Connect with us

செய்திகள்

சுங்கச் சாவடிகளின் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது!

Published

on

சுங்கச் சாவடிகளின் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது!

தமிழ்நாடு முழுவதும் விக்கிரவாண்டி, திருச்சி, சேலம் மேட்டுப்பட்டி, மதுரை, தூத்துக்குடி உட்பட 20க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.

நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் மொத்தம் 892 சுங்க சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், தமிழ்நாட்டில் 1992 ஆம் ஆண்டுக்குப் பின் அமைக்கப்பட்ட சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008 ஆம் ஆண்டுக்கு பிறகு அமைக்கப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும், ஆண்டுதோறும் சுங்கக் கட்டண உயர்வு அமல்படுத்தப்படுவது வழக்கம்.

அந்த வகையில், கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி, விழுப்புரம், அரியலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 10 சதவீதம் வரை சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் நள்ளிரவு முதல் தமிழகத்தில் மீதமுள்ள, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மதுரை, சேலம், திருச்சி, திண்டுக்கல், தூத்துக்குடி, தருமபுரி, கிருஷ்ணகிரி, சமயபுரம் உள்ளிட்ட 25 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 7 சதவீதம் வரை கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.

குறைந்தபட்சம் ரூ.5-ல் இருந்து அதிகபட்சம் ரூ.395 வரை சுங்கக் கட்டணம் உயர்வு.

கட்டண உயர்​வுக்கு கண்​டனம் தெரி​வித்து பாமக தலை​வர் அன்​புமணி விடுத்த அறிக்​கை​யில், “நெடுஞ்​சாலைகளை முறை​யாகப் பராமரிக்​கத் தவறும் நெடுஞ்​சாலைகள் ஆணை​யத்​துக்கு சுங்​கக்​கட்​ட​ணத்தை உயர்த்​து​வதற்கு தார்​மீக ரீதி​யில் எந்த உரிமை​யும் கிடை​யாது. சுங்​கச்​சாவடி எண்​ணிக்கை விவ​காரத்​தில் மத்​திய, மாநில அரசுகள் கூட்​டணி அமைத்​துக் கொண்டு மக்​களை ஏமாற்​றுகின்​றன. குறிப்​பிட்ட காலத்​துக்​குப் பிறகும் செயல்​படும் சுங்​கச்​சாவடிகளில் கட்​ட​ணம் வசூலிக்​கக் கூடாது. ஆண்​டுக்கு ஆண்டு சுங்​கக்​கட்​ட​ணத்தை உயர்த்தி மக்​களை பரிதவிக்​கச் செய்​யக்​கூ​டாது. உடனடி​யாக சுங்​கக் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்​டும்” என்று தெரி​வித்​துள்​ளார்.

 

செய்திகள்

சொல்லுவதை செய்வோம் செய்வதைத்தான் சொல்லுவோம் – கனிமொழி பரப்புரை!

Published

on

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சரவணம்பட்டி பகுதியில் கவுண்டம்பாளையம் தொகுதி திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் சூரிய பிரகாஷை ஆதரித்து திமுக துணை பொது செயலாளர் கனிமொழி பரப்புரை மேற்கொண்டார்.

இதில் பேசிய கனிமொழி, இந்த வேட்பாளர் அன்னை சோனியா காந்தி தேர்ந்தெடுத்து கை உங்கள் கைகளில் ஒப்படைத்து இருக்கக்கூடிய வேட்பாளர், ராகுல் காந்தி உங்களுக்காக அனுப்பி வைத்திருக்க கூடிய வேட்பாளர், இவருக்கு கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

அவருடன் பேசிக் கொண்டிருந்த பொழுது கல்லூரி படிக்கும் பொழுதிலிருந்து அரசியல் ஆர்வம் கொண்டு அரசியலில் இணைத்துக் கொண்டு இருப்பதை என்னிடம் தெரிவித்தார், இந்த நாட்டை மதத்தின் பெயரால் பிரிக்கக்கூடிய பாஜக ஆர் எஸ் எஸ் கொள்கையை எதிர்த்து போராட வேண்டும் என்ற எண்ணத்தோடு இருக்கிறேன் என கூறியிருக்கிறார், இதைக் கேட்கும் போதே மனமகிழ்ச்சியாக இருந்தது என்றார்.

இந்த நாட்டைப் பிரிக்க நினைப்பவர்களை எதிர்க்கக் கூடிய ஒரு கூட்டணியாக நம் கூட்டணி உள்ளது, இந்த நாட்டு மக்களை ஒருமைப்படுத்த கூடிய கூட்டணியாக சிறுபான்மை மக்களுக்கும் பெரும்பான்மை மக்களுக்கும் அத்தனை பேரும் உரிமைகளுக்காகவும் பாடுபடக்கூடிய இந்தக் கூட்டணி தொடர்ந்து பங்காற்றிக் கொண்டிருக்கிறது என்றார்.

