Connect with us

Entertainment

சூர்யா தான் என்னுடைய பேவரிட்! – ஆதிரா ராஜ்

Published

on

ஆதிரா ராஜ் பற்றி ?

என்னுடைய முழுப் பெயர் ஆதிராராஜ் நான் கேரளா பொண்ணு, பள்ளி, கல்லூரி அனைத்தும் கேரளாவில் தான் முடித்தேன், நான் பி.காம் முடித்துள்ளேன், நான் ஒரு கிளாசிக்கல் டான்ஸர்.

சினிமா ஆர்வம் எப்போது வந்தது?

சின்ன வயசுல  நிறைய ட்ராமா பண்ணீருக்கேன், அப்புறம் ஸ்டேஜ் ஷோ பண்ணிருக்கேன் அப்பொழுது எல்லாம் சினிமாவில் நடிப்பேன் என நினைக்கவில்லை, அந்த எண்ணமும் அப்பொழுது வரவில்லை. கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும் பொழுது ஒரு குறும்படம் நடக்க வாய்ப்பு கிடைத்தது அதில் நடித்த பிறகு தான் சினிமா மேல் ஆசை வந்தது. அதன் பின்னர் தான் சினிமாவில் நடிக்க முடிவுசெய்தேன்.

பட வாய்ப்புகள் எப்படி கிடைத்தது ?

மலையாள குறும்படம் நடித்த பிறகு கஸ்டீம் இயக்குனர் ஒருவர் என்னுடைய புகைப் படத்தை ஒரு தயாரிப்பு நிறுவனத்துக்கு அனுப்பி வைத்தார் அதன் பின்னர் சென்னையில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது பின்னர் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

ஹிப் ஹாப் தமிழா உடன் நடித்த அனுபவம் ?

ஹிப் ஹாப் தமிழா ஆதி ஒரு சிறந்த கலைஞர், நடிப்பில் அதிக ஆர்வம் உடையவர். அவருடன் நடிக்கும் பொழுது எனக்கு நிறைய கற்றுக் கொடுத்துள்ளார். நடிப்பை பற்றி எனக்குள் இருந்த சந்தேகங்களை போக்கியவர். நல்ல மனிதர்.

உங்களுக்கு பிடித்த தமிழ் நடிகர் யார்? ஏன் ?

நடிகர் சூர்யா சார் எனக்கு ரொம்ப பிடிக்கும், அவரது நடிப்புக்கு நான் மிகப்பெரிய ரசிகை, அவருடைய படம் அனைத்தையும் தவறாமல் பார்த்துவிடுவேன்.

யார்கூட எல்லாம் நடிக்கணும் என்று லிஸ்ட் இருக்கா?

லிஸ்ட் எல்லாம் ஒன்னும் இல்லை, எனக்கு எல்லோருடையும் நடிக்கணும் என்று ஆசை. சிறந்த நடிகை என பெயர் எடுக்கணும் இது நிறைவேற பாடுபடுவேன்.

சினிமாவிற்குள் வர, உங்களுக்கு யார் இன்ஸ்பிரேஷன் ?

என்னுடைய தாத்தா தான் எனக்கு மிகப்பெரிய   இன்ஸ்பிரேஷன். அவர் ஒரு நடிகர். பல மலையாள திரைப்படம் மற்றும்    நாடகத்தில் நடித்துள்ளார். அவரால்    தான் எனக்கு சினிமா மீது அதீத ஆர்வம் வந்தது. அவருடன் நிறைய ட்ராமா நடிச்சிருக்கேன்.  பெரிய திரையில் என்னைப்  பார்க்க வேண்டும் ஆசை என பட்டார். இன்று அவரது      ஆசை நிறைவேறியது ஆனால் அதைப் பார்க்க அவர் இன்று உயிருடன் இல்லை.

உங்கள் வாழ்க்கையில் மறக்கமுடியாத மகிழ்ச்சியான தருணம் எது ?

