Connect with us

Entertainment

ரீஎன்ட்ரியில் மாஸ் காட்டிய கில்லி!

Published

on

2004 ஆம் ஆண்டு வெளியான கில்லி திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றியைப் பெற்று விஜய் அவர்களுக்கு மாஸ் ஹிட் கொடுத்த படம். விஜய்யுடன் திரிஷா, பிரகாஷ் ராஜ், தாமு ஆகியோர் நடித்து ரசிகர்களை கவர்ந்த படம் தான் கில்லி. இந்த படம் சுமார 20 வருடம் கழித்து ஏப்ரல் 19ஆம் தேதி மீண்டும் திரைக்கு வந்தது. அரசியல் என்ட்ரி கொடுத்த பிறகு விஜய்க்கு முதலில் வெளிவரும் படமாக வெளிவந்த கில்லி படத்துக்கு ரசிகர்கள் கூட்டம் படையெடுத்தனர். தமிழகத்தில் மட்டுமில்லாமல், ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் இந்தப்படம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. முதல் நாளிலேயே இந்தப் படத்தை பார்க்க ஏராளமான ரசிகர்கள் வரிசைகளில் காத்திருந்து டிக்கெட் புக் செய்ததை பார்க்க முடிந்தது.

கில்லி திரைப்படம் மீண்டும் முதல் நாளில் உலகம் முழுவதும் இரண்டு நாட்களில் ரூ. 11 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இது இந்திய மறுவெளியீடுகளின் தெலுங்கு வெற்றிப்படங்களை முறியடித்து சாதனையைப் படைத்துள்ளதாக கூறப்படுகிறது. ரி ரிலீஸ் ஆனது என்றாலும் விஜயின் புதியப் படத்துக்கு எந்த அளவுக்கு கொண்டாட்டங்கள் இருக்குமோ அதே அளவு கொண்டாட்டம் கில்லி ரீ-ரிலீஸ் ஆன தியேட்டர்களிலும் காண முடிந்தது. திரைஅரகில் அப்படிப்போடு பாடலுக்கு திறை அரங்கில் ரசிகர்கள் அனைவரும் நடனமாடி ஆரவாரம் செய்தனர்.

ரீ ரிலீஸிலும் இந்தப் படம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், நடிகை த்ரிஷா தனது எக்ஸ் தளப் பக்கத்தில் நெகிழ்ச்சிப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “கில்லி அசுர வெற்றி அதிர்வுகளுடன் மீண்டும் பொழுது விடிந்துள்ளது. 2004-ம் ஆண்டு தொடங்கிய பயணம் 2024-ல் முழு வட்டம் நிறைவடைந்து மீண்டும் தொடங்கிய இடத்துக்கே வந்து நிற்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Entertainment

காதல், ஆக்ஷன், நிறைந்த கிறிஸ்துமஸ் ‘ரெட்ட தல’ – நடிகர் அருண் விஜய்

Published

on

பீ.டி.ஜி. யுனிவர்சல் நிறுவனம், பாபி பாலச்சந்திரன் தயாரிப்பில், மான் கராத்தே, கெத்து போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் கிரிஸ் திருக்குமரன் இயக்கத்தில், நடிகர் அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து, வரும் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு திரைக்கு வரும் ‘ரெட்ட தல’ திரைப்படம் பற்றிய செய்தியாளர் சந்திப்பு நேற்று மாலை கோவையில் நடைபெற்றது.

நடிகர் அருண் விஜய், நடிகை சித்தி இட்னானி (வெந்து தணிந்தது காடு கதாநாயகி) மற்றும் நடிகர் ஜான் விஜய் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

முதலில் பேசிய நடிகர் அருண் விஜய், “இது ஒரு நீண்ட விடுமுறை நாளான கிறிஸ்துமஸ் காலத்தில் வெளிவருகிறது. எந்த ஒரு சமரசமும் இன்றி இந்த படம் மிகவும் தரமாக தயாரிக்கப்பட்டுள்ளது,” எனக் கூறினார்.

திரை ரசிகர்களுடன் எளிதில் கனெக்ட் ஆகும் ஒரு கதையாக இதை இயக்குனர் திருக்குமரன் உருவாக்கியுள்ளார் எனவும், தனது வலிமைகள் அனைத்தையும் வெளிப்படுத்தக்கூடிய ஒரு கதையாக இது தனக்கு கிடைத்துள்ளது எனவும் கூறினார்.

