Connect with us

செய்திகள்

நாங்கள் ஆச்சர்யக்குறி; மாற்றத்துக்கான அறிகுறி!

Published

on

தனிப்பட்ட முறையில் எங்களுக்கும், அவங்களுக்கும் எந்த பிரச்னையும் கிடையாதுங்க, எந்த வாயக்கால் வரப்பு தகராறு எல்லாம் ஏதுமே கிடையாதுங்க, அப்படி இருந்தாலும் அதனை நாம் கண்டுகொள்ள போவது கிடையாது.
அவர்கள் வேண்டுமானால் எங்கள் மீது வன்மத்தோடு இருக்கலாம். நாங்கள் அப்படி இல்லை. ஆனால் உங்களை, என்னை, நம்ம எல்லோரையும் பொய் சொல்லி நம்ப வைத்து, ஓட்டு போட வஞ்சு ஏமாத்தினாங்க இல்ல, அப்படி ஏமாற்றி ஆட்சிக்கு வந்து, மக்களுக்கு நல்லது செய்வது போல் நடிக்கிறாங்க, நாடகம் ஆடுகிறார்கள், அவர்களை எப்படி நாம் கேள்வி கேட்காமல் இருக்க முடியும்?
அதனால் அவர்களை கேள்வி கேட்காமல் நாம் விட போவது இல்லை. இதனை காஞ்சிபுரம் மண்ணில் இருந்து சொல்கிறேன் என்றால், இந்த மண்ணுக்கும் நமக்கும் ஒரு தொடர்பு ஏற்படுகிறது.

முதல் களப்பயணம் தொடங்கியது பரந்தூரில் இருந்து தான். இன்றைக்கு மன வேதனைக்கு பிறகு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வந்து இருப்பது காஞ்சிபுரம் மாவட்டம் தான். மக்களிடம் செல் என்று சொன்ன அண்ணாதுரையை மறந்தது யார்?
மக்களுக்காக சட்டபூர்வமாக எல்லா நல்லவற்றையும் செய்ய வேண்டும். ஒட்டுமொத்த மக்களுக்காக செய்ய வேண்டும். அந்த ஒரே லட்சியத்தில் தான் அரசியலுக்கு வந்துள்ளோம். கொள்கை என்ன கிலோ என்ன, விலை என்ன கேட்கிற அளவுக்கு, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், சமத்துவம் சம வாய்ப்பு என்று கூறும் எங்களுக்கு கொள்கை இல்லை என்கிறார் முதல்வர்.

வக்பு சட்டத்தை எதிர்த்து முதலில் சுப்ரீம் கோர்ட்டிற்கு சென்ற எங்களுக்கு கொள்கை இல்லையா? இவர்கள் கொள்கையே கொள்ளை தான்.

மக்களுக்காக, மக்கள் பிரச்னையை பேசுவதால், ஆட்சியில் இருப்பவர்களுக்கு நமது மேல் ஆத்திரம் வர தானே செய்யும்.நம்ம ஆட்சிக்கு வந்தால், அது என்ன வந்தால், வருவோம். மக்கள் கண்டிப்பாக நம்மளை வர வைப்பாங்க, மக்களுக்கான ஆட்சியை மக்களே விரும்பி வர வைக்க தானே செய்வாங்க, அப்படி மக்களால் அமைக்கப்பட ஆட்சியில் என்ன செய்ய போகிறோம் என்று தேர்தல் அறிக்கையில் விளக்கமாக கொடுப்போம். அதற்கு முன், நான் சிறியதாக கொஞ்சம் சொல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

