Connect with us

ஆரோக்கியம்

வாழ்க்கையை ஈசியா வாழுங்க! – – சதீஷ்குமார் சந்திரசேகரன்

Published

on

பெரும்பாலும் அனைவருடைய வாழ்க்கையில் நன்மை, தீமை இவை இரண்டும் இல்லாமல் வாழ்கை அமையாது எல்லோரும் சோதனைகளைத் தாண்டித்தான் அன்றாட வாழ்வை வாழ்ந்து வருகின்றனர். ஏழை, பணக்காரன் என்ற யாரும் இதற்கு விதிவிலக்கல்ல. அவரவர் விரலுக்கு ஏற்றவாறு வீக்கம் இருக்கத் தான் செய்கிறது. இதை சுலபமாக கையாளத் தெரிந்தவர்கள் சிறப்பாக வாழ்கிறார்கள்.

என்று ஆங்கிலத்தில் அழகான வார்த்தைகள் மூலம் கூறியிருக்கிறார்கள். அதாவது,” நீங்கள் தேடும் மகிழ்ச்சி உங்களைச் சுற்றி இருக்கிறது, அதை கவனிக்க மறக்காதீர்கள்”. என்பது பொருள்.

நாய்,பூனை, ஆடு,மாடு மற்ற மிருகங்கள் தங்களது வாழ்க்கையை அன்றைய தினத்தை அனுபவித்து வாழ்கின்றன. அன்று கிடைக்கும் உணவையும், அன்பையும் அனுபவித்து மகிழ்கின்றனர். பிற உயிரினங்களுக்கும் துன்பம் வரத்தான் செய்கிறது அதை கடந்து தான் தங்களது வாழ்க்கையை நகர்த்தி செல்கிறது. ஆனால் மனித இனம் மட்டும், தமக்கு நல்லதே நடக்க வேண்டும் என எண்ணி அன்றாடம் கிடைக்கும் மகிழ்ச்சியைத் தொலைத்து விடுகின்றான். போதிய உடற்பயிற்சி உணவுக் கட்டுப்பாடு இருந்தும் சில நோய்கள் வருவதை யாராலும் தடுக்க முடியாது. சிறப்பாக திட்டமிட்டு ஒரு தொழிலைத் துவங்கினாலும் நஷ்டம் வருவதை தடுப்பது சாத்தியமில்லா ஒன்று. எல்லோருக்கும் நன்மை மட்டுமே நினைக்கிறேன் ஆனால் எனக்கு தீமைகள் வருகின்றது என்று நினைத்து மனதை காயமாக்கிக் கொள்வதில் என்ன பயன்.

The happiness you’re looking for is all around you,
don’t forget to notice it.

இயற்கை எப்பொழுதும் ஒரே மாதிரி நமக்கு கிடைப்பதில்லை, மழை, வெயில், பனி, புயல், பூகம்பம் என மாறுபட்ட இயற்கையை தான் நாம் அனுபவித்து வருகிறோம். மனிதருக்கு மட்டும் ஒரே மாதிரியான தன்மை இருக்க வேண்டும் என நினைப்பது எந்த வகையில் நியாயம்?. வருவது வரட்டும் கிடைப்பது கிடைக்கட்டும் அனைத்தும் நன்மைக்கே! என புரிந்து நமக்குக் கிடைத்திருக்கும் இந்த கோல்டன் வாழ்க்கையை பிறருக்கு கெடுதல் நினைக்காமல், சந்தோஷமாக வாழ பழகினால், வாழ்க்கை ஈசியானதாக இருக்கும்.!

ஆரோக்கியம்

உலக செரிமான சுகாதார தினம்: கோவையில் “VGM IBD Clinics” தொடக்கம்

Published

on

கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் வி.ஜி.எம் மருத்துவமனை, உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, குடல் அழற்சி நோய்களான (Inflammatory Bowel Disease – IBD) க்ரோன்ஸ் நோய் (Crohn’s Disease) மற்றும் அல்சரேட்டிவ் கொலைட்டிஸ் (Ulcerative Colitis) நோயாளிகளுக்கான பிரத்யேக VGM IBD கிளினிக்கை தொடங்கியது. இக்கிளினிக்கை மூத்த குடலியல் நிபுணரும் பத்ம பூஷண் விருதுபெற்றவருமான டாக்டர் கே.ஆர். பழனிசாமி திறந்து வைத்தார்.

