Connect with us

அரசியல்

நெற்பயிர்களை அழித்து, அவர்களது வயிற்றில் அடிக்கும் என்.எல்.சி – சசிகலா கண்டனம் !

Published

on

கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி. நிர்வாகம் 2வது நிலக்கரி சுரங்கம் விரிவாக்கத்திற்காக, மேல் வளையமாதேவி பகுதியில் நெற்பயிர்கள் நடவு செய்யப்பட்ட வயலில், ஜேசிபி இயந்திரங்களை இறக்கி நெற்பயிர்களை அழித்து, கால்வாய் வெட்டும் பணிகளை என்.எல்.சி நிர்வாகம் தொடங்கியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

தமிழக விவசாயிகள் பாடுபட்டு விளைவித்த நெற்பயிர்களை அழித்து, அவர்களது வயிற்றில் அடிக்கும் என்.எல்.சி. நிர்வாகத்திற்கு பாதுகாப்பு அரணாக துணை நிற்கும் திமுக தலைமையிலான அரசுக்கு எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். என்.எல்.சி. நிர்வாகம் நிலக்கரி சுரங்க விரிவாக்கத்திற்காக நிலங்களை கையகப்படுத்தி வருகிறது.

இதற்கு பொதுமக்கள், விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  என்.எல்.சி. நிர்வாகம் கையகப்படுத்திய நிலங்களுக்கு உரிய இழப்பீடு தர வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தரப் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.   இந்நிலையில் என்.எல்.சி. நிர்வாகத்தால் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட இடங்களான சேத்தியாதோப்பு, வளையமாதேவி சுற்று வட்டார பகுதிகளில், இன்னும் இரண்டு மாதத்திற்குள் நெற்பயிர்கள் அறுவடை செய்ய இருக்கும் நிலையில் இன்று அதிகாலையிலேயே 35 ஜேசிபி இயந்திரங்களை கொண்டு நெற்பயிர்களை அழித்து, கால்வாய் வெட்டும் பணியை தொடங்கியுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

தமிழகத்தில் விவசாயிகள் ஏற்கனவே பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் நெற்பயிர்களை சாகுபடி செய்து வரும் சூழலில், அவர்களின் கருத்துக்களை அறிந்து அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கபடாத வகையில் என்.எல்.சி நிர்வாகம் செயல்படவேண்டும். திமுக அரசும் விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் என்.எல்.சி நிர்வாகத்திடம் கலந்து பேசி விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்க வேண்டுமே தவிர, தமிழக அரசே விவசாயிகளுக்கு எதிராக நடப்பது எந்த விதத்தில் நியாயம்? என்று தெரியவில்லை. இதற்காகவா மக்கள் வாக்களித்தனர். எனவே, விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு என்.எல்.சி நிர்வாகத்தின் அத்துமீறல்களை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அரசியல்

தளபதி முருகேசன் தலைமையில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரை கூட்டம்

Published

on

சட்டசபை தேர்தலை அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் நிலையில் ஆளும் கட்சியான திமுக என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற பிரச்சாரத்தை முன்னிறுத்தி மாவட்டம் முழுவதும் நடத்திவருகிறது . கடந்த 10ஆம் தேதி முதல் நடைபெற்றுவரும் இந்த நிகழ்வு 20ஆம் தேதி கோவை தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட சூலூர் சட்டமன்ற தொகுதி சூலூர் மேற்கு ஒன்றியம் குளத்தூர் ஊராட்சி 98,99 ஆகிய பாகங்களில் நடைபெற்ற பரப்புரை கூட்டம் நடைபெற்றது இதில் திமுக கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர் தளபதி முருகேசன் அவர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் சூலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்பரசு, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ஜெயலலிதா, மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் வைஸ் கந்தசாமி, ஒன்றிய இளைஞரணி நவீன், தனபால், பிரவீன், கிளைச் செயலாளர் சண்முகம், கருப்புசாமி, முருகேஷ்,BLA2 துரை (எ) சதாசிவம், மனோஜ், பாக நிலை முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள், பூத் டிஜிட்டல் ஏஜென்ட்கள், சார்பு அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதேபோல 18ஆம் தேதி கோவை தெற்கு மாவட்டத்திற்குட்பட்ட கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதி செட்டிபாளையம் பேரூராட்சி பாகம் எண் 177, சூலூர் சட்டமன்றத் தொகுதி சுல்தான்பேட்டை மேற்கு ஒன்றியம் இடையர்பாளையம் ஊராட்சி பாகம் எண் 269 ஆகிய பாகங்களில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்திலும் கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர் தளபதி முருகேசன் அவர்கள் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