  • எல்லோருக்கும் நிரந்தர வீடு இருக்கணும்,
  • வீட்டுக்கு ஒரு மோட்டார் சைக்கிள் இருக்கணும்
  • கார் லட்சியம். ஒவ்வொரு வீட்டிலும் கார் இருக்கும் வகையில் பொருளாதார மேம்பாடு
  • ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் பட்டப்படிப்பு படித்திருக்கணும்
  • வீட்டில் குறைந்தபட்சம் ஒருவருக்கு நிரந்தர வருமானம்
  • அதற்கான வேலைவாய்ப்பு உருவாக்கணும்
  • அதற்கு தகுந்தபடி கல்வியில் சீர்திருத்தம்
  • அரசு மருத்துவமனைக்கு பயமின்றி நம்பி செல்லும் வகையில் வசதி
  • பருவமழையில் எதுவும் பாதிக்காமல் இருக்கும் வகையில் மேம்பாடு
  • மீனவர்கள், தொழிலாளர்கள், நெசவாளர்கள், அரசு
  • ஊழியர்கள், ஆசிரியர்களிடம் கருத்து கேட்டு பாதுகாப்பு, வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
  • தொழில் வளர்ச்சியில் கவனம் இருக்கும்.
  • சட்டம் ஒழுங்கு கண்டிப்புடன் இருக்கும்.

இதற்கான விரிவான திட்டங்கள் எல்லாம் எங்கள் தேர்தல் அறிக்கையில் இருக்கும். இந்த விஜய் சும்மா ஏதும் சொல்ல மாட்டான். ஒன்று சொன்னால் அதை செய்யாம விடமாட்டான்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

செய்திகள்

நிர்மலா மகளிர் கல்லூரியில் திருக்குறள்களை பரதநாட்டியமாக அரங்கேற்றி சாதனை!

Published

on

நிர்மலா மகளிர் கல்லூரியில் 1,330 திருக்குறள்கள் – பரதநாட்டிய நிகழ்ச்சியில் புதிய சாதனை கோயம்புத்தூர் நிர்மலா மகளிர் கல்லூரி இன்று 4 மணி 30 நிமிடங்களில் 1,330 திருக்குறள்களை பரதநாட்டியமாக அரங்கேற்றி வரலாற்றுச் சாதனை படைத்தது.

இந்த பிரமாண்ட நிகழ்ச்சியில் 133 மாணவிகள் பங்கேற்று, ஒவ்வொரு மாணவியும் 10 திருக்குறள்களை பாரம்பரிய நடனத்தின் மூலம் வெளிப்படுத்தினர்.

இந்த தனித்துவமான பண்பாட்டு சாதனை, இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அமைப்பால் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டு, தமிழ் பண்பாடு மற்றும் நுண்கலைகளில் கல்லூரியின் அர்ப்பணிப்பிற்கு தேசிய அளவிலான அங்கீகாரம் கிடைத்தது.

இந்த நிகழ்ச்சி, மாணவிகளின் திறமை, ஒழுக்கம் மற்றும் கலாச்சார மேன்மையை வெளிப்படுத்தும் பெருமைமிக்க தருணமாக அமைந்தது.

Continue Reading

செய்திகள்

கோவையில் ரியம் ஸ்போர்ட்ஸ் விளையாட்டு வளாகம் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா திறந்து வைத்தார்.

Published

on

கோவை மாநகரின் சாய்பாபா காலனியில் முன்னணி விளையாட்டு அகாடமியாக இயங்கி வரும் ரியம் ஸ்போர்ட்ஸ், தனது புதிய உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வளாகத்தைத் துடியலூரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை ) தொடங்கியது.முன்னாள் மத்திய அமைச்சரும், நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.இராசா இந்த மையத்தைத் திறந்து வைத்தார்.

இந்த விழாவில் ரியம் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுவாதி அகர்வால், இணை நிறுவனர் த்ரேதம் அகர்வால் மற்றும் எஸ்.எஸ்.வி.எம் கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் மோகன்தாஸ் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.துடியலூரில் சுமார் 2.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த வளாகத்தில், ‘பிக்கிள்பால்’ விளையாட்டுக்கான தமிழகத்தின் மிகப்பெரிய விளையாட்டுத் தளங்களில் ஒன்று அமெரிக்க ஓபன் போட்டி தரத்திலான தளமாக அமைக்கப்பட்டுள்ளது.கிரிக்கெட் பயிற்சிக்காக ஆஸ்ட்ரோ டர்ஃப் மற்றும் கான்கிரீட் பிட்ச்கள், துல்லியமான பந்துவீச்சு இயந்திரத்துடன் (Stitch ball machine) வடிவமைக்கப்பட்டுள்ளன.

