Connect with us

செய்திகள்

தேர்தலுக்கு பின் விஜய் இதை கண்டிப்பாக செய்வார் – பியூஷ் கோயல்

Published

on

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,

“தவெக தலைவர் விஜய் மற்றும் திமுக இடையில் ரகசிய உடன்பாடு இருக்கிறது. திமுகவுக்கு எதிரான வாக்குகளை பிளவுபடுத்தவே விஜய் கொண்டு வரப்பட்டிருக்கிறார். இந்த சட்டசபைத் தேர்தலுக்கு பின் விஜய் மீண்டும் கண்டிப்பாக நடிக்க சென்றுவிடுவார். இதன் காரணமாகவே திமுக – விஜய் இடையில் மறைமுக கூட்டணி உள்ளது என்று சொல்கிறோம். திமுக எதிர்ப்பு வாக்குகள் சிதறாமல் பாதுகாத்து என்டிஏ பக்கம் கொண்டு வருவோம். ஒவ்வொரு வீடாக சென்று ஊழல் நிறைந்த திமுக ஆட்சியை அகற்றுவோம். முதல்வர் ஸ்டாலின் ஒரு குடும்ப ஆட்சியை நடத்தி வருகிறார். மக்களின் உணர்வுகளை அலட்சியப்படுத்துகிறார். ஒரேயொரு குடும்பம் தமிழ்நாட்டை நாசமாக்கி வருகிறது. உதயநிதி ஸ்டாலின் இந்த மாநிலத்தை வழிநடத்தினால், அவருக்கு மக்களின் உணர்வுகளோ, கலாச்சார பண்புகளோ புரியாது. திமுக ஆட்சியின் அவலங்கள் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். அதேபோல் பிரதமர் மோடியின் ஆட்சியை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.

என்டிஏ கூட்டணி ஆட்சி நிச்சயமாக வளர்ச்சியை கொடுக்கும். அதிமுக, பாஜக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் ஒரே கோட்டில் இயங்குகின்றன. என்டிஏ கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சென்னையில் மாற்றத்தை ஏற்படுத்தும் பெரிய அளவிலான நகர்ப்புற திட்டங்களை உருவாக்குவோம். அதேபோல் விஜய்க்கு கூடும் கூட்டம் வாக்குகளாக மாறாது. ஒரு தலைவனாக உருவாக வேண்டும் என்றால் நீண்ட ஆண்டுகளில் மக்கள் சேவையில் இருந்திருக்க வேண்டும். வெறும் பிரபலமாக இருப்பது மட்டும் முதல்வராக தகுதியாக இருக்க முடியாது. இந்த சட்டசபைத் தேர்தலில் என்டிஏ கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளார்.”

கோயம்பத்தூர்

கோவையின் பெருமை’ அன்னபூர்ணாவின் 23-வது கிளை திறப்பு !

Published

on

கோவையின் பெருமை என்று அழைக்கப்படும் உணவக நிறுவனமான ஸ்ரீ அன்னபூர்ணா, தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் வியாழக்கிழமை (28.05.26) அன்று திறந்தது. மில்கி மிஸ்ட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் டி.எஸ். சதீஷ்குமார் அவர்கள் புதிய கிளையைத் திறந்துவைத்தார். முதல் தளத்தை கோவை மாவட்ட ஹோட்டலியர்கள் சங்க நிர்வாகிகள் அன்னலட்சுமி உணவகத்தின் நிர்வாக இயக்குநர் ராமசாமி மற்றும் ஹரிபவனம் உணவகத்தின் நிர்வாக இயக்குநர் ஆர். பாலச்சந்தர் அவர்கள் இணைந்து தொடங்கிவைத்தார்.

