Connect with us

செய்திகள்

கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் கே.ஆர்.ஜெயராம் அனல் பறக்கும் பிரச்சாரம்.

Published

on

கோவை

கோவை மாவட்ட திமுகவில் மீசை வைத்த ஆம்பிளைகள் ஒருத்தர்கூட இல்லை, தேர்தல் என்றாலே வெளியூரில் இருந்து வேட்பாளர்களை களம் இறக்கும் திமுக என்று சிங்காநல்லூர் சட்டமன்ற வேட்பாளர் கே.ஆர்.ஜெயராம் அனல் பறக்கும் பிரச்சாரம்.

மேலும் கோவையில் இறக்குமதி செய்யப்பட்ட ஒரு செந்தில் பாலாஜி அல்ல எத்தனை செந்தில்பாலாஜியை இறக்கினாலும் பின்னங்கால் பிடரியில் அடிக்க கோவை மக்கள் விரட்டுவார்கள் என்றும் எச்சரிக்கை.
கோவையில் சூடு பிடிக்கத்துவங்கியது தேர்தல் களம், தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக சார்பில் கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும், கே.ஆர். ஜெயராம் இன்று நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள கருமாரியம்மன் கோவிலில் சிறப்பு சாமி தரிசனம் மேற்கொண்டு சுற்று வட்டார பகுதிகளில் வீடு,வீடாக சென்று அதிமுகவின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு திவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு அப்பகுதி மக்கள் ஆராத்திகள் எடுத்து உற்சாக வரவேற்பளித்தனர். இந்த நிகழ்ச்சியில் பாஜக மாவட்ட செயலாளரும், தேர்தல் பொருப்பாளருமான ரமேஷ்குமார், மற்றும் அமமுக, பாட்டாளி மக்கள் கட்சி உட்பட தேசிய ஜனநாயக கூட்டணியின் முக்கிய நிர்வாகிகளும், தொண்டர்களும் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
பரப்புரையில் பேசிய சிங்காநல்லூர் சட்டமன்ற வேட்பாளர் கே.ஆர். ஜெயராம்.
கோவை மாவட்ட திமுகவில் மீசை வைத்த ஆம்பிளைகள் ஒருத்தர்கூட இல்லை, தேர்தல் என்றாலே வெளியூரில் இருந்து வேட்பாளர்களை களம் இறக்கும் திமுக என்று சிங்காநல்லூர் சட்டமன்ற வேட்பாளர் கே.ஆர்.ஜெயராம் அனல் பறக்கும் பிரச்சாரம் மேற்கொண்டார்.
மேலும் கோவையில் இறக்குமதி செய்யப்பட்ட ஒரு செந்தில் பாலாஜி அல்ல எத்தனை செந்தில்பாலாஜியை இறக்கினாலும் பின்னங்கால் பிடரியில் அடிக்க கோவை மக்கள் விரட்டுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுத்தார். மேலும் கோவை மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் தலைமையில் 10 தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெறும். என்றும் கழக ஆட்சியில் கழக பொதுச்செயலாளர் கோவை மாவட்டத்திற்கு செய்த சாதனைகளை பட்டியலிட்டு மக்களிடம் பரப்புரையில் ஈடுபட்டார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

செய்திகள்

விஜய்க்கு மொத்தம் ரூ.520 கோடி சொத்து.

Published

on

விஜய்க்கு மொத்தம் ரூ.520 கோடி சொத்து:

ரூ.520 கோடி தன்னுடைய வேட்புமனுவில் மொத்த சொத்து மதிப்பாக விஜய் குறிப்பிட்டுள்ளார்.

இதில் ரூ.404.58 கோடி அசையும் சொத்துகள் ரூ.115.13 கோடி அசையா சொத்துகள் எனக் கூறியுள்ளார்.

விஜயின் அப்பா, அம்மா, மனைவி, மகன், மகள் என குடும்பத்தில் அனைவருமே விஜய்க்கு கடனாளிகள்.

மனைவி சங்கீதாவுக்கு ரூ.12 கோடி, அப்பா சந்திரசேகருக்கு ரூ.3 கோடி, அம்மா ஷோபாவுக்கு ரூ.87 லட்சம், மகன் ஜேசனுக்கு ரூ.8 லட்சம், மகள் ஷாஷாவுக்கு ரூ.4 லட்சம் கடன் வழங்கியுள்ளார் விஜய்.

