Connect with us

சென்னை

சர்வதேச ஆண்கள் தின விழா – WPC அமைப்பின் சிறப்பான ஏற்பாடு

Published

on

சென்னையில் வரும் நவம்பர் 19-ஆம் தேதி நடைபெறவுள்ள சர்வதேச ஆண்கள் தின விழா – WPC அமைப்பின் சிறப்பான ஏற்பாடு

சென்னை, நவம்பர் 19, 2025: ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19-ஆம் தேதி சர்வதேச ஆண்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு WPC – Women Professional Connect (பெண்கள் தொழில்முறை இணைப்பு) அமைப்பு, இந்த ஆண்டு சென்னையில் சிறப்பான விழாவை நடத்தத் திட்டமிட்டுள்ளது.

அமைப்பின் நிறுவனர் திருமதி ரேணுகா அவர்களின் வழிநடத்தலில், பெண்கள் தொழில்முறை இணைப்பான WPC, கடந்த ஆண்டுகளில் போலவே இந்த முறைவும் ஆண்கள் தினத்தை உற்சாகமாகக் கொண்டாடப் போகிறது. ஆண்களைப் பாராட்டும் நிகழ்வை பெண்கள் அமைப்பு நடத்துவது என்பது சமூகத்தில் சமத்துவம், மதிப்பு, இணைபிரியாமை ஆகியவற்றை வலியுறுத்தும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு எனக் கூறப்படுகிறது.

இந்த ஆண்டு விழாவில், நடுவர் குழு உறுப்பினர்கள் மற்றும் ஆண் தொழில் முனைவோர் பங்கேற்கவுள்ளனர். மதிப்பிற்குரிய செல்வி அரசி அருள் (தொடர் தொழில் முனைவோர் மற்றும் முதலீட்டாளர்), டாக்டர். சிவரஞ்சனி காமாட்சி நினைவு மருத்துவமனை இயக்குநர் டாக்டர். கோமதி, மேலும் FEMI நிறுவனத்தின் நிறுவனர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க உள்ளனர்.

 

விழாவின் முக்கிய அம்சமாக “லாப நோக்கம் V/S எதிர்குறிக்கோள்” (Profitability vs Purpose) என்ற தலைப்பில் சிந்தனையூட்டும் உரையாடல்கள் நடைபெறவுள்ளன. நடுவர் குழுவினர் பல ஆண் தொழில் முனைவோரின் சாதனைகள் மற்றும் சமூக பங்களிப்புகளைப் பற்றி தங்கள் அனுபவங்களையும் கருத்துகளையும் பகிர்ந்து கொள்ளவுள்ளனர்.

அமைப்பின் நிர்வாகக் குழு உறுப்பினர்களும், அனைத்து WPC உறுப்பினர்களும் இந்த விழாவை சிறப்பாக்க முக்கிய பங்காற்றவுள்ளனர்.

நிகழ்வு சென்னை நகரின் முன்னணி அரங்கில் நடைபெற உள்ளது. உற்சாகம், ஆற்றல் மற்றும் நேர்மறை எண்ணங்களால் நிரம்பிய இந்த நாள், WPC அமைப்பின் வளர்ச்சிப் பயணத்தில் மேலும் ஒரு மைல்கல் ஆகும்.

அமைப்பின் நோக்கம், ஆண்கள் மற்றும் பெண்கள் இணைந்து சமூகத்திற்காக செயல்பட வேண்டும் என்பதையே வலியுறுத்துகிறது. இதுபோன்ற பல அர்த்தமுள்ள நிகழ்வுகளை எதிர்காலத்திலும் நடத்த WPC உறுதி எடுத்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

சென்னை

அதிமுக எம்.பி பெயர் அதிகாரப்பூர்வ நீக்கம்!

Published

on

சி.வி சண்முகம் (அதிமுக) அவரது மாநிலங்களவை பதவியை ராஜினாமா செய்த நிலையில் மாநிலங்களவை செயலகம் அதிகாரப்பூர்வமாக எம்.பி-க்கள் பெயர் பட்டியலில் இருந்து சி.வி சண்முகம் பெயரை நீக்கியது.இதனால் அதிமுக எம்.பி-க்கள் 4 ஆக குறைந்தது.

Continue Reading

செய்திகள்

பெரும்பான்மை தேவை என்ன செய்யப் போகிறார் விஜய்?

Published

on

தமிழக அரசியல் களத்தில் தேர்தல் என்ற புயல் உருவாகி இன்னும் அடங்காமல் சுழற்றி அடித்துக் கொண்டிருக்கிறது. இந்த முறை நடந்த தேர்தல் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. பல ஆண்டுகளாக மாறி மாறி ஆட்சி செய்து வந்த இரண்டு பெரிய கட்சிகளான திமுக மற்றும் அதிமுக ஆகியவற்றை பின்னுக்கு தள்ளி, புதிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ள விஜய்யின் ‘தமிழக வெற்றி கழகம்’.