இந்நிகழ்வில் ஸ்ரீ அன்னபூர்ணா குழுமத்தின் நிர்வாக இயக்குநர் டி. சீனிவாசன், இணை நிர்வாக இயக்குநர் ஆர். வெங்கடேஷ், தலைமைச் செயல் அதிகாரி ஜெகன் எஸ். தாமோதரசுவாமி, மற்றும் எக்சிகியூடிவ் இயக்குநர் விவேக் சீனிவாசன், கார்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

12,000 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்தக் கிளையில், பிரத்யேக டைனிங் ஹால், இனிப்பு மற்றும் பேக்கரிப் பிரிவு மற்றும் விசாலமான வாகன நிறுத்துமிடம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
தரை தளத்தில் அமைந்துள்ள டைனிங் ஹாலில் ஒரே நேரத்தில் 220 பேர் அமர்ந்து உணவருந்த முடியும்.

இந்த கிளையின் முதல் விற்பனையை திரு. எஸ்.கே.எம் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ஸ்ரீ சிவகுமார் தொடங்கிவைக்க, அதைனை அவென்யூ குழுமத்தின் தலைவர் எம்.எஸ்.குமரன் பெற்றுக்கொண்டார்.

பிரத்யேகமாக இனிப்பு மற்றும் பேக்கரிப் பிரிவில் 100-க்கும் மேற்பட்ட இனிப்பு வகைகள், 25-க்கும் அதிகமான கார வகைப் பலகாரங்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட பேக்கரி உணவு வகைகளை வாங்கி மகிழலாம். இந்த வளாகத்தில் 100 கார்களை நிறுத்தும் வசதியுடன் கூடிய வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் மற்றும் ஸ்ரீ அன்னபூர்ணா குழுமத்தின் ஊழியர்கள் உள்ளிட்ட பலர் இந்தத் திறப்பு விழாவில் கலந்துகொண்டனர்.

Continue Reading

கோயம்பத்தூர்

இதுஆரோக்கியமான அரசியல் அல்ல – திருமாவளவன்

Published

on

அதிமுகவில் இருந்து எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு வருபவர்களை தவெகவில் சேர்க்கும் முயற்சிகள் நடக்கின்றன என்று விமர்சனங்கள் வருகின்றன. இது நல்ல அறிகுறி இல்லை என்று கோவையில் விசிக தலைவரும், எம்பியுமான திருமாவளவன் கூறியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் பங்கேற்று இன்று கோவையிலும், நாளை உதகையிலும், அதன்பின்னர் சென்னையிலும் பயணம் உள்ளது. 20க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் உள்ளனர்.
இதில் பாதுகாப்புத்துறை எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்து அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் பங்கேற்கும் அனுபவம் கிடைத்துள்ளது.

பெரம்பலூரில் நடைபெற்ற திமுக – விசிக இடையே ஏற்பட்ட அடிதடி சம்பவம் கவலை அளிக்கிறது. இந்த விரும்பத்தகாத நிகழ்வு வேதனை அளிக்கிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சமூக வலைதளங்களில் வரும் அவதூறுகளுக்கு எதிர்வினையாற்ற வேண்டாம்.ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்பதை கேள்விப்பட்டு, அதனை தவிர்க்க வேண்டும் என்று கூறியிருந்தேன். மாவட்ட முன்னணிப் பொறுப்பாளர்கள் அதனைத் தவிர்த்துவிட்டார்கள். தகவல் அறியாதவர்களும் அங்கு கூடியிருந்தனர்.

அங்கு திமுகவினரும் கூடியிருந்தனர். தொடர்ந்து இதுபோன்ற நிகழ்வுகளுக்கு இயக்கத்தோழர்கள் இடம்கொடுக்கக்கூடாது என்று வேண்டுகோள் விடுக்கிறேன். தவெக – அதிமுக நிர்வாகிகள் இணைவது ஆரோக்கியமான அரசியலாக விசிக கருதவில்லை.

