செய்திகள்

சுங்கச் சாவடிகளின் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது!

Published

on

சுங்கச் சாவடிகளின் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது!

தமிழ்நாடு முழுவதும் விக்கிரவாண்டி, திருச்சி, சேலம் மேட்டுப்பட்டி, மதுரை, தூத்துக்குடி உட்பட 20க்கும் மேற்பட்ட சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.

நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் மொத்தம் 892 சுங்க சாவடிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், தமிழ்நாட்டில் 1992 ஆம் ஆண்டுக்குப் பின் அமைக்கப்பட்ட சாலைகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008 ஆம் ஆண்டுக்கு பிறகு அமைக்கப்பட்ட சாலைகளுக்கு செப்டம்பர் மாதமும், ஆண்டுதோறும் சுங்கக் கட்டண உயர்வு அமல்படுத்தப்படுவது வழக்கம்.

அந்த வகையில், கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி, விழுப்புரம், அரியலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 10 சதவீதம் வரை சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் நள்ளிரவு முதல் தமிழகத்தில் மீதமுள்ள, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, மதுரை, சேலம், திருச்சி, திண்டுக்கல், தூத்துக்குடி, தருமபுரி, கிருஷ்ணகிரி, சமயபுரம் உள்ளிட்ட 25 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 7 சதவீதம் வரை கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.

குறைந்தபட்சம் ரூ.5-ல் இருந்து அதிகபட்சம் ரூ.395 வரை சுங்கக் கட்டணம் உயர்வு.

கட்டண உயர்​வுக்கு கண்​டனம் தெரி​வித்து பாமக தலை​வர் அன்​புமணி விடுத்த அறிக்​கை​யில், “நெடுஞ்​சாலைகளை முறை​யாகப் பராமரிக்​கத் தவறும் நெடுஞ்​சாலைகள் ஆணை​யத்​துக்கு சுங்​கக்​கட்​ட​ணத்தை உயர்த்​து​வதற்கு தார்​மீக ரீதி​யில் எந்த உரிமை​யும் கிடை​யாது. சுங்​கச்​சாவடி எண்​ணிக்கை விவ​காரத்​தில் மத்​திய, மாநில அரசுகள் கூட்​டணி அமைத்​துக் கொண்டு மக்​களை ஏமாற்​றுகின்​றன. குறிப்​பிட்ட காலத்​துக்​குப் பிறகும் செயல்​படும் சுங்​கச்​சாவடிகளில் கட்​ட​ணம் வசூலிக்​கக் கூடாது. ஆண்​டுக்கு ஆண்டு சுங்​கக்​கட்​ட​ணத்தை உயர்த்தி மக்​களை பரிதவிக்​கச் செய்​யக்​கூ​டாது. உடனடி​யாக சுங்​கக் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்​டும்” என்று தெரி​வித்​துள்​ளார்.

 

Click to comment

Trending

Exit mobile version