கட்சி ஆரம்பித்து இரண்டு ஆண்டுகளே ஆன நிலையில், 108 தொகுதிகளை கைப்பற்றி இருப்பது சாதாரண விஷயம் அல்ல. இது தமிழக அரசியல் நிலைப்பாடுகளை முற்றிலும் மாற்றியமைக்கும் வகையில் உள்ளது. இளைஞர்கள், முதல் முறை வாக்களிப்பவர்கள், ஆகியோரின் ஆதரவு தவெக-க்கு பெருமளவில் கிடைத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இந்த தேர்தலில் திமுக மற்றும் அதிமுக இரண்டும் எதிர்பார்த்த அளவுக்கு வாக்குகள் கிடைக்கப்பெறவில்லை. திமுக தனது ஆட்சியை தொடரும் நம்பிக்கையுடன் இருந்தாலும், வாக்கு சதவீதத்தில் குறைவு ஏற்பட்டுள்ளது. அதிமுகவும் மீண்டும் எழுச்சி பெற முயன்றாலும், எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்த நிலையில்
108 தொகுதிகளை வென்றிருந்தாலும், தவெகக்கு தெளிவான பெரும்பான்மை இல்லை என்பது முக்கியமான mமானதாகும் . ஆட்சி அமைக்க தேவையான எண்ணிக்கையை அடைய முடியாததால், பிற கட்சிகளின் ஆதரவை நாட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் அரசியல் கூட்டணிகள் குறித்து தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.

திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகியவற்றை அணுகும் முயற்சியும் நடைபெற்று வருகிறது. இவர்களின் தவெக-க்கு ஆதரவு தருவார்களா அப்படி தர தயாரானாலும் என்ன கோரிக்கைகள் வைப்பார்கள் அதனை தவெக ஏற்குமா? என்ற கேள்வி வட்டமடித்து கொண்டிருக்கிறது.

இரண்டாவது வாய்ப்பாக அதிமுக இருக்கிறது, பல காட்சிகளை சேர்த்து ஆட்சி அமைப்பதை விட அதிமுக என்ற ஒற்றை கட்சி ஆதரவுடன் ஆட்சி என்பது சுலபமானது என சிந்திக்க தவெக துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது. யாருடன் கூட்டணி அமைக்கப்படும், எந்த நிபந்தனைகளில் ஆதரவு கிடைக்கும் என்பது தற்போது மிகுந்த சஸ்பென்ஸாக உள்ளது.

விஜய் தலைமையிலான தவெக, மக்கள் மத்தியில் உருவாக்கியுள்ள எதிர்பார்ப்பு மிக அதிகம். தேர்தல் வெற்றி மட்டுமல்லாமல், ஆட்சி அமைத்து வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பும் கட்சியின் மீது உள்ளது. இந்த சூழலில், சரியான கூட்டணியை தேர்வு செய்வது மிக முக்கியமான கட்டமாக பார்க்கப்படுகிறது.

அடுத்த சில நாட்களில் நடைபெற உள்ள அரசியல் நகர்வுகள் தமிழகத்தின் எதிர்கால அரசியலை தீர்மானிக்கக்கூடியவை. தற்போது மக்கள் தீர்ப்பு வெளிவந்துவிட்டது, இனி அரசியல் கட்சிகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதே அனைவரின் கவனமாக உள்ளது.

Continue Reading

செய்திகள்

200 இடங்களில் வெற்றி தமிழகத்தை ஆள்வார் – செங்கோட்டையன்

Published

on

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த செங்கோட்டையன்,கருத்துகணிப்பு குறித்து தெளிவுபடுத்த விரும்புகிறேன் என தெரிவித்த அவர்,
தந்தி ஆன்லைன் நடத்திய கருத்து கணிப்பில் 250808 பேரிடம் கருத்து கணிப்பு எடுத்து இருக்கிறார்கள்,ஆன்லைன் மூலம் நடத்தி அவர்கள் கொடுத்த ரிசல்ட்டில் 120 தொகுதிக்கு மேல் வரும் என சொல்லி இருக்கிறார்கள்,
மற்றவர்கள் அதற்கு கீழே இருக்கும் சொல்லி இருக்கின்றார்கள் என தெரிவித்தார்.

ஒவ்வொரு தேர்தலிலும் பார்த்தால் தெரியும்இலங்கை, நேபாள், பங்களா தேசம், பஞ்சாப் என அனைத்து இடங்களிலும்கருத்துக் கணிப்புகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது எனவும்கருத்து கணிப்பு என்பது ஒரு குறிப்பிட்ட பேர் குறிப்பிட்டு சொல்வது என தெரிவித்தார்.மக்கள் அலை இதுவரை தமிழ்நாட்டின் வரலாற்றில் மட்டுமல்ல , இந்திய வரலாற்றில் இல்லாதபடி இருக்கும் எனவும், பசுமை புரட்சி , வெண்மை புரட்சி, இன புரட்சி , சோசலிச புரட்சி வரிசையில் , அடுத்ததாக
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விசில் புரட்சிதான் உலக அளவில் தெரியப்போகிறது என தெரிவித்தார்.200 இடங்களில் வெற்றி பெறுவார் அவர் தான் தமிழகத்தை ஆள்வார்,இது மக்களால் தீர்மானிக்கப்பட்டுள்ள ஒன்று எனவும் தெரிவித்தார்.கருத்துக்கணிப்பு பெரிய சேனல்கள் யார் எடுத்திருக்கிறார்கள்?என கேள்வி எழுப்பிய அவர்  டைம்ஸ் நவ் சேனலுக்கு எங்களை பிடிக்காது என தெரிவித்தார். இதனைதொடர்ந்து விமானம் மூலம் அவர் சென்னை கிளம்பினார்.

Continue Reading

Trending