க்ரோன்ஸ் நோய் மற்றும் அல்சரேட்டிவ் கொலைட்டிஸ் உள்ளிட்ட IBD நோய்கள் இந்தியாவில் இளம் வயதினரிடமும், வளரிளம் பருவத்தினரிடமும் அதிகரித்து வருவதாக நிபுணர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து வயிற்றுப்போக்கு, மலத்தில் இரத்தம் காணப்படுதல், வயிற்றுவலி, காரணமற்ற உடல் எடை இழப்பு, ரத்தசோகை மற்றும் அதிக சோர்வு போன்ற அறிகுறிகள் இருப்பின் உடனடியாக பரிசோதனை செய்து ஆரம்ப நிலையிலேயே நோயைக் கண்டறிவது அவசியம் என வலியுறுத்தப்பட்டது.

புதிதாக தொடங்கப்பட்டுள்ள இந்த கிளினிக்கில் மேம்பட்ட எண்டோஸ்கோபி பரிசோதனைகள், பயாலஜிக் சிகிச்சைகள், ஊட்டச்சத்து ஆலோசனைகள் மற்றும் சிக்கலான IBD நோயாளிகளுக்கான குறைந்த காயப்படுத்தும் அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல்துறை ஒருங்கிணைந்த சிகிச்சை வசதிகள் வழங்கப்படுகின்றன.

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, IBD நோயாளிகள் மற்றும் அவர்களது பராமரிப்பாளர்களுக்கு நோயை புரிந்துகொண்டு திறம்பட நிர்வகிக்க உதவும் வகையில் “My Gut, My Voice” என்ற மாதாந்திர நோயாளர் ஆதரவு மற்றும் விழிப்புணர்வு மன்றத்தையும் வி.ஜி.எம் மருத்துவமனை அறிமுகப்படுத்தியது.

இந்நிகழ்வில் பேசிய வி.ஜி.எம் மருத்துவமனையின் டாக்டர் வி.ஜி. மோகன் பிரசாத், “VGM IBD கிளினிக் மூலம் ஆதாரப்பூர்வமான, நோயாளி மையப்படுத்தப்பட்ட சிகிச்சை வழங்கப்படுவதுடன், IBD நோயின் ஆரம்ப அறிகுறிகள் மற்றும் நவீன சிகிச்சை முறைகள் குறித்த பொதுமக்கள் விழிப்புணர்வும் மேம்படுத்தப்படும்” என்றார்.

அறிவியல் கருத்தரங்கு நிகழ்ச்சிக்கு டாக்டர் வம்சி மூர்த்தி அறிமுக உரையாற்றினார். தொடர்ந்து, டாக்டர் மதுரா பிரசாத் சுமன் IBD மற்றும் குடல் நுண்ணுயிரிகள் (Gut Microbiome) குறித்து, டாக்டர் எஸ். திவ்யசாரதி ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் குறித்து, IBD ஆலோசகரான திரு. சுமந்த்ரன் நோயாளிகளுக்கான உளவியல் ஆதரவு குறித்து சிறப்புரையாற்றினர்.

இந்த நிகழ்ச்சியை டாக்டர் மித்ரா பிரசாத் ஒருங்கிணைத்தார். நன்றியுரையை டாக்டர் சி.பி.எஸ். சுமன் வழங்கினார்.

ADVERTISMENT

Continue Reading

ஆரோக்கியம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி

Published

on

உலக ஆஸ்துமா தினம் மற்றும் உலக செரிமான ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு, நுரையீரல் மற்றும் இரைப்பை குடல் நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், கோயம்புத்தூர்ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சார்பில் இரண்டு நாள் சுகாதார விழிப்புணர்வு கண்காட்சி புரூக்ஃபீல்ட் மாலில் இன்று (மே 16) தொடங்கியது.தொடக்க விழாவில் எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன் இக்கண்காட்சியைத் தொடங்கி வைத்தார்.இந்நிகழ்வில் அறக்கட்டளையின் தலைமைச் செயல் அதிகாரி திரு. C.V. ராம்குமார், தலைமை நிர்வாக அதிகாரி திரு. D. மகேஷ்குமார், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் மருத்துவ இயக்குநர் டாக்டர் S. ராஜகோபால், மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் S. அழகப்பன், இணை மருத்துவக் கல்லூரியின் (SRHIAHS) முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டனர்.

கண்காட்சியின் சிறப்பம்சங்கள்:

மருத்துவமனையின் எல்லைகளைத் தாண்டி, பொதுமக்கள் அதிகம் கூடும் இடமான வணிக வளாகத்தில் (Mall) இந்த நிகழ்வு நடத்தப்படுவது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஸ்ரீ ராமகிருஷ்ணா இணை மருத்துவக் கல்லூரி (SRHIAHS) மாணவர்கள் உருவாக்கிய நேரடி செயல் மாதிரிகள் (Working Models) கண்காட்சியின் முக்கிய ஈர்ப்பாக அமைந்தன.

