவள்ளியில் நடைபெற்றது. அதிமுக எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச்செயலாளர் Er. R. சந்திரசேகர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிங்காநல்லூர் தொகுதி எம்எல்ஏ கே.ஆர்.ஜெயராம் மற்றும் மாநில மாணவரணி செயலாளர் சிங்கை ஜி.ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.

அதிமுக கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளரும், கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏவுமான அம்மன் கே அர்ஜுனன் கிரிக்கெட் வீரர்களுக்கு உபகரணங்களை வழங்கி நிகழ்ச்சியை சிறப்பித்தார். இதில் மாநில, மாவட்ட மற்றும் வட்ட கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். எம்எல்ஏ வழங்கினார்

Continue Reading

கோயம்பத்தூர்

கோவை கணபதி பகுதியில் ‘கிராண்ட் சிட்டி’ – புதிய பிரீமியம் குடியிருப்பு திட்டம் அறிமுகம்

Published

on

கே.ஜி குழுமத்தின் டவுன் & சிட்டி டெவலப்பர்ஸின் , தனது புதிய பிரீமியம் குடியிருப்பு திட்டமான ‘கிராண்ட் சிட்டி’ யை கோவை சத்திய ரோடு, கணபதி பகுதியில் அறிமுகப்படுத்தியது.இந்த திட்டத்தை இதன் இணை நிறுவனர் சஞ்சனா விஜயகுமார், உதவி துணைத் தலைவர் யுவராஜ், மற்றும் மூத்த மார்க்கெட்டிங் மேலாளர் ஜோஷுவா ஆகியோர் அறிமுகப்படுத்தினர்.

இது குறித்து சஞ்சனா விஜயகுமார் கூறுகையில், “வேகமாக வளர்ந்து வரும் குடியிருப்பு மையமாக உருவெடுத்து வரும் கணபதி – சரவணம்பட்டி ஐடி காரிடார் பகுதியில் அமைந்துள்ள ‘கிராண்ட் சிட்டி’, முன்னணி கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் மற்றும் புரோசோன் மால் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு அருகில் இருப்பதால், சிறந்த இணைப்பும் வசதியான நகர வாழ்க்கையும் ஒருங்கிணைந்த வாழ்வையும் வழங்கும் திட்டமாக உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த திட்டத்தில் 1, 2 மற்றும் 3 பி.எச்.கே அபார்ட்மெண்ட்கள் நவீன வாழ்க்கை முறைக்கு ஏற்ப திறமையான இடவசதி திட்டமிடலுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. இயற்கை ஒளி மற்றும் காற்றோட்டம் அதிகமாக கிடைக்கும் வகையில் வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. வாஸ்து முறைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ள இந்த குடியிருப்புகளில், சில 3 பி.எச்.கே வீடுகள் பொதுச் சுவர் இல்லாமல் தனியுரிமை அம்சத்துடன் வழங்கப்படுகின்றன. மேலும், இவி சார்ஜிங் வசதி மற்றும் ஸ்மார்ட் ஹோம் அம்சங்களும் இணைக்கப்பட்டுள்ளன.குடியிருப்பாளர்களுக்காக குழந்தைகள் விளையாட்டு பகுதி, கசீபோ அமர்வு, அழகிய தோட்டம், ஜிம் மற்றும் பார்ட்டி லான் உள்ளிட்ட பல்வேறு வாழ்க்கை முறை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.மேலும் மார்ச் 8 வரை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இலவச இவி பைக் வழங்கப்படும் சிறப்பு சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூரில் 25க்கும் மேற்பட்ட திட்டங்களை வெற்றிகரமாக டவுன் & சிட்டி டெவலப்பர் நிறுவனம் நிறைவு செய்து, 4,000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வீடுகளை வழங்கியுள்ளது

Continue Reading

Trending