விஜய்யிடம் BMW 530, Toyoto Lexus 350, Toyoto vellfire, BMW 17, Maruti Swift, TVS XL SUPER என ரூ.7.52 கோடி மதிப்பிலான வாகனங்கள் உள்ளன. விஜய் தாக்கல் செய்த வேட்பு மனுவில் தகவல்.

சுமார் ரூ.3.44 கோடி வருவாய் தொடர்பாக 4 வருமான வரி வழக்குகள் நிலுவையில் இருப்பதாக வேட்புமனுவில் விஜய் தகவல்.

சுமார் ரூ.1.64 கோடி மதிப்பிலான கடன் பொறுப்புகள் தகராறில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தன்னிடம் ரூ.1.20 கோடி மதிப்பிலான தங்கம், ரூ.15 லட்சம் மதிப்பிலான வெள்ளி, மனைவி சங்கீதாவிடம் ரூ.4 கோடி மதிப்பிலான தங்கம், ரூ. 1 கோடி மதிப்பிலான வைரம் உள்ளதாக தெரிவித்துள்ளார் விஜய்.

நடிப்பை தாண்டி ரியல் எஸ்டேட் அதிபராகவும் உள்ளார் விஜய். ஜெயா நகர் ப்ராபர்டி பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக உள்ளதாக வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார்.

தவெக தலைவர் விஜய்க்கு நீலாங்கரை – 1, ஊரூர் – 1, மயிலாப்பூர் – 1, பள்ளிப்பட்டு – 1, படூர் – 1, கொரட்டூர் – 1, சாலிகிராமம் – 2, சோழிங்கநல்லூர் – 2 என மொத்தம் 10 வீடுகள் உள்ளதாக வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Continue Reading

செய்திகள்

அம்மன் அர்ஜுனன் மக்களில் ஒருவராகவே திகழ்கிறார் – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

Published

on

கரூர் மாவட்டத்தில் தனது சொந்தக் கட்சி உறுப்பினர்களையே காப்பாற்ற முடியாத ஒருவரால் மக்களைப் பாதுகாக்க முடியும் எனவும் “எல்லாராலும் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது” என முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தவெக தலைவர் விஜயை கடுமையாக விமர்சித்துள்ளார்..

கோவை தெற்குத் தொகுதியின் அதிமுக வேட்பாளரான அம்மன் அர்ஜுனனை அறிமுகப்படுத்தும் கூட்டம், சுங்கம் பகுதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (NDA) உறுப்பினர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, அம்மன் அர்ஜுனன் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவதை உறுதி செய்யுமாறு கட்சித் தொண்டர்களை வலியுறுத்தினார். கோவை தெற்குத் தொகுதி ஒரு “வி.ஐ.பி தொகுதியாக” மாறியிருந்தாலும், அம்மன் அர்ஜுனன் இன்றும் மக்களில் ஒருவராகவே திகழ்கிறார் என்று அவர் குறிப்பிட்டார். அமைக்கப்பட்டிருக்கும் “சிறப்பான கூட்டணி” மீது நம்பிக்கை தெரிவித்த அவர், வேறு யார் போட்டியிட்டாலும் சரி, அம்மன் அர்ஜுனனின் வெற்றி நிச்சயம் என்று உறுதியாகக் கூறினார்.
இந்தியா முழுவதும் உள்ள 100 ‘ஸ்மார்ட் சிட்டி’ (Smart City) நகரங்களில், கோவை உட்பட 11 நகரங்கள் அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டிற்காகப் பெறப்பட்டன என்பதை அவர் சுட்டிக்காட்டினார். தங்கள் ஆட்சியின் கீழ் கோவை தெற்குத் தொகுதியில் செயல்படுத்தப்பட்ட ஏராளமான வளர்ச்சித் திட்டங்களையும் அவர் பட்டியலிட்டார்.

