Connect with us

செய்திகள்

மறக்க முடியாத தமிழ் நிகழ்ச்சிகளை மீண்டும் காண தமிழ் டிவியை அறிமுகப்படுத்துகிறது டாடா பிளே !

Published

on

டாடா பிளே அதன் மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளின் போர்ட்ஃபோலியோவை டாடா பிளே ‘தமிழ் டிவி’-ஐ அறிமுகம் செய்வதன் மூலம் விரிவுபடுத்துகிறது – இந்த பிரத்தியேகமான விளம்பரமில்லாத சேவையில் ஸ்டார் விஜய் சேனலிலிருந்து நீங்கள் பெரிதும் விரும்பிய சில நிகழ்ச்சிகளைக் கண்டு மகிழலாம். 24×7 எப்போதும் கிடைக்கும் இந்த சேனலில் குடும்ப நாடகங்கள், ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மற்றும் புராண இதிகாசங்கள் என அனைத்து தலைமுறை நேயர்களும் ரசிக்கும் வகையில்  பிரத்தியேகமாக தேர்வு செய்து தொகுக்கப்பட்டுள்ளன.

 

தொலைக்காட்சியின் ஊடுருவல் ஆழமாக உள்ள மாநிலமாகவும், பிராந்திய அளவில் பொதுவான  பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை அதிகம் ரசிக்கும் மாநிலமாகவும் தமிழ்நாடு நாட்டின் மிகவும் உற்சாகமான என்டர்டெயின்மென்ட் மார்கெட்டாக உள்ளது. தரமான தமிழ் கதைகளுக்கான ஆர்வம் பெருமளவிலான நேயர்கள் மத்தியில் தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், மக்களுக்கு பிடித்தமான பல கிளாசிக் நிகழ்ச்சிகளை அவர்களால் எளிதாக அணுக முடிவதில்லை. டாடா பிளேவின் ‘தமிழ் டிவி’ இந்த சவாலுக்கு நேரடித் தீர்வினை வழங்குகிறது; பல்வேறு காலகட்டத்தில் வெளியாக மக்களின் மனம் கவர்ந்த எண்ணற்ற பிரபலமான தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் தொகுத்து விரிவான பட்டியலாக எளிதாக அணுகும் வகையில், விளம்பரமில்லாமல் தடையின்றி வழங்குவதன் மூலம் இந்தத் தேவையை டாடா பிளே நிரப்புகிறது.

 

இதுகுறித்து டாடா பிளே நிறுவனத்தின் தலைமை கமர்ஷியல் மற்றும் கான்டென்ட் அலுவலர் பல்லவி பூரி அவர்கள் கூறுகையில், இந்தியப் பொழுதுபோக்குத் துறையில் மறக்கமுடியாத நிறைய கதைகள் மற்றும் கதாபாத்திரங்களை தமிழ் தொலைக்காட்சி உலகம் நேயர்களுக்கு வழங்கியுள்ளது. இதுவரை அத்தகைய மனதிற்கு பிடித்த நிகழ்ச்சிகளை ரசிகர்கள் ஒரே இடத்தில் மீண்டும் பார்ப்பதற்கு சொற்பமான வழிகளே இருந்தன. டாடா பிளேவின் ‘தமிழ் டிவி’ மூலம், குடும்பங்கள் ஒன்றாக கண்டு மகிழ்ந்த தருணங்களை மீண்டும் உருவாக்கவுள்ளோம்; அதேநேரத்தில், பிரபலமான நிகழ்ச்சிகளை மீண்டும் ரசிப்பதற்கு ஒரு விளம்பரமில்லாத தளத்தையும் நாங்கள் நேயர்களுக்கு வழங்குகிறோம். எங்கள் சந்தாதாரர்களுக்கு அர்த்தமுள்ள மற்றும் மாறுபட்ட பொழுதுபோக்கு அனுபவங்களை தேர்வு செய்து வழங்குவதில் நாங்கள் தொடர் கவனம் செலுத்துவதை இந்த புதிய சேவை  பிரதிபலிக்கிறது,” என்றார்.

 

இந்த சேவையில் கற்பனை படைப்புகள் (ஃபிக்ஷன்), நிஜப் படைப்புகள் (நான்-ஃபிக்ஷன்)  மற்றும் புராணங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய பல்வேறு நிகழ்ச்சிகள் உள்ளன. ராஜா ராணி, சரவணன் மீனாட்சி, ஈரமன ரோஜாவே, சின்னத்தம்பி மற்றும் மௌனராகம் உள்ளிட்ட பிரபலமான குடும்ப நாடகங்களை நேயர்கள் மீண்டும் காணலாம். கலக்க போவது யாரு சீசன் 5 & 6 ஸ்டாண்ட்-அப் காமெடி நிகழ்ச்சியை புதிதாக கொண்டுவந்து பொழுதுபோக்கு பிரிவிற்கு வலுச்சேர்க்கப்பட்டுள்ளது. புராண தொடர்களைப் பொருத்தவரை இந்தியாவின் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி இதிகாசங்களில் மகாபாரதம் நிச்சயமாக இடம்பெறும்; இதன் அசல் பதிப்பு இந்தி GEC-யில் மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இப்போது தமிழிலும் கொண்டுவரப்பட்டுள்ளது; காலத்தால் அழியாத இந்த காவியத்தையும், அதன் கலாச்சார உணர்வையும் நேயர்களுக்கு அவர்களின் விருப்பமான மொழியில் டாடா பிளே இப்போது வழங்குகிறது.