இந்த ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காகவும், குடியரசுத் தலைவர் ஆட்சி இங்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகவும், இடதுசாரி கட்சிகளோடு இணைந்து விசிக எங்கள் ஆதரவை கொடுத்துள்ளது.
வெளியில் இருந்து ஆதரவு என்று தவெக அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, இப்போது அமைச்சரவையிலும் இடம்பிடித்திருக்கிறோம்.இந்த நிலையில், தவெக தலைவருக்கும், பொறுப்பாளர்களுக்கும் விடுக்கும் வேண்டுகோள் என்னவென்றால், எந்த சூழலிலும் உங்கள் ஆட்சியை கவிழ்க்க மாட்டோம். அந்த நம்பிக்கையுடன் பணியாற்ற வேண்டும்.விமர்சனங்களுக்கு தவெக தலைமையிடம் இடம் கொடுக்கக்கூடாது. அதிமுக இதுபோன்ற நெருக்கடிகளை சந்திக்கும் என்று நான் முன்பே கூறியுள்ளேன்.

பாஜகவுடன் கூட்டணி சேர்ந்ததால் தான், அதிமுகவின் ஆதரவைப் பெறுவதில் தவெகவுக்கு நெருடல் இருந்ததாக தவெக தலைவர்கள் கூறியுள்ளனர். ஒருவேளை அதிமுக தனித்து தேர்தலை சந்தித்திருந்தால், அவர்களுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கும் முடிவை தவெக எடுத்திருக்கும்.அதுமட்டுமன்றி, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளின் ஆதரவை நாடியதற்கும், அதிமுக – பாஜக உறவே காரணம் என்று தவெக தலைவர்கள் கூறியுள்ளனர். அதனால் தான் இன்று அதிமுக நெருக்கடி நிலையை சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளது என்று கருதுகிறேன்.தவெக தலைமை இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிக்கக்கூடாது. யார் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தாலும், அவர்களை கட்சியில் சேர்த்துக்கொள்வது தவெக மீதான நம்பகத்தன்மையை பாதிக்கும். எனவே இதில் கவனமாக இருக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.எனவே கட்சிகளின் ஆதரவுடன் இந்த ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்கும் என்ற நம்பிக்கையுடன் தவெக செயல்பட வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.

இந்த சந்தேகம் இருப்பதால் தான், அதிமுகவில் இருந்து ராஜினாமா செய்து வருபவர்களை தவெகவில் சேர்க்கும் முயற்சிகள் நடக்கின்றன என்று விமர்சனங்கள் வருகின்றன. இது நல்ல அறிகுறி இல்லை என்றும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
தமிழ்நாட்டு அரசியலில் தலித்துகளுக்கு இவ்வளவு பேருக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்திருப்பது இதுவே முதல் முறை. கர்நாடகத்தில் ஏற்கனவே 7 பேர் வரை தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அமைச்சர்களாக இருப்பது எடுத்துக்காட்டாக உள்ளது. சில சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவி கிடைத்திருப்பது, அந்த சமூகத்திற்கான அங்கீகாரமாகும். அது மகிழ்ச்சி அளிக்கிறது.இவ்வாறு திருமாவளவன் பேசினார்.