ஆளும் கட்சியைத் தாக்கிப் பேசிய வேலுமணி, திமுக கோவையில் எந்தப் புதிய திட்டங்களையும் செயல்படுத்தவில்லை என்றும், மாறாக அதிமுகவின் திட்டங்களையே ரிப்பன் வெட்டித் திறந்து வைத்துள்ளார்கள் என்றும் குற்றம் சாட்டினார். அவர்கள் குறிப்பிடத்தக்க எதையும் சாதிக்காமலேயே ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதாக அவர் கூறினார். சொத்து வரி உயர்வு, பால் விலை உயர்வு மற்றும் மின் கட்டண உயர்வு ஆகியவற்றையும் அவர் கடுமையாக விமர்சித்தார்; மேலும், பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நிலை நிலவுவதாகவும், கஞ்சா (போதைப்பொருள்) நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

“கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ள 21 தொகுதிகளுக்குப் பொறுப்பாளராக இருப்பவன் நான்; இந்தத் தொகுதிகள் அனைத்திலும் நாங்கள் வெற்றி பெறுவோம்,” என்று வேலுமணி முழக்கமிட்டார். திமுகவின் பேச்சுகளை அவர் விமர்சித்தார்; திமுகவினர் எல்லாவற்றிற்கும் பாஜகவையே குறை கூறுவதாகவும், பாஜகவை உள்ளே நுழைய விடமாட்டோம் என்று கூறி, இதை ‘டெல்லிக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான போர்’ போலச் சித்தரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். மத்திய அரசு தமிழ்நாட்டிற்குப் பல திட்டங்களை வழங்கியுள்ளது என்றும், அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும்போது, ​​மத்திய அரசிடமிருந்து இன்னும் அதிகமான திட்டங்களைக் கேட்டுப் பெற்றுத் தரும் என்றும் அவர் உறுதிபடக் கூறினார். கோவைக்காகச் செய்யப்பட்ட ஒரே ஒரு நன்மையையாவது சுட்டிக்காட்டுமாறு அவர் செந்தில் பாலாஜிக்குச் சவால் விடுத்தார். அடுத்த 20 நாட்களுக்கு அயராது உழைக்குமாறும், கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துச் செல்லுமாறும் அவர் தொண்டர்களை வலியுறுத்தினார். கோவை வடக்கில் போட்டியிடும் பாஜக வேட்பாளருக்கு, ஒரே குடும்பமாக இணைந்து செயல்பட்டு ஆதரவளிக்க வேண்டும் என்றும் அவர் தொண்டர்களுக்கு அறிவுறுத்தினார்.
“இது நமது கௌரவம் சார்ந்த விஷயம்,” என்று கூறிய அவர், “தேர்தலுக்கான காலக்கணிப்பு (countdown) தொடங்கிவிட்டது; அம்மன் அர்ஜுனன் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்,” என்றும் நம்பிக்கை தெரிவித்தார். பெண் தொண்டர்கள் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 400 வாக்குகளை இலக்காகக் கொண்டு வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்யுமாறும், திமுகவின் தோல்விகள் மற்றும் “பொய் வாக்குறுதிகள்” குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த துண்டுப்பிரசுரங்களைப் பயன்படுத்துமாறும் அவர் அறிவுரை வழங்கினார்.

விஜய் மற்றும் TVK மீதான விமர்சனங்கள்
புதிதாகத் தொடங்கப்பட்ட ‘தமிழக வெற்றிக் கழகத்தின்’ (TVK) தலைவரான விஜய் குறித்துப் பேசிய வேலுமணி, “புதிய கட்சியைத் தொடங்கிய விஜய், 10 நாட்களிலேயே வெளியே வந்துவிட்டார். மக்கள் இதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். அவர் வெறும் திமுகவை விமர்சித்துவிட்டுச் சென்றுவிடுகிறார்,” என்று குறிப்பிட்டார்.
விஜயின் கொள்கையைச் கேள்விக்குள்ளாக்கிய அவர், “உங்கள் கொள்கை என்ன? திமுக வெற்றிபெறும் வகையில், திமுக எதிர்ப்பு வாக்குகளைப் பிரிப்பதற்காக மட்டுமே திமுகவை விமர்சிப்பதுதான் உங்கள் கொள்கையா?” என்று வினவினார்.