Continue Reading

செய்திகள்

தேர்தலுக்கு பின் விஜய் இதை கண்டிப்பாக செய்வார் – பியூஷ் கோயல்

Published

on

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,

“தவெக தலைவர் விஜய் மற்றும் திமுக இடையில் ரகசிய உடன்பாடு இருக்கிறது. திமுகவுக்கு எதிரான வாக்குகளை பிளவுபடுத்தவே விஜய் கொண்டு வரப்பட்டிருக்கிறார். இந்த சட்டசபைத் தேர்தலுக்கு பின் விஜய் மீண்டும் கண்டிப்பாக நடிக்க சென்றுவிடுவார். இதன் காரணமாகவே திமுக – விஜய் இடையில் மறைமுக கூட்டணி உள்ளது என்று சொல்கிறோம். திமுக எதிர்ப்பு வாக்குகள் சிதறாமல் பாதுகாத்து என்டிஏ பக்கம் கொண்டு வருவோம். ஒவ்வொரு வீடாக சென்று ஊழல் நிறைந்த திமுக ஆட்சியை அகற்றுவோம். முதல்வர் ஸ்டாலின் ஒரு குடும்ப ஆட்சியை நடத்தி வருகிறார். மக்களின் உணர்வுகளை அலட்சியப்படுத்துகிறார். ஒரேயொரு குடும்பம் தமிழ்நாட்டை நாசமாக்கி வருகிறது. உதயநிதி ஸ்டாலின் இந்த மாநிலத்தை வழிநடத்தினால், அவருக்கு மக்களின் உணர்வுகளோ, கலாச்சார பண்புகளோ புரியாது. திமுக ஆட்சியின் அவலங்கள் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அதேபோல் பிரதமர் மோடியின் ஆட்சியை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

என்டிஏ கூட்டணி ஆட்சி நிச்சயமாக வளர்ச்சியை கொடுக்கும். அதிமுக, பாஜக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் ஒரே கோட்டில் இயங்குகின்றன. என்டிஏ கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சென்னையில் மாற்றத்தை ஏற்படுத்தும் பெரிய அளவிலான நகர்ப்புற திட்டங்களை உருவாக்குவோம். அதேபோல் விஜய்க்கு கூடும் கூட்டம் வாக்குகளாக மாறாது. ஒரு தலைவனாக உருவாக வேண்டும் என்றால் நீண்ட ஆண்டுகளில் மக்கள் சேவையில் இருந்திருக்க வேண்டும். வெறும் பிரபலமாக இருப்பது மட்டும் முதல்வராக தகுதியாக இருக்க முடியாது. இந்த சட்டசபைத் தேர்தலில் என்டிஏ கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளார்.”

Continue Reading

செய்திகள்

 பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Published

on

 பாஜக வேட்பாளர் பட்டியல்

விளவங்கோடு: எஸ். விஜயதரணி

அறந்தாங்கி: கவிதா ஸ்ரீகாந்த்

உதகமண்டலம்: போஜராஜன்

அவினாசி (SC): டாக்டர் எல். முருகன்

திருப்பூர் (தெற்கு): எஸ். தங்கராஜ்

கோயம்புத்தூர் (வடக்கு): வானதி சீனிவாசன்

திருவண்ணாமலை: சி. ஏழுமலை

ராசிபுரம் (SC): டாக்டர் எஸ்.டி. பிரேம்குமார்

மொடக்குறிச்சி: கீர்த்திகா சிவகுமார்

திருவாரூர்: கோவி சந்துரு

தஞ்சாவூர்: எம். முருகானந்தம்

கந்தர்வகோட்டை (SC): சி. உதயகுமார்

புதுக்கோட்டை: என். ராமச்சந்திரன்

திருப்பத்தூர்: கே.சி. திருமாறன்

மானாமதுரை (SC): பொன். வி. பாலகணபதி

மதுரை தெற்கு: பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன்

சாத்தூர்: நயினார் நாகேந்திரன்

ராமநாதபுரம்: ஜி.பி.எஸ். கே. நாகேந்திரன்

திருச்செந்தூர்: கே.ஆர்.எம். ராதாகிருஷ்ணன்

வாசுதேவநல்லூர் (SC): அனந்தன் அய்யாசாமி

ராதாபுரம்: எஸ்.பி. பாலகிருஷ்ணன்

நாகர்கோவில்: எம்.ஆர். காந்தி

குளச்சல்: டி. சிவகுமார் ப

த்மநாபபுரம்: பி. ரமேஷ்

 

Continue Reading

Trending