சினிமா ஆசை உள்ள எல்லோருக்கும் ஒரு கனவு இருக்கும் ஒருமுறையாவது பெரியத்திரையில் நாம் வந்துவிட வேண்டும் என்று எனக்கும் அந்த ஆசை இருந்தது அது இந்தப் படத்தின் மூலம் சாத்தியமாயிற்று. என்னை  ஒரு கதாநாயகியாக பெரியத் திரையில் பார்த்தது தான் மறக்க முடியாத மகிழ்ச்சியான தருணம்.

உங்கள் குடும்பத்தை பற்றி?

நான், அப்பா ராஜன், அம்மா பிரீத்தி ராஜன , தம்பி அமல் ராஜ் எனக்கு என்றும் உறுதுணையாக இருப்பது இந்த மூன்று பேர்கள் தான்.

முதல் கேமரா அனுபவம் எப்படி இருந்தது விளக்கமாக சொல்லுங்க?

முதல் கேமரா அனுபவம் ரொம்ப பயமாக இருந்தது. ரொம்ப கஷ்டப்பட்டேன் பயத்தை போக்க, குறும் படம் நடிக்கும் பொழுது இரண்டு அல்லது நான்கு பேர் தான் இருப்பார்கள் அதனால் பயம் தெரியவில்லை. ஆனால் சினிமா அப்படி கிடையாது, கோ ஆர்ட்டிஸ்ட், டைரக்டர், அசிஸ்ட்டேன்ட டைரக்டர், லைட் மேன், ஹெல்பர் என பல பேர் இருப்பாங்க ரொம்ப பயமா இருக்கும். படம் நடித்து முடித்த பிறகு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Entertainment

கோவை வி .எல்.பி கல்லுரி விழாவில் நடிகை ஆண்ட்ரியா பங்கேற்று பாடல்களை பாடி மாணவர்களை உற்சாகபடுத்தினார்.

Published

on

கோவையில் கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சியில் பிரபல நடிகை ஆண்ட்ரியா பங்கேற்று பாடல்களை பாடி மாணவர்களை உற்சாகபடுத்தினார்.

கோவையை அடுத்த கோவைபுதூர் பகுதியில் உள்ள வி.எல்.பி கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் கல்லூரிகளுக்கு இடையேயான கலாச்சார நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.இதில் கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.

மாணவர்களின் இந்த கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெற்றது இதில் கலந்துகொண்ட பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பிரபல நடிகையும், பாடகியுமான ஆண்ட்ரியா கலந்து கொண்டு மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பாடல்களை பாடி அசத்தினார் . தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் சிறப்பாக திறமைகளை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.

Continue Reading

Entertainment

ஜல்லிக்கட்டு காளையுடன் தியேட்டருக்கு வந்த ரசிகர்கள்

Published

on

நடிகர் விமல் நடிப்பில், ஜல்லிக்கட்டு மற்றும் வடமாடு விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள ‘வடம்’ திரைப்படம் இன்று கோவையில் பிரம்மாண்டமாக வெளியானது. இந்தப் படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, கோவை ரசிகர்கள் செய்த செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

வழக்கமாகத் திரையரங்குகளில் ரசிகர்கள் தாரை தப்பட்டை முழங்க, பாலாபிஷேகம் செய்து கொண்டாடுவது வழக்கம்.

ஆனால், ‘வடம்’ திரைப்படத்தின் கதைக்களம் ஜல்லிக்கட்டைப் பற்றியது என்பதால், கோவையைச் சேர்ந்த ரசிகர்கள் ஒஒருவர் உண்மையான ஜல்லிக்கட்டு காளை ஒன்றை அலங்கரித்து தியேட்டருக்கு அழைத்து வந்தனர்.

கோவை நூறடி சாலையில் உள்ள திரையரங்கில் வடம் பட வெளியீட்டை மேள தாளம் முழங்க திருவிழாவாக ரசிகர்கள் கொண்டாடினர்.

இதனிடையே படம் வெளியாகி உள்ள தி்ரையரங்க வளாகத்திற்கு ஜல்லிக்கட்டு காளையை அழைத்து வந்த ரசிகர்கள் அந்தக் காளைக்கு மாலை அணிவித்து, மரியாதை செய்தனர்.நடிகர் விமலுக்கு நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஒரு ஆக்ஷன் கலந்த எதார்த்தமான படம் வெளிவந்துள்ளது. ஜல்லிக்கட்டின் ஒரு வகையான ‘வடமாடு’ விளையாட்டைப் போற்றும் வகையில் இந்தப் படம் அமைந்துள்ளதால், ரசிகர்கள் காளையுடன் வந்து தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.

