Connect with us

சென்னை

திருச்சியில் தனது முதல் கிளையை துவங்கி ஸ்ரீ ஆனந்தாஸ் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ்

Published

on

தமிழ்நாட்டின் புகழ்பெற்ற இனிப்பு மற்றும் காரவகைகள் நிறுவனமான ஸ்ரீ ஆனந்தாஸ் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ், திருச்சியின் மையப்பகுதியான 11வது குறுக்கு தெருவில் தில்லை நகரில் தனது முதல் கிளையைத் தொடங்கியுள்ளது.புதிய கிளை துவக்கம் குறித்து ஆனந்தாஸ் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு. மணிகண்டன் கூறுகையில், ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் தரமான மற்றும் நினைவில் நிற்கும் சுவையை வழங்குவதே எங்கள் முக்கிய குறிக்கோள். திருச்சி மக்களுக்கு எங்கள் சிறந்த தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம், என்றார்.1998-ஆம் ஆண்டு கோயம்புத்தூரில் ஒரு சிறிய சைவ உணவகமாகத் தொடங்கப்பட்ட ஸ்ரீ ஆனந்தாஸ், தற்போது தென்னிந்திய இனிப்பு மற்றும் காரவகைகளில் நம்பிக்கைக்குரிய நிறுவனமாக குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெற்றுள்ளது. தற்போது கோயம்புத்தூரில் 20-க்கும் மேற்பட்ட கிளைகளையும், சென்னையில் பல கிளைகளையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறது.ஸ்ரீ ஆனந்தாஸ் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் திரு. என்.வி. நம்மாழ்வார் கூறுகையில்: “பாரம்பரிய சுவைகளை அனைவருக்கும் கொண்டு சேர்க்கும் லட்சியத்துடன் பயணித்து வருகிறோம். கோயம்புத்தூர் மற்றும் சென்னையில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், தற்போது திருச்சியிலும் எங்கள் சேவையை வழங்குவதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம். திருச்சி மக்களிடம் இருந்தும் எங்களுக்குச் சிறப்பான வரவேற்பு கிடைக்கும் என உறுதியாக நம்புகிறோம்”.ஸ்ரீ ஆனந்தாஸில் பாதாம் ரோஸ் லட்டு, குல்கந்த் பிஸ்கட் போன்ற நவீன இனிப்புகளுடன், கோவில்பட்டி கடலை மிட்டாய் மற்றும் இளநீர் ஹல்வா போன்ற பாரம்பரியச் சிறப்பு வகைகளும் இணைந்து, மொத்தம் 200-க்கும் மேற்பட்ட வகைகள் நாள்தோறும் புத்தம் புதியதாகத் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

வாடிக்கையாளர்களின் நம்பிக்கையும் ஆதரவையும் தொடர்ந்து பெற்று வரும் இந்த நிறுவனம், விசேஷங்கள் மற்றும் இல்ல விழாக்களுக்கான ஸ்பெஷல் ஆர்டர்களையும் ஏற்று, அவற்றை சிறந்த சேவையுடன் வழங்கி வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த புதிய கிளையின் தொடக்கம் நிறுவனத்தின் விரிவாக்கத் திட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாக அமைந்துள்ளது. விரைவில் ஈரோடு மற்றும் மதுரை நகரங்களிலும் புதிய கிளைகள் தொடங்கப்பட உள்ளன. மேலும், பாலக்காடு கிளையின் வெற்றியைத் தொடர்ந்து, கேரள மாநிலத்தின் கொச்சியிலும் விரிவாக்கம் மேற்கொள்ளப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

சென்னை

சென்னையில் மார்ச் 8ல் மகளிர் தின மேரத்தான் 2026

Published

on

மகளிர் தினத்தை முன்னிட்டு “Women’s Day Marathon 2026” நிகழ்ச்சி வரும் மார்ச் 8ஆம் தேதி காலை 6 மணிக்கு ஸ்ரீபெரும்புதூர் SIPCOT வளாகத்தில் நடைபெறுகிறது. SIPCOT தொழிற்பூங்கா, மாம்பாக்கம் இணைப்பில் இந்த மேரத்தான் நடத்தப்படுகிறது.

3 கி.மீ., 5 கி.மீ. மற்றும் 10 கி.மீ. என மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடைபெறும். வெற்றியாளர்களுக்கு பணப் பரிசு மற்றும் பதக்கங்கள் வழங்கப்படும். அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் மின் சான்றிதழ் (E-Certificate), பதக்கங்கள், Refreshments மற்றும் Goodies Bag வழங்கப்பட உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு அனுமதி இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. பெண்களின் ஆரோக்கியம், விழிப்புணர்வு மற்றும் சமூக ஒற்றுமையை முன்னிறுத்தும் வகையில் இந்த மேரத்தான் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சியை Ennovi Mobility Solutions India Pvt Ltd மற்றும் Dreamz Foundation இணைந்து வழங்குகின்றன.