Continue Reading

அரசியல்

உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் நடைபெற்ற மாபெரும் கருத்தரங்கம்

Published

on

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் திராவிடம் 2.0 ஏன்? எதற்கு? வெல்லட்டும் திராவிடம் வீழட்டும் பாசிசம் என்கிற தலைப்பில் மாபெரும் கருத்தரங்கம் கடந்த 14ஆம் தேதி மீனாட்சி மஹால், மகாலிங்கபுரம் ரவுண்டானா, பொள்ளாச்சியில் திமுக கோவை தெற்கு மாவட்ட கழக செயலாளர் தளபதி முருகேசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே வி கே எஸ் சபரி கார்த்திகேயன் வரவேற்புரை ஆற்றினார். மூத்த ஊடகவியலாளர் தி.செந்தில் வேல், திராவிடக் கழக துணை பொது செயலாளர் சே.மெ.மதிவதனி சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். பொள்ளாச்சி நகர இளைஞரணி துணை அமைப்பாளர் சு.ஈஸ்வரன் நன்றியுரை ஆற்றினார்.

இந்நிகழ்வில் மாவட்ட அவைத்தலைவர் மயூரா சுப்பிரமணியம், மாவட்ட பொருளாளர் ஜெயபிரகாஷ், பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், பொள்ளாச்சி தெற்கு நகர செயலாளர் அமுத பாரதி, பொள்ளாச்சி வடக்கு நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன், பொள்ளாச்சி நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Continue Reading

அரசியல்

நான் எந்த பதவியில் இருந்தாலும் உங்கள் சகோதரன் – நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் எஸ்.பி வேலுமணி பேச்சு

Published

on

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் பூத் கைமுட்டி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் கோவை பேரூர் செட்டிபாளையம் அருகே நடைபெற்றது . இந்த கூட்டத்தில் பேசிய அதிமுக கழக தலைமை நிலையச் செயலாளரும் கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழகச் செயலாளருமான எஸ்.பி வேலுமணி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

இதில் பேசிய வேலுமணி : நான் எந்த பதவியில் இருந்தாலும் உங்கள் சகோதரன் பொன்விழா கண்ட இயக்கம், 31 ஆண்டுகள் ஆளும்கட்சி அதிமுக என்ற மாபெரும் இயக்கத்தில் இருப்பதே பெருமை .தமிழ்நாட்டில் அதிகமான திட்டங்களை தந்தது அதிமுக தான் , காவேரி நீர் பிரச்னை, முல்லைப்பெரியாறு பிரச்னை உள்பட தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டப்பட்டது அதிமுக ஆட்சியில்தான். மத்திய அரசிடம் இருந்து ஏராளமான திட்டங்களைப் பெற்றுத்துள்ளோம்.  கோவை நகரின் போக்குவரத்து நெரிசல், தொழில் வளர்ச்சி, மக்களின் பயண வசதி ஆகியவற்றை கருத்தில் கொண்டு மெட்ரோ ரயில் திட்டம் மிகவும் அவசியமானதாக மாறியுள்ளது 2026 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரும் அப்போது , கோவைக்கு மெட்ரோ திட்டம் உறுதியாக கொண்டு வரப்படும். மத்திய அரசுடன் இணக்கமாக செயல்பட்டு, திட்டத்திற்கான அனைத்து அனுமதிகளும் பெற்று, பணிகள் விரைவாக தொடங்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் பேசிய அவர் , கோவைக்கு அதிமுக அரசு நிறைய வளர்ச்சித் திட்டங்களை செய்துள்ளது மிக முக்கியமான சாலைகளை விரிவுபடுத்தி விபத்துகளை தடுத்துள்ளது. கொரோனா காலத்தில் மக்களுக்கு தேவையான பல உதவிகளை செய்து உயிரை காப்பாற்றியுள்ளோம். விரைவில் சட்டசபை தேர்தல் வர இருக்கின்றது. அதில் 210 தொகுதிகளிலும் வெற்றிபெற்று ஆட்சி அமைப்போம் எனக் கூறினார்.

இக்கூட்டத்தில் சார்பு அணி மாவட்ட செயலாளர்கள், சார்பு அணி மாவட்ட நிர்வாகிகள், பேரூராட்சி செயலாளர்கள், , மற்றும் வட்ட கழக செயலாளர்கள், முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள், முன்னாள் ஊராட்சி தலைவர்கள், வார்டு கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Continue Reading

Trending