Connect with us

கோயம்பத்தூர்

கோவை – பிரஞ்சு பண்பாட்டு திறமைகள் விழா!

Published

on

மாணவர்களின் கலைத்திறனை வெளிப்படுத்தும் அரங்கம்

பல்வேறு மொழிகள் மற்றும் பண்பாட்டை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன், Adore-The Language Skool, SNV Global School உடன் இணைந்து “Fête des Talents Français” – Festival of French Talents எனும் பிரஞ்சு திறமைகள் விழாவை நடத்துகிறது.

இந்த விழா வரும் அக்டோபர் 25, 2025 (சனிக்கிழமை) அன்று காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை SNV Global School வளாகத்தில் நடைபெறவுள்ளது.

 

“Unveiling the Magic of France – where cuisine, songs, paintings and speech create a symphony of culture” என்ற தலைப்பில் நடைபெறும் இந்த விழா, பிரஞ்சு மொழியின் அழகையும், பிரான்சின் கலாச்சார சிறப்பையும் மாணவர்களுக்கு அனுபவமாக வழங்கும்.

நிகழ்ச்சியின் முக்கிய போட்டிகள்:

பிரஞ்சு பாடல் (French Song)

பிரஞ்சு ஓவியம் (French Painting)

பிரஞ்சு உணவு வகைகள் (French Cuisine)

‘Just a Minute in French’ பேச்சுப் போட்டி

மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதோடு, பிரஞ்சு கலாச்சாரத்தின் நுணுக்கங்களையும் அறிந்து கொள்ளும் சிறந்த வாய்ப்பாக இது அமையும். பங்கேற்கும் மாணவர்களுக்கு சிறப்பான பரிசுகள் வழங்கப்படும்.

பள்ளிகள் தங்களது மாணவர்களை இந்த விழாவில் பங்கேற்க அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.

தொடர்பு:
📧 adorethelanguageskool@gmail.com
📞 +91 7397341009

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

கோயம்பத்தூர்

ஜனவரி 15-ல் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை 50 ஆண்டு பொன்விழா!

Published

on

கோவை எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் ஆதரவில் இயங்கும் முன்னணி மருத்துவமனையான ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை தனது 50 வது ஆண்டு பொன்விழாவையும், ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவமனை அதன் 25 வது ஆண்டு வெள்ளிவிழாவையும் வரும் ஜனவரி 15 ஆம் தேதி சிறப்பாக கொண்டாட உள்ளது.

இதன் அறிவிப்பு நிகழ்வு மற்றும் செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சி இன்று கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது பேசிய அவர், எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை, கோவையில் 1970 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மனிதம் போற்றும் மருத்துவம்.அதுவே அறத்தின் மகத்துவம் எனும் சிந்தனையோடும், குறைந்த செலவில் தரமான மருத்துவம்எனும் சீரிய நோக்கத்தோடும்,1975 ஆம் ஆண்டு 18 ஏக்கர் பரப்பளவில் நகரின் மையப் பகுதியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை துவங்கப்பட்டது.