மேலும், விரைவில் ஃபிபா (FIFA) அங்கீகாரம் பெற்ற கால்பந்து மைதானம், ஃபிபா (FIBA) தரத்திலான கூடைப்பந்து தளம் மற்றும் நவீன கிரிக்கெட் பயிற்சி வசதிகள் இங்கு வரவுள்ளன.இந்த மையம் ஒரு விளையாட்டுப் பயிற்சி அகாடமியாகச் செயல்படுவதோடு மட்டுமல்லாமல், பல்வேறு விளையாட்டுகளின் மேல் ஆர்வமுள்ள மக்கள் இந்த தளங்களை வாடகைக்கு எடுத்து விளையாடும் வசதியையும் வழங்குகிறது.அதே நேரம் தேசிய அளவிலான சாம்பியன்களைக் கொண்ட பயிற்சியாளர் குழு மூலம் இங்கு உயர்தரப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

இந்த வளாகத்தின் திறப்பு விழாவில் பேசிய ஆ.இராசா எம்.பி., கோயம்புத்தூரின் விளையாட்டு உள்கட்டமைப்பை மேம்படுத்த ரியம் ஸ்போர்ட்ஸ் எடுத்துள்ள இந்த முயற்சியைப் பாராட்டினார். இத்தகைய உலகத்தரம் வாய்ந்த வசதிகள் இப்பகுதி விளையாட்டு வீரர்களுக்குப் பெரிதும் உதவும் என்றும், இந்த நிறுவனம் இந்தியா முழுவதும் விரிவடையத் தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார்.ரியம் ஸ்போர்ட்ஸ் மேலாண்மை இயக்குநர் சுவாதி அகர்வால் பேசுகையில், “இது வெறும் விளையாட்டு மையம் மட்டுமல்ல, விளையாட்டுத் துறையில் ஒரு புரட்சியாக அமையும்” என்றார்.

தற்போது பிக்கிள்பால் மைதானம் பயன்பாட்டிற்குத் தயாராக உள்ளது. காலை நேரங்களில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.800 மற்றும் இரவு நேரங்களில் ரூ.1000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 4 பேர் கொண்ட குழு விளையாடலாம். 200 கார்கள் நிறுத்தும் வசதி மற்றும் சிசிடிவி கண்காணிப்பு எனப் பாதுகாப்பு வசதிகளும் இங்கு செய்யப்பட்டுள்ளன.

நிறுவனத்தின் இணை நிறுவனர் த்ரேதம் அகர்வால் கூறுகையில், இரண்டாம் கட்டப் பணிகளாகக் கூடைப்பந்து, கால்பந்து மைதானங்கள் மற்றும் செஸ், ஸ்னூக்கர், ஸ்கேட்டிங் போன்ற விளையாட்டு வசதிகள் பிப்ரவரி இறுதிக்குள் பயன்பாட்டிற்கு வரும் என்று தெரிவித்தார்.

Continue Reading

கோயம்பத்தூர்

திருப்பூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா!

Published

on

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா திருப்பூரில் , பொதுமக்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. சாமுண்டிபுரம் பகுதி, கோல்டன் நகர், நல்லூர் மற்றும் நெருப்பெரிச்சல் பகுதி உள்ளிட்ட திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் சமத்துவ பொங்கல் விழா நடத்தப்பட்டது.

இந்த விழா தமிழக வெற்றிக் கழக திருப்பூர் மாநகர மாவட்ட செயலாளர் எஸ். பாலமுருகன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற விழாவில் தவெக மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.க்கில் நடத்தப்பட்ட இந்த சமத்துவ பொங்கல் விழாவில் பாரம்பரிய முறையில் பொங்கல் தயாரித்தல், இனிப்புகள் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அனைத்து தரப்பினரும் ஒரே இடத்தில் ஒன்றிணைந்து சமத்துவ பொங்கலை கொண்டாடியதன் மூலம் சமூக ஒற்றுமையின் அவசியம் வலியுறுத்தப்பட்டது.

மேலும், இத்தகைய சமத்துவ விழாக்கள் சமூக நல்லிணக்கத்தையும், மக்களிடையே ஒற்றுமை உணர்வையும் வலுப்படுத்தும் என்பதையும் விழாவில் கலந்துகொண்டவர்கள் எடுத்துரைத்தனர்

Continue Reading

Trending