இயக்குநர் கேந்திரன் இயக்கத்தில் ராஜசேகர்,வெங்கடேஷ்வரன் மற்றும் பிரபு ஆகியோர் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்தில், ஜல்லிக்கட்டு காளைகளின் முக்கியத்துவம் மற்றும் கிராமிய வீர விளையாட்டுகளைப் பற்றிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

Continue Reading

Entertainment

காதல், ஆக்ஷன், நிறைந்த கிறிஸ்துமஸ் ‘ரெட்ட தல’ – நடிகர் அருண் விஜய்

Published

on

பீ.டி.ஜி. யுனிவர்சல் நிறுவனம், பாபி பாலச்சந்திரன் தயாரிப்பில், மான் கராத்தே, கெத்து போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் கிரிஸ் திருக்குமரன் இயக்கத்தில், நடிகர் அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து, வரும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு திரைக்கு வரும் ‘ரெட்ட தல’ திரைப்படம் பற்றிய செய்தியாளர் சந்திப்பு நேற்று மாலை கோவையில் நடைபெற்றது.

நடிகர் அருண் விஜய், நடிகை சித்தி இட்னானி (வெந்து தணிந்தது காடு கதாநாயகி) மற்றும் நடிகர் ஜான் விஜய் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

முதலில் பேசிய நடிகர் அருண் விஜய், “இது ஒரு நீண்ட விடுமுறை நாளான கிறிஸ்துமஸ் காலத்தில் வெளிவருகிறது. எந்த ஒரு சமரசமும் இன்றி இந்த படம் மிகவும் தரமாக தயாரிக்கப்பட்டுள்ளது,” எனக் கூறினார்.

திரை ரசிகர்களுடன் எளிதில் கனெக்ட் ஆகும் ஒரு கதையாக இதை இயக்குனர் திருக்குமரன் உருவாக்கியுள்ளார் எனவும், தனது வலிமைகள் அனைத்தையும் வெளிப்படுத்தக்கூடிய ஒரு கதையாக இது தனக்கு கிடைத்துள்ளது எனவும் கூறினார்.

இந்தப் படத்தில் இரண்டு வேடங்களில் நடித்துள்ள நடிகர் அருண் விஜய், அதில் இரண்டு கதாபாத்திரங்களுக்கும் எந்தவித ரத்த சம்பந்தமும் இல்லாமல் இருப்பதும், இருவருக்கும் சில வேறுபாடுகள் இருப்பதையும் காட்டுவதற்கு முயற்சி செய்துள்ளதாக கூறினார்.

அடிப்படையில் இந்த படம் காதலை மையமாகக் கொண்ட ஒரு படம் எனக் கூறிய அவர், “இதில் ஆசைக்கும் பேராசைக்கும் இடையே ஒரு சிறு கோடு உள்ளது. அந்த கோட்டை கடந்து சென்றால் ஏற்படும் பின் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிய சூழல், அதனால் ஏற்படும் சவால்கள் – இதை ஒரு மனிதன் எப்படி கடந்து செல்கிறான் என்பதை இந்த கதை காட்டும்,” என்றார்.
கதைக்கு எங்கெங்கே தேவையோ அங்கங்கே ஆக்ஷன் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில் நிறைய ட்விஸ்ட்களும் எதிர்பாராத இடத்தில் திருப்பங்களும் இருக்கும். கண்டிப்பாக பார்வையாளர்களை இந்த படம் தனது கைக்குள் வைத்திருக்கும் என்று நம்புவதாக கூறினார்.

இசையமைப்பாளர் சாம் சி.எஸ்-ஸின் இசை இந்த படத்தை மேலும் ஒரு கட்டத்திற்கு அழைத்து செல்கிறது என்று கூறிய அவர், இப்படத்தில் நடிகர் தனுஷ் ‘கண்ணம்மா’ எனும் பாடலை பாடியிருக்கிறார் என்று கூறினார்.

Continue Reading

Trending