Connect with us

உள்ளூர் செய்திகள்

கோவை – சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் வித்யாரம்பம் நிகழ்ச்சி!

Published

on

விஜயதசமி நாளில் ஏடு துவங்குதல் எனப்படும்  வித்யாரம்பம் நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு நாக்கிலும் அரிசியிலும் எழுத வைத்தால் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது இந்து மதத்தின் மேல் பற்று கொண்ட மக்களின் நம்பிக்கையாக உள்ளது.

இன்று கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் விஜயதசமியை முன்னிட்டு வித்யாரம்பம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பெற்றோர்கள் அவர்களது குழந்தையை அழைத்து வந்து நாக்கிலும் அரிசியிலும் பெயரை எழுதி கொண்டனர். குழந்தைகளின் விரலைப் பிடித்து அரிசியில் தாய்மொழியின் முதல் எழுத்து, குழந்தைகளின் பெயர், பிள்ளையார் சுழி, அம்மா,அப்பா என்று எழுத வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 1000-க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்து உள்ளதாக  சித்தாபுதூர் ஐயப்பன் கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

உள்ளூர் செய்திகள்

தயார் நிலையில் அவிநாசி மேம்பாலம்

Published

on

 

கோவை அவினாசி சாலை உப்பிலிபாளையம் சிக்னல் முதல் – கோல்டு வின்ஸ் சாலை வரை கட்டி முடிக்கப்பட்ட முடிக்கப்பட்ட புதிய மேம்பாலத்தை மேம்பாலத்தை இன்னும் சில தினங்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதற்காக மேம்பாலம் திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் உள்ளது.

Continue Reading

உள்ளூர் செய்திகள்

கோவையில் “விக்டோரிஸ்” கார் அறிமுக விழா !

Published

on

கோவை: புதிய “விக்டோரிஸ்” கார் இன்று (04.10.2025) மாலை 4.30 மணிக்கு ஆதி மாருதி ஷோரூம், சரவணம்பட்டி, கோவையில் அறிமுகமாகிறது.

இந்த நிகழ்வில் பழமுதிர் நிலையம் உரிமையாளர் திரு. துறையராஜ் சின்னசாமி, பங்குதாரர் திரு. ஞானசேகர் கந்தசாமி , கோவை பழமுதிர் நிலையம் எம்.டி. திரு. செந்தில் நடராஜன், உரிமையாளர் திரு. விஜய் ரதினம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.

விழாவை ஒட்டி “Strums N Hums” இசைக் கச்சேரியும் நடைபெற உள்ளது.

 

Continue Reading

உள்ளூர் செய்திகள்

கோவையில் விபத்து தடுப்பு நடவடிக்கை – கலெக்டர் உத்தரவு

Published

on

கோவை மாவட்டத்தில் சாலை விபத்துகளை குறைக்கவும், சாலை பாதுகாப்பை உறுதி செய்யவும் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சாலை பாதுகாப்பு துறையில் செயல்படும் உயிர் அமைப்பு, அரசுடன் இணைந்து “நான் உயிர் காவலன்” என்ற பெயரில் அடுத்த மாதம் முதல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த உள்ளது. இதன் ஒரு பகுதியாக மனித சங்கிலி பிரச்சாரமும் சமீபத்தில் கோவை மாநகரில் நடைபெற்றது.

இந்நிலையில், அனைத்து அரசு துறைகளும் இந்த விழிப்புணர்வு முயற்சி மக்கள் மத்தியில் சிறப்பாக சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். மேலும், அவர் சில முக்கிய அறிவுறுத்தல்களையும் வெளியிட்டுள்ளார்:

  • பொதுமக்கள் கூடும் இடங்களில் சாலை பாதுகாப்பு குறித்த அறிவிப்புகள் வழங்கப்பட வேண்டும்.

  • விபத்துக்கு வழிவகுக்கும் குழிகள், வேகத்தடைகள் மற்றும் சாலையின் ஓரங்களை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.

  • விபத்து ஏற்படும் பகுதிகளில் எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும்.

  • பஸ்களில் உள்ள ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அறிவிப்புகள் வழங்கப்பட வேண்டும்.

தற்போது கோவை மாநகரின் பல சாலைகளில் குழிகள் மற்றும் குறியீடு இல்லாத வேகத்தடைகள் காரணமாக விபத்துகள் ஏற்படும் சூழல் நிலவுகிறது. குறிப்பாக, மழை நீர் தேங்கும்போது அல்லது நிழல் படும்போது அவை வாகன ஓட்டிகளுக்கு தெரியாமல் ஆபத்தை ஏற்படுத்துகின்றன.

ஆட்சித்தலைவர் நேரடியாக உத்தரவிட்டுள்ள நிலையில், கோவை சாலைகள் இனி பாதுகாப்பானதாக மாறுமா என மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Continue Reading

Trending