பிற கட்சிகளுக்கு ஒரு வாக்கு கூடச் சென்றுவிடக் கூடாது என்றும், அதிமுகவின் ஒவ்வொரு வாக்கும் தவறாமல் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். “அரசியல் என்பது சினிமா அல்ல. கேமராவிற்கு முன்னால் நடிப்பது என்பது நிஜ வாழ்க்கை அல்ல என்பதை விஜய் உணர வேண்டும்,” என்று வேலுமணி கூறினார்.
சமீபத்தில் கரூரில் நிகழ்ந்த ஒரு துயரச் சம்பவத்தைக் குறிப்பிட்ட அவர், “கரூரில் 41 பேர் தங்கள் உயிரை இழந்தபோதிலும், அவர் அங்குச் செல்லவில்லை. உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தவர்களைப் பார்க்க மருத்துவமனைக்குக் கூட அவர் செல்லவில்லை. தன் சொந்தக் கட்சி உறுப்பினர்களையே அவரால் காப்பாற்ற முடியாவிட்டால், பொதுமக்களை அவரால் எப்படிப் பாதுகாக்க முடியும்?” என்று சுட்டிக்காட்டினார்.

“எல்லாராலும் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது. இவர்கள் எந்தத் தொகுதியிலும் வெற்றிபெறப் போவதில்லை; திமுக எதிர்ப்பு வாக்குகளைப் பிரித்து, மறைமுகமாக திமுகவிற்கு உதவுவது மட்டுமே இவர்கள் செய்யும் காரியம். அந்த வாக்குகள் அனைத்தும் ‘இரட்டை இலை’ சின்னத்திற்கே வந்து சேர வேண்டும்,” என்று கூறி அவர் தனது பேச்சை நிறைவு செய்தார்.
கோவை உள்ளாட்சித் தேர்தலின்போது கொலுசுகளை விநியோகித்து திமுக மக்களை ஏமாற்றியதாகவும், அதன் விளைவாக தற்போது கோவை மாநகராட்சி “மிகவும் பரிதாபகரமான நிலையில்” இருப்பதாகவும் வேலுமணி குற்றம்சாட்டினார். தேர்தல்களுக்குப் பிறகு திமுக உறுப்பினர்கள் காணாமல் போய்விடுவார்கள் என்று அவர் எச்சரித்ததுடன், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்களிலும் என்.டி.ஏ (NDA) கூட்டணியானது ஒற்றுமையுடன் நீடிக்கும் என்றும் தெரிவித்தார்.

Continue Reading

செய்திகள்

கோவை எல்.பி.ஜி கேஸ் தட்டுபாடு

Published

on

கோவை

எல்.பி.ஜி கேஸ் தட்டுபாடு காரணமாக டைல்ஸ் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உற்பத்தி மற்றும் வரத்து குறைவால் வரும் நாட்களில் டைல்ஸ் தட்டுபாடு எற்படும் அபாயம் ஏற்படுவதாகவும் கோயம்புத்தூர் டைல்ஸ் டீலர்ஸ் சங்கத்தின் தலைவர் திரு சுரபி பங்கஜ் தெரிவித்துள்ளார்.

கோவையில் பந்தையசாலையில் உள்ள சீமா அலுவலகத்தில் கோயமுத்தூர் டைல்ஸ் டீலர்ஸ் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.இக்கூட்டத்திற்க்கு பின் செய்தியாளர்களை சந்தித்த சங்கத்தின் தலைவர் சுரபி பங்கஜ் அவர்கள், ஈரான் போர் பதற்றத்தால் ஏற்பட்டுள்ள எல்.பி.ஜி கேஸ் தட்டுபாட்டால் டைல்ஸ் உற்பத்தி பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உற்பத்தி மற்றும் வரத்து குறைவால் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது மட்டுமல்லாமல் அத்தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்களும் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் வேதனை தெரிவித்தார்.
இதனால் கூடிய விரைவில் டைல்ஸ் விலை 30 % வரை விலை ஏற்றத்திற்கஆன வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
எனவே அரசு எல்.பி.ஜி தட்டுபாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

பேட்டி – சுரபி பங்கஜ் ,தலைவர் , கோயம்புத்தூர் டைல்ஸ் டீலர்ஸ் சங்கம்..

Continue Reading

Trending