கோயம்புத்தூரில் முதல் எம்.ஆர்.ஐ ஸ்கேன், மருத்துவத் துறையின் அதிநவீன உபகரணங்கள், மருத்துவத்தின் சிறப்புத் துறைகளை உருவாக்குதல், மேம்பட்ட இதய சிகிச்சை என்று சாதனைகளின் தோற்றுவாயாக உருவானது ஸ்ரீ ராமகிருஷ்ணா பன்னோக்கு மருத்துவனை.1990–ல் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை என்னும் முதல் வெற்றியைப் பதித்தது. 2005 இந்தியாவின் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் வருகைபுரிந்தார். புற்று நோய்க்கான சிறப்பு சிகிச்சை துறை அப்போது தொடங்கப்பட்டது.2015 ஆம் ஆண்டு சுமார் 250 கோடி ரூபாய் செலவில் உலகத்தரம் கொண்ட மேம்படுத்தப்பட்ட பன்னோக்கு சிறப்பு சிகிச்சை மையம் கட்டமைக்கப்பட்டது.தரமான உள்கட்டமைப்பு, 1000 படுக்கைள், மேம்பட்ட தொழில்நுட்ப திறன்களைக் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவு (ICU), 16 அறுவை சிகிச்சை அறைகள், அவசர மற்றும் இதய நோய் சிகிச்சை மையங்கள், மாற்று அறுவை சிகிச்சைப் பிரிவுகள் என்று மருத்துவத்துறையில் தன்னிகரற்றமருத்துவமனையாக உருவெடுத்தது ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை.2016 இல் 8 மணி நேரத்தில் 13,206 நபர்கள்தங்கள் உடல் உறுப்புதான ஒப்புதல் படிவங்களை நிரப்பி மாபெரும் உலக சாதனை ஒன்றினை நிகழ்த்தி “கின்னஸ் வேர்ல்ட் ஆப் ரெக்கார்ட்”புத்தகத்தில், சரித்திர நிகழ்வைப் பதித்தது. உலகத்தரம் வாய்ந்த மருத்துவ முன்னேற்றங்களை மக்களுக்கு அறிமுகம் செய்வதில் முன்னோடியாக திகழ்கின்றது ஸ்ரீ ராமகிருஷ்ணா பன்னோக்கு மருத்துவமனை.ஸ்ரீ ராமகிருஷ்ணா பன்னோக்கு மருத்துவமனையின் இந்த 50 ஆண்டு காலப் பயணமானது, ஆயிரக்கணக்கான மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் என்று ஒவ்வொருவரின் அர்ப்பணிப்பால் சாத்தியமானது.ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை 50 ஆண்டுகளைக் கடக்கும் இதே தருணத்தில் ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவமனை 25 ஆண்டுகளை நிறைவு செய்கின்றது. ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவமனை தேசிய மற்றும் சர்வதேச அளவில் தனது தடத்தினைப் பதித்துள்ளது. அதிநவீன ஆய்வகங்கள், கிளினிக்குகள், ஸ்மைல் டிசைன் என்று முன்னோடி தொழில்நுட்பங்களைக் கொண்டு விளங்குகின்றது. மிகுந்த அனுவம் பெற்ற ஆசிரியர்களைக் கொண்டு மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்படுவதால் இன்று கடல் கடந்தும் பயணிக்கும் பல்வேறு பல் மருத்துவர்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. மிகுந்த குறைந்த கட்டணத்தில் ஏராளமான பொதுமக்கள் இங்கு பயனடைந்து வருகின்றனர்.

ஸ்ரீ ராமகிருஷ்ணா பன்னோக்கு மருத்துவமனையின் 50 ஆவது ஆண்டு பொன்விழா, ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவமனையின் 25-வது ஆண்டு வெள்ளிவிழா கோவை அவினாசி சாலையில் உள்ள கொடிசியா வர்த்த வளாகத்தில் வரும் ஜனவரி 15 ஆம் தேதி, மாலை 5 மணிக்கு கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது.
இந்தியக் குடியரசு துணைத் தலைவர் மாண்புமிகு சி.பி.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். அரசியல் தலைவர்கள், அரசு உயரதிகாரிகள், தொழிலதிபர்கள் கலந்து கொள்கின்றனர், என டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன் கூறினார்.“ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை எப்போதும் கொங்கு மண்டலத்தில் ஒரு சமூகப் பொறுப்புணர்வுடன் கூடிய, அதிநவீன வசதிகள் கொண்ட மருத்துவமனையாகத் திகழ்ந்து வருகிறது. ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, மிகச்சிறந்த 5 பல் மருத்துவக் கல்லூரிகளில் ஒன்றாக விளங்கி வருகிறது. இந்த இரண்டு நிறுவனங்களும் கோயம்புத்தூரைச் சுற்றியுள்ள பழங்குடியின மற்றும் கிராமப்புற மக்களுக்கும், கொங்கு மண்டலத்தின் பிற பகுதிகளில் உள்ள மக்களுக்கும் அர்ப்பணிப்புடன் சேவை செய்து வருகின்றன,” என்று டாக்டர் சுந்தர் தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் கூறுகையில், “கடந்த 50 ஆண்டுகளில் கோயம்புத்தூரில் தொழில்நுட்ப ரீதியாக முன்னேறிய ஒரு மருத்துவ நிறுவனமாக எங்களை நிலைநிறுத்திக் கொண்டுள்ளோம். அடுத்த 50 ஆண்டுகளில், மிகவும் மேம்பட்ட மருத்துவ அமைப்புகள் மற்றும் உபகரணங்களில் முதலீடு செய்யவும், அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சிறந்த சிகிச்சையை வழங்கி கொங்கு மண்டலத்தின் மிகச்சிறந்த மருத்துவமனையாகத் திகழவும் நாங்கள் விரும்புகிறோம்,” என்றார்.“வருங்காலங்களில் கோயம்புத்தூரைச் சுற்றியுள்ள கிராமப்புறப் பகுதிகளில் எங்களது சேவைகளை விரிவுபடுத்த உள்ளோம்,” என்றும் அவர் கூறினார்.

