தமிழக அரசியல் களத்தில் தேர்தல் என்ற புயல் உருவாகி இன்னும் அடங்காமல் சுழற்றி அடித்துக் கொண்டிருக்கிறது. இந்த முறை நடந்த தேர்தல் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. பல ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி செய்து வந்த இரண்டு பெரிய கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆகியவற்றை பின்னுக்கு தள்ளி, புதிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ள விஜய்யின் ‘தமிழக வெற்றி கழகம்’.
கட்சி ஆரம்பித்து இரண்டு ஆண்டுகளே ஆன நிலையில், 108 தொகுதிகளை கைப்பற்றி இருப்பது சாதாரண விஷயம் அல்ல. இது தமிழக அரசியல் நிலைப்பாடுகளை முற்றிலும் மாற்றியமைக்கும் வகையில் உள்ளது. இளைஞர்கள், முதல் முறை வாக்களிப்பவர்கள், ஆகியோரின் ஆதரவு தவெக-க்கு பெருமளவில் கிடைத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இந்த தேர்தலில் திமுக மற்றும் அதிமுக இரண்டும் எதிர்பார்த்த அளவுக்கு வாக்குகள் கிடைக்கப்பெறவில்லை. திமுக தனது ஆட்சியை தொடரும் நம்பிக்கையுடன் இருந்தாலும், வாக்கு சதவீதத்தில் குறைவு ஏற்பட்டுள்ளது. அதிமுகவும் மீண்டும் எழுச்சி பெற முயன்றாலும், எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்த நிலையில்
108 தொகுதிகளை வென்றிருந்தாலும், தவெகக்கு தெளிவான பெரும்பான்மை இல்லை என்பது முக்கியமான mமானதாகும் . ஆட்சி அமைக்க தேவையான எண்ணிக்கையை அடைய முடியாததால், பிற கட்சிகளின் ஆதரவை நாட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் அரசியல் கூட்டணிகள் குறித்து தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.
திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவற்றை அணுகும் முயற்சியும் நடைபெற்று வருகிறது. இவர்களின் தவெக-க்கு ஆதரவு தருவார்களா அப்படி தர தயாரானாலும் என்ன கோரிக்கைகள் வைப்பார்கள் அதனை தவெக ஏற்குமா? என்ற கேள்வி வட்டமடித்து கொண்டிருக்கிறது.
இரண்டாவது வாய்ப்பாக அதிமுக இருக்கிறது, பல காட்சிகளை சேர்த்து ஆட்சி அமைப்பதை விட அதிமுக என்ற ஒற்றை கட்சி ஆதரவுடன் ஆட்சி என்பது சுலபமானது என சிந்திக்க தவெக துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது. யாருடன் கூட்டணி அமைக்கப்படும், எந்த நிபந்தனைகளில் ஆதரவு கிடைக்கும் என்பது தற்போது மிகுந்த சஸ்பென்ஸாக உள்ளது.
விஜய் தலைமையிலான தவெக, மக்கள் மத்தியில் உருவாக்கியுள்ள எதிர்பார்ப்பு மிக அதிகம். தேர்தல் வெற்றி மட்டுமல்லாமல், ஆட்சி அமைத்து வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பும் கட்சியின் மீது உள்ளது. இந்த சூழலில், சரியான கூட்டணியை தேர்வு செய்வது மிக முக்கியமான கட்டமாக பார்க்கப்படுகிறது.
அடுத்த சில நாட்களில் நடைபெற உள்ள அரசியல் நகர்வுகள் தமிழகத்தின் எதிர்கால அரசியலை தீர்மானிக்கக்கூடியவை. தற்போது மக்கள் தீர்ப்பு வெளிவந்துவிட்டது, இனி அரசியல் கட்சிகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதே அனைவரின் கவனமாக உள்ளது.