Continue Reading

சென்னை

டென் டென் செஸ் அகாடமி – 12வது தமிழ்நாடு மாநில அளவிலான குழந்தைகள் சதுரங்கப் போட்டி 2026

Published

on

டென் டென் செஸ் அகாடமி ஏற்பாட்டில் நடைபெற்ற 12வது தமிழ்நாடு மாநில அளவிலான குழந்தைகள் சதுரங்கப் போட்டி, 2026 பிப்ரவரி 15ஆம் தேதி சென்னை, சோளிங்கநல்லூரில் உள்ள ஸ்ரீ ஐயப்பா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் வெற்றிகரமாக நடைபெற்றது. ஒருநாள் நடைபெற்ற இந்தப் போட்டியில், மாநிலத்தின் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த மொத்தம் 245 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

பல்வேறு பிரிவுகளில் 120 கோப்பைகளும், 40 பதக்கங்களும் வழங்கப்பட்டன. மேலும், மிக இளம் வயது பங்கேற்பாளருக்கும், சிறப்பாக செயல்பட்ட சதுரங்க அகாடமிகளுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டு, தனிநபர் திறமைகளும் இளையோர் சதுரங்க வளர்ச்சிக்கு அளித்த நிறுவன பங்களிப்புகளும் பாராட்டப்பட்டன.

இந்தப் போட்டி, 7 வயதுக்குட்பட்டோர் (U7), 9 வயதுக்குட்பட்டோர் (U9), 11 வயதுக்குட்பட்டோர் (U11) மற்றும் 13 வயதுக்குட்பட்டோர் (U13) ஆகிய பிரிவுகளில் நடைபெற்றது.

U7 பிரிவு:

சென்னையைச் சேர்ந்த தக்ஷிணேஸ்வர் S. P. 5.5/6.0 புள்ளிகளுடன் U7 ஆண்கள் பிரிவில் முதல் இடம் பெற்றார். செங்கல்பட்டையைச் சேர்ந்த சம்யுக்தா P. 5.0/6.0 புள்ளிகளுடன் U7 பெண்கள் பிரிவில் வெற்றி பெற்றார்.

U9 பிரிவு:

சென்னையைச் சேர்ந்த த்ரிஷாந்த் P. 5.5/6.0 புள்ளிகளுடன் U9 ஆண்கள் பிரிவில் முதலிடம் பெற்றார். செங்கல்பட்டையைச் சேர்ந்த பிரகதி 5.0/6.0 புள்ளிகளுடன் U9 பெண்கள் பிரிவில் வெற்றி பெற்றார்.

U11 பிரிவு:

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஹர்ஷா வர்தன் S. 6.0/6.0 என்ற முழு மதிப்பெண்களுடன் U11 ஆண்கள் பிரிவில் முதலிடம் பெற்றார். செங்கல்பட்டையைச் சேர்ந்த லக்ஷிதா M. 5.0/5.0 புள்ளிகளுடன் U11 பெண்கள் பிரிவில் வெற்றி பெற்றார்.

U13 பிரிவு:

செங்கல்பட்டையைச் சேர்ந்த நவ்நீத் கலியப்பெருமாள் 6.0/6.0 என்ற முழு மதிப்பெண்களுடன் U13 ஆண்கள் பிரிவில் முதலிடம் பெற்றார். சென்னையைச் சேர்ந்த மேஹநேத்ரா M. 4.0/6.0 புள்ளிகளுடன் U13 பெண்கள் பிரிவில் வெற்றி பெற்றார்.

பரிசுகளை ஸ்ரீ ஐயப்பா பள்ளி ஒருங்கிணைப்பாளர் திரு. கிருஷ்ணகுமார், டென் டென் செஸ் அகாடமி தலைவர் திரு. S. R. ஜனகிராமன், இணைச் செயலாளர் திருமதி கோமதி மற்றும் டென் டென் செஸ் அகாடமியின் திருமதி விஜி ஆகியோர் வழங்கினர். மேலும், மேடையில் போட்டி அமைப்பாளர் திரு. S. J. அமர்நாத் மற்றும் முதன்மை நடுவர் திருமதி I. A. S. கனிமொழி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Continue Reading

கோயம்பத்தூர்

முன்னாள் முதல்வரின் 9 ஆண்டு நினைவு தினம் மலர் தூவி மரியாதையை செய்த அதிமுகவினர் !

Published

on

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 9 ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி கோவை அண்ணா சிலை அருகில் அமைந்துள்ள இதய தெய்வம் மாளிகையில் முன்னாள் அமைச்சர் திரு.எஸ்.பி.வேலுமணி அவர்களின் வழிகாட்டுதல்படி அதிமுக கோவை தெற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி வேடபட்டி பேரூராட்சி பொறுப்பாளர், ரோட்டரி. எஸ். மணிகண்டன் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.

9ம் நினைவஞ்சலி நிகழ்வில் வரும் 2026 சட்டசபை தேர்தலில் தமிழக மக்கள் விரும்பும் கழக ஆட்சியை அரியணையில் அமர்த்தும் வரை ஓய மாட்டோம் என்று கழக முன்னோடிகளுடன் சபதம் மேற்கொண்டனர்

 

 

Continue Reading

Trending