 

“டாடா பிளே உடன் இனைந்து நமக்கு  மிகவும் பிரியமான மற்றும் புகழ்பெற்ற சில தமிழ் நிகழ்ச்சிகளை நேயர்களுக்காக மீண்டும் கொண்டு வருவதில் நாங்கள் மிக்க மகிழ்ச்சியடைகிறோம்.  காலத்தால் அழியாத இந்த நிகழ்ச்சிகள் தலைமுறை தலைமுறையாக மக்களிடம் ஒரு ஆழமான உணர்வின் பிணைப்பை உருவாக்கியுள்ளன; மேலும் அவற்றை மீண்டும் ஒளிபரப்புவதன் மூலம், நேயர்களுக்கு இந்த கிளாசிக் படைப்புகளை புதிய தலைமுறைக்கு நம்மால் அறிமுகம் செய்ய முடிகிறது; அதன் மூலம் பிரியமான நினைவுகளை மீட்டெடுக்கும் வாய்ப்பையும் வழங்குகிறோம். இந்த சேவையானது சிறந்த கதைகளை குடும்பத்தினர் மீண்டும் ஒன்றாக காணும் ஒரு ஒருங்கிணைந்த அனுபவத்தைப் பெற வாய்ப்பளிக்கிறது,” என்று ஜியோஸ்டார் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

 

குடும்பமாக காண்பதற்காக வடிவமைக்கப்பட்ட டாடா பிளேவின் ‘தமிழ் டிவி’, பல்வேறு இரசனைகள் மற்றும் பல வயதுப் பிரிவினரின்  விருப்பங்களையும் பூர்த்தி செய்யும் வகையில் பல வகையான நிகழ்ச்சிகளை ஒன்றிணைத்து வழங்குகிறது; இதன் மூலம் முழு குடும்பத்தினரும் பகிரும் வகையில் ஒரு பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்குகிறது.

 

டாடா பிளேவில் ‘தமிழ் டிவி’ 23 ஜூன் 2026 முதல் சர்வீஸ் எண் #1509-இல் ஒரு நாளைக்கு 2 ரூபாய் என்கிற கட்டணத்தில் கிடைக்கும்.

 

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

செய்திகள்

இளைஞர் மேம்பாட்டில் தமிழன் சிறகுகள்

Published

on

சென்னை: இங்கிலாந்தின் The Duke of Edinburgh’s International Award Foundation (DofE) கீழ் இந்தியாவில் இயங்கிவரும் The International Award for Young People (IAYP) அமைப்புடன் தமிழன் சிறகுகள் அறக்கட்டளை இன்று (26.06.2026) அதிகாரப்பூர்வ புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டது.

சென்னையில் ஜூன் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நடைபெற்ற இரண்டு நாள் Award Leader Training Programme-இல் தமிழன் சிறகுகள் அறக்கட்டளையின் திரு. வா. ஜோதிகிருஷ்ணா மற்றும் செல்வி. க. ஆர்த்தி பங்கேற்று, அதிகாரப்பூர்வ Award Leader அங்கீகாரத்தை பெற்றனர்.

பயிற்சியின் நிறைவு விழாவில், தமிழன் சிறகுகள் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் திரு. அ. தினேஷ் ராஜா மற்றும் ஆலோசனைக் குழு துணைத் தலைவர் முனைவர். ஓ. செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு, IAYP தேசிய இயக்குநர் திரு. கபில் பல்லா அவர்களிடம் இருந்து அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் மற்றும் அங்கீகாரத்தை பெற்றுக்கொண்டனர்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம், தமிழன் சிறகுகள் அறக்கட்டளை இளைஞர்களின் தலைமைத்திறன், சமூகப் பொறுப்பு, தன்னம்பிக்கை மற்றும் தனிமனித மேம்பாட்டை ஊக்குவிக்கும் International Award for Young People (IAYP) திட்டத்தை தனது செயல்பாட்டு மையங்கள் மூலம் முன்னெடுக்கவுள்ளது.

Continue Reading

கோயம்பத்தூர்

கோவையில் உணவுத் துறையின் மெகா கண்காட்சி!