Continue Reading

செய்திகள்

முடி பராமரிப்பில் புதிய முயற்சி

Published

on

 இந்தியாவின் முன்னணி FMCG நிறுவனங்களில் ஒன்றான Marico Limited, ‘Parachute Advanced Protein Shampoo’-வை அறிமுகப்படுத்துவதன் மூலம், தலைமுடி சுத்திகரிப்புப் பிரிவில் (hair cleansing category) கால் பதித்துள்ளது. இந்தப் புதிய புரத ஷாம்பு வரிசையானது, தேங்காய் மற்றும் இயற்கையான மூலப்பொருட்களின் நன்மைகளைக் கொண்டுள்ளது. இந்த நடவடிக்கை, தலைமுடி பராமரிப்புத் துறையில் இந்நிறுவனத்தின் பிராண்ட் நிலையை மேலும் வலுப்படுத்தும். Marico Limited-இன் இந்திய முதன்மை வணிகப் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) ஆஷிஷ் கோபால், “கடந்த சில ஆண்டுகளாக, குறிப்பிடத்தக்க வகைப் பிரிவு விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, Marico நிறுவனம் முடி சுத்தம் செய்யும் பிரிவில் ‘Parachute Advanced Coconut’-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது,” என்று கூறினார். இயற்கை சார்ந்த தயாரிப்புகளுக்கான நுகர்வோரின் அதிகரித்து வரும் தேவையை, ‘Parachute Advanced’ ஷாம்பு பூர்த்தி செய்யும். பயனுள்ள, தேங்காய் சார்ந்த புதுமைகளை அறிமுகப்படுத்துவதில் Marico நிறுவனம் கொண்டுள்ள உறுதியை இது பறைசாற்றுகிறது. ₹10,000 கோடிக்கும் அதிகமான மதிப்புடன், ஆண்டுக்கு 9 முதல் 10 சதவீதம் என்ற விகிதத்தில் வளர்ந்து வரும் இந்தியாவின் தனிநபர் பராமரிப்புச் சந்தையில், இந்நிறுவனத்தின் நிலையை இந்த அறிமுகம் மேலும் வலுப்படுத்தும். தலைமுடியைச் சுத்தம் செய்யும் பிரிவில் ‘Parachute Advanced’ நுழைவது, நிறுவனத்திற்குப் பெரும் வளர்ச்சி வாய்ப்புகளைத் திறந்துவிடும்; இதன் மூலம், தலைமுடிப் பராமரிப்பு சார்ந்த அனைத்து நிலைகளிலும் இத்தயாரிப்பு முத்திரை தனது இருப்பை விரிவுபடுத்திக்கொள்ளும். நுகர்வோரிடமிருந்து இந்த ஷாம்பு நேர்மறையான வரவேற்பைப் பெற்றுள்ளது. சந்தையில் இத்தயாரிப்புக்கு மிகுந்த தேவை இருக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.” Marico Limited-இன் இந்தியப் பிரிவுக்கான தலைமைச் சந்தைப்படுத்தல் அதிகாரி விக்ரம் கர்வால் பின்வருமாறு தெரிவித்தார், “தனிப்பட்ட பராமரிப்புப் பொருட்களைப் பொறுத்தவரை, நுகர்வோர் நன்கு நிறுவப்பட்ட வர்த்தக நாமங்களின் மீதே நம்பிக்கை வைக்கின்றனர். அவர்கள் இயற்கை சார்ந்த பொருட்களைத் தேடுவது தற்போது அதிகரித்து வருகிறது. எனவே, ஷாம்பு வகைப் பிரிவில் ‘Parachute Advanced’-க்கு ஒரு குறிப்பிடத்தக்க வாய்ப்பு உள்ளது. இந்த நுண்ணறிவின் அடிப்படையில், நுகர்வோர் மனதாரப் பாராட்டும் வகையிலான ஒரு தயாரிப்பை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இது இந்தியாவில், இந்தியாவிற்காக உருவாக்கப்பட்ட ஒரு பிராண்ட் ஆகும். இது உள்ளூர் சமூகங்களின் தேவைகளைப் புரிந்துகொண்டு, எங்கள் பிராண்டை உருவாக்கிய அதே உறுதியுடன் அவர்களின் தலைமுடியைப் பராமரிப்பதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சி, டிஜிட்டல் சேனல்கள், உள்ளடக்க