சுவாசம் மற்றும் செரிமானம் தொடர்பான சிக்கலான மருத்துவக் கருத்துகளைச் சாமான்ய மக்களும் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் இந்த மாதிரிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
நுரையீரல் பாதிப்பு மற்றும் செரிமானக் கோளாறுகளுக்கான அறிகுறிகள், தடுப்பு முறைகள் மற்றும் ஆரோக்கியமான வாழ்வியல் மாற்றங்கள் குறித்து மாணவர்களும் மருத்துவர்களும் பொதுமக்களுக்கு விளக்கமளித்தனர்.

உயர்தர மருத்துவச் சேவையுடன், சமூகப் பொறுப்புணர்வுடன் விழிப்புணர்வுப் பணிகளையும் முன்னெடுப்பதில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை எப்போதும் முன்னிலை வகிக்கிறது என்பதை இந்நிகழ்வு உறுதிப்படுத்தியுள்ளது.
இக்கண்காட்சி நாளையும் (மே 17) புரூக்ஃபீல்ட்ஸ் மாலில் நடைபெறவுள்ளது

Continue Reading

ஆரோக்கியம்

கோவை ஏஜிஎஸ் ஹெல்த்கேர் கார்டியோ–சர்க்கரை நோய் சிறப்பு முகாம்

Published

on

கோவை ஏஜிஎஸ் ஹெல்த்கேர் மையத்தில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு கார்டியோ–சர்க்கரை நோய் சிறப்பு முகாம

 

கோயம்புத்தூர், ஏப்ரல் 6, 2026:

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7ஆம் தேதி உலக சுகாதார தினம் அனுசரிக்கப்படுகிறது. மக்களிடையே உடல் ஆரோக்கியத்தின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், உலக சுகாதார அமைப்பு இந்த நாளை கடைபிடித்து வருகிறது.

இந்த ஆண்டின் “Together for Health. Stand with Science” என்ற கருப்பொருளின் கீழ், மனிதர்கள், விலங்குகள், தாவரங்கள் மற்றும் பூமியின் ஆரோக்கியத்தை பாதுகாக்க அறிவியல் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வருடம் முழுவதும் நடைபெறும் விழிப்புணர்வு இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு, கோவை சாய்பாபா காலனியில் செயல்பட்டு வரும் ஏஜிஎஸ் ஹெல்த்கேர் மற்றும் மாஸ்டர் ஹெல்த் செக்கப் மையம் சார்பில், மக்களிடையே முன்னெச்சரிக்கை சுகாதார பரிசோதனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறப்பு முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக, நிறுவனர் மற்றும் இயக்குநர் டாக்டர் ஆதித்யன் குகன் அவர்களின் வழிகாட்டுதலில், 25 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களுக்கு பயன்படும் வகையில், ரூ.10,000 மதிப்புள்ள கார்டியோ–டயபிட்டிஸ் மாஸ்டர் ஹெல்த் சேக்கப் தொகுப்பு, இந்த வாரம் முழுவதும் வெறும் ரூ.1,000க்கு வழங்கப்படுகிறது.

அறிவியல் தரவுகளின்படி, சமீப காலங்களில் ஏற்படும் திடீர் இதய மரணங்கள், பெரும்பாலும் நீரிழிவு நோய் மற்றும் அதனுடன் இணைந்த இதய நோய்களுடன் தொடர்புடையதாக உள்ளன. குறிப்பாக 25 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களில் இது அதிகமாக காணப்படுவதால், இந்த வயது குழுவினருக்கு அதிக பயன் அளிக்கும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு சுகாதார தொகுப்பில் முழுமையான இரத்த மற்றும் சிறுநீர் பரிசோதனைகள், இமேஜிங் பரிசோதனைகள், மேலும் எக்கோ (ECHO) உள்ளிட்ட மேம்பட்ட இதய பரிசோதனைகள் அடங்கும்.

ஏஜிஎஸ் ஹெல்த்கேர் நிறுவனம் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக உலக சுகாதார தினத்தை அனுசரித்து வருகிறது. உலக சுகாதார அமைப்பின் கருப்பொருளுடன் இணைந்து, கொங்கு மண்டல மக்களுக்கு முன்னெச்சரிக்கை சுகாதார சேவைகளை வழங்குவதே இந்த முயற்சியின் நோக்கம் என்று டாக்டர் ஆதித்யன் குகன் தெரிவித்தார்.

இந்த முகாம் 2026 ஏப்ரல் 7 முதல் 11ஆம் தேதி வரை, கோவை சாய்பாபா காலனியில் உள்ள ஏஜிஎஸ் ஹெல்த்கேர் மையத்தில் நடைபெறும். ‘முதலில் வருவோருக்கு முன்னுரிமை’ என்ற அடிப்படையில், தினமும் 50 பேருக்கு மட்டும் இந்த சேவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவு செய்ய: 9944333006 / 8489655556 / 9659455556.

 

Continue Reading

Trending