Published

on

கோவையில், உணவுத் துறையை மையமாகக் கொண்ட ஆறு முக்கிய கண்காட்சிகள் ஜூலை 1 முதல் 3 வரை கொடிசியா வர்த்தகக் கண்காட்சி வளாகத்தில் நடைபெறுகின்றன. இந்த நிகழ்வு, தென்னிந்தியாவில் உள்ள உணவு வணிக நிறுவனங்களுக்கு, உணவு பதப்படுத்துதல், பேக்கரி, உணவு உற்பத்தி இயந்திரங்கள், பேக்கேஜிங் மற்றும் விருந்தோம்பல் துறைகளில் உருவாகி வரும் நவீன தொழில்நுட்பங்களையும் புதுமைகளையும் அறிந்து கொள்ளும் வாய்ப்பை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இதுகுறித்து நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில், சினர்ஜி எக்ஸ்போஷர்ஸ் அண்ட் ஈவென்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் பிரிஜேஷ் எட்வர்ட்ஸ் கூறும்போது :

“இந்திய அரசின் உணவு பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சகம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம், இந்திய மசாலா வாரியம், தேசிய மஞ்சள் வாரியம் மற்றும் பல்வேறு முன்னணி தொழில்துறை அமைப்புகளின் ஆதரவுடன் நடைபெறும்

இந்தக் கண்காட்சியில், 36 நாடுகளைச் சேர்ந்த 30,000-க்கும் மேற்பட்ட தொழில்துறை வல்லுநர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்று நாட்கள் நடைபெறும் இந்த மாபெரும் தொழில்துறை நிகழ்வில், உணவு பதப்படுத்துதல், பானங்கள், பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள், பேக்கரி மற்றும் இனிப்பு தயாரிப்புகள், உணவு பேக்கேஜிங், ஹோட்டல் மற்றும் விருந்தோம்பல் துறை, வேளாண் தொழில் மற்றும் உணவு ஏற்றுமதி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள், விநியோகஸ்தர்கள், சில்லறை விற்பனையாளர்கள், ஹோட்டல் துறையினர், தொழில்முனைவோர், ஆலோசகர்கள் மற்றும் தொழில்நுட்ப வழங்குநர்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடுகின்றனர்.

ஆறு கண்காட்சி அரங்குகளில் நடைபெறும் இந்த நிகழ்வில், 300-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளர்கள் பங்கேற்கின்றனர். மேலும், 35-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளதுடன், 3,000-க்கும் மேற்பட்ட வணிக சந்திப்புகளும் நடைபெற உள்ளன.

Continue Reading

செய்திகள்

கோவையில் கால்பதித்தது காசாகிராண்டு கமர்ஷியல்

Published

on

காசாகிராண்டு குழுமத்தின் வணிக ரீதியிலான ரியல் எஸ்டேட் பிரிவான காசாகிராண்டு கமர்ஷியல், கோயம்புத்தூர் சந்தையில் தனது முதல் வணிக ரியல் எஸ்டேட் உருவாக்கமான ‘காசாகிராண்டு கிரவுன்‘ தொடங்கப்படுவதை பெருமையுடன் இன்று அறிவித்திருக்கிறது. இதன் மூலம், கோயம்புத்தூரின் வளர்ந்து வரும் அலுவலகச் சந்தையில் தனது வலுவான வருகையைப் பதிவு செய்துள்ளது.

கோயம்புத்தூரின் வேகமாக வளர்ந்து வரும் வணிகப் பகுதிகளில் ஒன்றான அவிநாசி சாலையில்  அமைந்துள்ள ‘காசாகிராண்டு கிரவுன்’, சுமார் 1 லட்சம் சதுர அடி பரப்பளவில் உயர்தர அலுவலக வளாகத்தை வழங்குகிறது. ஐடி மற்றும் ஐடிஇஎஸ் நிறுவனங்கள், குளோபல் கேபபிலிட்டி சென்டர்கள் (GCCs), ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் , கோ-வொர்க்கிங் நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இந்தத் வளாகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த முழு அலுவலக வளாகமும் ஏற்கனவே IndiQube நிறுவனத்தால் முழுமையாக குத்தகைக்கு எடுக்கப்பட்டிருப்பது, கோயம்புத்தூரில் தரமான அலுவலக வளாகங்களுக்கான வலுவான தேவையை வெளிப்படுத்துகிறது.