உருவாக்குநர்களுடனான ஒத்துழைப்புகள் மற்றும் பிராந்திய தளங்களைப் பயன்படுத்தி, ஒரு வலுவான, பல வடிவ சந்தைப்படுத்தல் உத்தி மூலம் இந்த பிராண்டை நாங்கள் விளம்பரப்படுத்துவோம். எங்கள் பிராண்ட் மில்லியன் கணக்கான குடும்பங்களைச் சென்றடைகிறது; பல தசாப்தங்களாக, இது பல்வேறு புவியியல் மற்றும் வருமானக் குழுக்களைச் சேர்ந்த மக்களுடன் ஆழமான மற்றும் நம்பகமான உறவுகளை வளர்த்து வருகிறது. எங்கள் வாடிக்கையாளர்கள் மத்தியில் பிராண்டின் தெரிவுநிலையை மேம்படுத்தும் நோக்குடன், இந்த உறவைக் கௌரவிக்கும் வகையில் எங்கள் தயாரிப்பு அறிமுக உத்தியை நாங்கள் வடிவமைத்துள்ளோம்.” புதிய ‘Parachute Advanced Protein Shampoo’ வரிசையானது, கூந்தலில் ஏற்படும் புரத இழப்பைத் தடுக்கிறது. இந்தப் பொருளின் அறிமுகத்தின் மூலம், இந்நிறுவனம் ‘சேதத்தைச் சரிசெய்யும்’ (Damage Repair) பிரிவில் கால் பதித்துள்ளது. புதிய Parachute Advanced Protein Shampoo வரிசையில், கற்றாழையுடன் சேர்த்து தேங்காய் பால், ரோஸ்மேரி, நெல்லிக்காய், சீயக்காய் மற்றும் பாதாம் போன்ற இயற்கை மூலப்பொருட்களைக் கொண்ட பல்வேறு வகைகள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு வகையும் வாடிக்கையாளர்களுக்கு முடி உதிர்வதைக் கட்டுப்படுத்துதல் மற்றும் கூந்தலின் பளபளப்பை அதிகரித்தல் போன்ற பல்வேறு நன்மைகளை வழங்குகின்றன. தனது வலுவான சந்தை நிலை மற்றும் பரந்த வீச்சுடன், Parachute Advanced புதிய வடிவங்களில், நம்பகமான மற்றும் மலிவு விலையிலான ஒரு தீர்வை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் தயாரிப்பு வரிசையில், பல்வேறு அளவுள்ள பேக்குகளில் வழங்கப்படும் எட்டு வகைகள் இடம்பெற்றுள்ளன. ஆரம்ப நிலை சாச்செட் ரூ 1 இது பெருமளவிலான மக்கள் இதனை முயற்சித்துப் பார்க்க வழிவகுக்கிறது. மேலும், இது 80 மி.லி, 170 மி.லி, 340 மி.லி, 650 மி.லி, 1 லிட்டர் மற்றும் 1.2 லிட்டர் ஆகிய அளவுகளில், பொது வர்த்தகம், நவீன வர்த்தகம் மற்றும் இணையவழி வர்த்தகக் கடைகளில் கிடைக்கிறது. Marico, ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான குடும்பங்களைச் சென்றடையும் வகைப் பிரிவுகளுக்குத் தனது தயாரிப்புத் தொகுப்பை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. பிரீமியம் தயாரிப்புகளுக்கான தேவையில் ஆண்டுக்காண்டு அதிகரிப்பைத் தூண்டிவரும் இத்துறையில், இந்நிறுவனத்திற்கு இது குறிப்பிடத்தக்க வளர்ச்சி வாய்ப்புகளை வழங்கும். இந்தியாவில் கூந்தல் பராமரிப்புக்கான நுகர்வோர் செலவினங்களில் தனது பங்கை அதிகரித்துக் கொள்ளும் நோக்கில், Marico நிறுவனம் ஷாம்பு சந்தையில் நுழைந்துள்ளது. இத்துறையில் தனது நிலையை வலுப்படுத்திக்கொள்வதே Marico-வின் இலக்காகும். ‘Parachute Advanced’ பிராண்டின் வளர்ச்சிக்கு, தனது ஷாம்பு தயாரிப்பு வரிசை ஒரு முக்கியப் பங்களிப்பாக அமையும் என்று அந்நிறுவனம் எதிர்பார்க்கிறது.

Continue Reading

Trending