பேட்டியின் போது, எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளை இணை நிர்வாக அறங்காவலர் திரு. நரேந்திரன் சௌந்திரராஜ், தலைமை நிர்வாக அதிகாரி டி. மகேஷ்குமார், ஸ்ரீ இராமகிருஷ்ணா மருத்துவமனை மருத்துவ இயக்குநர் டாக்டர் எஸ். அழகப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.

Continue Reading

கோயம்பத்தூர்

திருப்பூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா!

Published

on

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா திருப்பூரில் , பொதுமக்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. சாமுண்டிபுரம் பகுதி, கோல்டன் நகர், நல்லூர் மற்றும் நெருப்பெரிச்சல் பகுதி உள்ளிட்ட திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் சமத்துவ பொங்கல் விழா நடத்தப்பட்டது.

இந்த விழா தமிழக வெற்றிக் கழக திருப்பூர் மாநகர மாவட்ட செயலாளர் எஸ். பாலமுருகன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற விழாவில் தவெக மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.க்கில் நடத்தப்பட்ட இந்த சமத்துவ பொங்கல் விழாவில் பாரம்பரிய முறையில் பொங்கல் தயாரித்தல், இனிப்புகள் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அனைத்து தரப்பினரும் ஒரே இடத்தில் ஒன்றிணைந்து சமத்துவ பொங்கலை கொண்டாடியதன் மூலம் சமூக ஒற்றுமையின் அவசியம் வலியுறுத்தப்பட்டது.

மேலும், இத்தகைய சமத்துவ விழாக்கள் சமூக நல்லிணக்கத்தையும், மக்களிடையே ஒற்றுமை உணர்வையும் வலுப்படுத்தும் என்பதையும் விழாவில் கலந்துகொண்டவர்கள் எடுத்துரைத்தனர்

Continue Reading

கோயம்பத்தூர்

வாக்கரூ கோயம்புத்தூர் மாரத்தானில் 25,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

Published

on

நேற்று நடைபெற்ற Walkaroo Coimbatore Marathon 2025 போட்டியில், சுமார் 25,000க்கும் மேற்பட்ட வீரர்கள் உற்சாகமாக பங்கேற்றனர். ஞாயிற்றுக்கிழமை காலை ஆரம்பித்த இந்த நிகழ்வில் தொழில், சமூக பின்னணி என அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு, கோயம்புத்தூர் நகரை உடற்பயிற்சி, ஒற்றுமை மற்றும் உற்சாகத்தின் அரங்காக மாற்றினர். தொடக்கப் புள்ளியில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு, Coimbatore Cancer Foundation அமைப்பிற்கு ஆதரவு தெரிவித்து, தங்களின் தனிப்பட்ட சாதனைகளையும் இலக்குகளையும் நோக்கி ஓடினர். இந்த நிகழ்வை எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) ஆய்வாளர் பொது அதிகாரி பாலகிருஷ்ணன் IPS, , கோயம்புத்தூர் மாநகர காவல் ஆணையர் சரவணா சுந்தர் IPS, இணைந்து போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.மாரத்தான் பாதை முழுவதும் நீர் வழங்கும் நிலையங்கள், மருத்துவ வசதிகள், ஆம்புலன்ஸ் சேவைகள், வழிகாட்டி குறியீடுகள் மற்றும் பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள் பணியமர்த்தப்பட்டிருந்ததால், ஓட்ட வீரர்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாத சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. போட்டியாளர்களின் நேரங்களைத் துல்லியமாக பதிவு செய்ய டைமிங் சிப்கள் பயன்படுத்தப்பட்டன.

இதுகுறித்து கோயம்புத்தூர் கேன்சர் ஃபவுண்டேஷன் நிர்வாக அறங்காவலர்
டாக்டர். பாலாஜி , கூறுகையில்,“வாக்கரூ கோயம்புத்தூர் மாரத்தானின் 13-வது பதிப்பு, சாதனை அளவிலான பங்கேற்பும் மக்களின் பேராதரவுமுடன் மாபெரும் வெற்றியாக அமைந்துள்ளது. மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட அனைத்து அரசு துறைகளின் ஆதரவுக்கும், அர்ப்பணிப்புடன் பணியாற்றிய தன்னார்வலர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்” என்றார்.

மேலும், பந்தய இயக்குநர் ரமேஷ் பொன்னுசாமி கூறுகையில்,
“இந்த ஆண்டு 25,000 பங்கேற்பாளர்கள் என்ற முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளோம். கோயம்புத்தூர் மக்கள், காவல் துறை, மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி மற்றும் பல அமைப்புகள், தன்னார்வலர்களின் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி. 2026 டிசம்பரில் நடைபெற உள்ள அடுத்த பதிப்பில் அனைவரையும் மீண்டும் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறோம்,” என்றார்.

Continue Reading

Trending