எதிர்காலத் தேவைகளை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த வளாகத்தில், நவீன கட்டிடக்கலை, திறன்மிக்க தள அமைப்புகள், நிலைத்தன்மை கொண்ட உட்கட்டமைப்பு, பொதுப் பயன்பாட்டு சிற்றுண்டிச் சாலை மற்றும் பணியாளர்களை மையமாகக் கொண்ட பல்வேறு வசதிகள் இடம்பெற்றுள்ளன. கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையம், ரயில் நிலையம் மற்றும் முக்கிய குடியிருப்பு மற்றும் வணிகப் பகுதிகளுடன் சிறப்பான இணைப்பைக் கொண்டுள்ள ‘காசாகிராண்டு கிரவுன்’, நகரின் விருப்பத்திற்குரிய வணிக முகவரிகளில் ஒன்றாக உருவாகத் தயாராக உள்ளது.

இந்த அறிமுகம் குறித்து காசாகிராண்டு குழுமத்தின் துணை நிர்வாக இயக்குநர் திரு. சிவசங்கர் ரெட்டி கூறுகையில், “வலுவான பொருளாதார அடித்தளத்தையும், தரமான வணிக உட்கட்டமைப்பிற்கான அதிகரித்து வரும் தேவையையும் கொண்ட தென்னிந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய வணிக நகரங்களில் ஒன்றான கோயம்புத்தூரில் கால்பதிப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். 2023-ஆம் ஆண்டு காசாகிராண்டு கமர்ஷியலை அறிமுகப்படுத்தியதிலிருந்து, அலுவலக மற்றும் ரீடெயில் மேம்பாட்டுத் திட்டங்களில் வலுவான போர்ட்ஃபோலியோவை உருவாக்கியுள்ளோம். ‘காசாகிராண்டு கிரவுன்’ வளாகத்தின் மூலம், வணிக நிறுவனங்களின் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப எதிர்காலத் தயார்நிலை கொண்ட அலுவலகச் சூழலை உருவாக்குவதோடு, கோயம்புத்தூரின் வணிக வளர்ச்சிப் பயணத்திற்கும் அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்குவதே எங்களின் நோக்கமாகும்” என்றார்.

2023-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து, காசாகிராண்ட் கமர்ஷியல் அலுவலக மற்றும் ரீடெயில் வளாகங்களை உள்ளடக்கிய 40 லட்சம் சதுர அடிக்கு மேற்பட்ட பரப்பளவில் வலுவான போர்ட்ஃபோலியோவை உருவாக்கியுள்ளது. இதன் முக்கிய முன்னெடுப்புகளில், சென்னை சோழிங்கநல்லூரில் 6 லட்சம் சதுர அடியில் அமைந்துள்ள காசாகிராண்டு ஈகோடெக், சென்னை நந்தம்பாக்கத்தில் 3.2 லட்சம் சதுர அடியில் உருவாகியுள்ள காசாகிராண்டு அஸ்ட்யூட், சென்னை  ரேடியல் சாலையில் 3.6 லட்சம் சதுர அடியில் அமைந்துள்ள காசாகிராண்டு தி பாரகான், தலா 10 லட்சம் சதுர அடியில்   சென்னை  சோழிங்கநல்லூரில் அமைந்துள்ள  காசாகிராண்டு பிஸ்பார்க், மற்றும் சென்னை   பெருங்குடியில் அமைந்துள்ள காசாகிராண்டு ஸ்கைடெக் மற்றும் சென்னையின் அம்பத்தூரில் 1.6 லட்சம் சதுர அடியில் அமைந்துள்ள ரீடெயில் வளாகமான காசாகிராண்டு கனெக்ட் ஆகியவை இடம்பெறுகின்றன.

கோயம்புத்தூரில் காசாகிராண்டு கமர்ஷியலின் வருகை அதன் வளர்ச்சிப் பயணத்தில் மற்றொரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளதுடன், அதீத வளர்ச்சி வாய்ப்புள்ள சந்தைகளில் உலகத் தரம் வாய்ந்த வணிகச் சூழல்களை உருவாக்கும் நிறுவனத்தின் உறுதிப்பாட்டையும் மேலும் வலுப்படுத்துகிறது

காசாகிராண்டு கமர்ஷியல் குறித்து: காசாகிராண்டு கமர்ஷியல் நிறுவனம் தற்போது 4 மில்லியன் சதுர அடிக்கும் அதிகமான பரப்பளவில், ஆறு வணிகத் வளாகங்களை செயல்படுத்தி வருகிறது.  இதில் ஐந்து வளாகங்கள் சென்னையிலும், ஒன்று கோயம்புத்தூரிலும் அமைந்துள்ளன. மேலும், இந்நிறுவனம் சென்னையில் இரண்டு ரீடெய்ல் வணிக வளாகங்களை உருவாக்கி வருகிறது. இதன் மூலம் வர்த்தகம் மற்றும் ரீடெய்ல் வர்த்தக ரியல் எஸ்டேட் துறைகளில் தனது இருப்பை வலுப்படுத்துவதுடன், இப்பகுதியில் உயர்தர அலுவலக உட்கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்கும் இந்நிறுவனம் சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறது.

 

 

 

Continue Reading

Trending