இந்தப் படத்தில் இரண்டு வேடங்களில் நடித்துள்ள நடிகர் அருண் விஜய், அதில் இரண்டு கதாபாத்திரங்களுக்கும் எந்தவித ரத்த சம்பந்தமும் இல்லாமல் இருப்பதும், இருவருக்கும் சில வேறுபாடுகள் இருப்பதையும் காட்டுவதற்கு முயற்சி செய்துள்ளதாக கூறினார்.

அடிப்படையில் இந்த படம் காதலை மையமாகக் கொண்ட ஒரு படம் எனக் கூறிய அவர், “இதில் ஆசைக்கும் பேராசைக்கும் இடையே ஒரு சிறு கோடு உள்ளது. அந்த கோட்டை கடந்து சென்றால் ஏற்படும் பின் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டிய சூழல், அதனால் ஏற்படும் சவால்கள் – இதை ஒரு மனிதன் எப்படி கடந்து செல்கிறான் என்பதை இந்த கதை காட்டும்,” என்றார்.
கதைக்கு எங்கெங்கே தேவையோ அங்கங்கே ஆக்ஷன் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதில் நிறைய ட்விஸ்ட்களும் எதிர்பாராத இடத்தில் திருப்பங்களும் இருக்கும். கண்டிப்பாக பார்வையாளர்களை இந்த படம் தனது கைக்குள் வைத்திருக்கும் என்று நம்புவதாக கூறினார்.

இசையமைப்பாளர் சாம் சி.எஸ்-ஸின் இசை இந்த படத்தை மேலும் ஒரு கட்டத்திற்கு அழைத்து செல்கிறது என்று கூறிய அவர், இப்படத்தில் நடிகர் தனுஷ் ‘கண்ணம்மா’ எனும் பாடலை பாடியிருக்கிறார் என்று கூறினார்.

Continue Reading

Entertainment

பானு பேக் ஹவுஸ் கிறிஸ்துமஸ் ஃப்ரூட் மிக்ஸிங் விழா சென்னையில் மகிழ்ச்சியுடன் நடைபெற்றது.

Published

on

சென்னை தி.நகர் ராஜ் பேலஸ் ஹோட்டலில், பானு பேக் ஹவுஸ் சார்பில் கிறிஸ்துமஸ் கேக் ஃப்ரூட் மிக்ஸிங் விழா சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு வண்ணங்களில் உலர் பழங்கள், மசாலா வாசனைகள் மற்றும் நறுமணச் சாறு சேர்த்து கலந்த இந்த பாரம்பரிய நிகழ்வு, பண்டிகைக் காலத்தின் இனிய தொடக்கமாக அமைந்தது.

Women Professional Connect குழுவின் ஒத்துழைப்பில் நடைபெற்ற இந்த விழாவில், விருந்தினர்கள் செயல் பூர்வமாக கலந்து கொண்டு மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.

மிஸ்ஸ் சங்கீதா கிங்ஸ்லி, ரேணுகா கவுரிசங்கர், இந்திரா கண்டசாமி, வகீதா பானு ஆகியோர் பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தனர்.

பானு பேக் ஹவுஸ் ஒவ்வொரு ஆண்டும் நடத்தும் ஃப்ரூட் மிக்ஸிங் சொய்ரே, இந்த ஆண்டும் உற்சாகக் குரலில் தொடங்கியது.

டேபிள் முழுவதும் பரவிய வண்ணமயமான உலர் பழங்கள், அதன் மீது மிதமாக தாக்கிய சின்னமன், லவங்க, ஜாதிக்காய் வாசனைகள்—அனைவரையும் கிறிஸ்துமஸ் உலகுக்குள் அழைத்துச் சென்றது.

விருந்தினர்கள் இணைந்து உலர் பழங்களை கலக்கி பண்டிகை காலத்தை உற்சாகமாக வரவேற்றனர்.

செஃப் பானு ரேகா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டுப் பழக்கலவையில், ஒருங்கிணைப்பு, மகிழ்ச்சி, பகிர்வு ஆகியவை பிரதிபலித்தன.

கூடுதல் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள –

பானு பேக் ஹவுஸ் – சென்னை

+91 94438 55959

Continue Reading

Entertainment

ரஜினிகாந்தின் 173வது ரஜினிகாந்த், கமலுடன் இணையும் சுந்தர்.சி!

Published

on

ரஜினிகாந்தின் 173வது படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் தயாரிக்க இருக்கிறது பிரபல இயக்குனர் சுந்தர்.சி இந்த படத்தை இயக்குகிறார். 2027 பொங்கலுக்கு பிரமாண்டமாக வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு ரஜினிகாந்தின் 173வது படம் தற்போது ரஜினிகாந்த் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கும் இப்படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது. குறிப்பிடத்தக்கது.

 

Continue Reading

Trending